😞 வாழ்க்கை வேதனை 😭

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தனிமை விரும்பி நாடி சென்ற எமக்கு இன்று அதன் கொடுமை விட்டு விட நாடி நிற்கிறேன்...


சிந்தனை ஆகா சிறந்த ஒன்று என்று எண்ணிய நான் சிந்தனையினால் வேதனை கொண்டு தனித்து நிற்கிறேன்...


கால தேவன் காத்திருக்க சொல்கிறான் வாழும் வாழ்க்கையோ முடித்து விடு என்று சொல்கிறது...


திரும்பிய திசையெங்கும் இயற்கை தெரியவில்லை வேதனை மட்டுமே மாய விழியில் தெரிகிறது...


நான் கற்ற கல்வி செல்வமும் மிகையது ஆனால் கட்டம் சொல்கிறது நான் சரி இல்லை என்று...


நண்பர்கள் பல உண்டுஎன்னை உணர தான் பலர் இல்லை...


நான் கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான் ஏதும் இல்லாதவரை தூக்கி நிறுத்தும் காலம் என்னை கண்டு கொள்ளாதது ஏன்...


நற்செயல் குணங்கள் பல வழங்கிய காலம் நல்லது வழங்க தவறியது ஏனோ...


மற்றவர் கண்ணீர் துடைத்த என்னிடத்தில் கண்ணீர் வர வைப்பது எதற்க்காக...


மற்றவர் வருந்த விடாமல் தடுத்த என் சொற்கள் என்னிடத்தில் நேர்மறையாக வருவது ஏன்...


நான் பிறந்தது பிழையா இல்லை வாழ்வது பிழையா விடை வேண்டும் தேவனே...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro