தென்றல் 32

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தன்னிடம் நெருங்கி வரும் மித்ரனை ஒரு மாதிரி ஷாக்சி பார்க்க மித்ரனுக்கு உடனே தான் செய்யவிருந்த தவறு புத்திக்கு உறைத்தது.உடனே அவன் ஒரு புன்னகையுடன் 

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்.கல்யாணப் பொண்ணு ரூம் உள்ள வந்திட்டு வெளில போனா பார்க்குறவங்க ஏதும் பேசுவாங்க.சோ நீ தூங்கு நான் மொபைல்ல கேம் விளையாட போறேன்" என்று கூறி அவன் அங்கிருந்த கதிரையில் உட்கார்ந்து கொண்டான்.இன்று நடந்த திருமண சடங்குகளில் ஷாக்சி இரவு நேரத்தில் போட வேண்டிய மாத்திரையை போட மறந்திருந்தால்.

ஷாக்சி தூங்கும் அழகை ஓரக்கண்ணல் ரசித்துக்கொண்டிருந்த மித்ரன் போனை வைத்துவிட்டு கட்டிலின் ஓரத்தில் அவனும் தூங்க தொடங்கினான்.அவன் தூங்கி ஒரு சில நொடிகளில் ஷாக்சி விசும்பும் சத்தம் கேட்க உடனே முழித்தவன் ஷாக்சியை திரும்பி பார்க்க  தூக்கத்திலேயே அவளது விசும்பல் அழுகையாக மாற தொடங்கியது.என்ன செய்வது என்று புரியாத மித்ரன் ஷாக்சியை மெதுவாக உழுக்கி

"ஷாக்சி எதுக்குடா அழுகுற" என்று கேட்டதும்தான் தாமதம் உடனெ முழித்துக்கொண்ட ஷாக்சி

"ப்ளீஸ் என்ன ஏதும் பண்ணிடாதீங்க.நான் அந்த மாதிரி பொண்ணு இல்லைங்க" என்று சத்தமிட தொடங்கினால்.ஷாக்சியின் பேச்சு மித்ரனுக்கு அவள் எதை உணர்த்த வருகின்றால் என்று புரிந்தாலும் அவன் அவளை எதுவுமே தொல்லை செய்யாத போதும் அவள் ஏன் அப்படி பேசுகின்றால் என்பது புரியவில்லை. மீண்டும் அவள் அருகில் சென்று

"இங்க பாரு ஷாக்சி ,நான் உன்ன எதுவுமே செய்யலடா. நீ ஏன் பயப்படுற" என்று கேட்க இப்போது சத்தமாக கத்த தொடங்கியவள்

"இல்லை வேணாம் ,என்கிட்ட வராத .நான் கெட்டு போனவதான் அதுக்காக அந்த மாதிரி பொண்ணு இல்லை.ப்ளீஸ் என்ன புரிஞ்சிக்க.என்ன ஏதும் பண்ணிடாத.உன்ன கையெடுத்து கும்பிடுறேன்" என்று கூற நிஜமாகவே மித்ரன் இப்போது குழம்பி போனான்.அவள் பக்கமே அவன் செல்லாமல் இருந்தும் அவள் அவனை அவ்வாறு பேசியது அவனுக்கு வேதனயை கொடுத்தது.கட்டிலை விட்டு எழுந்த ஷாக்சி கீழே உட்கார்ந்து தன் தலையை கட்டிலின் ஓரத்தில் மெதுவாக முட்டிக்கொள்ள துவங்கியவள்  வேக வேகமாக முட்ட தொடங்கினாள்.ஆரம்பத்தில் இருந்தே நடப்பவை எதுவும் புரியாமல் இருக்க மித்ரன் உடனே ஷாக்சியின் அருகில் சென்று அவளை இருக்கு அனைத்துக்கொண்டான்.யாரோ தன்னை அனைப்பதை உணர்ந்த ஷாக்சி அவனிடம் இருந்த விடுபட திமிறியவளை மித்ரன் அசைய விடாமல் மேலும் இறுக்கிக் கொள்ள அவளால் அசைய முடியவில்லை.இருந்த போதும் அவள் தன் உடலை அசைக்க முயன்றது மித்ரனின் உடலில் ஒரு வகையான மாற்றத்தை ஏற்படுத்தியது.

நேரம் செல்ல செல்ல ஷாக்சியின் திமிறல் குறைந்து தாயிடம் அடைக்கலம் புகுந்துகொள்ளும் சேயை போல் மித்ரனுக்குள் தன்னை புதைத்துக்கொண்டால்.ஒரு சில நாழிகைகளின் பின் அவள் முகத்தை நிமிர்த்து அவள் நெற்றியில்  முத்தமிட ஷாக்சியின் உடல் சிலிர்த்துக்கொண்டது.முதன் முதலாக ஒரு ஆண் மகன் அவளை முத்தமிட்டது  வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளை கொடுத்தது.ஷாக்சியின் உடல் சிலிர்ப்பதை அவள் உடல் காட்டிக்கொடுக்க மித்ரனால் இதுக்கு மேல் என்ன செய்வது என்ற தயக்கம் தோன்றியது.ஒருவேலை தான் இதுக்கு மேல் ஏதும் செய்தால் ஷாக்சி என்ன நினைப்பால் என்ற என்னம் எழுந்தது.அதே நேரம் ஷாக்சியை விட்டு பிரியவும் மனதில்லை.முதன் முறையாக மித்ரன் தான் ஷாக்சியிடம் அவளை காதலிப்பதை கூறாததை என்னி வருத்தம் கொண்டான்.அவளை விட்டு விலகலாம் என்று நினைத்த வேலை ஷாக்சியோ அவனை விடுவது போன்று தெரியவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் அனைத்திருக்க இருவருக்கும் வெவ்வேறு மனநிலையில் அவர்களின் உள்ளம் தடுமாறிக்கொண்டிருந்தது.இதற்குமேலும் தன்னால் பொறுமையாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த மித்ரன் ஷாக்சிக்கு இதுவரை ஆதரவாக அவளை அமைதிப்படுத்தும் நோக்கில் முத்தமிட்டவன் தன்னை தானே அமைதிப்படுத்திக்கொள்ள இப்போது ஆவேசமாக ஷாக்சியை முத்தமிடத் தொடங்கினான்.ஷாக்சியும் எதுவும் கூறாமல் லேசாக விசும்பிக்கொண்டிருந்தவளை மித்ரனோ மனதுக்குள்

'சாரி ஷாக்சி நமக்குள்ள இந்த உறவு ரொம்ப புனிதமா ரெண்டு பேரோட சம்மதத்தோடதான் நடக்கனும்னு நினைச்சேன்.ஆனா நீ இருக்குற இந்த நிலமைல உன் மனச நான் எப்படியாச்சும் உனக்கு நடந்த கொடுமைல இருந்து வெளில கொண்டு வரனும் .என்ன மன்னிச்சிடு' என்று நினைத்த இதுவரை நேரமும்  மித்ரனுக்குள் புதைந்திருந்த ஷாக்யின்  மனப்பாரத்தை இலேசாக்க நினைத்த மித்ரன்  இப்போது ஷாக்சிக்குள் தன்னையே தொலைக்க தொடங்கினான்.

காலை வேலை மித்ரனின் வெற்று மார்பில் கை போட்டு தூங்கிக்கொண்டிருந்தவள் எழுந்த வேலை தனது ஆடை கலைந்திருப்பதை கண்டவள் மித்ரன பார்க்க அவன் இருந்த நிலையும் அவளுக்கு இரவு என்ன நடந்திருக்கும் என்பதை தெளிவாக உணர்த்தியது. ஆனால் இரவு நடந்த எதுவுமே அவள் நினைவுக்கு வரவே இல்லை.நடந்த விபரீதம் உணர்ந்த ஷாக்சி வேகமாக கட்டிலை விட்டு எழ  எதிலோ மாட்டிக்கொண்டிருந்த அவளின் சேலை அவளை எழ விடாமல் தடுக்க அப்படியே பொத்தென்று கீழே விழுந்தாள்.ஷாக்சி விழுந்த சத்தத்தில் எழுந்த மித்ரன் சேலை இன்றி இருக்கும் ஷாக்சியை பார்க்க ஒரு மாதிரி இருக்க பெட்சீட்டை அவள் மீது போட்டு விட்டவனை ஷாக்சி நேரடியாகவே

"மித்ரன் நைட் என்ன  நடந்திச்சி.ப்ளீஸ் சொல்லுங்க " என்று கேட்க அவனோ குறும்பு நிறைந்த புன்னகையுடன்

"நேத்து நமக்கு பர்ஸ்ட் நைட் அது கரக்டா நடந்திச்சி" என்று கூற பெட்சீட்டல் தன்னை சுற்றிக்கொண்டு  ஷாக்சியோ அவமானத்துடனும் வேதனையுடனும் மித்ரனிடம் வந்தவள் 

"மித்ரன் நான் ஏதும் தப்பா பண்ணேனா.எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல.நேத்து இருந்த பிசில நான் டாப்லெட் போட மறந்துட்டேன்" என்று கூற அப்போதுதான் மித்ரனுக்கு  இரவு நடந்து கொண்டது எதுவுமே ஷாக்சியின் சுய நினைவில் இல்லை என்பது புரிய தொடங்கியது.உடனே மித்ரன் 

"இல்ல ஷாக்சி நீ எதுவும் தப்பா நடந்துக்கள.நாந்தான் நைட் உன் அழக பார்த்து.....கொஞ்ச்ம அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்டேன்" என்று கூற மித்ரனை முறைத்த ஷாக்சி அவன் கையை எடுத்து அவள் தலையில் வைத்து

"நைட் நடந்த் எல்லாத்தையும் என்மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க" என்று கூற மித்ரனோ வேறு வழியின்றி அவள் விசும்ப தொடங்கியது முதல் அவன் அவளுக்குள் தொலைந்தது வரை கூறி கடைசியாக 

"ஐ லவ் யூ ஷாக்சி" என்று கூற மித்ரன் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள்.தான் அவளிடன் தவறாக நடந்ததற்குதான் அவள் தன்னை அடித்தால் என்று தவறாக புரிந்து கொண்ட மித்ரன்

"இல்ல ஷாக்சி நான் நடந்து கொண்டது தவறுதான்.ஆனா நிஜமா நான் உன்ன காதலிக்கிறேன்" என்று கூற மித்ரனை பார்த்து நக்கலாக 

"என்ன love at first sight மாதிர் love at first night  ஆஹ்"  (முதல் பார்வையில் காதல் போன்று முதல் இரவில் காதலா) என்று கேட்க தான் அவளை காதலிக்கின்றேன் என்று கூறியதற்கே ஷாக்டி அவனை அடித்தால் என்பது உறைக்க மித்ரனோ

"நிஜமாவே ஐ லவ் யூ .கல்யாணத்துக்கு முன்னாடியே உன் மேல எனக்கு லவ் வந்திடிச்சி" என்று கூற ஷாக்சியோ

"சட் அப் மித்ரன், எனக்கு உங்கள பத்தி தெரியாத.நீங்க மனசுல ஒன்னு வெச்சு வெளில ஒன்னு பேச மாட்டிங்க.சும்மா காதலிச்சேன்னு பொய் சொல்லாதீங்க.எனக்கு தெரியும் நேத்து நைட்டு நான் டாப்லட் போடாம பைத்தியம் மாதிரி நடந்திருப்பேன்.நீங்க என்ன சமாதானம் பண்ண டிரை பண்ணிருப்பீங்க.அதுல ஏதும் ஏடாகூடமா ஆகிருக்கும்.நான் தான் ஒருவாட்டி முழுசா நனைஞ்சவளாச்சே அதுக்கு அப்புறம் என்மேல தண்ணி எடுத்து  ஊத்தினா ஒன்னும் ஆகாது.சோ ப்ளீஸ் லீவ் திஸ் .இதுக்கு அப்புறம் லவ் கிவ் னு சொல்லாதீங்க" என்று கூற ஆத்திரம் கொண்ட மித்ரன் பளார் என்று அவளை அறைந்து

"என்னடி விட்டா ரொம்ப ஓவரா பேசுர.நீ என்ன தெரிஞ்சா கெட்டு போன.உனக்கு நடந்தது உனக்கே தெரியாது.அப்படின்னு பார்த்தா ரோட்ல போற பொண்ணுங்கள எல்லா பசங்களுமே சைட் அடிப்பானுங்க அவனுங்க எல்லோரும் மனசால் கெட்டுப் போனவங்கதான்.ஆனா அதுக்காக யாரும் பீல் பண்றது இல்ல.ஆனா உனக்கு நடந்தது என்னான்னே உனக்கு தெரியாது.அப்படி இருக்கும் போது நீ எதுக்கு எப்போ பாரு கெட்டு போனவ கெட்டு போனவன்னு சொல்ர.இதுக்கு அப்புறம் ஒரு தடவை அப்படி சொன்ன உன்ன கொன்னுட்டு நானும் ஜெயிலுக்கு போவேன்"என்று கூற மித்ரன் கூறும் ஒரு சில விடயங்களை ஷாக்சியின் மனது ஏற்றுகொண்டாலும் முழுவதுமாக அதை ஏற்கவில்லை. அவள் தெளிவாக புரிந்திருந்த ஒரு விடயம் இந்த சந்தர்ப்பத்தில் தான் மித்ரனின் காதலுக்கு மறுப்புத்தெரிவிக்காவிட்டால் மித்ரன் தன்னை அவனின் மனைவியாகவே அங்கீகரித்துக்கொள்வான் என்று.ஆனால் ஷாக்சியின் மனமோ மித்ரனுக்கு தன் கடந்த காலத்தால் எந்த வித தலை குணிவோ அல்லது சங்கடமோ ஏற்பட்டு விட கூடாது என்பதில் தெளிவாக இருந்தால். ஷாக்சியோ அமைதியாக எதையோ யோசிப்பதை கண்ட மித்ரன் கடைசியாக அவளிடம் கேட்ட விடயம் அவள் மனதை உலுக்கச்செய்தது.

------------------------------------------------------------------------

ஹாய்....

எனக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறுவது பிடிக்காது என்று தெரிந்தும் நான் பிறந்த அன்று எனக்காக என் பெயரை குறிப்பிடாமல் ,பிறந்த  நாள் வாழ்த்து போலவும் இல்லாமல் எனக்கு வாழ்த்துக்கூறிய தங்கைகளுக்கு தாங்க்ஸ் சொல்ல மாட்டேன்.சொன்னாதான் உங்களுக்கு கோவம் வருமே.ஹிஹி..

அப்புறம் நான் பிறந்த தினத்தில் எனக்கு வாழ்த்து கூற முடியவில்லை என பீல் பண்ணுபவர்கள் யாரும் இருந்தால், யாராச்சும் ஒருததருக்கு ஒரு நேர சாப்பாடோ அல்லது ஒரு கப் டீயோ வாங்கி கொடுங்க  (கொஞ்சம் ஓவரா இருக்கா..ஹிஹி).சரியா........வாழ்த்து கூறினால்தான் அண்ணன் தங்கை என்று கிடையாது.வாழ்த்து கூறாவிட்டாலும் நம் உறவு வாட்பெட்டில் நிலைத்திருக்கும்.

வெள்ளிக்கிழமை எனது அப்டேட் வரவில்லை என எனக்கு நினைவூட்டிய Jananeesanthosh கு நன்றி.எனது அப்டேட்காக இவ்வளவு நேரம் காத்திருந்தமைக்கு தாங்க்ஸ்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro