மழையிரவு பாடம்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மேகத்துப் போர்வை போர்த்தி
திகிலான தனிமை அழகில்
தலை சாய்த்த துன்பத்துளிகள்
வலிக்காத கண்ணீர் வழிய
புரியாத துயரம் கொண்டு
கார்மேக வானைக் கண்டேன்

வெள்ளை வெட்டு விண்ணைக் கீற
பேரிடி சத்தம் நெஞ்சை உலுக்க
பேர்படைத் துளிகள் ஏதோ உறுத்த
பட்டென ஏதோ எண்ணம் தோன்ற
பார்வை வானை நோக்கி உயர
வானம் ஒன்றும் விழுந்திட வில்லை-ஆகா...
எம்பெரும் பாடம் இத்துணை அழகில்!!!

வெட்டுகள் எதையும் கிழித்திட வில்லை
பேரிடி வானை அசைக்கவும் இல்லை
இடியாய் வெட்டாய் எத்துனை துன்பம்??
ஈடே இல்லா உயரில் வானம்
இச்சிறு காட்சி சொல்லிய பாடம்;
எப்பெரும் துன்பம் வந்தால் என்ன
வீழா வானம் என்றும் உயரும்

வீழா வானம் போல மனிதா
துன்பம் துடைத்து உயரம் பறந்திடு....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro