23

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தன் தோழி அழைத்திருக்கின்றாள்  என்றதும் மிகவும் சந்தோசப்பட்ட பிருந்தா தனது கைபேசியை எடுத்தவள் "ஹாய் லக்‌ஷ் எப்படி இருக்க" என்று கேட்டாள். தன்னை பிருந்தா இப்படி செல்லமாக கூப்பிடுவது இதுவே முதல் முறை என்பதால் லக்‌ஷ்மிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தாலும் அவள்

"என்ன புதுசா செல்ல பெயர் எல்லாம் வெச்சி கூப்பிடுற. நைட் அடிச்ச டிரக்ஸ் இன்னும் இறங்கலயா?" என்று அவள் கேட்க பிருந்தாவோ இங்கு துனுக்குற்றால்.

"ஏய் என்னடி சொல்ற, அந்த பழக்கம்லாம் எனக்கு இல்லை" என்றவளை மறுமுனையில்

"இங்க பாரு பிருந்தா, தமிழ்நாட்டுல இருக்குற எல்லா டிவி சேனல்லையும் உன் பேருதான் ஓடிக்கிட்டு இருக்கு. யாருடி அவ பிலோமினா? உனக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு" என்று கோபமாக கேட்டால்.

"முதல்ல என்ன நடந்துச்சின்னு சொல்லு லக்‌ஷ்மி"என்று கூற லக்‌ஷ்மியின் பதில் கேட்டு பிருந்தாவுக்கு பயமே வந்தது. "சுசாந்த் கேஸ்கு அப்புறமா சினிமா இண்டஸ்ட்றில போதை பொருள் பாவிக்கிறவங்கள சிபிஐ தேடி தேடி பிடிக்குறாங்க். தமிழ் இண்டஸ்ட்றில உன் பெயரும் அடிபடுது. எவலோ பிலோமினா என்றவதான் மாட்டியிருக்கா. நீ அங்க ஜாலியா இருக்க. ஆனா இங்க எல்லோரும் என்னத்தான் வறுத்து எடுக்குறாங்க. இதுல அந்த ஷ்யாம் வேற அடிக்கடி போன் போட்டு நீ எங்கே போனேன்னு கேட்டு கேட்டு டார்ச்சர் பண்றான். உண்மைய சொல்லு பிருந்தா, நீ ஏதும் டிரக்ஸ் எடுத்துக்குரியா" என்று கேட்டாள்.

இதற்கு மேலும் லக்‌ஷ்மியிடம்  உண்மைகளை மறைக்க முடியாது என்று கருதியவள் "முன்னாடி ரொம்ப டிப்ரஷனா இருந்தப்போ நான் வாங்கினது என்னமோ உண்மைதான். ஆனா நான் அத தொடர்ந்து யூஸ் பண்ணல. அம்மா இறந்த ஆரம்பத்துல கொஞ்ச நாள் தூக்கம் வராதப்போ யூஸ் செஞ்சேன். இலங்கை வந்ததும் இப்போ கொஞ்ச நாளா நான் அத பாவிக்கிறதே இல்லை" என்று கூறினால். மறுமுனையில் இதை கேட்ட லக்‌ஷ்மிக்கு தலைக்கு மேல் கோவம் வந்தது. "மேடம் இதுக்கு மேலயும் என்ன எல்லாம் மறைச்சிருக்கீங்கன்னு சொல்ல முடியுமா?. சொன்னீங்கன்னா எனக்கு ரொம்ப ஈசியா இருக்கும். ஒவ்வொரு வாட்டியும் நீங்க பண்றதெல்லாம் ஒன்னு பிரஸ்மீட்ல சொல்றீங்க இல்லைன்னா பிரஸ் மூலமா நான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு" என்றாள்.

இதற்கு என்ன பதில் கூறுவது என்று புரியாமல் இருந்த பிருந்தா அமைதியாக இருக்க லக்‌ஷ்மி "இங்க பாரு பிருந்தா, இப்போ இருக்குற நிலமைக்கு நீ இந்தியா வர முடியாது. வந்தா உன்ன உடனே அரஸ்ட் பண்ணிடுவாங்க. நீ பேசாம இலங்கைலேயே இரு" என்றாள். இதை கேட்டதும் யோசித்த பிருந்தா "அதெப்படி தொடர்ந்து இங்க இருக்க முடியும். என்னோட வீசா காலம் முடிஞ்சதுன்னா நான் வந்துதானே ஆகனும்"என்று சந்தேகமாக கேட்டால்.

"உன் வீசா முடிஞ்சாலும் உன்னால அங்க இருக்க முடியும். நான் சொல்றா மாதிரி பண்ணு. உன்னோட லக்கேஜ்ல நான் ஒரு பைல் வெச்சிருந்தேன். அதுல உன்னோட இலங்கை பிறப்பு அத்தாட்சி பத்திரம், உங்க அம்மா அப்பாவோட திருமண  பத்திரம் எல்லாமே இருக்கு. இது இருந்தாலே போதும் உனக்கு இலங்கையில பாஸ்போர்ட் எடுக்க. ஏன்னா நீ ஒரு இலங்கை பிரஜை. என்ன ஒரே ஒரு ப்ராப்ளம் உனக்கு இலங்கையில இருக்குற தேசிய அடையாள அட்டை (national identity card-இந்தியாவில் ஆதார் கார்ட் போன்றது) இல்லை.அதுக்கு என்ன பண்ணலாம்னு யாரும் தெரிஞ்சவங்க இருந்தா கேளு. ஆனா உடனே அத ப்ரொசீட் பண்ணு. டாக்குமெண்ட்ஸ்லாம் சரியா இருந்தா அங்க ஒரே நாள்ள பாஸ்போர்ட் எடுத்துடலாம்" என்றாள்.

உடனே பிருந்தாவும்"சரி லக்‌ஷ்மி நான் விக்ரம் கிட்ட கேட்டு பார்க்குறேன்"என்றாள். அதற்கு லக்‌ஷ்மி அதிசயமாக

"விக்ரமா அது யாரு?"

"நீதானே அவர எனக்கு கைட் ஆ ஏற்பாடு செஞ்ச,  மறந்திடுச்சா?"

"நான் ஏற்பாடு செஞ்சது ஒரு கம்பனி மூலமா.அவங்க உனக்கு யார செட் பண்ணிவிடுவாங்கன்னு எனக்கு எப்படி தெரியும். ஓஹ் அன்னைக்கு ஏர்போர்ட்ல வெச்சி எகிறினியே அந்த சிங்கள பையனா. ஹ்ம்ம் இப்போ ஹெல்ப் கேட்குற அளவுக்கு க்லோஸ் ஆகிட்டிங்க போல. சரி பிருந்தா இருக்குற காச கொஞ்சம் பார்த்து செலவு பண்ணு. முடிஞ்சா ஹோட்டல வெக்கேட் பண்ணிட்டு ஏதும் சின்ன வீடா பார்த்து வாடகைக்கு எடுத்துக்கோ. நெட்பிலிக்ஸ், அமேசன் ப்ரைம்கிட்ட எல்லாம் பேசியிருக்கேன். நல்ல ப்ராஜக்ட் வரும் போது கண்டிப்பா கூப்பிடுறேன்னு சொல்லிருக்காங்க். இப்போ இருக்குற நிலமைக்கு நீ இந்தியா வந்தா ரொம்ப ப்ராப்ளம் ஆகிடும். இதுல அந்த ராமலிங்கமும், விக்னேஷும் நீ போதை மருந்து பாவிச்சதாலதான் புத்தி மழுங்கி அவங்க மேல பொய்யான குற்றத்த முன் வைச்சேன்னு சொல்லி போலீஸ்ல கேஸ் வேற போட்டிருக்காங்க. இங்க எல்லாமே சுமூகமா முடியிற வரைக்கும் நீ அங்கேயே இரு" என்றாள்.

தன் தோழி தனக்காக எவ்வளவு சிரமப்படுகின்றாள் என்பது புரிந்த பிருந்த

"சாரிடி ,என்னால உனக்கு ரொம்ப கஷ்டம்ல" என்று கூற மறுமுனையில் லக்‌ஷ்மி
"நான் ஒன்னும் புன்னியத்துக்காக உனக்கு ஹெல்ப் பண்ணல. ப்ராப்ளம்லாம் முடிஞ்சி நீ மறுபடி நடிக்க ஆரம்பிச்சதும் உன் சம்பளத்துல நாப்பது வீதம் எனக்கு கொடுத்திடனும்"என்று கூற  பிருந்தா "நாப்பது என்ன நூறு வீதமும் உனக்குத்தான் வெச்சிக்க" என்றாள்.

தோழிகளின் சம்பாசனை முடிய சில விடயங்கள் புரிந்தும் பல விடயங்கள் புரியாமலும் நின்ற கவி "என்னக்கா ஏதும் ப்ராப்ளமா?" என்று கேட்க பிருந்தா நடந்த எதையும் மறைக்காமல் கவிக்கு கூறினால்.

"உங்களோட இந்த கஷ்ட்மான தருனத்த லக்‌ஷ்மி யூஸ் பண்ணிக்க பார்க்குறாங்கல்ல. இந்த நேரத்துலயும் போய் கமிஷன் கேட்டுக்கிட்டு. என்ன ஜென்மமோ"

"ஹேய் கவி கூல். அவ எனக்காக கஷ்டபடுறான்னு தெரிஞ்சி நான் பீல் பண்ண கூடாதுன்னுதான் அவ இப்படி பேசினா. எனக்கு அவள பத்தி ரொம்ப நல்லாவே தெரியும். இப்போ எனக்கு இருக்குற ஒரே பிரச்சினை வீசா எக்ஸ்டண்ட் பண்றது" என்றாள்.

"அக்கா உங்க மொபைல கொஞ்சம் கொடுங்க, நான் விக்ரம் அண்ணாக்கு ஒரு கால் பண்ணி கேட்குறேன்"என்றவளிடம் தனது மொபைலை கொடுத்தாள் பிருந்தா. தன் அண்ணனுக்கு கால் செய்து விபரத்தை கூற அவன் இன்னும் முப்பது நிமிடத்தில் அங்கிருப்பதாக கூறினான். விக்ரமிடம் பேசிய பின் கவி

"அக்கா எதுவுமே யோசிக்காதீங்க. எங்கண்ணன்கிட்ட சொல்லியாச்சில்ல இனிமே அவன் பார்த்துக்குவான். அவனுக்கு கவர்மண்ட் ஆபீஸ்ல வேலை செய்ற ஒரு சிலர தெரியும். எந்த பிரச்சினையும் இல்லாம உங்க பாஸ்போர்ட் வேலை ரொம்ப இலகுவா முடிஞ்சிடும்"என்றாள்.

லக்‌ஷ்மி கால் செய்த போது குளித்துக்கொண்டிருந்த பிருந்தா அவசரத்துக்கு ஒரு நைட்டி அணிந்து வந்தவள் அலைபேசி மூலம் புதிதாக வந்த பிரச்சினையால் தான் என்ன ஆடை அணிந்திருக்கின்றோம் என்பதை மறந்தால். கூறியது போல நேரத்துக்கு விக்ரம் வர அவளும் தான் அணிந்திருந்த ஆடை மறந்து அவனை உள்ளே வரும்படி கூறினால். அவளின் அறைக்குள் வந்ததும் விக்ரமுக்கு மூச்சே நின்றுவிடும் போலானது.அவள் அணிந்திருந்த இரவு ஆடை அவளின் அங்கங்களை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு ஆணாக அவனது பார்வையை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்ட விக்ரம்

"நான் வேணா நீங்ல டிரஸ் மாத்துற வரைக்கும் போயிட்டு கொஞ்சம் லேட்டா வரட்டுமா" என்று கேட்க அப்போதுதான் பிருந்தா தான் இருந்த கோலம் கண்டு

"சாரி விக்ரம், நான் குளிச்சிக்கிட்டு இருக்கும் போதுதான் லக்‌ஷ்மி கால் பண்ணா. அதான் இப்படி வந்துட்டேன். நீங்க இருங்க நான் பாத் ரூம் போயி டிறஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்"என்று செல்ல இங்கு கவி தலையில் அடித்துக்கொண்டாள்.

'அடியே வெட்கம் கெட்டவளே, இப்படித்தான் அரையும் குறையுமா ஒரு ஆம்பள முன்னாடி போவியாடி. உன்ன பத்தி ஊரே இப்போ தப்பா பேசுது. இதுல அவன் வேற தப்பா நினைக்கனுமா?' என்று திட்டிய தன் மனச்சாட்சியிடம்

'அரை குறைலாம் ஏதும் இல்லையே. உடம்பு முழுவதும் கவர் பண்ணிதானே இருக்கு' என்று தன் மனச்சாட்சியிடம் எதிர்வாதம் செய்தாள்.

'ஆமா ஆமா எல்லாமே கவர் பண்ணித்தான் இருக்கு, அதுதானே ப்ராப்ளாம். செல்லக்குட்டி நீ போட்டுப்போனது சில்க் துணியிலா நைட் டிறஸ்மா. சும்மா டிறஸ்விட இது கொஞ்சம் இல்லை ரொம்பவே செக்சியா இருக்கும்' என்றது. தான் அணிந்திருந்த ஆடையை ஒரு முறை சரியாக கவனித்தவள்

'ச்சே என்ன காரியம் பண்ணிட்டோம், சரி வெளில போய்  எதையாச்சும் சொல்லி சமாளிப்போம். இருந்தாலும் பிருந்தா நீ அழகாத்தாண்டி இருக்கே'என்று தனக்கு தானே கூறிக்கொண்டவள் அந்த அழகுதான் தன் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது என்பதும் நினைவுக்கு வர கவலையும் கொண்டாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro