40

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இரண்டு வருடங்கள் இமைப்பொழுதில் முடிந்து விட்டது .

திவ்யாவிற்கு அருண் என்பவருடன் திருமணம் நடந்திருக்க பிரவீனிற்கும் ஸ்வேதாவிற்கு நிச்சயம் நடந்திருந்தது.ஸ்வேதாவின் அத்தனை வருட பொறுமைக்கும் எதிர்பார்பற்ற காதலுக்கும் பரிசாய் பிரவீன் அவளை தன உயிரினும் மேலாய் காதலிக்க துவங்கி விட்டான் .வாழ்வு என்றும் ஒரு குட்டை போல் தேங்கி விடுவது இல்லையே ஒன்றை நாம் இழந்தால் நிச்சயமாக கடவுள் நமக்கு அதை விட நல்ல பொக்கிஷம் ஒன்றை தர இருக்கிறார் என்று தான் அர்த்தம் என்பதை ஸ்வேதாவின் வரவின் பின் உணர்ந்து கொண்டான் பிரவீன் .

ஆதித்யன் மற்றும் ஜீவிதாவின் அன்பின் அடையாளமாய் இருவருக்கும் ஒரு வருடத்திற்கு முன் ஆண் மகவு பிறந்திருந்தான் .அவனிற்கு ஹர்ஷவர்தன் என்று பெயர் சூட்டி இருந்தனர் .ஆதி சேஷன் இன்ஜினியரிங் முடித்து காக்னிஸன்ட்டிலேயே வேலைக்கு சேர்ந்து விட்டான்.வேலை வாங்கிய கையோடு ராகவியும் தானும் விரும்பும் விஷயத்தை வீட்டில் கூறியவன் இருபத்தைந்து வயதாகும் தருவாயில் திருமணம் செய்வதாய் கூறி விட்டான் .

கௌதமின் தாயார் அவன் தன்னுடன் இருக்கும் வரை அவன் அருமை புரியாது இருந்தவர் அவன் அவர்களை விட்டு விலகிய நேரம் தான் அவனின் உணர்வுகளையும் அவனிற்கு தான் செய்த துரோகங்களும் மனதை உறுத்த அவன் முகம் பார்க்க வெட்கியவர் இப்பொழுது கௌதமின் தந்தை அவனை காண செல்லும் பொழுதெல்லாம் தடை பிறப்பிப்பதை நிறுத்தி இருந்தார் .

அதுவுமின்றி மருமகளின் சேட்டைகளை கணவனின் மூலம் கேட்டு தெரிந்து கொள்பவர் ஜான்வியின் மேல் தனி ஒரு பாசம் வைத்திருந்தார்.எனில் ஒட்டி உறவாடவும் இல்லை எட்டி தள்ளி நிறுத்தவும் இல்லை .தாமரை இல்லை மேல் நீர்த்துளி போல் கெளதம் மற்றும் அவருக்குமான உறவு தொடர்ந்தது .காலம் அனைவரையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பது உண்மை தான் போல.ஜான்வியின் தந்தை இன்றும் தனது வறட்டு பிடிவாதத்தை பிடித்து வைத்தபடி தான் அமர்ந்திருக்கிறார் எனில் அந்த பிடிவாதத்தை அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்கும் நாளும் வந்தது

.

ஜான்வி கட்டிலில் சரிந்து அமர்ந்திருக்க கௌதமோ அவள் காலை தனது மடியில் வைத்து மென்மையாய் பிடித்து விட்டுக் கொண்டிருந்தான் .

பூவினை தொடுவது போல் மென்மையாய் எந்த வித அலட்டலும் இல்லாமல் தன் பாதங்களை பிடித்து விடும் தன் கணவனையே சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜான்வி .

கெளதம் அவள் வெகு நேரமாய் தன்னையே பார்ப்பதை உணர்ந்து நிமிர்ந்தவன் "என்னடி என்னையே பாக்குற ?வலிக்குதா ?"என்று கேட்க

அவளோ மறுப்பாய் தலை அசைத்தவள் "ஐ லவ் யு "என்று கூற

கௌதமோ காதை தேய்த்து விட்டவன் "தப்பா ஏதும் கேட்டுடேனா ஜானு ?"என்று கூற

அவளோ அவனை முறைத்து முகத்தை திருப்பினாள்,அவள் செய்கையில் சிரித்தவன் வேண்டுமென்றே வெறுப்பேற்றுவதற்காக அவளின் மேடிட்ட நிறைமாத வயிற்றை இருபுறமும் பிடித்தவன் "ஐ லவ் யு "என்று கூறி முத்தமிட ஜான்வியோ கொதிநிலைக்கே சென்றாள்.

அவன் தலை முடியை பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தியவள் "ஐ லவ் யு சொன்னது நான் பதில் உன் பொண்ணுக்கா ?என்ன விட உனக்கு உன் பொண்ணு முக்கியமா போய்ட்டாளா ?சொல்லுடா"என்று கேட்டு அவன் முடியை பிடித்து ஆட்ட

கௌதமோ வலியில் அலறியவன் "ஆஆ ராட்சசி விடுடி"என்று கூறியபடி தனது முடியை அவளிடம் இருந்து விடுவித்தவன் அவள் அருகில் அமர்ந்து அவள் தோளை சுற்றி ஒரு கையை போட்டவன் இன்னொரு கையை அவள் வயிற்றின் மேல் வைத்தான் .

ஜான்வி அவன் கையை தட்டி விட கெளதம் அவளின் சிறுபிள்ளை தனத்தில் சிரித்தவன் "நீ தான அடம்பிடிச்ச பாப்பா வேணும் வேணும்னு இப்போ என்ன குறை சொல்லுற ?இது எந்த விதத்துல நியாயம்? என்ன பேபி ?"என்று கேட்க உள்ளிருந்து அதான என்பதை போல் எட்டி உதைத்தாள் அவர்களின் புதல்வி .

ஜான்வி அந்த வலியில் லேசாய் துள்ளியவள் வயிற்றை தடவியவாறு "ம்மா ஒன்னும் சொல்லலடி உன் அப்பாவை உடனே football விளையாட ஆரம்பிச்சுறாத . இப்போவே உங்கப்பாக்கு இவ்ளோ supportaah "என்று கேட்டு கெளதம் கன்னத்தை இடிக்க அவனோ சிரித்தான் .ஜான்வி அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை கண்டவள் அதன் பின்னும் பொய் கோபம் பூசாமல் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.இந்த குழந்தை அவள் வயிற்றில் வருவதற்குள் எத்தனை போராட வேண்டியதாய் இருந்தது என்று நினைத்தாலே மலைப்பாக இருந்தது அவளிற்கு .

திருமணமாகி இருவரும் சேர்ந்து வாழ துவங்கி ஒரு வருடத்திற்கு பின்னும் கருத்தரிக்காமல் போக ஜான்வி ஒவ்வொரு மாதமும் சோர்ந்து போனாள்.அவளிற்கு சிறுவயதில் இருந்தே குழந்தைகள் என்றால் கொள்ளை இஷ்டம் எனில் அவ்வளவாக அவளின் சொந்தத்திலோ அவர்களின் அக்கம் பக்கத்திலோ அத்தனை சிறு குழந்தைகள் இருந்ததில்லை இருந்தாலும் அவளிற்கு தூக்க தெரியாது என்று அவளின் அன்னையே முடிவு செய்து கொஞ்ச விட மாட்டார் .

எனவே சிறு பிள்ளை போல் அவள் மனதில் தனது குழந்தையை ஆசை தீர கொஞ்ச வேண்டும் என்ற ஏக்கம் பரவி இருக்க ஜீவிதாவிற்கு குழந்தை பிறந்ததில் இருந்து அது அதிகரித்திருந்தது .

என்ன பிரெச்சனை என்று தெரியாமல் ஒரு முறை cupboardai சுத்தம் செய்தவள் கை பட்டு ஒரு மாத்திரை டப்பா விழ அப்பொழுதே கெளதம் contraceptive மாத்திரைகள் உட்கொள்வதை அறிந்துகொண்டாள்.

அதை கண்டவளிற்கோ பேரதிர்ச்சி ஏனென்றால் கெளதம் நன்கறிவான் அவளின் குழந்தை ஆசையை .தெரிந்தும் தன்னிடம் ஆலோசிக்காமல் அவன் எவ்வாறு இப்படி ஒரு முடிவெடுக்கலாம்?எத்தனை முறை அவனிடமே புலம்பி இருப்பாள்? அப்பொழுதெல்லாம் பாறாங்கல்லை போல் அமர்ந்து விட்டு என்ன காரியம் செய்திருக்கிறான் என்று வந்த கோபத்தில் அவனின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தாள் ஜான்வி .

கெளதம் கடைக்கு சென்று வந்தவன் கட்டிலில் சிந்தனை முகமாய் அமர்ந்திருந்த ஜான்வியை பார்த்தவன் பூனை போல் நடை இட்டு பின்னே வந்து கட்டிப்பிடிக்க திடீரென்று அவன் அணைத்ததில் திகைத்தவள் அதன் பின் அவன் மேலான கோபம் நினைவில் வர அவனின் கையை விலக்கி விட்டு ஜன்னல் பக்கம் போய் நின்றாள் .

அவள் தன்னை விலக்கியதில் குழம்பிய கெளதம் என்ன ஆயிற்று இவளிற்கு என்று நினைத்தவாறு ஜன்னல் அருகில் நின்றவளை நெருங்கியவன் "என்னாச்சு என் ஜானுக்கு இவ்ளோ சூடா இருக்கா ?"என்று கேட்டவாறு மீண்டும் அணைக்க

ஜான்வி இருந்த எரிச்சலில் "ப்ச் ஒரு தடவை விலக்கி விட்டா புரியாதா கெளதம் எனக்கு புடிக்கலைனு ?"என்று கத்த

அவளின் கத்தலில் கோபம் கொண்டவன் அவளை பார்த்தவாறு "உன்னை நான் கட்டி பிடிக்குறதுல உனக்கு என்ன பிரச்னை ஜான்வி?என் பொண்டாட்டி தான நீ ?"என்று கேட்க

அவளோ "பொண்டாடினா நீ சொல்ற எல்லாத்துக்கும் செய்ற எல்லாத்துக்கும் சரி சரினு ஆமாம் சாமி போட்டுட்டு இருக்கணுமா ?"என்று கத்த

அவனோ இந்த திடீர் கத்தலில் குழம்பியவன் கட்டிலில் அவன் உட்கொள்ளும் மாத்திரையின் அட்டையை பார்த்ததும் உணர்ந்து கொண்டான் என்ன நடந்திருக்கும் எதனால் கோபப்படுகிறாள் என்று .அவள் அதீத கோபத்தில் மூச்சு வாங்கியபடி நிற்க அவனோ பெருமூச்சு விட்டு தனது கோபத்தை அடக்கியவன் அந்த மாத்திரைகளை சுட்டி காட்டி "இதான் உன் பிரெச்சனையா ?"என்று கேட்க

அவளோ "ஆமா.எதுக்காக இப்டி பண்ண ?எத்தனை தடவை உன்கிட்ட சொல்லிருக்கேன் எனக்கு குழந்தைங்கன்னா எவ்ளோ புடிக்கும்னு ?மாசா மாசம் உன்கிட்ட தான பொலம்புவேன் அப்போல்லாம் அதுக்கான காரணம் நல்லா தெரிஞ்சும் என்ன அழ வச்சு வேடிக்கை பாத்துருக்க இல்ல ?ஏன்டா எப்போவும் என்ன அழவச்சே வேடிக்கை பாக்குற ? நா அழுதா உனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கா ?"என்று கோபத்தில் வார்த்தைகளை விட

கெளதம் அவளை நெருங்கி அவள் தோளை அழுத்தி பிடித்தவன் "கோபத்துல வார்த்தையை விடாதன்னு பல தடவை சொல்லிட்டேன் ஜான்வி .கல்யாணம் பண்ணி ஒரு வருஷத்துல உன்ன எத்தனை தடவைடி அழ வச்சுட்டேன் ?என்னவோ சைக்கோ மாறி torture பண்ற மாறி பேசுற ?நல்லா கேட்டுக்கோ எனக்கு குழந்தை பெத்துக்க இஷ்டம் இல்ல அதான் இப்டி பண்ணேன் இனியும் அப்டி தான் பண்ணுவேன் "என்று கூற அவளோ அவன் கூறிய வார்த்தைகளிலேயே உறைந்து நின்றாள் .

ஜான்வி "பைத்தியமாடா நீ ?என்ன பிச்சையா எடுத்துக்கிட்டு இருக்கோம் ரெண்டு பேரும்?நீ மாசம் ஒரு லட்சம் வாங்குற நான் மாசம் அம்பதாயிரம் வாங்குறேன் சம்பளம் .நாம இருக்குற வீட emila வாங்கிட்டோம் மாசம் அம்பதாயிரத்துக்கு மேல ஒரு நயாபைசா செலவாக மாட்டேங்குது அப்பறோம் ஒரு குழந்தையை வளக்குறதுல என்ன பிரச்னை உனக்கு ?"என்று கேட்க

அவனோ "பைனான்சியல் ப்ரோப்லம்ன்னு நான் சொன்னேனா ?எனக்கு புடிக்காது எனக்கு குழந்தை வேண்டாம் இதுக்கு மேல எதுவும் கேட்காத இந்த விஷயத்துல "என்று கூறி சென்று விட அவளோ அவன் விட்டு சென்ற இடத்தில அப்படியே அமர்ந்து விட்டாள்.

எதற்காக இப்படி சொல்கிறான் என்று யோசித்தபடி அமர்ந்தவளிற்கு அதன் பின்னே அவன் வளர்ந்த விதம் நினைவில் வந்தது .சிறு வயதில் அவனின் அன்னை தந்தை அவனை விட்டு இறந்ததால் தானே இத்தனை கஷ்டங்களை அவன் அனுபவித்தான் ?நிலை இல்லா உலகில் அவனுக்கோ ஜான்விக்கோ இருவரில் எவரிற்காவது ஏதேனும் நிகழ்ந்தாலும் நிச்சயமாக அறிவான் மற்றொருவரும் அடுத்த நிமிடம் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்று .எதற்காக ஒரு உயிரை உலகிற்கு கொண்டு வந்து அதை தவிக்க விடவேண்டும் என்ற எண்ணத்தில் தான் குழந்தைகளே வேண்டாம் என்றது எனில் இதை ஜான்வியிடம் கூறினால் அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள். அவளிற்கு குழந்தைகள் என்றாள் உயிர் என்று அவனும் அறிவான் அதனால் தான் அவளிடம் கூறாமலே அந்த மாத்திரைகளை உண்டு வந்தான் எனில் இன்று எப்படியோ தெரிந்து விட்டது .

அவனின் மனநிலையை அவன் ஒரு பார்வையிலேயே உணர்பவள் அவனின் உணர்வுகளையா அறியாமல் இருப்பாள்? எனில் அந்த காரணம் அவளிற்கு சுத்த முட்டாள்தனமாக தோன்றியது.சிறுவயதில் இருந்து பதிந்து போன உணர்வை அவனிடம் பேசினால் எல்லாம் மாற்ற முடியாது எனவே இனி அடாவடி தான் என்று முடிவெடுத்தவள் உன்ன கதற விடறேன் இரு டா என்று நினைத்தவாறு தனது உடமைகளை அங்கிருந்த இன்னொரு அறைக்கு மாற்றி விட்டாள் .

கெளதம் கோபத்தில் பைக் எடுத்து சுற்றியவன் இரண்டு மணி நேரம் கழித்து வீடு வர ஜான்வி பக்கத்துக்கு அறையில் இருந்து வெளியே வந்தாள்.கெளதம் அவள் அடுத்த அறையில் இருந்து வருவதை குழப்பமாய் பார்த்தவன் தன்னை மதிக்காமல் கடந்து செல்பவளை அழைத்தான் "ஜானு இப்போ எதுக்கு அந்த ரூம்ல இருந்து வர ?"என்று கேட்க

அவளோ "இனி அந்த ரூம்ல தான் நா இருக்க போறேன் நீ இந்த ரூம்ல இருந்துக்கோ என்று asaaultaaga ஒரு அணுகுண்டை தூக்கி போட்டாள்.அவள் எனக்கென்ன என்பதை போல் கடந்து செல்ல

கௌதமோ அவளின் கையை பற்றி அருகில் இழுத்தவன் "பைத்தியமா ஜான்வி உனக்கு ?"என்று கேட்க

அவளோ "அப்டினே வச்சுக்கோ. என் ஆசைக்கு ஓகே சொல்ற வரைக்கும் நீ வேற ரூம் நா வேற ரூம் தான். அப்பறம் நீ சமைக்குறத நான் சாப்பிட மாட்டேன் உனக்கும் சமைச்சு தர மாட்டேன் முக்கியமா உன்கூட பேச மாட்டேன் நீயும் என்கூட பேசிறாத "என்று கூறியவள் அவன் பிடியில் இருந்து விலகி அறைக்குள் சென்று தாள் இட்டுக் கொண்டாள் .

ஏதோ உளறுகிறாள் வழக்கம் போல் இரவு சரி ஆகிவிடும் என்று நினைத்தவன் அவளிற்காக இரவுணவை சமைக்க அவளோ அதை தொடாமல் தனக்கு தானே செய்து உண்டுவிட்டு அந்த அறைக்குள் சென்று விட்டாள் .

அவள் செய்கையில் மூண்ட எரிச்சலில் பாதி உண்டும் உண்ணாமலும் எழுந்தவன் நீ இவ்ளோ பிடிவாதம் பிடிச்சா உனக்கு மேல நான் பிடிவாதம் பிடிப்பேன் என்றவாறு அறைக்குள் மெத்தையில் சென்று விழ அவள் அருகில் இல்லாத மெத்தை கூட முள்ளாய் தோன்றியது .புரண்டு புரண்டு படுத்தவன் கண்களை உறக்கம் தழுவவே இல்லை. அங்கு ஜான்வியின் நிலையும் இது தான்
, இரு முறை அடுத்த அறைக்கு சென்று விடலாமா என்று கூட யோசித்தாள். எனில் அப்படி செய்தால் அவனின் முட்டாள்தனத்தை உணர்ந்துகொள்ளவே மாட்டான் என்று அமைதியாகி விட்டாள்.

அடுத்த நாளும் இப்படியே தொடர இரண்டு நாட்களிலேயே கெளதம் ஜான்வியிடம் பேசாமல் அவள் அருகாமையை உணராமல் மிகவும் துவண்டு விட்டான்.அவன் சமைத்தால் சாப்பிடாமல் சென்றாள் ,அலுவலகம் விட்டு வந்தாள் அவன் வரவேற்பறையில் அமர அவளோ தன் அறைக்கு சென்று தாள் இட்டுக் கொள்வாள் .அவனிடம் பேசுவதை சுத்தமாக தவிர்த்திருந்தாள் .அன்று மாலை இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவன் அவள் ஆபீஸ் விட்டு வந்ததும் குரல் கொடுத்தான் "ஜானு" என்று .

அவள் மதியாமல் உள்ளே செல்ல போக விறுவிறுவென்று எழுந்து வந்தவன் அவளை துண்டுக்கட்டாய் தோளில் போட்டுக்கொண்டு அவன் அறைக்கு சென்று கதவை சாத்தினான் .ஜான்வி "எரும மாடு விடு டா இப்போ மட்டும் எதுக்கு கிட்ட வர விடு "என்று அடிக்க அவனோ தூசு தட்டுவதை போல் அவற்றை கண்டுகொள்ளாமல் மெத்தையில் அமர்ந்தவன் அவள் தப்பி செல்லாதவாறு அவளை மடியில் இறுத்தி இருபுறமும் பிடித்துக் கொண்டான் .அவள் முகத்தை திருப்ப அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன் கண்களை பார்த்தவள் அது கலங்கி இருக்கவும் பதறிவிட்டாள்.

ஜான்வி "ஹே அத்து என்னடா இப்டி ...ப்ச் என்னடா நீ இப்டி பண்ற "என்று கேட்டவாறு கண்களை துடைக்க

அவனோ "ஏன் ஜானு உனக்கு புரிய மாட்டேங்குது ?என்னால .... இன்னொரு உயிருக்கு நா அனுபவிச்ச அதே வலியை குடுக்க முடியாது டி ப்ளீஸ் "என்று கூற

ஜான்வியோ "நீ பேசுறது உனக்கு லூசுத்தனமா தெரியலையா ? என்னைக்கோ ஒரு நாள் கண்டிப்பா யாரா இருந்தாலும் சாக தான் போறோம் அத்து. ஆனா அதுக்காக வாழற வாழ்க்கையை நரகம் ஆக்க பாக்குறியே! அன்னைக்கு ஜீவிதா பையன பாக்க போகேல அவனை நீ உன் மடிய விட்டு கீழ வைக்கவே இல்லையே ,உன் கண்ணுல ஒரு ஏக்கத்தை நான் பாத்தேன் டா .ஒரு குழந்தையை பெத்து அதை வளர்த்து அது பண்ற சேட்டையெல்லாம் பாக்குறது எவ்ளோ பெரிய வரம் தெரியுமா ?அதை எல்லாம் உன்னோட இந்த அர்த்தமில்லாத பயத்துக்காக விட போறியா ?உனக்கு ஆசையா இல்லையா அத்து உன்ன ஒரு குழந்தை அப்பான்னு கூப்பிடணும்னு ?"என்று கேட்க

அவனின் தலை அவன் அனுமதியே இன்றி ஆம் என்று ஆடியது

அவன் கன்னத்தை பிடித்தவள் "அப்பறம் என்ன ?"என்று கேட்க

கெளதம் "ஆனா ஏதாச்சு ஆய்ருச்சுனா ?"என்று கேட்க

ஜான்வி "அப்டிலாம் ஒன்னும் ஆகாது அப்டியே ஆனாலும் அதை face பண்ணி தான் ஆகணும் ."என்று கூற கெளதம் அரை மனதாய் தலை ஆட்டி வைத்தான் .

அதன் பின் அடுத்த இரண்டு மாதத்தில் ஜான்வி கருத்தரிக்க ஜான்வியை விட அதிகம் உற்சாகம் ஆனது கெளதம் தான் .வேலைக்கு சென்று வந்த பின் இருவரும் முன்பை விட அதிக நேரம் பேசியபடி கழித்தனர் .அவளை பக்கத்தில் இருந்த பார்க்கிற்கு வாக்கிங் அழைத்து செல்வான் ,கால்களில் வீக்கம் ஏற்பட்டால் கால் பிடித்து விடுவான் moodswingsil அவள் திட்டுவதை எல்லாம் ஏதோ அவார்ட் வாங்குவதை போல் சிரித்த முகத்துடன் வாங்கி கொள்வான் .அவள் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று கேட்டால் நேரம் காலம் பார்க்காமல் வாங்கி வருவான் .

இருவருக்கும் இடையிலான காதல் பெற்றோரான பின் வேறொரு பரிமாணம் எடுத்தது என்று தான் கூற முடியும் .ஏழாம் மாதம் வளைகாப்பு வீட்டிலேயே எளிமையாக செய்து முடிக்க அன்று முதல் ஜான்வியின் அன்னையும் அவர்களுடன் தான் தங்கி இருக்கிறார் ஜான்வியை பார்த்துக் கொள்ள .ஆதிசேஷன் கோயம்பத்தூரில் வேலை செய்வதால் அவனின் தந்தையும் அவனும் அங்கே இருக்கின்றார்கள் .ஜான்வி குழந்தை பிறந்து பள்ளி செல்லும் வரை அருகில் இருந்து வளர்க்க வேண்டும் என்ற ஆசையால் வேலையை ராஜினாமா செய்துவிட்டாள் அதன் பின் சென்று கொள்ளலாம் என்று .

இதை எல்லாம் நினைத்து பார்த்தவளிற்கு சிரிப்பு தான் வந்தது வேண்டாம் வேண்டாமென்று நின்றுவிட்டு இப்பொழுது வாய் ஓயாமல் வயிற்றில் இருக்கும் மகளிடம் பேசியபடி இருக்கும் கணவனை காணும் பொழுது

ஜான்வி தன் மேடிட்ட வயிற்றின் மேல் இருக்கும் அவன் கரத்தில் தனது கரத்தை வைத்தவள் "நீயும் மக மகனு சொல்லுற கடைசில பாரு பையன் பொறந்து உனக்கு பல்பு குடுக்க போறான் "என்று கூற

கௌதமோ மறுப்பாய் தலை அசைத்தவன் "எனக்கு மகள் தான் முதல்ல பிறக்கும் அதுவும் என் ஜானு மாறி" என்று கூற

ஜான்வி அவன் தலை முடியை கலைத்தவள் "எனக்கு கூட தான் என் அத்து மாறி மகன் வேணும் "என்று கூற

கௌதமோ அவளை குறும்பாய் பார்த்தவன் "better luck next time மிச்சஸ் கெளதம் "என்று கூற

அவளோ அவன் கூற்றில் சிரித்தவள்

"frauduh "என்றபடி அவன் கையில் அடித்தவள் அடிவயிற்றில் சுளீர் என்ற வலி எடுக்க அவனின் கரத்தை கெட்டியாக பிடித்தாள்.

அவளின் முகமாறுதலில் பதற்றமடைந்த கெளதம் அவள் தன் கையை கெட்டியாய் பிடித்ததும் "ஹே ஜானு என்னாச்சுடி ?"என்று கேட்க

அவளோ அந்த வலியிலும் புன்னகைத்தவள் "உன் பொண்ணுக்கு உன்ன சீக்ரம் பாக்குற ஆசை வந்துருச்சு போல "என்று கூற பிரசவ வலி துவங்கி விட்டது என்று உணர்ந்தவன் அவளை கைத்தாங்கலாக அழைத்தபடி அடுத்த அறையில் இருந்த ஜான்வியின் அன்னையையும் அழைத்துக்கொண்டு ஏற்கனவே தயாராய் வைத்திருந்த பையையும் பணத்தையும் எடுத்தபடி காரிற்கு சென்று முன்னிருக்கையில் அமர்ந்தான் .

அவன் பதற்றமாய் இருப்பதை உணர்ந்த ஜான்வியின் அன்னை "மாப்ள நீங்க பின்னாடி வாங்க நான் ஓட்டுறேன் "என்று கூற அவனிற்கு இப்பொழுது இருக்கும் பதற்றத்தில் ஓட்ட முடியாது என்று அவரிடம் கொடுத்து விட்டான் .

ஜான்விக்கு பிரசவ வலி அதிகரித்துக்கொண்டே செல்ல அவனின் சட்டையை அவள் இறுக்கமாய் பற்றிக்கொண்டு வலியை பொறுத்துக்கொண்டு வந்தாள் தான் கத்தினாள் இவன் வெடித்து விடுவான் என்று .

அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவமனையில் ஜான்வி சேர்க்கப்பட ஜான்வியின் அன்னைக்கு ஒருபுறம் மகளின் முதல் பிரசவம் என்ற பதற்றம் இருந்தாலும் கௌதமின் நிலை சிரிப்பு மூட்டுவதாய் இருந்தது . அவளின் ஒவ்வொரு அலறலுக்கும் அவளை விட அதிகமாய் இவன் அழுது வெளியே துடித்துக் கொண்டிருந்தான்.

நண்பர்கள் அனைவருக்கும் தகவல் சொன்னவர் அடுத்து ஆதி சேஷனை flightil வர கூறி விட்டார்.ஜான்வியின் தந்தை இன்னும் பத்து நாளில் மகளின் பிரசவ தேதி உள்ளதே என்று இரண்டு நாட்களாகவே பதற்றத்தில் இருந்தவர் போனில் ஆதி பேசுவதை கேட்க கேட்க உடலில் வேர்வை சுரக்க ஆரம்பித்து விட்டது .

அவரின் நிலையை பார்த்து புன்னகைத்த ஆதி அவர் அவனின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்க "ஜான்விக்கு labour pain வந்துருச்சாம் அப்பா நான் கிளம்புறேன் வர ரெண்டு நாள் ஆகும் பாத்துக்கோங்க "என்று கூறி செல்ல

அவரோ கேட்கலாமா வேண்டாமா என்று தயங்கியவர் அதன் பின் கேட்டு விட்டார் "ஆதி நானும் வரேன் "என்று

ஆதி அவரை பார்த்தவன் "எதுக்கு பா? அதான் உங்க பொண்ணு செத்துட்டானு சொல்லிடீங்களே அப்பறோம் எதுக்கு அவ குழந்தையை பார்க்க நீங்க அவ்ளோ தூரம் வரணும் உங்க ஸ்டேட்ஸ்க்கு நீங்க அங்கலாம் வரலாமா ?"என்று ஏளனமாய் கேட்க அவரோ தன் தவறுகளுக்கு தலை குனிந்தவாறு அமைதியாக நின்றார் .

பின் இரண்டு நிமிடத்தில் ஆதியே மீண்டும் அழைத்தான் "இனியாச்சு இப்டி நடந்துக்காதீங்கப்பா ப்ளீஸ் .கிளம்புங்க "என்று கூற அவரும் மகளை இரண்டு வருடம் கழித்து அவளின் உயிரையும் சேர்த்து பார்க்க போகும் சந்தோஷத்தில் துள்ளளோடு கிளம்பினார் .

ஆதி அவரின் முகத்தில் தாண்டவமாடும் மகிழ்ச்சியில் புன்னகைத்தவன் "பேரன் பேத்தி பொறந்துட்டா மட்டும் வீரப்ப வம்சம் மாறி வெறச்சுக்கிட்டு தெரியுற மனுஷங்க கூட குழந்தையா ஆயிருறாங்க "என்று நினைத்தவாறு பிரவீன் மற்றும் ஸ்வேதாவிடம் தகவல் கூறியவன் அவர்களையும் கிளம்பக் கூறிவிட்டான் .

இங்கு தன் தந்தையையும் தாயையும் ஒரு மணி நேரம் துடிக்க வைத்து பூங்குவியலென வந்து பிறந்தாள் ஜான்வி மற்றும் கௌதமின் புதல்வி .

ஜான்வி மகளை பார்த்தவாறு மயக்கத்திற்கு செல்ல கௌதமோ குழந்தையின் வீறிட்டு அழும் சத்தத்தை கேட்ட பின்பு சொத்தென்று சக்தி வடிந்ததைப் போல் சாய்ந்து விட்டான் .

ஐந்து நிமிடத்திற்கு பின் குழந்தையை சுத்தம் செய்து செவிலியர் வெளியே வர கௌதமோ இளஞ்சிவப்பு நிறத்தில் குட்டி தேவதையென இருந்த தன் மகளை கண்ணீரோடு பார்த்தான் .அவளை முதலில் கையில் வாங்கிய ஜான்வியின் தாய் குழந்தையை கொஞ்ச கௌதமின் தந்தை அடுத்து வாங்கியவர் முகம் நிறைந்த சிரிப்புடன் "அப்டியே என் பேத்தி உன்ன மாறியே இருக்காடா "என்று கூற கௌதமோ வெட்கப்புன்னகை செய்தவன் எப்படி தூக்க வேண்டும் என்று பத்து முறை கேட்டுக்கொண்ட பிறகு தன் மகளை கையில் வாங்கினான் .

அவர்கள் கூறியது போல் அப்படியே அவனை போல் தான் இருந்தாள் எனில் கண்கள் மட்டும் ஜான்வியின் முட்டை கண் .

பட்டும்படாமல் மகளின் நெற்றியில் முத்தமிட்டவன் மனைவியை பார்க்க அனுமதி கேட்டு உள்ளே சென்றான் .வாடிய கோடியாய் படுத்திருந்தவளின் அருகில் குழந்தையை படுக்க வைத்தவன் அவள் நெற்றியை மெதுவாய் வருடி முத்தம் கொடுக்க அவனின் இதழ் ஸ்பரிசத்தில் விழித்த ஜான்வி தன் அருகில் கையை காலை ஆட்டியபடி கண்களை திறந்து திறந்து மூடும் மகளை பார்த்து புன்னகைத்தாள் .

கெளதம் "thank you for the princess மகாராணி "என்று கூற அவளோ புன்னகைத்தவாறு எழுந்து அமர முயற்சித்தாள்.

கெளதம் அவளை கட்டிலில் சாய்த்து அமரவைத்தவன் அவள் கையில் குழந்தையை கொடுக்க அவளோ அந்த வெண்பஞ்சு மேகம் போன்ற சருமத்தை ஆசையுடன் வருடியவள் "அப்டியே உன்ன மாறி இருக்காள்ல"என்று கூற

அவனும் ஆம் என்றவன் "கண்ணு மட்டும் உன்னோட முட்ட கண்ணு "என்று கூற அவளோ அவன் கையை கிள்ளி வைத்தாள்.இருவருக்கும் அத்தருணம் வாழ்வே முழுமை பெற்றது போல் இருந்தது .அதன் பின் ஒவ்வொருவராய் வந்து குழந்தையை பார்த்து செல்ல ஜான்வியின் தந்தை அவளின் கையை பிடித்து மன்னிப்பு கேட்க ஜான்வியும் ஒரு சிறு சிரிப்புடன் விட்டு விட்டாள் .

அனைவரும் பார்த்து விட்டு வெளியேற உறங்கும் குழந்தையை ஜான்வி கையில் வைத்திருக்க கெளதம் குழந்தையின் கன்னத்தை வருடியபடி ஜான்வியை பார்த்தான் என்ன என்பதை போல்.அவள் "ஐ லவ் யு டா "என்று கூற அவனும்

அவள் நெற்றியில் முட்டியவன்"லவ் யு சோ மச் டி ராட்சசி "என்று கூற அவர்களின் புதல்வி இருவரையும் உதைத்தாள் என்னை மறந்துவிட்டீர்களே என்பதை போல் .

உன்னை சரணடைந்தேன்

உன்னுள்ளே நான் பிறந்தேன்

என்னில் உறைந்திருந்தேன்

உன்னுள்ளே நான் கரைந்தேன்

கண்கள் இமையை விட்டு


உன்னையே நம்பி நிற்க

சுவாசம் காற்றைவிட்டு


உன்னையே தேடி செல்ல

தாயாக மாறி போனயே

வேராக தாங்கி நின்றாயே

மூவரும் தங்கள் உலகில் சஞ்சரிக்க நாமும் விடை பெறுவோம் தோழனா என் காதலனா என்ற தேடல் பயணத்தில் ஒருவர் மற்றொருவரின் உயிரென மாறிப்போன தம்பதியர் கெளதம் மற்றும் மிச்செஸ் கௌதமிடமிருந்து .

Mele irukura lyrics naa eludhunadhu illa its a song naa link kudukuren ketu paarunga

https://www.youtube.com/watch?v=YbFkhKb3dBs

சுபம்

Other works

1. கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

2. Solace in solitude

3. ஆதிரா

4. உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி

5. மறப்பதில்லை நெஞ்சே

6. தாலாட்டும் சங்கீதம்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro