😔 கட்டாயக் கல்யாணம் 🤵👰

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

திருமணம் நிகழ்வில் மணப்பெண் மணமகன் இருவருக்கும் சம்மந்தமில்லாத நிலையில், ஒரு வாழ்வில் வயது மற்றும் செல்வம் இரண்டும் ஒற்று போன காரணத்தினாலேயே திருமணம் நிகழ்கிறது... பின் இருவரும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார்கள்... அத்தகைய உணர்வினை கவிதை வரிகளால் பதிப்பிக்கிறேன்....
.
.
.

கட்டாயக் கல்யாணம்


வயது முதிர்ந்தோ நான் இங்கு
வயதரியாமலே என்னை சந்தித்தாய்...

ஏக்கங்கள் பல உண்டு எனக்கு
கற்பனைகள் பல உண்டு உமக்கு...

ஒரு நிமிடமே உன்னை கண்டேன்
ஒரு நிமிடம் கிடைத்திடாத என நீயும்...

விருப்பம் ஏதும்மில்லை என்னிடத்தில்
விருப்பம் கேட்கவில்லை உன்னிடத்தில்...

முடிவு சொல்லாமல் நானிருக்க
முடிவு செய்யப்பட்டதே உனையறியாமல்...

காலங்கள் மாற்றிவிடும் என நானிருக்க
காலங்கள் மாறிடாத என நீயிருக்க...

தேற்றிக்கொண்டேன் என் மனதை
தேம்புகின்றாய் உன் மனதில்...

மணமேடையில் நான் அமர்ந்திருக்க
மனக்கோட்டை இடிந்ததே உமக்கு...

நான் மூன்று முடிச்சு கட்டிட
நான் என்ன செய்வேன் என்று நீ...

காலம் கை கோர்த்து விட்டது என நானும்
காலம் கைவிட்டு விடுமோ என நீயும்...

வாழ்க்கை பந்தத்தில் இணைந்தோம்
வாழ்வும் உன்னோடு தான் என உணர்த்தாய் நீ....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro