6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அடுத்த நாள் காலையில் அனைவரும் கிளம்பி அலுவலகத்திற்கு செல்ல ஜான்வியும் ஜீவிதாவும் ப்ரவீனும் அலுவலக பஸ் நிற்க அங்கிருந்து இறங்கி நடந்தனர் .அங்கு ஒரு பாலம் போன்ற அமைப்பு இருக்கும் அதில் சற்று தூரம் நடந்தால் subway ஒன்று இருக்கும் அதில் இடது புறம் ஏறினாள் காக்னிசண்ட் வந்து விடும்.

பேருந்து சேவை அவர்களுக்கு அந்த பாலம் வரை m மட்டும் தான் தந்திருந்தனர் .அலுவலக பஸ்கள் அங்கே தான் ஒரு இடத்தில் நிற்கும் .அங்கே இறங்கிய நண்பர்கள் வழக்கம் போல் அந்த பாலத்தில் நடக்க ஆரம்பிக்க ப்ரவீனோ முன்னாள் நடந்து சென்றுகொண்டியுர்ந்தவனை பார்த்தவன் ஜீவிதாவிடம் திரும்பி "ஏய்ய் ஜீவி அங்க முன்னாடி போற ஆள பாரேன் "என்க

ஜீவிதாவோ முன்னே பார்த்தவள் ஜான்வியை வம்பிழுக்க வேண்டி "ஆமா நம்ம ஜாங்வியோட ஆளு தான் போறாரு "என்க

ஜான்வியோ" எனக்கு தெரியாம எனக்கு எவன்டா ஆளு" என்று நிமிர்ந்து ஜீவிதாவை பார்க்க முன்னே சென்று கொண்டிருந்தவனோ இள நீல formal ஷர்டிலும் கருப்பு நிற pantilum வேக நடைகளோடு சென்று கொண்டிருக்க அவனின் பக்க வாட்டு தோற்றமே காட்டி கொடுத்து விட்டது அவன் யாரென்று .இவ விட மாட்டா போலயே என்று நினைத்த ஜான்வி எல்லாத்துக்கும் காரணம் இந்த பாடி பில்டர் என்று நினைத்து அவனின் பக்கவாட்டு தோற்றத்தை முறைக்க

ஜீவிதாவோ "என்ன மேடம் பின்னாடி நடக்குற போஸயே இப்டி பாக்குற அப்போ முகத்தை எவ்ளோ நேரம் பார்ப்ப "என்று கிண்டலடிக்க

ஜான்வியோ அவளை முறைத்தவள் "அவன் முகத்தை இப்போ வரைக்கும் ஒரு தடவ கூட நா முழுசா பாத்ததில்லை டி "என்க

ப்ரவீனோ "என்ன ஜான்வி கௌதம போய் இப்டி சொல்லிட்ட ஏதாச்சு சண்டையா ?எதுவா இருந்தாலும் சொல்லு நா பாத்துக்குறேன் "என்று நக்கலாய் கூற

அவளோ கையை தலைக்கு மேல் தூக்கி கும்பிடு போட்டவள் "நீ பண்ண வரைக்கும் போதும் டா சாமி அவன் பேரு கௌதம்னே நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது."என்று கூற

ப்ரவீனோ" அப்டியா அப்போ clear பண்ணிர வேண்டி தான் "என்று கூறியவன் ஜான்வி என்ன செய்ய போகிறான் என்று சுதாரிப்பதற்குள் "கெளதம் "என்று அழைத்து விட்டான் .

ஜான்வி அரண்டு விழிக்க கௌதமோ அதற்குள் திரும்பி இருந்தான் .

கெளதம் வேக வேகமாய் தனக்கு கொடுக்க பட்டிருந்த siteirku சென்றுகொண்டிருந்தவன் யாரோ தன்னை அழைக்கும் குரலில் திரும்பி பார்க்க அங்கோ ப்ரவீனும் ஜீவிதாவும் ஜான்வியும் நின்றிருந்தனர் .ஜான்வி முழிக்கும் முழியை பார்த்து அவன் சிரிக்க ஜான்வியோ அவன் திரும்பிவிட்டான் என்று உணர்ந்ததும் தலையை தொங்க போட்டுகொண்டாள்.

மூவரும் அவன் அருகில் செல்ல ஜீவிதாவோ ஜான்வியை இழுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தாள்.பிரவீன் "என்ன ப்ரோ நீங்க இங்க?"என்று கேட்க

அவனோ '"இங்க ஒரு கான்ஸ்டருக்ஷன் ஒர்க்ல monday மட்டும் வந்து நா superwise பண்ணனும் .அதுக்காக தான் வந்தேன் "என்க

ப்ரவீனோ "ஓகே ப்ரோ carry on "என்று கூற அவனும் ஒரு சிறு தலை அசைப்புடன் விடை பெற்றான்.ஜான்வி இன்றும் அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை அவன் சென்ற பின் தான் மூச்சே சீராக வந்தது .அதன் பின் அதிகம் சோதிக்க வேண்டாம் என்று இருவரும் அவளோடு அலுவலகத்திர்க்கு சென்றிட அந்த வாரமும் எந்தவித மாற்றமும் இன்றி சென்றது .

அந்த வாரம் திவ்யாவும் நண்பர்களும் phoenix மாலிற்கு சென்று படம் பார்க்கலாம் என்று நைட் ஷோவிற்கு பதிவு செய்திருந்தனர் .அன்று யார் யார் வருகிறார்கள் என்று முன்னமே ஜான்வி கேட்டு வைத்துக்கொண்டால் மறுபடியும் அவனை வச்சு கலாய்ச்சா அவ பிஞ்சு மனசு தாங்காதுப்பா பாவம் புள்ள .அவன் வேலை இருப்பதால் வர மாட்டான் என்று கூறி விட்டனர் அவளிடம் .

ஹப்பாடா என்று நினைத்தவள் நினைத்தவள் அவர்களுடன் படத்திற்கு செல்ல ஆயத்தமாகினால் ஜான்வி .அன்று அவர்கள் புக் செய்திருந்தது "ஐ டி சாப்டர் 2 "என்ற ஹாலிவுட் பேய் படம் .ஜான்வியிடம் என்ன படம் என்று கூறாமலே அழைத்து வந்திருந்தனர் .

அவளோ வெளியே போஸ்ட்டரை பார்த்ததும் ஜீவிதாவிடம் அரண்டு பயந்த விழியுடன் திரும்பியவள் "கொலைகாரி என்ன கொலை பண்ணவே பெங்களூரு கூட்டிட்டு வந்தியா டி நா வர மாட்டேன் "என்று ஓட பார்க்க பிரவீன் ஒரு புறமும் ஜீவிதா மறுபுறமும் அவள் கையை பிடித்துக்கொண்டனர் .

அவளோ சிறு குழந்தை அடம் பிடிப்பதை போல் அவள் உயரத்திற்கு தொங்கியபடி வர மாட்டேன் என்று அடம் பிடிக்க அங்கே அவளின் பின்னால் கேட்ட சிரிப்பு சத்தத்தை கேட்டதும் அவ்வளவு நேரம் ஆர்ப்பாட்டம் செய்தவள் அப்படியே ஆப் ஆகி விட்டாள்.

இவன் அவன் ல இவன் எங்கே இங்க வந்தான் என்று நினைத்தவள் அப்படியே திரும்ப அவனோ சிரித்தபடி அவர்கள் அருகில் வந்தவன்"குழந்தையை எல்லாம் எதுக்கு பேய் படத்துக்கு கூட்டிட்டு வரீங்க பஞ்சு முட்டாய் வாங்கி பக்கத்துல உக்கார வச்சுட்டு வாங்க "என்று கூற

ஜான்வியோ கோபமாய் மேலே நிமிர்ந்தவள் "என்ன "என்று ஏதோ கூற வந்தவள் அவனின் கண்ணை பார்த்து அப்படியே நின்றாள் .கைவிரல் அப்படியே நிற்க கண்கள் அமைக்கவும் மறந்து அவன் கண்களிலேயே கட்டுண்டிருந்தது .கருநீல half hand டீ ஷர்ட்டும் ஜெங்ஸும் என்றிருந்தவனின் தலைமுடி காற்றில் அசைந்தாட இரு இதழ் பிரிந்து புன்னகை சிந்திக்கொண்டிருக்க அவன் சிரிக்கையில் கண்களும் சேர்ந்து சிரிக்கும் போல ஈட்டி போல் கூர்மையாய் இருந்தது .

திட்ட வந்ததையே மறந்தவள் "என்னா கண்ணு டா "என்று சைட் அடிக்க துவங்கி விட்டால் .அதன் பின் வெளி வந்தவள் கெத்தா விட்றாத ஜான்வி என்று நினைத்துக்கொண்டு "பயமா எனக்கா small பாய்ஸ் அதெல்லாம் நீயும் அந்த பயந்தாகொள்ளியும் தான் படுவீங்க நாங்கல்லாம் வீராதி வீரி சூராதி சூரி "என்று கூறி விட்டு முன்னே நடந்து செல்ல மூவரும் அவள் செய்கையை பார்த்து சிரித்துக்கொண்டே திரையரங்கிற்குள் சென்றனர் .

கடைசி வரிசையில் நான்கு சீட்டும் அதன் பின் அதற்கு முந்தைய வரிசையும் பதிவு செய்திருக்க ஜான்வியோ நான் பின்னாடி தான் அமர்வேன் என்று பின்னாடி சென்று அமர்ந்து கொண்டாள்.அவள் கார்னரில் அமர அவளிற்கு அடுத்து பிரவீன் செல்ல போக ஜீவிதாவோ அவன் கையை பிடித்தவள் "இன்னைக்கு entertainment வேணாமா ?வீராதி வீரியாம்ல இன்னைக்கு அழ வைக்குறேன் பாரு அவளை "என்க

அவனோ என்ன என்று பார்க்க அவளோ இரு என்று சைகை செய்தவள் முன்னே சென்று அமர போன கௌதமிடம் "ப்ரோ கொஞ்சம் உள்ள போறீங்களா"என்க

அவனோ "ஏன் "என்பதை போல் பார்க்க

அவளோ "ஒரு காரணமா தான் போங்க ப்ரோ "என்று சொல்ல வானும் சரி என்று உள்ளே சென்று ஜான்விக்கு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்து விட்டான் .

ஜான்வி அருகில் அமர்ந்து இருந்தவன் பிரவீன் என்று நினைத்தவள் "டேய்ய் வாசல்ல சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு பழி வாங்கிறாத டா இந்த தடவ மட்டும் உன் கைய புடுச்சுக்குறேன் டா . பயமா இருக்கும் போல "என்று கூறிவிட்டு அருகில் இருந்தவனின் கையை பிடித்தவள் அதன் பின் பேதம் உணர்ந்து யாரென்று மேலே நிமிர அங்கு கௌதமை பார்த்தவள் சட்டென்று கைகளை விளக்கி கொண்டாள் .

பிரவீனையும் ஜீவிதாவையும் பார்க்க அவர்களோ "இன்னைக்கு எப்படி நீ கைய புடிக்குறன்னு பாக்குறோம் டி" என்று நினைத்தவாரு நாக்கை துருத்தி விட்டு ஒன்றும் அறியாததை போல் அமர்ந்துகொண்டனர்.

அவள் கூறியதை வைத்தே தன்னை அவள் அருகில் அமர வைத்ததன் காரணத்தை ஊகித்தவன் படம் பார்க்க துவங்க சிறிது நேரத்திலேயே அந்த படத்தில் வரும் காட்சிகளை பார்த்து நடுங்க துவங்கினாள் ஜான்வி .

அவளின் நடுக்கத்தை தனது தோள் வழி உணர்ந்தவன் அவளை திரும்பி பார்க்க பயத்தில் வெளிறி போய் தவிப்பதை பிடிக்க ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தாள் .அவளின் செய்கை திருவிழாவில் கானாமல் போய் திருதிருவென்று விழித்தபடி அழுக தயாராகும் பிள்ளை போல் தெரிய புன்னகை தானாய் விரிய அவளிடம் மெல்லிய குரலில் "பயமா இருந்தா கைய புடிச்சுக்கோ "என்று கூற

அவளோ அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் அதே நிலையில் அமர்ந்து கொண்டாள் .சிறிது நேரம் கழித்து அவனிடம் திரும்பியவள் "அது வந்து ஒரு ஹெல்ப் "என்க

அவனோ என்ன எனபதை போல் பார்க்க "ஜீவி கிட்ட என் kercheif இருக்கும் அதை மட்டும் வாங்கி தரீங்களா ?"என்று கேட்க

அவனோ சரி என்றவன் வாழிட திரும்பினான் கேட்பதற்காக ஜீவிதாவோ வேண்டுமென்றே "எங்கே போட்டேன்னு தெரியல ப்ரோ "என்று கூற அவளிற்கோ கடவுளே என்றாகி விட்டது .

அடுத்து மிகவும் பயமூட்டும் சத்தத்துடன் ஒரு காட்சி ஓடிக்கொண்டிருக்க திடீரென்று அவளின் மேல் அவளின் kercheifai தூக்கி பிரவீன் போட அவளோ திரை அரங்கம் என்பதையும் மறந்து கத்தி விட்டாள்.ஒரு நிமிடம் அரங்கமே திரும்பி பார்க்க அவளோ பிரவீனை முறைத்தவள் இவர்களிடம் தேவை இல்லாமல் சவால் விட்டு விட்டோம் என்று நினைத்து நொந்துவிட்டாள்.

ஒரு வழியாய் சமாளித்தவள் இன்டெர்வல் வந்ததும் பயமும் அந்த ac குளிரும் சேர்ந்து உடல் நடுங்க ஆரம்பிக்க ஜீவிதாவை ஸ்னாக்ஸ் வாங்க அனுப்பி வைத்து விட்டு அங்கே வெளியே போட்டிருந்த sofaavil சென்று நடுங்கியபடி அமர்ந்து விட்டாள் .

வெளியே தானும் வந்த கெளதம் அவள் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து அவள் அருகில் வந்தவன் "coffee குடிக்கிறியா நடுக்கம் கொஞ்சம் குறையும் "என்று அவள் அருகில் வந்து முகத்திற்கு நேராய் குனிந்தபடி கூற அவளோ அவன் முகத்தை அத்தனை அருகாமையில் பார்த்தவள் நா உலர கண்களோ அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தது .

பின் வேண்டாம் என்று தலை அசைக்க அவனோ தோளை குலுக்கி விட்டு சென்று விட்டான் .அதற்கும் அவனையே மனதில் வறுத்தெடுத்தாள் ஜான்வி "வேணாம்னு சொன்ன உடனே போயிருவானா திரும்பலாம் கேக்க மாட்டானோ "என்று நினைத்துக்கொண்டிருக்க அவள் எண்ணத்தை தடைபடுத்துவது போல் coffee வாங்கி வந்தவன் அவள் அருகில் sofaavil வைத்து விட்டு சென்று விட்டான் .

அவன் சென்று விட்டான் என்று உறுதிப்படுத்திக்கொண்டவள் அந்த cofeeyai பார்க்க சிறிதாய் ஒரு புன்னகை இதழில் ஒட்டிக்கொண்டது .அதை எடுத்து அவள் பருக துவங்க திரை அரங்கின் வாசலில் அவள் செய்கைகளை பார்த்தபடி கை கட்டி நின்றவன் அவள் குடிக்க ஆரம்பித்ததும் புன்னகையுடன் உள்ளே சென்று விட்டான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro