39

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அனைவரும் உண்டுவிட்டு களைந்து சென்று விட வீட்டிற்கு வந்த பின் நண்பர்கள் ஒரு வாரம் இங்கே தான் தங்குவதற்கு முடிவு செய்திருந்ததால் இங்கேயே இருந்து விட சைந்தவி வினீஷா பூஜாவுடன் தங்க அதிதி நவ்யா மற்றும் ஸ்வஸ்திகா ஸ்னேஹாவுடன் தங்க ஹரிக்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு (நான் தான் அதுங்கள காதலை எவ்ளோ பேர தான் சமாளிக்கிறது ) அதில் அவன் ஓத வயதுடைய அவன் மாமன் மகன் சதீஷும் அவனும் மிகவும் நெருக்கம் அவன் அவனுடன் தங்க மற்ற உறவினர்கள் அனைவரும் அவர்கள் கதையை பேசிக்கொண்டே ஆரோ ஒரு குடும்பமாய் ஒரு ஒரு அறையில் தங்க

இவ்வாறே மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டத்துடனும் பற்பல சண்டைகளுடனும் சமாதானங்களுடனும் சடங்குகளுடனும் ஒரு வார காலம் கழிய அன்றைய நாளும் வந்தது .மண்டபம் முழுதும் ஜொலி ஜொலிக்க ஆடவர்கள் வேட்டி சரசரக்க அங்கிருந்த கன்னி பெண்களின் கொலுசொலியும் வலை ஒளியும் சிரிப்பொலியும் புதியதோர் ஸ்வரத்தை சேர்க்க வாழை மரங்கள் இரண்டு கம்பீரமாய் வந்தோரை வரவேற்கும் தோரணையில் தலைசாய்த்து வரவேற்க அதை அடுத்து தன் செல்ல மகளின் திருமணத்திற்கு வந்தவர்களை உபசரிக்கும் பணியில் சைந்தவியின் அப்பாவும் அம்மாவும் ஈடு பட்டிருக்க தன் தமக்கை மற்றும் அண்ணனின் திருமணத்திற்கு வந்தவர்களை போட்டி போட்டுகொண்டு அதிதியும் ஹரியும் நவ்யாவும் தத்தம் துணையை

கவனித்துக்கொண்டே கவனிக்க இளங்காளைகள் இளங்கன்னியர்களை கவனிக்க பெரியவர்கள் தங்கள் உறவுகளுடன் குடும்ப கதைகளை பேசி சிரிக்க நிகழ்வுகளின் நாயகியான சைந்தவியோ சிகப்பு வண்ண பட்டு சேலையில் உச்சி முதல் பாதம் வரை தங்கம் பூட்டி கயல் விழியில் கண்மையதை தீட்டி எழிலோவியமாய் அமர்ந்திருந்தாள் தோழிகளின் கேலிகளிலும் தன்னவனின் எண்ணத்திலும் சிவந்து .

பூஜா "சையு செம அழகா இருக்கடி இன்னிக்கு வித்யுத் பாடு திண்டாட்டம் தான் "என்க

வினீஷா "பூஜா ரொம்ப நாலா லவ் filmseh வரலன்னு பீல் பண்ணல கவலையே படாத இன்னிக்கு liveaah பாக்கலாம் "என்க

சைந்தவி "ஹே நானே டென்ஷன்ல உக்காந்துருக்கேன் நீங்க வேற படுத்தாதீங்கடி போங்கடி அங்குட்டு "என்க

அங்கிருந்து எழுந்த பூஜாவும் வினீஷாவும் "சரிங்க மேடம் தங்கள் உத்தரவுப்படியே ஆகட்டும் "என்றவர்கள் வெளியே செல்ல தன்னை கண்ணாடியில் ஒருமுறை சரிபார்த்துக்கொண்டிருந்த சைந்தவியின் கவனத்தை கலைத்தது balconyil இருந்து வந்த சத்தம்.

இவள் என்ன என்று சென்று பார்க்க அங்கோ வினய் "அம்மா எப்பா எவண்டா அவன் இவ்ளோ வழுவழுன்னு கட்டி வச்சது செவுற" என்று தட்டி விட்டுக்கொண்டே எழ

அவனை அங்கே பார்த்ததில் குழம்பிய சைந்தவி "வினய் இங்கே என்ன பண்ற வரதுனா door வழியா வந்துருக்க வேண்டியது தான அடி எதுவும் பட்டுச்சா "என்று பார்க்க

அவனோ "அதெல்லாம் ஒன்னும் இல்ல சைந்தவி ஆங் ஏன் வந்தேன்னா கேக்குற என் friendunu ஒரு கொரங்கிருக்கே கொரங்கு அதான் நீ லவ் பண்ற கொரங்கு அதுனால தான் இந்த நெலமைல இருக்கேன் "என்க

சைந்தவி "வித்யுதாஹ் அவன் என்ன பண்ணான் "என்க

அவனோ ஒரு பிஸ்கேட் பாக்கெட்டை கையில் கொடுத்தவன் "காலைல இருந்து எதுவும் சாப்பிட கூடாதுனு சொல்லிட்டாங்கல்ல கல்யாணம் முடியுற வரைக்கும் நீ பசி தங்கமாட்டேன்னு இதை யாருக்கும் தெரியாம போய் குடுத்துட்டு வர சொன்னான் "என்று பாக்கெட்டைநீட்ட

என்றும் போல் இன்றும் அவன் காதலில் சிலிர்த்தவள் விக்ரமிடம் "ஏன் அவ்ளோ அக்கறை இருந்தா இதை உன் friendeh வந்து குடுக்க வேண்டியது தான"என்க

விக்ரம் "அட நீ வேற அவன் பாதி செவுரு ஏறிட்டான் கீழ ஐயர் மாப்பிளையை அழைச்சுண்டு வாங்கோன்னு சௌண்டஹ் கொடுத்ததும் நா தான் கீழே புடுச்சு இறக்கி விட்டுட்டு ஏறி வந்தேன் .எம்மா சரி நா கிளம்புறேன் நீ இதை சாப்டும்மா தெய்வமே இல்ல என்னைய பிச்சுருவான்"என்று சிரிப்புடன் கூறியவன் வந்த வழியே pipeai பிடித்து கீழிறங்கி சென்றான் .

அந்த பிஸ்கேட் பக்கெட்டை பார்த்து சிரித்தவள் "my ஸ்வீட் angry bird நீ எனக்காக சாப்பிடாம இருக்கலாம் நா உனக்காக சாப்பிடாம இருக்க கூடாதா ரொம்பதான் அக்கறை "என்று நினைத்தவள் அந்த பாக்கெட்டை tabelil வைத்து விட்டு அமரவும் அதிதியும் மற்ற தோழிகளும் வந்து கீழ கூப்பிடுறாங்க என்று கூறவும் சரியாய் இருக்க மாலையை அணிந்தவள் சிறு படபடப்போடு அவர்களோடு சென்றாள் .

கீழே மணவறையில் பட்டு வேட்டி சட்டையிலும் கையில் அவன் என்றும் அணியும் வெள்ளிக்காப்போடு இன்று புதியதாய் இணைந்திருந்த மஞ்சள் காப்போடு நொடிக்கொருமுறை மணமகள் அறையையே பார்த்து கொண்டு மந்திரத்தை உளறிக்கொண்டிருந்தான் வித்யுத்

ஐயர் "தம்பி மந்திரத்தை சொல்லி ஸ்வாகானு சொல்ல சொன்னா சதுனு சொல்றேள் இங்க பாத்து மந்தரத்தை சொல்ல்லுங்கோ "என்க

அவன் பின்னிருந்த ஹரியை பார்த்தவர் அவனும் மணமகள் அறையையே பார்த்து கொண்டிருப்பதை பார்த்து அவனை அழைக்க அவனிடமும் பிரதிபலிப்பில்லாமல் போக அவரது குழம்பிய நிலையை கண்ட சரண் "ஐயர்வாள் நீங்க இப்போ என்ன சொன்னாலும் மாப்பிள்ளை புள்ளயாண்டா காதுலயும் அந்த புள்ளயாண்டா காதுலயும் எதுவும் விழப்போறதில்ல எனர்ஜி வேஸ்ட் பண்ணாம நீங்க நல்லா ஸ்வாகா பண்ணுங்கோ "என்க ஐயரோ மானசீகமாய் தலையில் அடித்து கொண்டவர் தன் வேலையை மும்முரமாய் செய்தார்.

அடுத்த நிமிடம் மணமகள் அறையிலிருந்து சைந்தவி வெளியே வர இவன் கண்களிற்கு அவளை தவிர்த்து அனைத்தும் மறைந்து போனது .விழிகளாலேயே அவளை விழுங்கியவன் அவள் அருகில் வந்து அமர்ந்த பின்னும் அவளையே பார்த்திருக்க அவன் அருகில் குனிந்த சைந்தவி "விது எல்லாரும் பாக்குறாங்க திரும்புடா மானத்தை வாங்காத "என்று தாழ்ந்த குரலில் கூற

அவனோ "நானும் திருப்ப தானடி முயற்சி பண்றேன் ஆனா முடியலையே "என்க

அவன் கழுத்தை பிடித்து அந்த புறமாய் திருப்பிய சரண் "இப்போ ஓகேவா மச்சான் "என்க அங்கே ஒரு சிரிப்பலை பரவியது .

சிறிது நேரத்தில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த அத்தருணமும் வந்தது அச்சத்தை நிறைந்த தட்டில் தேங்காயில் சுற்றி வைக்க பட்டிருந்த மாங்கல்யம் அனைவரிடமும் ஆசிகள் பெறப்பட்டு முன்னே இருக்க அதில் இருந்த மங்கள நாணை சைந்தவியின் மாமாவாகிய மணிகண்டன் எடுத்து வித்யுதின் கையில் தர "கெட்டிமேளம் கெட்டிமேளம் " என்ற மந்திரச்சொல் முழங்க மங்கலநாணை அவள் சங்கு கழுத்திற்கருகில் கொண்டு சென்ற வித்யுத் முதல் முடிச்சையும் இரண்டாவது முடிச்சையும் "ஐ லவ் யு "என்ற வார்த்தைகளோடு இட மூன்றாம் முடிச்சை அதிதி இட ஏழு வருட காதல் தவத்திற்கு பயனாய் தன் மார்பில் ஆடும் தன்னவனின் அடையாளத்தை கண்ணீர் திரையிட பார்த்தவள் நெற்றியில் குங்குமமிட்ட நொடி இரு சொட்டு கண்ணீரை வெளியேற்றினால் முகத்தில் எல்லையில்லா சிரிப்புடன்.

பின் அவனின் அங்க வஸ்திரமும் அவளது முந்தானையும் முடியப்பட அக்கினியை வலம்வந்தவர்கள் வாசுகி மற்றும் சுரேஷின் கால்களிலும் சைந்தவியின் தாய் தந்தையர் கால்களிலும் ஆசி வாங்கினர்.பின் நேரம் செல்ல இவள் என்னுள் பாதியென்ற கர்வத்துடன் அவள் கையை வித்யுத் பற்ற இவன் என்னவன் என்ற உரிமையில் சைந்தவி அவன் தோளில் சாய இந்த அழகான தருணங்கள் அனைத்தும் காமெராவில் பதியப்பட்டது .

பின் அனைத்து சொந்தங்களும் வாழ்த்துக்கள் கூறி புகைப்படம் எடுக்க அவள் காதிர்கருகில் வந்த வித்யுத் "ஓய் பொண்டாட்டி சாப்டியா காலைல குடுத்தனுப்பிச்சத "என்க

அவளோ "புருஷன் அவர்களே நீங்க சாப்டீங்களா .நீங்க சாப்பிடாம நா எப்படி சாப்பிட"என்க

அவனோ "ஹே அப்போ நீ சாப்பிடலையா பசி தங்கமாட்டானு தான அனுப்சுவச்சேன் "என்று சற்று அக்கறை கலந்த கோபத்துடன் கோபிக்க

அவளோ அவன் கண்ணை பார்த்தவள் "இன்னிக்கி நா சாப்புடுற முதல் சாப்பாடை என் புருஷன் தான் எனக்கு ஊட்டி விடணும்னு நெனச்சேன் அதான் சாப்பிடல ."என்று coolaai சொல்ல

அவள் சொன்னதில் சிரித்தவன் "தங்கள் சித்தப்படியே மேடம் "என்றவன் அடுத்து சாப்பிட அழைக்க அவர்கள் ஊட்ட கூறுமுன்பே அவள் வாயிற்கருகில் உணவை கொண்டு சென்று ஊட்ட அவளும் அவனிற்கு ஊட்ட அவன் அவள் கைவிரலையும் சேர்த்து கடிக்க அதை பார்த்த நவ்யா "அண்ணா பிங்கர் சிப்ஸ் இலைல இருக்கு "என்று கலாய்க்க

வித்யுத் "இதுக்கு தான் அந்த சரண் பய கூட சேராத சேராதனு சொன்னேன் கேட்டியா நீ"என்க

சரண் "எவண்டா அவன் என்ன indirectaah அசிங்க படுத்தினது "என்க

ஸ்வஸ்திகா "இத விட டிரெக்டாக உலகத்துலயே ஒருத்தனும் உன்ன அசிங்கப்படுத்த முடியாதுடா போஸ்டுஹ் மரம் "என்க அடுத்து என்ன நடந்ததுன்னு நா சொல்லி தெரியனுமா என்ன .

இங்கே இவர்கள் இப்படி சண்டை இட இங்கே இந்த ஜோடியை ரொம்ப நேரமாக யாரும் தேடவே இல்லை தோட்டத்தில்

அதிதி "டேய்ய் என்னடா நீ இப்டி பாத்து வைக்குற பாக்குறவுங்கல்லாம் என்ன நினைப்பாங்க "என்க

அவள் அருகில் வந்து அவள் கன்னத்தை வருடிய ஹரி "என்ன நினைப்பாங்க "என்க

அவன் கையை தட்டி விட்டவள் "டேய்ய் இவ்ளோ openaah பாத்தேனா அத்தைக்கும் மாமாக்கும் நம்ம விஷயம் தெருஞ்சுரும்டா "என்க

அவனோ அவள் அருகில் மேலும் நெருங்கியவன் "தெரிஞ்ச விஷயத்தையே எத்தனை தடவ தான் டி தெருஞ்சுக்குவாங்க "என்க

இவளுக்கோ பேரதிர்ச்சி ஒருவேளை தான் தான் சரியாக கேட்கவில்லையோ என்று நினைத்தவள் திகைத்து அவனை பார்க்க அவனோ அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் "அப்டி பாக்காதடி முட்டைக்கண்ணி அம்மாக்கும் அப்பாக்கும் நம்ம விஷயம் ஏற்கனவே தெரியும் "என்றவன் அவன் அமெரிக்கா சென்றது முதல் வித்யுதிடம் அவர்கள் சம்மதம் கூறியது வரை கூறியவன் என் அம்மா உன்ன அதிதினு கூப்டுறத ஸ்டாப் பண்ணிட்டு மருமகளேனு கூப்டுறதுலயே தெருஞ்சுருக்க வேணாம் "என்று அவளை பார்க்க

அவளோ கையில் ஒரு குச்சி வைத்திருந்தவள் கோபமாய் அவனை நோக்கி வந்தால் "ஆக மொத்தத்துல இப்போவும் என்ன எம்மாதிருக்கேல நாயே "என்று அவனை நோக்கி முன்னேற

அவனோ பின்னால் சென்றவன் "அதி எதுனாலும் பேசி தீத்துக்கலாம் "என்க

அவளோ இடவலமாய் தலை அசைத்தவள் "உன்ன எல்லாம் தீத்துட்டு தான்டா பேசணும் என்று அவனை குச்சியோடு விரட்ட

அவனும் "ஐயோ அம்மு செல்லம் வேணாண்டி அப்பறோம் நானும் அடிச்ருவேண்டி"என்று ஓடி கொண்டிருந்தான்

அவள் "ஓஹ் அடுச்சுருவீயோ எங்கே அடி அடி"என்று கூறிக்கொண்டே அவனை துரத்த பின் ஒரு கட்டத்தில் அவள் கையை பிடித்து குச்சியை கீழே வாங்கி போட்டவன் அவள் திமிறிக்கொண்டு இருக்க அந்த தோட்டத்து பகுதியில் யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டவன் அவளை இழுத்து அவள் இதழோடு தன் இதழை முதல் முறையாய் சேர்க்க அதிதிக்கு சர்வமும் அடங்கியது .

பின் சற்று நேரம் கழித்து விட்டவன் அவள் பேய் அரைத்ததை போல் பார்க்க அவள் கன்னத்தை தட்டியவன் "அடிச்சுட்டேன் என்னடி பண்ணுவ .இனி அடிக்க ட்ரை பண்ணுவ"என்று கண் சிமிட்ட அவளோ இயந்திரம் போல் தலையை இடவலமாய் ஆட்டியவள் ஓடியே விட்டால்.

இதை யாரும் பார்க்கவில்லை என்று அவன் நினைத்து விசிலடித்து கொண்டே செல்ல அதிதியை தேடி வந்து இதை பார்த்த நவ்யா அதிர்ச்சியில் பா என்று வாயை பிளக்க signalளை தேடி வந்து இதை பார்த்த இன்னொரு ஜீவனான விக்ரம் ஒரு புன் சிரிப்புடன் நவ்யாவை பார்க்க அவளோ அவன் பார்ப்பதை உணர்ந்ததும் தலை தெறிக்க உள்ளே ஓடி விட்டால் .

இத்தனை குட்டி கலாட்டாக்களும் முடிய சைந்தவியும் வித்யுதும் வீட்டிற்கு அழைத்து வர பட்டனர் .சாரு பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் .

இது வித்யுதும் அதிதியும் இணைந்து எடுத்த முடிவு திருமணத்திற்கு பின் அவனும் அதிதியும் நவ்யாவும் சைந்தவியும் இங்கே வாழ்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது சைந்தவியின் அப்பாவையும் அம்மாவையும் அழைக்க அவர்களோ ஹரிக்கும் அதிதிக்கும் திருமணம் முடிந்த பின் இங்கே வருவதாய் கூறிவிட்டனர் .

ஆதலால் வித்யுதின் வற்புறுத்தலால் சிறிது நாட்கள் மட்டும் அவர்களுடன் தங்க முடிவெடுத்து அவர்களுடன் வந்திருந்தனர். சைந்தவி தன் புகுந்த வீட்டிற்குள் அதிதியும் நவ்யாவும் ஸ்னேஹாவும் சேர்ந்து ஆரத்தி எடுக்க உள்ளே வலது காலை எடுத்து வைத்து வந்தால் .

பின் சில பல சடங்குகள் முடிய இருவரையும் வெவ்வேறு அறையில் சென்று ஓய்வெடுக்க கூறினார்கள் அதிக கோபமடைந்து வித்யுத் தான் உள்ளே ஹரியுடன் வந்தவன் "கல்யாணத்துக்கு முன்னாடியும் பிரிச்சு வச்சானுங்க பின்னாடியும் பிரிச்சு வைக்குறானுங்க "என்று புலம்ப

அங்கோ ஹரி அவன் கட்டிலில் நன்றாக படுத்து உறங்க அவன் அருகில் சென்று அமர்ந்தவன் "என் நேரம் இப்போவும் உன் கூட படுக்க வேண்டியதா இருக்கு "என்று ஹரியின் தோளிலே ஒரு போடு போட்டவன் அவன் கொசு தொல்லை தங்களை என்று விட்ட தூக்கத்தை தொடர இவனும் சற்று நேரம் உறங்கினான் .

பின் இரவிற்கான சடங்குகளை அனைவரும் செய்ய இங்கே உள்ளே வித்யுத்தோ குட்டி போட பூனை போல அங்கும் இங்கும் அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தான் .

மெல்ல கதவு திறக்க உள்ளே வந்த சைந்தவியை பார்த்தவன் அப்படியே உறைந்து நின்றான் ஏனெனில் அவள் கட்டியிருந்தது முதல் முதலாய் us செல்லுமுன் அவன் அவளிற்கு வாங்கி தந்திருந்த புடவை இதற்கு முன் அவள் இதை கட்டியதே இல்லை பிடிக்கவில்லை போலும் என்று நினைத்தவனுக்கு இன்று இவ்வேளையில் அவள் கட்டியிருந்தது ஆச்சர்யமாய் இருக்க அவன் பேசாமல் அவள் அருகில் வந்தவன் அவளை கண்டு மந்தகாசப் புன்னகையை வீசியவன் பின்அவள் கையை பிடித்து balconikku அழைத்து சென்றவன் அன்று போல் இன்றும் அவள் மடியில் படுத்து கொண்டான் .

அவள் அவன் தலையை கோத அவளை பார்த்தவன் அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை கையில் எடுத்து அதில் முத்தமிட்டான் பின் "நம்பவே முடிலடி என்னால இவ்ளோ நாள் என் காதலி இன்னிக்கு எனக்கு மனைவியா என்னோட சரி பாதியா என் வீட்டுல என் ரூம்ல இருக்கா ஏதோ லேசா பறக்கிற மாறி இருக்கு "என்க

அவளோ "எனக்கும் அப்டி தான்டா இருக்கு இந்த 5 வருஷம் எப்படி போச்சுன்னே தெரில எத்தனை சந்தோஷம் எத்தனை பிரச்னை இப்போ நெனச்சா கூட மலைப்பா இருக்கு "என்க

வித்யுத் "அதிதிக்கு அப்போ accident ஆகி இங்க வரேல என்னடா நமக்கு நல்லது நடக்க போதுன்னு நெனச்சு தான் வந்தேன் ஆனா வந்தப்ரோம் தான தெரிஞ்சுது என்னோட சந்தோஷமே இங்க தான் இருக்குனு "என்றவன் எழுந்தது அவள் நெற்றியில் முத்தமிட அவளோ கண்களை மூடினால்.அவள் காதலில் குனிந்து "ஐ லவ் யூ பொண்டாட்டி" என்றவன் அவளை உள்ளே தூக்கிச் சென்று இல்லற வாழ்வை துவங்க நாமும் இத்துடன் இங்கே இவர்களுடான நமது பயணத்தை முடித்து கொள்வோம்.

சுபம்

Other works

1. கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா - sequel

2. தோழியா என் காதலியா

3. ஆதிரா

4. உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி

5. மறப்பதில்லை நெஞ்சே

6.solace in solitude

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro