மலர் விழிகள்,
மனிதன் என்றும் மலர்ந்த புஷ்பங்களை மட்டுமே விரும்புகின்றான், அதன் காரணம் என்னவென்று மனிதர்களிடம் பூக்கள் தங்கள் வினாவை முன்வைத்தன...
வினாவின் அர்த்தம் அறியா மனிதனோ அவைகள் என்றுமே அழகென்று சிறு நொடியேனும் சிந்திக்காமல் பதிலுரைத்தான்....
பூக்களும் தங்கள் மேல் உள்ள கர்வத்தினால் தான் ஏன் இந்த வினாவை வேண்டினோம் என்று மறந்து விட்டது....
அவைகள் வினாவை ஏற்படுத்தியதால் நோக்கம் என்னவோ தாங்கள் மட்டும் அழகல்ல எங்களை சுமக்கும் முட்களும் இலைகளும் அழகே என்று தெரிவிக்கவே....
அவ்வாறு தான் சில நேரங்களில் மனிதன் ஆனவன் தனக்கு ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு காரணம் தன்னை சுற்றியுள்ள மனிதர்கள் தான் என்று தெரிவிக்க நினைக்கும் தருணத்தில் தனக்கு கிடைக்கும் வாழ்த்துகளில் மற்றவர்களை மறந்து விடுகிறான்....
இது தவறல்ல, ஆனால் ஒருவருக்கு தற்பெருமை எனும் உணர்வை ஏற்படுத்திவிடலாம்....
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro