🌹மலரின் ஸ்பரிசம்🌻

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மென்மை மேனி கொண்டு
வலிமை தேகம் கொண்டு
உயிர் மூச்சை பாதம் கொண்டு
தலை நிமிர்ந்து
சுட்டெரிக்கும் சூரியனுக்கும்
சவால் விடும் மலர்கள் 🌹
மனிதரிடம் விலை போனது.... 🙏

உயிர் பூத்ததும் மலர் கொத்தாக மாறுகிறேன்
இணையின் மனதை கொள்ளை கொள்ள ஒற்றை மலராகிறேன்
உயிர் மறை‌ந்த பொழுதும் உதிரி மலர்கள் ஆகின்றது...

தானே அழகுக்கும்
தானே மிதி பொருளாகவம் மாற
மனிதரிடம் பேரம் பேசப்படுகின்றேன்....

என் ஸ்பரிசம் தொட்ட வண்டுகள்
கூட்டத்தையே அழைக்கின்றது
ஆனால் என் அருமை அறிந்தும்
மனிதன் மறுப்பது ஏனோ... 🙏

எந்தன் ஸ்பரிசம் மட்டும் ஏனோ
இம் மனிதர்கள் உணர்வதில்லை... 😭

குழந்தை தேகம் கொண்டு
பஞ்சு போல ஸ்பரிசம் பெற்று
காலம் அறிந்திடா ஞானம் கொண்டே
வலம் வருகிறேன் இவ்வுலகில்... 🙏

வணக்கம் 🙏

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro