அன்பும் நம்பிக்கையும் பாசமும் எதிர்பார்ப்புகளும் ஒருவரை என்றும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது இல்லை என்பதை உணராதவரையிலும் கவலையும் கண்ணீர் துளிகளும் உமக்கு சொந்தம் என்பதை தெரிந்துகொள்...
வானமே எல்லை எண்பது அன்பிற்கும் காதலுக்கும் மட்டுமே பொருத்தமான ஒன்று அல்ல, வெளியே உதிர்த்திடாத மனதின் வலிகளுக்கும் கண்ணீர்களுக்கும் பொருந்தும் எண்பது உண்மையே....
மனிதனின் மனது ஒரு குரங்கை போல தான், வாழ்க்கையில் கிடைத்த அனுபவம் கொண்டு மனதை மாற்றிக் கொள்கிறது... அதனால் அவர்கள் தவறான மனிதர்கள் அல்ல, மாற்றத்தை ஏற்றுக் கொள்பவர்கள்...
மாற மாட்டேன் என்றிருந்தால் வாழ்க்கையில் எதுவுமே மாறாமல் இருக்க போவதில்லை, காலம் மாற்றியே தீரும் மனதையும் வாழ்க்கையையும்...
உண்மையை உணர்ந்து மாற்றத்தினை ஏற்றுக் கொள்ளும் மனம், என்றும் கஷ்டத்தின் பிடியில் நீண்ட காலம் இருப்பதில்லை...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro