31

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"அது...அது.." என்று அவள் தயங்கவும்.

"உனக்கு தயக்கமா இருந்தா லேடி போலீஸ் கூப்பிடறேன் மா. நீ அவங்ககிட்ட சொல்லு." என்றான் ஷிவா.

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன், "இல்லண்ணா உங்ககிட்டையே சொல்றேன். அந்த பொண்ணுங்களை ஒன்னு மிரட்டி பணியை வைப்பாங்க இல்லைன்னா அவங்க ஏழ்மையை பயன்படுத்தி காசை காட்டி அவங்களுக்கு தேவையானதை முடிச்சுப்பாங்க. எங்க ஹாஸ்டல் வார்டன்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கு. கூட இருக்க பொண்னுகள்ல சில பேர் அவங்க ஆளுங்க.

இது ரெண்டுத்துக்குமே அடிபணியாத பொண்ணுங்களை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கிடுவாங்க. போதை பொருள் வேணும்னா என்ன வேணாலும் செய்றேன்ற அளவுக்கு கொண்டு வந்துருவாங்க. கடைசில உனக்கு பொருள் வேணும்னா இந்த வேலையை முடின்னு சொல்லி சில நேரம் பெரிய பெரிய பணக்கார ஆண்களுக்கு விருந்தாவும் அனுப்பப்படறாங்க. இதனால அவங்க வாழ்க்கையே பாதிக்க படும்னுல்லாம் அவங்க யோசிக்கிற நிலமைல இல்ல.

என்னை இங்க கூட்டிட்டு வந்தது என்னோட கருமுட்டையை என் அனுமதி இல்லாம வலுக்காட்டாயப்படுத்தி எடுத்து விக்க தான். நல்ல வேலை எந்த ஒரு தப்பும் நடக்கும் முன்ன வந்து காப்பாதிட்டிங்க. ஆனா எங்க ஹாஸ்டலையே வாரத்துக்கு ஐந்து பொண்ணுங்களை இதுக்காக வச்சுருக்கான். அவங்க எல்லோரையும் காப்பாத்தனும் சார். என்னை எங்க ஊருக்கு அனுப்பிடுங்க சார். குடும்ப கஷ்டத்துக்கு பிழைக்க வந்தா வாழ்க்கையே போய்டும் போல.." என்றாள் கண்ணீருடன்.

"எல்லாம் சரியாகிடும் மா. என்ன அதுக்குள்ள ஊருக்கு போறேன்னு சொல்லிட்ட? சரி நீ எங்கே வேலை செய்ற?" என்றான்.

"மினு சில்க்ஸ் ல சேல்ஸ் ல இருக்கேண்ணா." என்றாள்.

"என்னம்மா? பி.ஏ தமிழ் படிச்சுட்டு சேல்ஸ் ல இருக்கேன்னு சொல்ற? சரி உனக்கு தங்க பாதுகாப்பான ஒரு இடமும் நல்ல வேலையும் நான் ஏற்பாடு பண்றேன். சரியா? நீ தைரியமா இருந்தா தானே உன் குடும்பத்தை காப்பாத்த முடியும்?" என்றால் ஷிவா.

"சரிண்ணா." என்றாள்.

"சரி நீ ரெஸ்ட் எடு. நான் அப்புறமா வரேன்." என்று வீட்டிற்கு கிளம்பி வந்தான்.

*****

நடந்ததை கண்ணனிடம் கூறியவன், "சரி வா கொஞ்சம் வேலை இருக்கு." என்று கூட்டி சென்றான்.

அந்த பெண்ணை நல்ல ஆசிரமம் ஒன்றில் சேர்த்து விட்டவன், அதன் அருகில் இருந்த பள்ளிக்கூடத்தில் பேசி தமிழ் ஆசிரியை பணியை வாங்கி தந்தான்.

அதற்கான ஆணையை அவளிடம் தந்து,

"போதுமாம்மா?" என்றான் புன்னகையுடன்.

அவன் கால்களில் விழா போக, "என்னம்மா என்ன பண்ற?" என்று பதறி விலகி நின்றான்.

"நீங்க தான் என் சாமி." என்று கும்பிட்டவள். "ரொம்ப நன்றிண்ணா." என்றாள்.

இந்தா என்று ஒரு கவரை நீட்ட, "என்ன அண்ணா இது?" என்று வாங்காமல் தயங்கினாள்.

"இந்தாம்மா வாங்கிக்கோ." என்று ஒரு பாரமை கொடுத்து, "உனக்கு பி.ஜி படிக்க சீட்க்கு ஏற்பாடு பண்ணிருக்கேன். வேலைக்கு போய்ட்டே படி. நல்லா படிச்சு நீ ஒரு காலேஜ்ல லெக்சரர் ஆகணும். சரியா?" என்றான் ஷுவா.

பேச வார்தையில்லாமல் கண்ணீருடன் கரம் கூப்பினாள்.

"கண்டிப்பாண்ணா. நிச்சயம் ஒரு நாள் உங்க முன்னாடி அப்படி வருவேன்." என்று புன்னகைத்தாள்.

"உன் பேரு சொல்லவே இல்லையே?" என்று கேட்டான்.

"பவித்ரா ண்ணா." என்று புன்னகைத்தாள்.

இருவரும் பேசுவதை மட்டும் கொண்டிருந்த கண்ணனிடம், "இது என்னோட பிரென்ட் கண்ணன்." என்றான்.

"வணக்கம் சார்." என்றாள்.

"வணக்கம்." என்றான் கண்ணன்.

"சரிம்மா. நீ பத்திரமா போ. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு." என்று தான் அலைபேசி எண்ணை கொடுத்து அனுப்பினான்.

அவன் செய்கைகளை வாயை பிளக்காத குறையாக பார்த்து கொண்டிருந்தான் கண்ணன்.

"டோர் க்ளோஸ் பண்ணு." என்று வாயை மூடும்படி சைகை செய்தான் ஷிவா.

"இல்ல இவளும் இந்த கேஸ் ல இருக்க மத்த பொண்ணுங்க மாதிரி ஒரு பொண்ணு. அவ்ளோ தானே..? என்ன இவ்ளோ தனிப்பட்ட அக்கறை?" என்றான் கண்ணன் நடந்து கொண்டே.

சட்டென நின்ற ஷிவா அந்த பெண்ணை பற்றி முழுவதும் கூறி, "டேய் பொண்ணுங்க படிக்க கூடாது சொல்ற ஊர்ல போராடி படிச்சு குடும்பத்துக்காக வேலைக்கு போகணும்னு அதுக்கும் போராடி இங்க வேலைக்கு வந்துருக்கா. வந்த இடத்துல ஒரு நாளாவது நிம்மதியா தூங்கினாளா தெரியலை. இன்னைக்கு நிம்மதியா பயமில்லாம தூங்குவா. மக்களுக்கு உதவுற இடத்துல பதவியில் இருக்கிற நாம ஏதோ முடிஞ்ச ஹெல்ப் செஞ்சா அவ எதுக்கு இங்க வந்தாளோ அது நிறைவேற உதவியா இருக்கும்னு தான் செஞ்சேன். மத்த பொண்ணுங்க அப்பன் காசுல படிச்சுட்டு குடும்ப கஷ்டத்தை பார்க்காம ஊரை சுத்தினா என்ன பண்ண முடியும்? இவளுக்கு மட்டும் இல்ல இது மாதிரி மீட்டிருக்குற முப்பதஞ்சு பொண்ணுங்களுக்கு ஏதோ ஒரு ஹெல்ப் பண்ணிருக்கேன்டா. அதுல பவித்ரா கொஞ்சம் ஸ்பெசல். அவ்ளோ தான். போலாமா?" என்று தன் கூலஸ்சை மாட்டிக்கொண்டு அடுத்த இடத்திற்கு சென்றான்.

"இவ்ளோ செஞ்சாலும் உன் பேரு எங்கையும் வராம பார்த்துக்குற பார்த்தியா அங்க நிக்குற டா நீ நண்பா." கூறிக்கொண்டு சிவாவின் பின்னே சென்றான்.

அவன் கூறியது காதில் விழுந்ததும் புன்னகைத்து கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தவன், "டேய் என் பொண்டாட்டிக்கு ஒரு டூ வீலர் வாங்கி தரலாம்னு இருக்கேன்." என்றான்.

"என்னாது அழகிக்கு வண்டியா வேண்டவே வேண்டாம். விஸபரிச்சைல இறங்காத." என்றான் கண்ணன்.

"ஏன்டா ஓட்ட தெரியாதா?" என்றான் ஷிவா.

"அதெல்லாம் சூப்பரா ஓட்டுவா... ஆனா வேணாம்." என்றான் கண்ணன்.

"டேய் காலேஜ்கு போறதுக்கு தாண்டா."

"அதெல்லாம் நீயே கூட்டிட்டு போ. இல்ல நான் கூட்டிட்டு போறேன். ஆனா வண்டி அவளுக்கு வேண்டாம்." என்றான் கண்ணன்.

"அவளுக்கு வண்டி ஓட்ட பிடிக்குமா?"

"ரொம்ப பிடிக்கும்."

"அப்போ கண்டிப்பா வாங்கிடுவேன்." என்றான் ஷிவா.

"நீ தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்குற சொல்லிட்டேன்." என்றான்.

அதோடு இன்னொரு பெண்ணை பற்றி அவளின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க கூறினான்.

அந்த ஹாஸ்டலில் இவர்களின் பிடியில் இருந்த மற்ற பெண்களை காப்பாற்றி பெற்றோரிடமும் போதைக்கு அடிமையாகி இருந்த பெண்களை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தான்.

ஹாஸ்டல் வார்டனிடம் நடத்திய அதிரடி விசாரணையில் மற்ற ஹாஸ்டல்களில் இருக்கும் பெண்களையும் மீட்டனர்.

எக்காரணம் கொண்டும் இங்கே சம்பந்தப்பட்ட பெண்களின் பெயர் வெளியே வரக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருந்தாரன்.

அவர்களின் கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்தவன் தான் உருவாகியிருந்த நம்பிக்கை மிகுந்த குழுவுடன் ஒரு மீட்டிங்கை ஏற்படுத்தி இருந்தான்.

"ஹாய் பிரெண்ட்ஸ்! எல்லோருக்கும் பர்ஸ்ட் ஒரு பெரிய தேங்க்ஸ் அண்ட் பெரிய கிளாப்ஸ்... பிகாஸ் நீங்க இல்லைன்னா இவ்வளவு முக்கியமான கேஸை நாம பிடிக்க முடிஞ்சிருக்காது. சோ, உங்களோட ஒத்துழைப்புக்கும் ரொம்ப நன்றி. முக்கியமா ஏட்டு சார் உங்க ரிலேடிவ் பொண்ணு மட்டும் நமக்கு ஹெல்ப் பண்ணலைன்னா இன்னும் கொஞ்ச கஷ்டமா இருந்திருக்கும். அவங்களுக்கு நான் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு உங்க எல்லோருக்கும் தெரிஞ்சுருக்கும். நாம முக்கியமான அந்த தலைவனை இன்னும் பிடிக்கலை. ஆல்மோஸ்ட் எல்லாத்தையும் முடிச்சாச்சு. அவனை மட்டும் தப்பிக்க விடாம பிடிக்கணும்னு. அதுக்காக தான் இந்த மீட்டிங். ஓகே ஆல் ஆப் யு பீ அலர்ட். போய் ரெஸ்ட் எடுங்க." என்று அவனும் வீட்டிற்கு கிளம்பினான்.

"அறிவு" என்று அழைத்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்.

"அவ இன்னும் காலேஜ்லர்ந்து வரலையேப்பா." என்றார் அம்மா.

"இந்நேரம் வந்திருக்கணுமே..." என்று மணியை பார்த்தான் மாலை நாலரை காட்டியது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro