29

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவளோ அங்கே அவனிடம் வீறாப்பாய் திருமணத்திற்கு அழைப்பேன் வந்து விடு என்று கூறிவிட்டு வைத்தவளாள் அவன் தன்னை நேசிக்கவில்லை என்று ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .

மண்டியிட்டு அமர்ந்தவள் அவனது புகைப்படத்தை நெஞ்சோடு வைத்தபடி கதறி அழுதாள் .அவனின் முகத்தை பார்த்தவள் "ஏன்டா ஏன்டா பொய் சொல்லுற ?நான் உன் கண்ணுல எனக்கான loveah பாத்துருக்கேன்டா அன்னைக்கு மண்டபத்துல கூட பாத்தேன்டா ஏன் இப்டி உன்னையும் ஏமாத்தி என்னையும் ஏமாத்துற கெளதம் ?"என்று கூறி அழ அவனோ அந்த புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தான் .

அழுது அழுது ஒரு கட்டத்தில் காய்ச்சல் கண்டவள் அப்படியே கட்டிலில் சுருங்கி படுத்துவிட்டாள் .மணி ஒன்பதிற்கு மேல் ஆகியும் அவள் கீழே வராமல் இருப்பதை கண்டு குழம்பிய அவளின் தாய் பார்வதி தன கணவரிடம் "ஏம் ஆயிந்தி ஜான்வி கி(என்னாச்சு ஜான்விக்கு )இவ்ளோ நேரமாச்சு கீழ வரல "என்று கூற

அவளின் தந்தையோ உணவு உண்டபடி "ஏதாச்சு வேல பார்த்துட்டு இருப்பா பாரு "என்று கூற

அவரோ "இல்ல பாவா அவ சாயந்தரம் மாப்ள போட்டோஸ் காட்னாதுல இருந்தே சரி இல்ல. புடிக்கலையோ என்னமோ .என்னனு போய் பாத்துட்டு வரேன் "என்று கூறி மேலே செல்ல அவரோ எதையும் அறியாததை போல் உண்டு கொண்டிருந்தார் எனில் ஆதி அவரின் முகத்தை தான் கவனித்துக் கொண்டே இருந்தான் .

அதில் என்றையும் விட கடுமை கூடி இருந்தது அதையும் தாண்டி ஏதோ அவன் இதுவரை அறியாத பாவம் ஒன்று குடி இருந்தது .அவள் அப்பொழுது திருமணம் வேண்டாம் என்று கூறியபோது பார்வதி அவளை சமாதானம் செய்தபோதும் இரண்டு வருடம் ஆகட்டும் என்று கூறியவர் அவர் தான் ஆனால் இப்பொழுது திடீரென்று எதற்கு இந்த மனமாற்றம் ?விரைவில் திருமணத்தை முடிக்கவேண்டும் என்பதில் என்ன ஒரு கட்டாயம் ?அன்று கௌதமும் மண்டபத்தில் வரவேற்பு வரை நன்றாக இருந்தவன் அதன் பின் முதல் முதலாய் மது அருந்தி ஜானு ஜானு என்று தான் உளறிக் கொண்டிருந்தான் .

.ஜான்வி வேறு ஒரு மாதமாய் அவன் தன்னை தவிர்க்கிறான் என்று புலம்பியபடியே இருந்தாள்.அன்று மாடியில் இருந்து ஜான்வி கீழே வந்ததும் இவர் தான் வந்தார் அதன் பின் தான் கெளதம் கீழே வந்தான் எனில் முகத்தில் சந்தோஷம் துளி அளவும் இல்லை .அப்படி என்றால் இவர் தான் ஏதோ செய்திருக்கிறாரா ?என்று யோசித்தபடி உண்டுக் கொண்டிருந்தான் ஆதி .

பார்வதி மேலே சென்றவர் ஜான்வி குறுகி படுத்திருக்கவும் அவள் அருகில் வந்தவர் "ஜான்வி எந்திருச்சு சாப்பிட்டு படு "என்று கூற அவளோ முனகியபடி படுத்துக்க கொண்டாள் .அவள் அருகில் வந்தவர் அவள் நெற்றியை தொட அதோ நெருப்பாய் கொதித்தது .

பாதிரி அவளின் கன்னம் நெற்றி தொட்டு பார்க்க உடல் நெருப்பாய் கொதித்தது . அவளிற்கு அதீத காய்ச்சல் அடிக்க உடல் வெப்பத்தில் நடுங்குவதை பார்த்தவர் பதறி அவளை உலுக்கினார் "ஜான்வி ஜான்வி "என்று

அவள் அரை கண்ணை முயன்று திறந்தவள் அவரை பார்த்து "மா "என்று முனங்க

அவரோ "உடம்பு நெருப்பா கொதிக்குது ஜான்வி நல்லா தானடி இருந்த கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் கூட இப்போ என்ன திடீர்னு ? ஹாஸ்பிடல் போலாமா ?"என்று பதறி கேட்க

அவளோ உதடு பிதுக்கி "மா "என்று கூறியபடி அவரின் இடுப்பை கட்டிக்கொண்டு அழ துவங்கி விட்டாள்.அவளிற்கு காய்ச்சல் அடிப்பதிலேயே பதறியவர் என்றும் இல்லாமல் அவள் இடுப்பை கட்டிக் கொண்டு கதறி அழ என்ன ஆனதோ ஏதானதோ என்று பதறி விட்டார் .

பார்வதி "ஜான்வி ..கண்ணம்மா. என்னடா ஆச்சு எதுக்கு டா அழுகை ?"என்று கேட்கும் பொழுதே அவர் கண்ணிலும் கண்ணீர் வந்து விட்டது .

அவளோ அவரின் வயிற்றில் புதைந்து அழுதவள் பின் பத்து நிமிடம் கழித்து தெளிந்தாள். சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள் பின் "ஒன்னும் இல்லம்மா கொஞ்சம் மனசு பாரமா இருந்துச்சு.இன்னைக்கு சாப்பாடு வேணாம்மா அப்டியே விடுங்க சரி ஆயிடும்"என்று கூற

அவரோ அவளின் விசித்திர செய்கைகளில் குழம்பினாலும் எதுவும் இப்பொழுது கேட்க வேண்டாம் என்று நினைத்து அவள் தலையை வருடி விட்டார் .அவள் அவரின் மடியில் படுத்தபடி மௌனமாய் கண்ணீர் வடித்தவள் அப்படியே உறங்கி போக அவரோ சிறிது நேரம் அவள் முகத்தை பார்த்தவர் பின் எழுந்து சென்றார் .

ஆதி உண்டு முடித்ததும் ஜான்வியை சென்று பார்க்க அவள் அறைக்கு போக பார்வதியோ அவனை வழியிலேயே நிறுத்தியவர் "சின்னு அக்காவை டிஸ்டர்ப் பண்ணாத "என்றார்

அவன் குழப்பமாய்"ஏன் மா ?"என்று கேட்க

அவரோ "ரொம்ப காய்ச்சல் அடிக்குது டா .சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டா.என்ன ஆச்சுன்னு தெரில என்ன கட்டிபுடுச்சுட்டு ஒரே அழுகை .tablet போடலேன்னா காச்சல் குறையாது .நீ ஒன்னு பண்ணு நா ரெண்டு இட்லியும் கொஞ்சம் பாலும் தரேன் அவளை சாப்பிட வச்சுருரியா ?"என்று கேட்க அவனும் மௌனமாய் தலை ஆட்டினான் கொஞ்சம் கொஞ்சமாய் அவனிற்கு இருந்த சந்தேகம் வலுப்பெற துவங்கியது .

அவர் அவனிடம் ஒரு தட்டில் இரண்டு இட்லி வைத்து ஒரு க்ளாசில் பாலும் தர அவளின் அறைக்கு அதை எடுத்து சென்றான் ஆதி .அவள் கண்ணில் நிற்காமல் வழிந்த கண்ணீருடன் படுத்திருக்க அவள் அருகில் கட்டிலில் அமர்ந்தவன் அவள் கூந்தலை வருடி "ஜான்வி "என்று அழைக்க அவளோ திரும்பியவள் அதிக நேரம் அழுத தடமாய் வீங்கிய முகம் சிவந்த கண்களோடு அவனை பார்க்க அவனோ அவளை நிமிர்த்தி அமரவைத்தவன் தட்டில் இருந்த இட்லியை ஒரு வை பிய்த்து அவள் வாயின் அருகில் கொண்டு சென்றான் .

அவளோ முகத்தை திரும்பியவள் "எனக்கு வேணாம் "என்று கூற

அவனோ "சாப்பிடாம எப்படி மாத்திரை போடுறது ?மாத்திரை போடலேன்னா காச்சல் நிக்காது சாப்பிடு "என்று கூறி அருகில் கொண்டு செல்ல

அவளோ அவன் கையை தட்டி விட்டவள் "ஒரு நாள் சாப்பிடலேன்னா செத்து போயிர மாட்டேன் "என்று கூற அவனோ கோபத்தில் அவளை அடிக்க சென்று விட்டான் .

கையை அவன் ஓங்கியதும் அவள் கண்களை மூட "சாகக் குடுக்கவாடி தவமிருந்து பெத்தாங்க உன்ன ?முட்டாள் மாறி பேசிக்கிட்டு இருக்க "என்று கூற

அவளோ உடைந்து அழத் துவங்கினாள் "ஆமா டா நா முட்டாள் தான்.அவன் செய்கையை எல்லாம் காதல்னு நம்பி ஒருத்தன் கிட்ட மனச பறிகொடுத்தேன்ல நான் முட்டாள் தான் ."என்று கூற

ஆதி புரியாமல் "என்னாச்சு புரியல ?"என்று கூற அவளோ அவனிடம் பேசிய கால் ரெகார்டை போட்டு காட்டினாள் .ஆதியால் துளியும் நம்ப முடியவில்லை கெளதம் அப்படி பேசுகிறான் என்று .கெளதம் பொய் பேசுகிறான் என்று ஆங்காங்கே அவனின் உடைந்த குரலே காட்டிக் கொடுக்க ஆதிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் நடந்தது புரிந்தது .

தனது தந்தையின் நடவடிக்கை கௌதமின் இந்த திடீர் விலகல் அனைத்தும் அவனிற்கு என்ன நடந்திருக்கும் என்பதை உணர்த்தியது .எனில் உறுதியாக என்ன நடந்தது என்று தெரியாமல் எதுவும் ஜான்வியிடம் அவனால் கூறவும் முடியாது ஆதலால் அமைதி காத்தான் .

ஜான்வி "ஏன் டா இப்டி பேசுனான் ?அவனுக்கு என் மேல loveh இல்லையா ?எப்படி டா அவனால ஈஸியா நீ எனக்கு நல்ல friend தான் அப்டினு சொல்ல முடுஞ்சது ?ஏமாந்துட்டேனா ஆதி ?"என்று கேட்டு அழ

அவனோ அவள் முகத்தை கையிலேந்தி அவள் கண்ணீரை துடைத்து தன் முகம் காண வைத்தவன் "அக்கா அடியேய் ஒன்னும் இல்லடி அப்டிலாம் ஒன்னும் இல்ல ப்ச் அழாத solve பண்ணலாம் நா வேணா பேசி பார்கவா ?"என்று கேட்க

அவளோ விழுக்கென்று நிமிர்ந்தவள் "வேணாம் எனக்கு அவன் வேணாம் .ஒண்ணுமே இல்லனு சொன்னான்ல அவனால நான் இல்லாம வாழ முடியும்னு தான அப்டி சொன்னான்? அப்போ என்னாலயும் அவன் இல்லாம வாழ முடியும் ":என்றவள் அடுத்த நொடி மீண்டும் அழுதாள் "வாழ்ந்துருவேனாடா ? அவனை மனசுல நெனச்சுட்டு இன்னொருத்தன் மனைவியா என்னால வாழ முடியுமா டா ?"என்று மாறி மாறி கோபமும் இயலாமையுமாய் பேசுபவளை பார்க்க பார்க்க ஆதிக்கு ரனவேதனையாய் இருந்தது .

அக்கா என்று அழைத்தாலும் உண்மையில் அவள் அவனிற்கு இன்னொரு அம்மா தானே அதனால் தானே அவள் எந்த இடத்திலும் காய பட்டு விடக் கூடாது என்று அவளை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தான் எனில் இந்த காதல் ? .அவளை அவள் போக்கிற்கு பேச விட்டவன் கொஞ்சம் கொஞ்சமாய் அவளிற்கு அந்த இட்லிகளை ஊட்டி விட்டு விட்டான் அவளே அறியாமல். பின் மாத்திரையை போட வைத்தவன் சிறிது நேரம் அவள் தலையை தன் மடியில் வைத்து வருடிக்கொடுக்க அவளோ பிதற்றியபடி காய்ச்சல் மாத்திரையின் வீரியத்தால் உறங்கி போனாள் .

அவள் உடலை தொட்டு பார்க்க காய்ச்சல்; கூடிக் கொண்டே இருந்தது .என்ன செய்வது என்று நினைத்தவனிற்கு இப்பொழுது ஒன்றும் புரியவில்லை எனில் தன் தந்தையை விட கௌதமின் மேல் தான் ஆத்திரம் கட்டுக் கடங்காமல் வந்தது .காரணம் என்னவாக இருந்தால் என்ன தான் காதலித்த பெண்ணை காதலிக்கவில்லை என்று எப்படி ஒருவனால் நா கூசாமல் கூற முடியும் .தான் போன் போல் பாதுகாத்து வந்த தன் தமக்கையை அல்லவா அவன் அழ வைத்திருக்கிறான் என்று அவனை சட்டையை பிடித்து நான்கு சாத்து சாத்தவேண்டும் போல கோபம் வந்தது அவனிற்கு எனில் அவன் நிலை என்னவாய் இருந்ததோ யாரறிவார் ? .

அப்படியே யோசனையில் இருந்தவன் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ஜான்விக்கு காய்ச்சல் பரிசோதித்து மாத்திரை கொடுத்து அந்த இரவை உறங்கா இரவாக கடத்தினான் .இங்கு இவள் நிலை அப்படி என்றால் கௌதமோ எத்தனை பாக்கெட் ciggarette பிடித்திருப்பான் என்று தெரியாத அளவிற்கு அறையே புகையால் மூழ்கி போகும் அளவிற்கு cigarette பிடித்து வைத்திருந்தான் .கண்கள் தூங்காததன் அடையாளமாய் சிவந்து பொய் இருந்தது .எனில் காலையில் அவன் மூலையில் அந்த எண்ணம் சம்மட்டி யிட்டு அமர்ந்திருந்தது: ஜான்வி தனக்கு இல்லை இதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று .

அடுத்த நாள் காலையில் எழுதன்ஹா ஜான்வியோ தன் அருகில் அமர்ந்தபடி உறங்கி கொண்டிருந்த தம்பியை கண்டு வருந்த அவனோ அவளின் அசைவில் விழித்தவன் அவளின் நெற்றியை தொட்டு பார்த்தான் காய்ச்சல் விட்டிருந்தது .அதன் பின்னே மூச்சு சீராக வந்தது அவனிடம் .அவன் அவளை பார்த்து மெல்ல சிரிக்க அவளோ உயிரற்ற ஒரு பார்வை அவனை பார்த்தாள்.

அவள் மெல்லமாய் எழுந்து அமர்ந்தவள் "சாரி ஆதி ரொம்ப படுத்தீட்டேன்ல "என்று கூற

அவனோ "எரும நா பார்த்துக்காம வேற யார் பார்த்துப்பா ?"என்று கூற அவளோ அவனை ஒரு வேற்றுப் பார்வை பார்த்துவிட்டு எழுந்து குளியலறைக்குபோல் செல்ல போனாள் .

ஆதி "ஜான்வி கெளதம் நம்பர் எடுத்து குடு "என்று கேட்க

அவளோ நின்றவள் "எதுக்கு ?"என்றாள்

அவன் "பேச தான் டி எதுக்காக அப்டி சொன்னாருன்னு தெரியனும்ல "

அவளோ" தேவை இல்ல "என்றாள் ஜீவனற்ற குரலில்.

அதில் குழம்பிய ஆதி "புரியல ஜான்வி.தேவை இல்லன்னா அப்பா பாக்குறவன கல்யாணம் பண்ணிக்க போறியா ? "என்று கேட்க அவளோ ஒரு நிமிடம் சிலையாய் நின்றவள் பின் தலையை ஆமாம் என்பதை போல் ஆட்டினாள் .

ஆதி அதிர்ந்தவன் "வேணாம் ஜான்வி உன்ன பத்தி எனக்கு தெரியும் நடை பிணமா ஆயிருவ டி "என்று கூற

அவளோ விரக்தியை சிரித்தவள் "ஏற்கனவே அப்டி ஆயிட்டேன் ஆதி .ஒருத்தனுக்கு ஒரு தடவ தான் சாவு வரும் அவன் என்ன நேத்து கொன்னுட்டான் .காதல் கெஞ்சி வரக் கூடாது டா அதை விட கொடுமை எதுவுமே இல்ல "என்று கூற

அவனோ "முட்டாள் மாறி பேசாத ஜான்வி அவர் உன்ன காதலிக்குறாருனு அப்பட்டமா தெரியுது. ஏன் மறைக்குறாருனு தெரில பேசுனா தான் தெரியும் "என்று கூற

அவளோ "எந்த மண்ணாங்கட்டி காரணமும் எனக்கு தேவை இல்ல .நேத்து அவ்ளோ கெஞ்சுனேனே, அவ்ளோ கேட்டேனே சொல்லாலேல .இனி அவன் எப்போவும் சொல்ல வேணாம் "என்று கூற

ஆதி "பிடிவாதம் பிடிக்குற விஷயம் இல்ல ஜான்வி இது "என்று சொல்ல அவளோ ஒன்றும் பேசாமல் உள்ளே குளிக்க சென்று விட்டாள் .

ஆதி சிறிது நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தவன் பின் ஒரு எண்ணம் உதயமாக அவளின் புகைப்படத்தை பார்த்து சிரித்துக் கொண்டான் அவன் மனதில் என்ன உள்ளதென்று அவனன்றி யாரறிவார் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro