32

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இங்கே ஜீவாவுடன் பைக்கில் தீவிர யோசனையோடு போய் கொண்டிருந்தாள்.
முடிந்தவரை அனைத்து இடங்களிலும் தேடி தேடி களைத்து போயினர்.

"என்னடா எந்த க்ளூவும் கிடைக்கலை மணி 3மூணு ஆகிடுச்சு. சரி வேற வழி இல்ல. நானே போறேன்." என்றாள் அழகி.

"ஏய் என்ன விலையாட்றியா? இந்த விளையாட்டுக்கு நான் வரல. ஒழுங்கா வீட்டுக்கு கிளம்பு." என்றான் ஜீவா எச்சரிக்கும் விதமாக.

"ம்ப்ச் ஜீவா. சின்ன குழந்தைடா. அப்படியே போனா மனசுல பெரிய குற்ற உணர்வா இருக்கும். நான் போக தான் போறேன். டேய் நீ வண்டி எடு. சீக்கிரம் அவங்க சொன்ன ஆகிட்டு." என்றாள் அழகி.

தயங்கியபடியே வண்டியை எடுத்தான் அவனும். பாதி தூரம் வந்திருந்தனர்.

"இப்போ கூட சொல்லு நாம போயிடலாம் அறிவு. இது விஷ பரிட்சைன்னு தோணுது." என்றான் ஜீவா.

"ஜீவா நான் ஒரு முடிவோடு போய்ட்டு இருக்கேன். ஒன்னு என்கூட வரதா இருந்தா வா. இல்லைனா அப்டியே திரும்பி போய்ட்டே இரு." என்று சற்று தொலைவில் இவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஜீவாவை முறைத்தபடி கூறினாள்.

"ஏற்கனவே ஒரு ஆபத்துல மாட்டி நல்ல வேலையா உங்க அண்ணன் வந்து காப்பாத்திட்டார். இப்போ ஏன் மா இவ்ளோ ரிஸ்க் எடுக்கிற?" என்றான் ஜீவா ஆதங்கமாய்.

"ஜீவா! நேத்து என்ன நடந்ததுன்னு பார்த்தல்ல?" என்றாள்.

"அதுக்கு போலீஸ்ல சொல்லலாம். நீ எதுக்கு ஆபத்துல போய் சிக்கனும்." என்றான்.

"அறிவு" என்றான் வண்டி ஒட்டி கொண்டிருந்த ரகு(இன்னொரு மாணவன்).

"என்ன?" என்றாள் கோபமாக.

"இன்னும் பத்து நிமிஷத்துல அங்க போய்டுவோம். இப்போ கூட சொல்லு அப்படியே திரும்பி போயிடலாம். அவங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க. வீணா அவங்ககிட்ட மாட்டிக்கிட்டா அவ்ளோ தான். நான் ஏதாவது சொல்லிடறேன். எப்படியாவது கெஞ்சி பார்க்கிறேன்." என்றான் மெதுவாக.

ஓங்கி முதுகில் ஒரு அடி வைத்தவள், "இதை நீ ஒரு காரியம் பண்ணியே அதுக்கு முன்னாடி செஞ்சுருந்தா சரின்னு சொல்லிருப்பேன். இப்போ உன் வாய மூடிக்கிட்டு இரு." என்றாள் காட்டமாக.

"ஜீவா" என்றாள் மெல்ல சிரித்து.

"என்ன?" என்றான் கோபமாய்.

"நீ என்னை திரும்பி முழுசா பார்க்கணும்னா... சரியா அந்த ஏரியாகுள்ள நாங்க என்டர் ஆகும் போது நான் தந்த நம்பற்கு போன் பண்ணி நான் சொன்னா மாதிரி மறக்காம சொல்லணும்." என்றாள்.

"சொன்னவுடன் உன்னை காப்பாத்த வந்துருவாரா?" என்றான் நக்கலாக.

"ஆமா" என்றாள் புன்னகையுடன்.

"உனக்கு தான் உயிர் மேல பயம் இல்லை. அவருக்கு இருக்காதா? அதெப்படி அவ்ளோ உறுதியா சொல்ற?" என்றான்.

"ஏன்னா அவரோட உயிரே நான் தான்." என்று கண் சிமிட்டியபடி அந்த ஏரியாவிற்குள் நுழைந்தாள்.

ஜீவாவும் ஷிவாவிற்கு அழைத்தான், "சார்! நான் ஜீவா." என்றான்.

"ஜீவாவா? யாரு நீங்க? என்ன வேணும்?" என்றான்.

"நான்... நான் அறிவோட பிரென்ட்." என்றான் தயங்கியபடி.

"ஒஹ் அந்த ஹெல்மெட் மண்டையனா? ஓகே ஓகே இப்போ எதுக்கு போன் பண்ண அறிவு எங்க?" என்றான் இறுதியில் பதட்டமாக.

"சார் நான் எவ்ளோ சொல்லியும் கேட்காம அறிவு பெரிய இக்கட்டில மாட்டிக்கிட்டா. உங்களால மட்டும் தான் இப்போ அவளை காப்பாத்த முடியும். எவ்ளோ கெஞ்சி பார்த்துட்டேன் கேக்கவே இல்ல. என்னை திரும்பி பார்க்கணும்னா இவருக்கு சொல்லிடுன்னு சொல்லிட்டு போய்ட்டா. கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்." என்றான் பதட்டமாக ஜீவா.

"என்ன சொல்ற? எங்க போனா அவ?" என்றான் உயிரை கையில் பிடித்து வைக்க முடியுமா என்ற சந்தேகத்தோடு.

"அட்ரஸ் சொல்லு முதல்ல?" என்றவன் தன் டீமுக்கு அழைத்து, "ரொம்ப எமெர்ஜென்சி. சீக்கிரம் இந்த அட்ரெஸ்ஸை சந்தேகம் வராம ரௌண்டப் பண்ணுங்க. கமான் கிவிக்." என்று வண்டியில் பறந்தான்.

"இப்போ சொல்லு என்ன நடந்தது?" என்றான் வண்டி ஒட்டி கொண்டே,

"சார்! எங்க காலேஜ்ல போதை பொருள் சாகிலேட்ல பசங்களுக்கு தெரியாம விக்கிறாங்க சார். இதை அறிவு கண்டுபிடிச்சிட்டா என்கிட்டயும் சொன்னா. நேத்து பார்க்கும் போது எனக்கு தெரிஞ்ச பையன் அதுல இருந்தான். அவன்கிட்ட பேசனும்னு சொன்னா. நான் சம்மதிகலை. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. நான் கேட்டு சொல்றேன் சொன்னேன் சரின்னா.

ஆனா நேத்து ஈவினிங் நாங்க கேன்டீன் போலாம்னு போனப்ப, பக்கத்துல தூரமா ரெண்டு பேர் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. கிட்ட போனப்ப அந்த பையன் தான் இன்னொரு பொண்ணுகிட்ட சண்டை போட்டு... கிஸ் பண்ண போர்ஸ் பண்ணிட்டு இருந்தான். அழகிக்கு கோபம் வந்து அந்த பையனை அடிச்சுட்டா. என்னன்னு கேட்டப்ப விருப்பமே இல்லாம இவன்கூட ரெண்டு நாள் வெளிய வரணும்னு கட்டாய படுத்துறான். இல்லைன்னா முகத்துல ஆசிட் அடிச்சுறுவேன்னு பயமுறுத்தறான்ணு அந்த பொண்ணு அழுதுச்சு.

அந்த பொண்ணை அனுப்பி வச்சிட்டு அந்த பையனை பொலந்துட்டா. ஏன்டா இப்படி பண்ணன்னு கேட்டா. அவன் சொன்ன காரணம் ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அவனுக்கு அந்த சாக்லேட் தரவனுங்க ஹெட்டுக்கு இன்னைக்கு பாரின் மீட்டிங் இருக்காம். அதுக்கு காலேஜ் பொண்ணுங்களை தான் கேட்ருக்காங்க. இவன் எனக்கு யாரையும் தெரியாது நான் கூட்டிட்டு வரமாட்டேன்னு சொன்னதுக்கு நேத்து மதியம் இவனோட தங்கச்சியை தூக்கிட்டாங்க. வெளிய சொன்னா பிணம் தான் மிதக்கும்னு மிரட்டிருக்காங்க. ஒன்னு காலேஜ் பொண்ணு வரணும் இல்லைன்னா இவன் தங்கச்சியை கொடுத்துருவோம்னு சொல்லி மிரட்டிருக்காங்க. அந்த பையனும் இதை  சொல்லி தான் அழுதான். உடனே இவ தேடி பார்க்கலாம்னு காலைல இருந்து தேடி குழந்தை கிடைகலன்னு நானே போறேன்னு போய்ட்டா சார். எனக்கு பயமா இருக்கு. நான் இங்கே பக்கத்துல தான் இருக்கேன். நீங்க வாங்க சார்." என்று கூறி முடிக்கவும் அவன் எதிரில் நின்றான் வெறிகொண்டு கட்டுக்கடங்காது சீறி பாயும் காளையாக.

ரெண்டு அரை விட்டவன், "அறிவிருக்காடா உங்க ரெண்டு பேருக்கும். நேத்தே வான் பண்ணேன். இதுல தலையிடாதன்னு பெரிய ஜான்சி ராணி இவ. எவ்வளவு டேஞ்சரான இடத்துக்கு போயிருக்கா தெரியுமா? மாட்டினா ஒரு எலும்பு என்ன ஒரு சொட்டு ரத்தம் கூட கிடைக்காம பண்ணிடுவாங்க." என்று கூறி கொண்டிருக்கும் போதே.. சிவாவின் போன் அலர்ட் டோன் வர எடுத்து பார்த்தான்.

ஒரு வீடியோ லிங்க் அனுப்பியிருந்தாள் அறிவு.

அதை ஓபன் செய்தவனுக்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

அவள் காதில் இருக்கும் கம்மலுடன் கேமராவை இணைத்திருந்தாள் போல.

அந்த பங்களாவினுள் நுழைந்து சென்று கொண்டிருந்தாள்.

நிறைய ஆட்கள் இருந்தனர்.

ஏதோ மாவு போன்ற பொருட்களை கலந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வேலை செய்ய கடைசியாக சாக்லேட் வடிவம் பெற்றிருந்தது அது. மேலும் உள்ளே நடந்து போய் கடைசியாக ஒரு அறையினுள் நுழைந்தனர்.

அங்கே இருந்த மேஜையில் சாய்ந்தபடி இளவயது வாலிபன் ஒருவன் நின்றிருந்தான். பார்ப்பதற்கு பட ஹீரோ போல் இருக்க அவன் தான் இவர்கள் பிடிக்க தேடி கொண்டிருக்கும் கூட்டத்தின் தலைவன் என்பது அவன் பேசிய வார்த்தைகளில் தெரிந்தது.

"ஹ்ம்ம் இந்த பொண்ணு தானா அது?" என்றான் அவன்.

"ஆமா சார். ப்ளீஸ் என் தங்கச்சிய விட்டுடுங்க." என்று கெஞ்சினான் இவளுடன் சென்றவன்.

"ஹ்ம்.. ம்ப்ச் அந்த பொண்ண யூஸ் பண்ணா இன்னும் கிக்கா இருக்குன்னு நினைச்சேன். பரவால்ல நீ நாங்க சொன்னபடி ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்துட்ட சோ அவளை விட்டுடறேன். நீ போ." என்றான் தலைவன்.

அவனும் தயங்கி நிற்க, "டேய் நீ ஒரு பார்ட்டிக்கு போகணும்னு தானே கூட்டிட்டு வந்த இவங்க என்ன பேசுறாங்க? எங்க பார்ட்டி? நீ ஏன் போகணும்?" என்றாள் அழகி அதிர்ச்சியாவது போல்.

அவன் எதுவும் கூறாமல் நிற்க, "அவன் சொன்னது உண்மைதான் பார்ட்டி தான் இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க தான்." என்று விஷமமாக சிரித்தான்.

இதை பார்த்து கொண்டிருந்த ஷிவாவிற்கு ஏகத்திற்கு பி.பி ஏறியது.

எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறாள் என்று ஒரு நொடி பயமும் வந்தது.

"நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்." என்று அந்த பையன் அங்கிருந்து கிளம்ப, "இவளை பத்தி விசாரிசிங்களா?" என்றான் அழகியை பார்த்துக்கொண்டே.

"ப்ளீஸ்! நான் வீட்டுக்கு போகணும் என்னை விட்ருங்க." என்றாள் அழகி.

'எதுக்கு இப்படி பேசுறா? இவனுங்களுக்கு சந்தேகம் வர கூடாதுன்னு பண்றாளோ?' என்று யோசிக்க, அவனின் கேள்வி வேறு படமுறுத்தியது.

தன்னுடைய மனைவி என்று தெரிந்துவிட்டால் அவள் உயிருக்கு ஆபத்தென்று அஞ்சினான்.

"எங்க அம்மா அப்பா அண்ணன் எல்லாம் பயப்படுவாங்க. நான் வீட்டுக்கு போகணும்." என்றாள் அழகி.

"விசாரிச்சாச்சு சார். அந்த காலேஜ் தான் படிக்கிறா." என்றான் இன்னொருவன்.

"நீ எதுவும் தொல்லை பண்ணாம இருந்தா சீக்கிரம் வீட்டுக்கு போய்டுவ... இல்லைன்னா பரலோகத்துக்கு அனுப்பிருவேன்." என்றவன் மணியை பார்த்து, "இன்னும் பார்ட்டி மினிட்ஸ் இருக்கு. மீட்டிங் ஆரம்பிக்க... முடிஞ்சதும் அவங்களுக்கு விருந்து..." என்று அழகியை ஒரு மார்க்கமாக பார்த்தவன், "ரூம்ல கொண்டு போய் உட்கார வைங்க." என்றான்.

"இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கு. அதுக்குள்ள அவளை மீட்டாகனும். நல்ல படியா வெளிய வரட்டும் அவளுக்கு இந்த ஷிவா யாருன்னு காட்றேன்." என்றான் கோபமாய் தலை கோதி.

"டேய் எங்கடா இருக்க?"

"நீ வர சொன்ன இடத்துக்கு வந்துட்டேன்." என்றான் கண்ணன்.

"இங்க வா." என்று தான் இருக்கும் இடத்தை கூறினான்.

"என்னடா அவசரமா வர சொன்ன?" என்றான் கண்ணன்.

"உன் தங்கச்சி செஞ்சு வச்சுருகிற வேலை அப்படி.." என்றான் ஆழ்ந்த குரலில் அமைதியாய்.

அவனின் அமைதியான குரல் இவனுக்கு பீதியை கிளப்ப, "அவ எதுக்கு இங்க வந்தா? இப்போ என்ன செஞ்சு வச்சா?" என்றான் பதட்டமாக.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro