நாம்(Epilogue)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

This is an extremely long epilogue but I request you to read this fully. This will be the only epilogue chapterநு நிறைய யோசிச்சு எழுதிர்கேன்.

ஏன் இவ்ளோ லேட் ஆ ஒரு epilogue? Because it's to CELEBRATE ONE YEAR OF அவளை காதலித்ததில்லை:)

விலகியிருந்த 6 மாதங்களை ஈடுகட்டும் விதமாய் அவளுடன் அடுத்த மூன்று மாதங்களைக் கழிக்க ஆசை தான் ஆனால் இந்த நேரத்தில் அவள் மீண்டும் சென்னைக்கு டிராவல் செய்வது கடினம் என அவள் ஊரிலேயே இருந்துவிட்டாள். வாரயிறுதி நாட்களில் ஊருக்கு வருவதும் அப்படியே வொர்க் from home போட்டு mondayவும் அங்கேயே தங்கிவிடுவதுமாய் அவளுடனான பொழுது கழிந்தது. திருமணமான முதல் 6 மாதங்கள் போல் இப்போதும் தொலைபேசி கொஞ்சல்களுடன் ஓரளவு சமாளித்தோம்.

அதோடு, வெகு நாசூக்காக காரணம் கூறாமல் லாவண்யாவை அவளின் சொந்த ஊர் கோயம்பத்தூரில் இருக்கும் standard chartered இன் புதிய கிளைக்கு மாற்றிவிட்டேன். வேலை மாற்றத்துக்கு ஒரு வாரம் முன்னர் தான் அவளுக்கு விவரத்தை அறிவித்தேன். சட்டப்படி ஒரு மாதமாவது முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும் என்று அறிந்தும் கடைசி வாரம் அன்று ஈமெயில் இல் கூறினேன். விருப்பம் இருந்தால் கோவைக்கு வேலைக்கு செல்லுமாறும் மாறுதலில் விருப்பம் இல்லையென்றால் வேலையை ராஜினாமா செய்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துவிட்டேன். அவள் படபடப்புடன் என் கேபின் கு வருவாள் என்று தெரிந்து அன்று வேலைகள இழுத்துப் போட்டுக்கொண்டேன். இருந்தும் அவள் பிடிவாதமாய் என் கதவைத் தட்டினாள்.

"யெஸ் மிஸ் லாவண்யா?"

"சார், திடீர்னு branch மாத்த சொல்லிர்கீங்க. என்ன இது?"

"மேலிடத்தில் இருந்து உத்தரவு. உங்கள மாதிரி திறமையான ஊழியர்கள் தான் நம்மளோட இரண்டாவது branch ஐ maintain பண்ணனும்."

சுதாரித்துக்கொண்டவள், "எனக்கு இந்த வேலை தான் பிடிச்சிருக்கு. அங்க போக இஷ்டம் இல்ல."

"அப்போ வேலைய ராஜினாமா செய்துட்டு போங்க."

அவள் திடுக்கிட்டாள் "நான் மேலிடத்தில் அல்லது HR கிட்ட போய் complain பண்ண போறேன். அவங்க எப்டி இப்டி திடீர்னு வேலைய விட சொல்லலாம்?"

"அங்க போய் நியாயம் கேட்டுகோங்க. எதிர்த்து பேசுற employees யாருக்கும் பிடிக்கிறதில்ல," என எச்சரித்தேன்.

அவளுக்கு HRஇடம் போய் முறையீடு செய்ய தைரியம் இருக்கிறது ஆனால் அதே நேரம் அவள் independentஆகவும் குடும்பத்தின் வறுமையிலிருந்து ஒதுங்கி ஆடம்பரமாக வாழும் வாழ்க்கைக்கும் இந்த வேலை அவசியம். எதிர்பார்த்தவாறு அவள் ஒரு வாரத்தில் branch மாறினாள்.

லாவண்யா வெளியேறியதால் வேலை பளு அதிகரிக்க அவ்வார இறுதியில் வொர்க் from home போட்டுவிட்டு வொர்க் பண்ண வேண்டிய கட்டாயத்தால் லேப்டாப் இல் வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தேன்.

"வேலை எப்போ முடியும்?" அவள் என் முன் வந்து அமர்ந்தாள்.

"இதோ ஒரு அரை மணி நேரம். ஏன் மா?"

"இல்ல ஒரு சின்ன ஹெல்ப்."

லேப்டாப் இலிருந்து கண்கள் மேலே அவளை எட்டி பார்த்தன. கையில் இருந்த nailcutterஐ நீட்டினாள், "வயிறு இடிக்குது. நகம் வெட்ட முடியல. கால் விரல் நகம் மட்டும்."

புன்னகைத்துவிட்டு லேப்டாப் மூடியை மூடிவிட்டு அவளிடம் இருந்து nail cutter ஐ வாங்கினேன். பூ பறிப்பது போல் கால் விரல் நகம் களைவதர்காகவாவது கர்ப்ப காலத்தில் மனைவியின் அருகில் இருக்கலாம் போல.

நகம் வெட்டும்போது அவள் கூறினாள், "நாளைக்கு தான் கடைசி scan. மறந்துராதீங்க." அவளின் வார்த்தைகள் அம்மாவின் phone callஐ நியாபகப்படுத்தியது.

"ஆணா பொண்ணா நு கேட்டுட்டு வா டா," அம்மா போனில் நச்சரித்தாள்.

"சொல்லமாட்டாங்க மா. போன மாசம் அவள் போனபோதே சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்க," அம்மாவுக்கு புரியவைப்பதற்குள் எனக்கு பித்து பிடித்துவிடும் போல.

"நல்லவிதமா கேட்கணும். சும்மா கேட்டா சொல்லுவாங்களா? ஏதாவது காசு கொடுக்கணும். nurseகிட்ட பேசி பாரு, nurse கு தெரியும் எல்லா விவரமும்."

இதற்குமேல் வாதிட முடியாதவனாய் பதில் அளிக்காமல் அன்று போனை கட் செய்துவிட்டேன்..

அம்மாவிடம் தெரிவிக்காமல் நாங்கள் இருவர் மட்டும் scanning கு சென்றோம். அவர் வந்தால் hospital ரகளையாகிவிடும். hospitalஇல் scanning முடிந்து எல்லாம் சுமூகமாக இருக்கிறதென மருத்துவர் தெரிவித்தார்.

சற்று தயங்கி கேட்டேன், "குழந்தையோட gender..." அம்மா துருவி துருவி கேட்பாளே.

"ஆண் குழந்தையா இருந்தாலும் பெண் குழந்தையா இருந்தாலும் சந்தோஷமா தான வளர்க போறீங்க," என டாக்டர் என் வாயை அடைத்தார் .

"சரி தான். Okay, we'll get going," என இருக்கையிலிருந்து எழுந்தேன். ஆனால் பெட் இல் சாய்ந்திருந்த மனைவி ஒரு நிமிஷம் என என் கையைப் பிடித்தாள். "டாக்டர், குழந்தையோட physical well-being scanningஇல் தெரிஞ்சிடும் ஆனா mental health எப்படி? ஏதாவது மனநல குறைப்பாடு like Down syndrome ஏதாவது இருந்தா எப்டி தெரியும்?"

"அதுக்கு amniotic fluid withdraw பண்ணி DNA testகு அனுப்புவோம்."

"அப்போ நானும் அந்த டெஸ்ட் கு போகனுமா?"

டாக்டர் சிரித்தார், "இல்ல. 35 வயதுக்கு அதிகமா இருக்குற பெண்களுக்கு தான் இந்த டெஸ்ட் பரிந்துரை செய்வோம். நீ சின்ன வயசு. எல்லாம் நல்லா தான் இருக்கு. ஏன் கவலை படுற?"

"சின்ன பயம் அதான் எதுக்கும் கேட்டேன்.." அவள் கூறினாள்.

இவளின் கேள்வியை நான் பெரிதுப்படுத்தவில்லை, இவை யாவும் இன்னுமொரு பெரிய பிரச்சனையின் முதற் படி என அறியவில்லை.

அன்றிரவு காற்றில் ஒரு சலனம். திரும்பி படுத்தபோது என்னருகில் மெத்தை காலியாய் இருந்தது. இருட்டில் விரல்கள் போனை தேடி எடுத்து பலாக் பட்டன் ஐ தட்டியபோது மணி ஒன்று. தண்ணி குடிக்கவோ பாத்ரூம்கோ சென்றிருப்பாள் என காத்திருந்தால் பத்து நிமிடங்கள் ஆகியும் அவளைக் காணவில்லை. எழுந்து வெளியே சென்றால் அங்கு டேபிளில் லேப்டாப் வெளிச்சம் மட்டும் ஹாலுக்கு பிரகாசத்தை அளித்தது. கையில் ஒரு notebook பேனாவுடன் லேப்டாப்இல் scroll செய்து கொண்டிருந்தாள்.

"என்ன பண்ணிட்டு இருக்க?" என நான் கேட்டதும் திடுக்கிட்டவளின் கை அருகில் இருந்த தண்ணி செம்பை தட்டிவிட தண்ணீர் லேப்டாப் keyboard மேல் கொட்டியது. அவள் அவசர அவசரமாக ஓபன் செய்திருந்த கூகிள் tabகளை மூட முயல ஆனால் தண்ணீர் கொட்டிய லேப்டாப் அவளின் அவசரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. எனக்கு இது சரியாய் படவில்லை. browserஐ மூடமுடியவில்லை என்று அறிந்ததும் அவள் லேப்டாப் மூடியை ஐ மூடிவிட்டு, "தூக்கம் வரல அதான் blogs படிச்சுட்டு இருந்தேன்," என கூறினாள். அவளின் முகம் வேர்த்திருந்தது. என் மனதுக்கு சரியாய் படவில்லை.

"இரு, லேப்டாப்ஐ பார்க்குறேன்," என லேப்டாப் மூடியின் மேல் கையை வைத்தேன்.

"லேட் ஆச்சு, காலைல பார்த்துக்கலாம்," என அவள் மழுப்ப பிடிவாதமாய் லேப்டாப் ஐ திறந்தேன். Down's Syndrome, mental retardness, amniocentesis என research செய்துக்கொண்டிருந்தாள். காலையில் மருத்துவரிடம் கேட்ட கேள்வியின் பின்னணியில் நிறைய இருந்தது என இப்போது தான் புரிந்தது. நித்தினை விட்டுப் பிரிந்ததால் இப்போது ஏதோ ஒரு விதத்தில் அது தன் குழந்தையை பாதிக்கும் என்று நினைத்தாலோ? நித்தின் ஊனமானது போல் தன் குழந்தைக்கு எதவாது நிகழ்ந்துவிடும் என பயந்தாலோ?

"நீ ஏன் இப்படி பயப்படுற? நித்தினுக்கு நடந்ததாலையா?" அவளிடமே கேட்டுவிட்டேன்.

அவள் கோபமாக, "நீங்க தான் லூசுதனமா பேசுறீங்க... குழந்தைய பத்தி கவலைப்படுறதுக்கும் நித்தினுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல," என பதிலளித்துவிட்டு ரூமுக்கு சென்றாள். நான் என் முட்டாள்தனத்தை நினைத்து கடிந்துக்கொண்டேன். அவள் பக்குவமானவள், எல்லா விஷயங்களையும் தாண்டி வந்தவள். ஆனாலும் டாக்டரிடம் எதுக்கும் ஒரு முறை கேட்கலாம் என்று எத்தணித்தேன்.

அடுத்த நாள் காலை டாக்டருக்கு போன் செய்து கேட்டபோது அவர் விளக்கினார், "கற்பகாலத்தின்போது Pre natal depression, post natal depression, anxiety, என உடலையும் தாண்டி மனதை பாதிக்கும் பல விஷயங்கள் இருக்கு. Pregnancy isn't all roses like what we think. extreme casesஇல் என் குழந்தைக்கு மனவளர்ச்சி இல்லன்னு தானாக கற்பனை செய்துக்கொண்டு abortion பண்ணனும்னு அடம்பிடிக்குற பெண்கள் கூட இருக்காங்க. Don't worry, உங்க wife situation controlல தான் இருக்கு. இப்போதைக்கு அவங்களுக்கு நிறைய நம்பிக்கைய கொடுங்க. எல்லாம் சுமூகமா தான் போகுதுன்னு நம்பிக்கை கொடுங்க." என பீதியை கிளப்பினார். டாக்டர் இடம் பேசியதை யாரிடமும் ஏன் அவளிடம் கூட கூறவில்லை. நான் நல்லா தான் இருக்கேன் என்று அவள் அடம்பிடிப்பாள் என அறிந்திருந்தேன். சற்று நடுக்கத்துடன் தான் அடுத்த 3 மாதங்களைக் கழித்தேன் அவள் மேல் ஒரு கவனப் பார்வையுடன்.

குழந்தைப் பிறந்ததும் கூட அவளின் பயம் தணியவில்லை. மற்ற குழந்தைகள் போல் பெயர் சொன்னால் திரும்புகிறானா, சிரிக்கிறானா, தவழ்கிரானா என அவள் பயந்தாள். நல்ல வேளை, குழந்தை மற்ற குழந்தைகளைவிட சற்று fastஆகவே வளர்ந்தது கவலையைக் குறைத்தது. முதல் குழந்தை என்பதால் அவள் ஊரிலேயே சில காலம் தங்கினாள் ஆனால் 5 மாதங்களுக்குப் பிறகு மனோஜின் திருமணத்துக்காக சென்னைக்கு மீண்டும் வந்தாள்.

மனோஜின் திருமணம் முடிந்தபின் கிப்ட் ஒன்றைக் கொடுக்க மேடைக்கு வந்தோம். கையில் இருக்கமாட்டேன் என அடம்பிடித்த குழந்தையை அவள் கீழே வைத்தது தான் தாமதம் அங்கு மேடையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பூக்களை நோக்கி தவழ்ந்து அவற்றை பிடித்து இழுக்க ஆரம்பித்துவிட்டான்.

"அவன் எல்லாத்தையும் பிக்கிரதுக்குள்ள போய் தூக்கிட்டுவாங்க," அவள் என்னை ஏவ அருகில் நின்ற மனோஜின் தாயார், "ஓவர் fast ஆ இருக்கான்," என சிரிக்க நான் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவளருகில் வந்து நின்றேன்.

"நான் தான் சொன்னன்ல குழந்த நல்லா தான் இருக்கான்னு,"

"அது எங்களுக்கும் தெரியும்," அவள் புன்னகையில் ஒரு நிம்மதி கலந்திருந்தது.

மனோஜ் என்னை கட்டிப்பிடித்து பின் தன் மனைவியிடம் என்னை அறிமுகப்படுத்தினான், "This is Miththiran, my boss and my best friend. உன்ன கல்யாணம் பண்ணதுக்கும் இவன் தான் காரணம்."

"ஆமாங்க, மத்த பொண்ணுங்க போட்டோலாம் நல்லா இல்லன்னு நான் சொன்னேன் அதான் உங்கள கல்யாணம் பண்ணிர்கான். நீ ஒன்னு,"

"ஆமா மச்சான், உன்னையும் உன் familyஐயும் பார்த்து தான் இந்த காதலிச்சு தான் கல்யாணம் பண்ணனும்ங்கிற ambition ஐ விட்டுட்டு arranged marriage க்கு ஒத்துக்கிட்டேன்."

அவன் எளிதில் கூறிவிட்டாலும் திருமணத்திலிருந்து குழந்தை வரை ஏன் குழந்தை பிறந்ததற்கு பின்னும் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவன் அறிந்ததில்லை. பார்க்க தான் சுலபமே தவிர வாழ சுலபமல்ல. பக்கத்தில் நின்ற மனைவியை நோக்கினேன். என் பார்வையைக் கவனித்தவள் "என்ன" என புருவத்தைத் தூக்கினாள்.

"ஒண்ணுமில்ல."

"நான் அழகா இருக்கேன்னு எனக்கு தெரியும். கொஞ்ச நேரம் கேமராவ பாருங்க, போட்டோ எடுக்குறாங்க."

"நீ அழகா இருக்கன்னு நான் சொல்லணும். நீயே சொல்லிக்க கூடாது."

"காலைல தான இந்த புடவைல ரொம்ப அழகா இருக்கன்னு கொஞ்சுனீங்க,"

"காலைல தூக்க கலக்கத்துல ஒழுங்கா பார்க்கல."

போலி கோபத்துடன் முறைத்தாள். சிரித்துக்கொண்டே அவள் விரல்களைப் பற்றினேன்.

"wife கிட்ட அப்புறம் பேசிக்கலாம். இங்க பாருங்க சார்." photographer மானத்தை வாங்கினான்.
          
                            -முற்றும்-

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro