என் இரவுகளும்
ஆயிரம் கதைகள் பேசும்...
அவள் அருகே சென்ற கதையை...
அவளோ விலகின கதைகளை
பேசி பேசி எந்தன் இரவுகள்
என்னை தூங்க விடுவதில்லை...
அதனால் தான்
இரவினை அடியோடு வெறுக்கிறேன்...
தூக்கம் தொலைத்த போதெல்லாம்
துக்கம் தொண்டையை அடைக்கிறது...
அவளை சொல்லி குற்றம் இல்லை
அவளை விடவும் மனமில்லை....
தாய் காணா சேய் போல
மனமோ அவளை தேடுது
மரண கானம் பாடுது...
எதுவரை இது....???
எதுவரை என்று தெரியவில்லை
இந்த மாற்றமும் ஏனென்று புரியவில்லை....
புரிந்தவளும் அவளே...!!!
பிரிந்தவளும் அவளே...!!!
எனக்கென்ன தூக்கம் தான் இல்லை....,💔💔💔
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro