18

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அந்த வீட்டினுள்,

அழகியை இழுத்து சென்று ஒரு பெரிய அறைக்குள் தள்ளினர்.

தள்ளிய வேகத்தில் கீழே போய் விழுந்தவள் மெதுவாய் எழுந்தாள்.

தான் எங்கிருக்கிறோம் என்று பார்வையை எதிரே சுழலவிட, அதிர்ந்து ஓர் அடி பின் வாங்கினாள்.

"நீங்க ... எப்படி...?" என்று பின்னே சென்று கதவை திறக்க முயற்சி செய்ய, அதுவோ வெளிப்புறம் தாழ் போட்டிருந்ததால் திறக்கவில்லை.

"உங்களுக்கு என்ன வேணும்? என்னை எதுக்கு கடத்திட்டு வந்திங்க. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க... நா யார்கிட்டயும் எதுவுமே சொல்ல மாட்டேன். ப்ளீஸ் விட்ருங்க." என்று இரண்டு கரங்களையும் கூப்பி மன்றாடினாள்.

"ஹா ஹா..." என்னடா நீங்க ரெண்டு பேரும் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்திங்க? பார்த்தா இப்படி கெஞ்சுறா?" என்றனர் அவளை பார்த்து ஏகத்தாளமாய் சிரித்து.

"ப்ளீஸ்... நான் தெரியாம உங்களை அடிச்சுட்டேன். நான் பண்ணது தப்பு தான். தயவு செஞ்சு என்னை விட்ருங்க" என்றவளின் விழிகள் அறையை ஒருமுறை கூர்ந்து கவனித்தது.

"சும்மா.. நிறுத்துடி... உனக்கு என்ன உலக அழகின்னு நினைப்பா? நீயும் தானே எங்க கூட பேஸ்புக்ல பேசின? என்னவோ நாங்க உன்கிட்ட பேசாமயே நீ யாருன்னு தெரியாம தூக்கிட்டு வந்த மாதிரி பேசுற? நீ மட்டுமில்லடி எங்க கண்ணுபட்ட எந்த பெண்ணும் தப்பிச்சதில்ல... நீ மட்டும் எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா விட்ருவோமா? அமைதியா இருந்தா எல்லாமே சுலபமா முடிஞ்சுரும். ஒரே ஒரு மணி நேரம் மட்டும் போதும் எங்களுக்கு..." என்றான் ஒருவன் வக்கிர பார்வையோடு.

"சீ... நீங்க எல்லாம் அக்கா தங்கச்சிங்களோட பிறக்கலை... உங்களை பெத்தவளும் பெண் தான?" என்றாள் கோபமாக.

"மச்சான் நீ சொன்னது நிஜம் தாண்டா. முதல்ல அழும்போது எதோ குறையா இருந்தது. இப்போ இந்த எமோசன்ல பார்க்க பார்க்க அள்ளுதுடா... கவலை படாதீங்கடா... உங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது இவ தான... அதனால உங்களுக்கு இவ முதல்ல......" என்று கூற கோபம் தலைக்கேற தொடங்கியது அழகுக்கு இருந்தும் பொறுமையுடன்.

"ஏன்டா என் இடத்துல உங்க அம்மா இருந்தாலும் இப்படி தான் பேசுவிங்களோ? உங்க ஆசைக்கு நான் தான் கிடைச்சேனா?" என்றாள்.

"ரொம்ப துள்ளாதடி... நீ மட்டும் தான் இங்கே வர்ற முதல் பொண்ணுனு நினைச்சுட்டியா? உன்னோட சேர்த்து இருபத்தி மூணாயிரத்து அம்பது ஆறு பொண்ணுங்க இங்க இதே வீட்ல... இதே ரூம்ல எங்க நாலு பேர் கூட இருந்துருக்காங்க. எவளுமே விரும்பி வரலை. விரும்பி வந்தவளை நாங்க வச்சுகிட்டதுமில்ல. என்ன பார்க்கிற புரியலையா?" என்றவனிடம்

"டேய் மச்சான் அவகிட்ட போய் எதுக்கு டா இதெல்லாம் சொல்லிட்டு இருக்க? யூஸ் பண்ணிட்டு தூக்கி போட போற குப்பைடா அவ." என்றான் இன்னொருவன்.

****

கால் மணி நேரம் காத்திருந்தவள் அவன் அழைத்தவர்கள் வந்ததும் அருகில் செல்ல தொடங்கினர்.

வாசலை நெருங்கியதும், "ஒருத்தன் கூட வெளிய போக கூடாது. கண்ணா வா." என்று உள்ளே சத்தமில்லாமல் நுழைந்தான்.

உள்ளே நுழைந்து ஷிவா வலது புறமும் கண்ணன் இடது புறமும் பிரிந்து சென்றனர்.

*****

"இருடா மச்சான். நம்மளை பத்தி தெரியல அதான் இப்படி திமிரா இருக்கா. திமிர அடக்குறதுக்கு முன்னாடி நம்ம புகழை சொல்ல வேண்டாம்." என்றவன் அவளிடம் திரும்பி, "உன்ன மாதிரி இருக்க அப்பாவி பொண்ணுங்க, நேர்ல இருக்க புருஷன்கூட சண்டை போட்டுட்டு நெட்ல ஆறுதல் தேடலாம்னு வர பொண்ணுங்க, நிறைய சொத்து ப்ளஸ் அப்பா அம்மா ரெண்டு பேரும் இருந்தும் கவனிக்காம பாசத்துக்காக ஏங்கி வலைத்தளத்துல வழுக்கி எங்க வலைல விழுகுற பொண்ணுங்க, தொட்டதுக்கெல்லாம் திட்டி அடிக்கும் அப்பா அம்மா இருந்தும் சொல்லமுடியாம யார்கிட்ட சொல்லி அழலாம்னு தவிக்கிற ஸ்கூல் பொண்ணுங்க இன்னும் நிறைந்த வெரைட்டி இருக்கு. எல்லாருக்குமே வலை விரிச்சா இந்த கேஸ்லாம் கொஞ்சம் பழகினவுடனே அவங்க துக்கத்தை தீர்க்க வந்த கடவுளா எங்ககிட்ட சொல்ல நாங்களும் அதை ரெகார்ட் செஞ்சு அவங்களை எங்க தேவைக்கு யூஸ் பண்ணிட்டு அப்பப்போ பணத்தையும் வாங்கிட்டே இருப்போம். யாரும் வாய திறக்க மாடாளுங்க... ஏன்னா இங்க பாரேன். இதை காமிச்சேன்னு வை உடனே ஆப் ஆகி நாங்க என்ன சொல்றோமோ அதை மட்டும் செய்ற நாய் குட்டியா மாறிடுவாளுங்க. புடிக்குதோ புடிக்கலையோ நாங்க சொல்றது தான் வேத வாக்கு... எந்த கொம்பனாலையும் எங்களை பிடிக்க முடியாது. எங்க அப்பனுங்க சேர்த்து வச்ச காசுலர்ந்து கொஞ்சூண்டு எடுத்து இறைச்சா வாலை ஆட்டிட்டு ஓடிருவானுங்க. இந்த லிஸ்ட்ல இன்னும் கொஞ்ச நேரத்துல நீயும் சேர போற.." என்று நெருங்கவும்...

"அது உங்க கனவுல தான் நடக்கும் ." என்றாள் திமிராக.

"பார்ரா... இந்த ஸ்டைல் கூட ரொம்ப நல்லா இருக்கு? இன்னும் ஆசை வருது.முரண்டு பிடிக்காத..." என்று அவளை நெருங்கி தொடவும் இடக்கையில் மறைத்துவைத்திருந்த சிறிய கத்தியால் அவன் கையில் ஒரு கீறல் போட்டாள்.

"ஆஹ்... திமிரு பிடிச்சவளே... எங்க இடத்துக்கு கூட்டிட்டு வந்தும் உனக்கு பயம் வரலைல... உன்னை..." என்று இன்னொருவன் நெருங்க குறி பார்த்து மேலிருந்து கீழ் வீச தோள்பட்டையை பதம் பார்த்தது.

"ஆஹ்...ஆஹ்... அவ்ளோ திமிராடி உனக்கு.." என்று இருவரும் நெருங்க சரியாக தாழ் வெளியிலிருந்து திறக்கவும் திறந்தவனின் மேல் சாய்ந்தாள் அழகி.

"அறிவு... உனக்கு ஒன்னுமில்லல்ல..?" என்றான் பதட்டமாய்.

"இல்ல எனக்கொன்னுமில்லை..." என்று அவன் நெஞ்சினில் சாய்ந்து கொண்டு தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி கொடுத்தாள்.

"ரொம்ப தேங்க்ஸ்." என்றான் அவளின் காதில்.

"கண்ணா" என்று குரல் கொடுக்க ஓடோடி வந்தவன் தங்கையை கண்டதும் தான் உயிரே வந்தது அவனுக்கு.

"அழகிம்மா." என்றதும் தாவி அண்ணனை அணைத்துக்கொண்டாள்.

"அண்ணா" என்றாள் கண்ணீர் வர,

"உனக்கும் உம் புருஷனுக்கும் ரொம்ப தான் நெஞ்சழுத்தம்." என்றான் முறைத்து.

"டேய் என் செல்லத்தை திட்டாம சீக்கிரம்  வெளிய கூட்டிட்டு போடா.." என்றான் ஷிவா.

கண்ணனும் அழகியும் வெளியேறியதும் வெளியே நின்ற முழு காவல் படையும் உள்ளே நுழைந்து அனைவரையும் கைது செய்தது.

அனைத்து ஆதாரங்களையும் தன்னுடன் மட்டும் வைத்து கொண்டான் ஷிவா.

அழகி கொடுத்த செயினில் இருந்த வீடியோ புட்டெஜை பார்த்ததும் அதிர்ந்தவன் மனைவியின் அதிரடியில் அசந்து தான் போனான்.

இரவு செய்திகளில் முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் இதை பற்றியே செய்திகள் வந்து கொண்டிருக்க, இதை சாதித்தவனின் பெயரோ வெளிவராமல் இருந்தது.

சாதித்துவிட்ட பெருமிதம் எதுவுமே தெரியாதது போல் அமைதியாய் அமர்ந்திருந்தான் ஷிவா.

இவ்வளவையும் கச்சிதமாய் செய்து முடித்து தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல அமர்ந்திருக்கும் கணவனை பெருமை பொங்க பார்த்து கொண்டிருந்தாள் அழகி.

"ஏன்டா அந்த புள்ளைய வெளிய கூட்டிட்டு போனியே... ஒரு முழம் பூ வாங்கி கொடுத்திருக்க கூடாது... என்ன புள்ளையா போ." என்று மகனை திட்டியபடி சமயலறையில் நுழையும் தாயை பார்த்தபின் மனைவியை நோக்கி கண் சிமிட்டினான்.

அழகியின் போன் அடிக்கவும் அவளை பார்த்து சிரித்தவன் பேசு என்று விழி மூடி திறக்க, "ஹெலோ!" என்றாள் அழகி.

"என்ன ஹெலோ? எவ்ளோ திமிர் இருக்கும் உனக்கும் உன் புருஷனுக்கும்...? கல்யாணமாகி முழுசா மூணு நாள்கூட முடியல? அதுக்குள்ள ரெண்டு பேரும் சாகசம் செய்ய கிளம்பிட்டிங்களோ? எங்க அந்த தடி மாடு? போன் பண்ணா எடுக்க மாட்டானா? மரியாதையா எடுக்க சொல்லு. இல்ல இன்னும் பத்து நிமிதத்துல அங்க இருப்பேன்.." என்று வைத்தான்.

மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது அவளுக்கு. கடந்த இரண்டு மணி நேரமாக கண்னனிடம் மாற்றி மாற்றி இருவரும் இப்படி தான் திட்டு வாங்கி கொண்டிருக்கிறார்கள்.

"என்னவாம் அவனுக்கு?" என்றான் ஷிவா.

"ரெண்டு மணி நேரமா திட்டினது பத்தலையாம்.. இன்னும் பேசனுமாம். ஏன் போன எடுக்கலைன்னு திட்டுச்சு. இப்போ நீங்க போன் எடுக்கலைன்னா அடுத்த பத்து நிமிஷத்துல இங்க இருக்குமாம்." என்றாள் குறும்பு புன்னகையுடன்.

அவள் கூறி முடிக்கவும் போன் அடிக்கவும் சரியாக இருந்தது.

"ரொம்ப தான் பண்றான் இவன்." என்று திட்டி கொண்டே மாடியேறினான் ஷிவா.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro