சுதந்திர தினம் கொண்டாடும் அடிமைகள்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சாதிப் போர் மதப்போர் எனத் தூண்டி சிரிப்போர் செய்யும் கலவரம்.

மதிப்போர் மிதிப்போர் என பேதம் ரசிப்போர் செய்யும் அவலம்.

உள்ளப்போர் மறுப்போர் என சோகம் களிப்போர் வாழும் துயரம்.

பசிப்போர் கொசுப்போர் என வாடும் பெரும்போர் ஏழையின் துக்கம்.

நல்லோர் தீயோர் என இதுபோல் பலநிலையில் வாழும் பெருநிலம்.

இங்கு...

சமூகத்தின் தீமைகளைச் சத்தமின்றி வளர்க்கும் பெரும்பாவம்;

சுற்றிலும் பலநடக்கையில் ஒன்று நினைவிலே இருக்கட்டும்

சாலைப்போர் ஆயுதப்போர் என்று சாதிப்போர் தந்த சுதந்திரம்

இதைக் கொண்டாட தகுதி என்னவோ உண்மை சுதந்திரம் .

சுதந்திர தினம் கொண்டாடும் அடிமைகளாக இல்லாமல்

சுதந்திரத்தை சுவாசிக்கும் மனிதர்களாக முன்னேறுவோம்.

அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

                            - சகோ

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro