உனது கண்களின் பார்வைக்கு பிறகு
நான் தவமாய் காத்திருந்து ஏங்கியது
உந்தன் உதடுகளின் புன்முறுவலிற்க்கே...!
வாடிய மலராய் தான் இருந்தபோதும்
எந்தன் இதழ்களின் சிரிப்பிற்காக
தன்னிலை மறந்து இதழ் விரிப்பாயே...!
இரவானது காரிருளில் சூழ்ந்திருந்தாலும்
வெண்மை ஒளித்திடும் நிலவொளியாய்
வந்திடுவாயே என்னருகினில் நீ...!
உதடுகள் தரும் உச்சரிப்பிலே
நான் உயிர்ப்பெற்று வருகின்றேன்
அனுதினமும் அதனை காணவே...!
உன்னில் என்னை காணவே
எந்தன் உதடுகள் பேச துடிக்கின்றது
உன்னை கண்டவுடன் ஏனோ மறுக்கின்றதே...!
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro