🤗நினைவில் வைத்து மனதில் புதைத்து😥

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நினைவில் வைத்து கனவில் காண்பது அல்ல காதல்,
மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வது தான்
"காதல்"

(மேல் உள்ள வரிகள் நான் எழுதிய வரிகள் அல்ல, நான் தங்களிடம் இந்த இரு வரிகளில் உணர்ந்த பல வித உணர்வுகளை கூற வந்துள்ளேன்....)



சிந்தனைக்கும் மனம் எனும் புரியாத புதிருக்கும்
இடையினில் சிக்கி தவிக்கும் உணர்வுகளில்
ஒன்று உள்ளது என்றால் அது தான் அன்பெனும்
"காதல்"


தித்திக்கும் நிமிடங்களில் தவிக்கும் ஆயிரம் மணித்துளிகள்
சிந்திக்கும் ஒரு நொடியினில் சந்திக்கும் பல நூறு
மரண வலிகள்

தடுக்கி விழுந்திடுவோமோ என்று எண்ணியே
பரிதவித்த பல நூறு துங்கா மணி துளிகள்
சிக்குண்டது என்னவோ ஓர் மனம் தான்
ஆனால் கிடைத்த தண்டனை என்னவோ
தூங்க விழிகளும் கண்ணீர் துளிகளும் தான்

தத்தி தத்தி நகர்ந்த நாட்கள் எல்லாம்
சிந்தனையின்றி நடமாட வைத்து விட்டது
"இன்று"

வாரி வாரி வழங்கிய வார்த்தைகளெல்லாம்
சத்தமின்றி கடந்து செல்கின்றது
"இன்று"

திகட்ட திகட்ட கொடுத்த மகிழ்ச்சி எல்லாம்
நீங்காத சுவடுகளை விட்டு சென்றது
"இன்று"

அன்று நானோ உம்மை மனதினில் தூக்கி பிடித்து
எனது எதிர்கால கனவுகளை நினைவுகளில்
"புதைத்தேன்"

ஆனால் இன்று தான் உணருகிறேன்
மகிழ்ச்சியான வாழ்க்கை சிறிது நாட்கள்
மட்டுமே அனுபவிக்க இயலும் என்று....

என் மனதினில் புதைத்த காதல் என்னவோ
அழியாத மரமாய் என்னுள் வளர்ந்து நிற்கிறது
இருந்தாலும் சிந்தனை என்னவோ அதுவும்
வளரட்டும் என்கிறது, அதுபோலவே
புதிய அன்பெனும் ஓர் இதயம் கிடைத்தால்
ஏற்றுக்கொள் என்று ஆணை விடுகின்றது....

ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்
அதை தாங்கிக்கொள்ள அந்த இதயமெனும்
"பேதையினால் முடியுமா"

பொறுத்திருந்து பார்ப்போம் காலத்தின்
"விளையாட்டை"

இப்படிக்கு
ரவிச்சந்திரன்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro