தென்றல் 30

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

" ஜானவி நீ நிஜமா என்ன இவ்வளவு காதலிச்சிருப்பேன்னு எனக்கு

தெரியாது. அதுதான் நான் இப்போ வந்துட்டேன்னே. சோ உன்னோட இந்த கோவம் நியாயமனது கிடையாது. ஏன்னா மித்ரனுக்கும் எனக்கும் நடந்த சண்டையால நாங்க ஊர விட்டு போகலன்னு உங்கிட்ட சொல்லிட்டேன். அதுதான் நான் இப்போ திரும்பி

வந்துட்டேனே இனி நீதான் யோசிச்சி முடிவெடுக்கனும்" என்று கூற ஜானவி

" நல்ல வேலை சதீஷ் எனக்கு வாழ்க்கை தரேன்னு சொல்லி கல்யாணம் பன்ணிக்கிறேன்னு சொல்லல. நீங்க என்ன வேணா நினைச்சிக்கோங்க. எனக்கு எப்போமே

முதல் எதிரி திவ்யாதான். அது என் ஆழ்மனசுல பதிந்திடிச்சி. என்னால அத மாத்தமுடியாது. அப்புறம் போய் உங்க ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லுங்க இது வெறும் ஆரம்பம்தான் போக போக இன்னும் எவ்வளவோ இருக்குன்னு" என்று கூற

அவளின் பேச்சில் கோவம் கொண்ட சதீஷ்

"என்ன விட்ட ரொம்ப ஓவரா பேசுர உன்ன.." என்று கோவத்தில் கை நீட்ட வந்தவனை ரோஹித் தடுத்து நிறுத்தி

"சதீஷ் இப்போ நீங்க வெளில போகலன்னா உங்க மரியாதை கெட்டுடும் சோ போயிடுங்க" என்று கூற என்ன செய்வதென்று தெரியாமல் ஆற்றாமையுடன் வெளியில்

வந்தவனை அவனது பெயரைக்கூறி யாரோ அழைக்க யார் என்று திரும்பி பார்க்க அங்கு ரோஹித் நின்று கொண்டிருந்தான்.

"ப்ரோ உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்" என்று கூறிய ரோஹித்தை சதீஷ் என்ன என்று கேட்க அவனோ

"ப்ரோ முதல்ல ஆபீஸ்ல அப்படி பேசினதுக்கு சாரி. அப்புறம் ஜானவி காலேஜ்ல படிக்கிறப்போ உங்கள காதலிச்சதா சொன்னா. நீங்க வேற நாந்தான் திரும்பி வந்துட்டேன்னு வேற சொன்னீங்க உங்க மனசுல ஏதும்....." என்று இழுத்தவனை அவன் என்ன கேட்க வருகின்றான் என்று அறிந்த சதீஷ்

"இல்ல ப்ரோ, ஆனா அவ என்னாலதான் என் ப்ரெண்ட பழி வாங்குறான்னு நினைக்கும்

போது ரொம்ப கவலையா இருக்கு. ஆனா நீங்க கேட்குறதுலயே புரியுது அவள லவ் பண்றீங்கன்னு. எனக்கு அப்படி ஒரு ஐடியாலாம் இல்லை" என்று கூற சதீஷின் கைகளை

பிடித்துக்கொண்ட ரோஹித்

"தாங்க்ஸ் ப்ரோ, நான் ஏக பத்தினி விரதன்லாம் கிடையாது என் வாழ்க்கைல பல பொண்ணுங்கள பார்த்திருக்கேன். பொண்ணுங்க என்றாலே வெறும் உடல்

சுகத்துக்குதான் என்று நினைச்சிக்கிட்டு இருந்தவன். ஆனா அவ உங்க மேல வெச்சிருந்த காதல பார்க்கும் போது எனக்கு உங்க மேல ரொம்ப பொறாமை வந்திச்சி. என் மேல இப்படி பாசம் வெச்சி காதலிக்க யாருமில்லையேன்னு" என்று

பேசிக்கொண்டிருந்த ரோஹித்தை

"என்ன ப்ரோ, ஜானவியோட இந்த லவ்லாம் இங்க சகஜம்தானே. இதுல என்ன அப்படி ஸ்பெசாலிட்டி இருக்கு?" என்று கேட்க அவனோ

"உங்க லைப்ல இது மாதிரி காதல அதிகமா பார்த்திருப்பீங்க. ஆனா நான் அப்படி இல்லை. என் வாழ்க்கைல இப்படி பட்ட காதலையோ இல்ல பொண்ணுங்களையோ பார்த்தது

இல்ல. அதனாலதான் என்னவோ எனக்கு இது பெரிய விசயமா தோனுது " என்றவனிடம் சதீஷ்

"எப்படியோ ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க. அவ மனசுல இருக்குற பழி உணர்வ போக்கிடுங்க" என்று கூற ரோஹித்தோ

"முதல்ல அவ என்ன காதலிக்கிறேன்னு சொல்லட்டும். அப்படியே அவ என்ன

காதலிக்கிறேன்னு சொன்னாலும் அவள எந்த விதத்துலயும் மாற சொல்லி நான்

கட்டாயப்படுத்தமாட்டேன் " என்று கூறியவனை சதீஷ் இப்போது வினோதமாக பார்த்து

"பெஸ்ட் ஆப் லக் பார் யுவர் லவ் (உங்கள் காதலுக்கு வாழ்த்துக்கள் )"

என்று கூறி சென்றான்.

தான் வாழ்க்கையில் முதன் முறையாக ஜானவியின் காதலை அறியாமல் தவறு செய்து விட்டோமோ என்று எண்ணுகின்ற அளவுக்கு ரோஹித்திடம் பேசியது சதீஷின் மனதில் கேள்வியாக ஒலித்துக்கொண்டே இருந்தது. உடனே மித்ரனின் வீட்டிற்கு வந்த சதீஷ் அங்கு விஷ்வனாத்தை தவிர மற்ற எல்லோரும் இருக்க ஜானவியின்

கோவத்துக்கான காரணத்தை கூற எல்லோரும் ஆசரியம் கலந்த அதிர்ச்சியாக

இருந்தது. ஒரு பெண் தன் காதலுக்காக எதையும் செய்வாளா ? என்று யோசிக்க

செய்தது. மேலும் அவள் கடைசியாக கூறிய வார்த்தை எல்லோரையும் கவலை கொள்ள செய்தாலும் எதற்காக இவள் இப்படி செய்கின்றாள் என்பது புரியாமல் தவித்தவர்களுக்கு அதன் காரணம் புரிய அவளின் செயலில் ஒரு நியாயம் இருப்பதை

உணரந்து அவளை ஒரு எதிரியாக பார்ப்பதை விட்டும் அவளுக்காக மனம் இரங்கி இருந்தனர்.

ஆளுக்கு ஒரு வகையில் யோசித்துக்கொண்டிருக்க திவ்யாவுக்கோ தான் அர்ஜுனை

மிஸ் பண்ணிவிடுவோமோ என்ற எண்ணம் ஒரு வகையான பயம் கலந்த கவலையை கொடுத்தது. சதீஷ் அவர்களிடம் பேசிவிட்டு போன பின் திவ்யாவிடம் வந்த ஷாக்சி

"இங்க பாரு திவ்யா, நீ சும்மா தேவை இல்லாம அர்ஜுன மிஸ் பண்ணிடாத.

ஜானவியோட மன வலிக்கு நம்ம எல்லோரும் ஏதோ ஒரு வகைல காரணம் ஆகிட்டோம். கொஞ்ச

நாளைக்கு இத அப்படியே விட்டு பிடிக்கலாம். ஆனா அதுக்காக அர்ஜுன நீ மிஸ் பண்ணா உன்ன விட ஒரு துரதிஷ்டசாலி யாருமே இருக்க மாட்டாங்க. இந்த காலத்துல

ஒரு பொண்ண ஒரு பையன் உண்மையா லவ் பண்றது என்பது ரொம்ப அரிதாத்தான்

நடக்கும். அந்த பாக்கியம் உனக்கு கிடைச்சிருக்கு. அநியாயமா மிஸ்

பண்ணிடாத" என்று கூற என்றும் கலகலப்புடன் இருக்கும் திவ்யா திடீரென்று ஷாக்சியை கட்டிக்கொண்டு அழத்துவங்கினாள்.

திவ்யாவின் அழுகை எதற்கு என்று புரியாமல் அவள் முதுகை வருடிக்கொடுக்க கொஞ்சம் சமாதானமானவள்

"ஷாக்சி நிஜமா அர்ஜுன என்ன ஏத்துப்பாராடி, இந்த பிரச்சினை நடந்து இப்போ 3 மாசம் ஆகுது. அதற்கிடையில வேற ஏதும் பொண்ண அவருக்கு பிடிச்சிருந்தா......" என்று கேட்க ஷாக்சிக்கும் அவள் கூறுவதன் அர்த்தம் புரிந்து

"அடி லூசு அப்படில்லாம் எதுவுமே இருக்காது. நீ ஃப்ரீயாவிடு  நம்ம அர்ஜுன் கிட்ட பேசலாம் " என்று கூறினாள்.

நாட்கள் நகர விஷ்வனாத் தான் வைத்திருந்த மீதிப்பணத்தை கொண்டு சிறியதாக ஒரு அட்டைப்பெட்டி மற்றும் சாப்பிங்க் பேக் செய்யும் ஒரு சிறிய

தொழிற்சாலை ஒன்றை தொடங்கினார். ஆரம்பத்தில் ஜானவி ஒரு சில கஷ்டங்களை கொடுத்த போதும் சில நாட்களாக அவள் எதுவும் செய்யாமல் இருக்க இவர்களுக்கும் ஒரு சில ஆடர்கள் கிடைத்து மேல் தட்டு பணக்காரர்களாக இருந்த விஷ்வனாத்தின் குடும்பம் உயர் மட்ட நடுத்தர வர்க்கத்துக் குரியவர்களாயினர். சரியாக 3 மாதம் கழித்து ஒரு நாள்

ஷாக்சியையும் மித்ரனையும் அழைத்த விஷ்வனாத்

" உங்க கல்யாணத்த எப்போ வெச்சிக்கலாம், எனக்கும் வயசாகிட்டே போகுது. நான் ஒரு பேரக்குழந்தைய பார்க்க வேண்டாமா?" என்று கேட்க ஷாக்சி

"அப்பா அன்னைக்கு நான் மித்ரன் தன்னை தானே தரம் குறைத்து

மதிப்பிடக்கூடாதுன்னுதான் அவர காதலிக்கிறதா சொன்னேன். என்னால ஒரு திருமண

வாழ்க்கைய நினைச்சி பார்க்க முடியலப்பா. என்ன விட்டுடுங்க. மித்ரனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்க்கலாம்" என்று கூற கோவம் வந்த திவ்யா ஷாக்சியை அடிக்க கையை ஓங்கியவள் கட்டுப்படுத்திக்கொண்டு

"என்னடி விட்டா ரொம்ப ஓவரா பேசுர. அண்ணா நீ என்ன சொல்ர. உனக்கு ஷாக்சிய பிடிச்சிருக்கா இல்லையா?" என்று கேட்க மித்ரன் அமைதியாக

"நான் ஷாக்சி கிட்ட கொஞ்சம் பேசனும் " என்று கூற விஷ்வனாத்தும்

திவ்யாவும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். அவர்கள் இருவரும் செல்ல ஷாக்சியின் அருகில் வந்த மித்ரன்

"என்னோட வாழ்க்கைல ஒரு பொண்ணுக்கு இடமில்லைன்னு இருந்தப்போ நீதான் முதல்ல

என்ன கல்யாணம் பண்ணிக்கிறென்னு சொன்ன. ஆனா ஏதோ விதி வசத்துல ஜானவி என்ன

காதலிக்கிறேன்னு சொல்லி என் மனசுலயும் அந்த ஆசை வந்திடிச்சி. இப்பவும் என் மனசுல ஜானவி மேல காதல் இருக்கான்னு கேட்டா கண்டிப்பா இருக்கு

ஷாக்சி. முதல் காதல் அவ்வளவு லேசுல மறக்காது. ஆனா உன்ன பார்க்கும் போதெல்லாம் நான் நினைப்பேன் என் மனசுல ஜானவி வந்து உட்கார்ந்ததுக்கு

பதிலா நீ வந்திருக்கலாம்னு. ஆனா என்ன செய்ய கடவுளோட எண்ணம் வேற மாதிரில்ல இருந்திருக்கு. எனக்கு உன்ன பிடிக்கும் ஷாக்சி, ஒரு தோழியா. நீ எப்படியும்

காலம் பூரா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு தெரியும். அதுக்கு நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். நான் என் மனசுல ஜானவிய நினைச்சிக்கிட்டு

வாழ்ந்துர்ரேன். வெளில நம்ம புருடன் பொண்டாட்டியா இருக்கலாம், வீட்டுக்குள நம்ம நல்ல ப்ரெண்ட்சா இருக்கலாம். அப்பா மனசும் சந்தோசப்படும். என்ன சொல்ர?" என்று கேட்க ஷாக்சியால் அவன் கேட்ட விதத்தில் மறுக்க முடியவில்லை. ஷாக்சிக்கு இப்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்பதை விட

மித்ரனுக்கு ஒரு நல்ல தோழியாக இருந்து அவனது காதல் வலியை மறக்க செய்ய வேண்டும் என எண்ணினாள்.

"சரி மித்ரன் நீங்க சொல்ரதும் கரக்ட்தான், நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்,

அப்பாக்காக சரியா. அப்புறம் உங்களுக்கு வேற ஏதும் பொண்ணு மேல இண்டிரஸ்ட் வந்திச்ச்சின்னா நம்ம பிரிஞ்சிடலாம்" என்று கூற மித்ரனும் சரி என்று தலை

அசைத்தவன் மனதுக்குள்

'ஐ லவ் யூ ஷாக்சி, ஜானவி மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்திச்சி ஆனா அது காதல் இல்லை. ஏன் அது காதலா இருந்தா கூட எனக்கு கவலை இல்லை. ஏன்னா எல்லோருக்குமே முதல் காதல் கை கூடனும்னு இல்லை. நம்ம கண்ணனுக்கே செகண்ட் லவ்தான் சக்சஸ் ஆச்சு. இப்போ அவன் எவ்வளவு சந்தோசமா இருக்கான். உன்கிட்ட நான் வந்து உன்ன காதலிக்கிறேன்னு சொன்னா கண்டிப்பா நீ என்ன ஏத்துக்க

மாட்ட. ஒரு அனுதாப நாடகம் ஒன்ன போட்டுதான் உன்ன கவுக்கனும்னு இருக்கு என் முட்டக் கண்ணி. உனக்கு என்மேல அனுதாபத்த பொங்க வெச்சி அத எப்படி காதலா மாத்திக்காட்டுறேன்னு மட்டும் பாரு. சிடு மூஞிசியா இருந்த மித்ரன் இனிமே லவ்வர் பாயா மாறப்போறேன். உனக்காக உன் காதலுக்காக, உன்ன போல ஒரு பொண்ண என் லைப்ல நான் மிஸ் பண்ணா என்ன விட துரதிஷ்டசாலி யாருமே இருக்க மாட்டாங்க. என் லவ் டார்ச்சர அனுபவிக்க ரெடியா இரு' மனதுக்குள் எண்ணியவன்

"நம்ம கல்யாணத்த அப்பா,திவ்யா கிட்ட சொல்ரேன்" என்று செல்ல அங்கு திவ்யா கையில் ஒரு கவருடன் கண்களில் கண்ணீர் முட்ட நின்று கொண்டிருந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro