🌃 எந்தன் நிலவு 🌇

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

முதன் முதலாக நீ உந்தன் நேர் விழி பார்வையை என் மீது செலுத்திய தருணம், முழு பௌர்ணமி நிலவை கண்டது போல் உனது அன்பான கண்களை கண்டேனடி எந்தன் நேர் விழி பார்வையில் என் அன்பிற்குரியவளே....


உன் அரவணைப்பில் ஒரு குழந்தையாய் நான் இருக்க கூடாதா என நான் ஏங்காத நாளே இல்லையடி என்னவளே.....


உன் இரு விழி பார்வைகளுக்கு நான் ஏன் தினம் தினம் அடிமையாகிக்கொண்டே இருக்கின்றேனடி என் உயிரே.....


உன்னுடன் இருந்த நாட்கள் மட்டும் ஏனோ எந்தன் ஆள் மனதினில் மூழ்கிப்போன புதையலாய் உள்ளதடி என் இனியவளே......


உன் கை விரல்கள் உன்னை அறியாமல் என்னை தீண்டிய பொழுது என் மீது ஒரு தாமரை மலர் ஆனது என்னை தொட்டு சென்றது போல் மிருதுவாய் உணர்ந்தேனடி என் மலரே.....


உன் அழகிய நிலவின் முகம் என்றும் என் மனதினில் நீங்கா சுவடாய் பதிந்தது ஏனோ என் காதலியே......


காதலே வேண்டாம்மென கல்லாய் இருந்த என் மனதை, உன் இரு ஓர விழி பார்வை எனும் உளி கொண்டு செதுக்கி என்னை சிற்பமாய் மாற்றி அமைத்தாயடி அன்புத் தோழியே.....


என்றென்றும் உனது விழிகளுக்கு நான் என்றும் அடிமையாய் அலைவேனடி அந்த ஒர விழி பார்வைக்காகவே......


இதுவரை கண்ணியமாய் எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருந்த என் மனம் ஆனது உன்னிடத்தில் சரண் அடைந்ததால் உனது உத்தரவுக்காக ஏங்கியது மாங்கல்யம் எனும் பந்தத்தில் உன்னை தீண்டிட......


உனது அன்பிற்காகவும், கோவத்திற்காகவும், அக்கறைக்காகவும், கனிவிற்காகவும் எந்தன் மூச்சு என்றும் ஏக்கத்துடன் காத்துக்கொண்டே இருக்குமடி எந்தன் நாடி உள்ளவரை.....


இப்படிக்கு

உந்தன் அன்பிற்குரிய
RV (Idiot)

Dedicated to my dear
Really I miss u de

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro