அழுகையும் கண்ணீரையும்
கட்டுப்படுத்தும் சிலர் ஏனோ
நினைவுகளை கட்டுபடுத்த தெரியாமல்
தவிக்கின்றனர்...
அந்த கண்ணீர் வெளிப்படுத்தும்
வகையில் ஒரு நிகழ்வு நிகழ்ந்தது
என்றால் அந்த சிலரின் வாழ்க்கை
அடுத்த படியில் வாழ்க்கையை
அடியெடுத்து வைக்கும்...
ஏனோ அந்த அழுகையும் கண்ணீரும்
அடைபட்டு கொண்டே இருக்கின்றது
சிலர் மனதிலே, என்றாவது ஒரு நாள்
வெளியே வந்து விடமாட்டேனா என்று
அழுகையும் என்றாவது ஒரு நாள்
வெளியே வந்து விடுமோ என்று
மனிதனின் மனதும் தவித்து கொண்டு
தான் இருக்கிறது...
மனித மனதில் கட்டுப்பாடு அவசியமே,
ஆனால் மனதில் வலிகளை
கட்டுப்படுத்தி கொண்டு இருக்கும்
வகையில் அது என்றுமே
விளைவுகளை விட்டு தான் செல்லும்...
இவற்றிற்கு காலம் ஒன்றே ஒன்றுதான்
பதில்களை வழங்க இயலும்...
வாழும் காலம் வரை உணர்வுகளை
தனிமையிலாவது வெளிப்படுத்தி
விடுங்கள்
அன்பு உள்ளங்களே...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro