தென்றல் 35

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

" அர்ஜுன் எனக்கு திவ்யாவ மீட் பண்ணனும் " என்று கூற, அர்ஜுனோ

"எதுக்கு மேகா திவ்யாவ இப்போ மீட் பண்ணனும்னு சொல்ர. அப்புறம் உன் முகம் வேற சரியா இல்லயே" என்று கேட்டவனை மேகாவோ உலர்ந்த புன்னகையுடன்

"இல்ல அர்ஜுன் அவ கிட்ட பேசுரப்போ எல்லோரும் தெரிஞ்சிக்கலாம் எதுக்குன்னு" என்று கூறினாள். இடையில் ஜானவியோ

"இப்ப அவ எதுக்கு மேகா. அவ சாப்டர்தான் முடிஞ்சி போச்சே. மறுபடி எதுக்கு முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்" என்று கேட்டவளை மேகாவோ

"ஜானவி தயவு செய்து நீ இதுல தலை இடாத. உன்னால ஆரம்பிக்கப்பட்ட பிரச்சினைகள்தான் இப்போ இந்த அளவுக்கு வந்திருக்கு" என்று கூற ஜானவி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

மித்ரன் வீட்டில் ......

"ஷாக்சி இன்னைக்கு உன்ன டாக்டர் கிட்ட அப்பாய்ன்மண்ட் வாங்கிருக்கு.4 மணிக்கு கிளம்பனும்" என்று கூற அவளோ சரி என தலையசைத்தாள்.

ஊரில் இப்போதுதான் பிரபல்யம் பெற்று வரும் ஒரு மனோதத்துவ டாக்டரை சந்திக்க ஷாக்சி மற்றும் மித்ரன் இருவரும் சென்றனர். க்ளினிக்கை அடைந்தவர்கள் வழமையான க்ளினிக்களுக்கும் ஒரு மனோதத்துவ டாக்டர் ஒருவரின் க்ளினிக்கிற்கும் பாரிய வித்தியாசம் காணப்பட்டது. ஆங்காங்கே பிசிறி பிசிறாக கலை நயத்துடன் பூசப்பட்டிருந்த வர்ண அலங்காரங்கள் , மிகவும் அழகாகவும் கலை நயத்துடனும் இருந்த தூன் வேலைப்பாடுகள், மிக நேரத்தியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பல தரப்பட்ட புத்தகங்கள் என அந்த இடமே ஒரு கலை நயத்துடன் காணப்பட்டது. தாங்கள் வந்தது ஒரு க்ளினிக்கிற்கா அல்லது கலை நயத்துடன் அமைக்கப்பட்ட ஒரு லைப்ரரிக்கா என்று நினைக்கும் அளவுக்கு அந்த இடமே ஒரு ரம்மியமாக இருந்தது.

இவர்களின் முறை வர உள்ளே இருவரும் சென்றனர். அங்கு டாக்டராக ஒரு இள வயது பெண்ணே இருக்க இவர்கள் இருவருக்கும் பெரும் ஆச்சரியமாகா இருந்தது. இவர்களை உட்கார வைத்து டாக்டர் பேசிக்கொண்டிருக்க அந்த டாக்டரின் திறமை மித்ரனுக்கு புரிய ஆரம்பித்தது. மித்ரனே ஷாக்சிக்கு நடந்த விடயங்களை கூற ஆரம்பிக்க டாக்டரோ மித்ரனை அமைதியாக இருக்கும்படி சைகை செய்து ஷாக்சியை பேச செய்தார். ஷாக்சியின் வாயாலேயே அவளுக்கு நடந்த கஷ்டங்களை வெளியில் கூற வைப்பதே மனோதத்துவத்துல் ஒரு வகை டிரீட்மண்ட்தான்.

ஷாக்சியோ தனக்கு நடந்த எல்லாவற்றையும் கூற டாக்டர் அவளுக்கு ஆறுதல் எதுவும் கூறாமல் அவர் கேட்ட கேள்வி இருவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

"ஷாக்சி இப்போ உங்களுக்கு இந்த அநீதிய பண்ணவன கண்டுபிடிச்சி அவனுக்கு தண்டனை கொடுக்கனும்னு நினைக்கிறீங்களா?" என்று கேட்க ஷாக்சி தெளிவாக

"தேவையே இல்ல டாக்டர், அவன் யாருன்னு தெரிஞ்சி நான் இப்போ அவன கல்யாணமா பண்ணிக்க போறேன். இல்லன்னா கோர்ட் கேஸ் னு அலையவா முடியும். என் பேர நாறடிப்பாங்க. அவந்தான் பண்ணான்னு ப்ரூப் பண்ணா நம்மகிட்ட எந்த தடயமும் இருக்காது. இதுல அவன நான் கண்டுபிடிச்சி என்ன செய்ய. பேசாம இப்படியே இருக்குறதுதான் எனக்கு நல்லதுன்னு தோனுது. அதுக்காக என்ன மாதிரி பாதிக்கப்பட்ட பொண்ணுங்க எல்லோரும் என்ன போலவே இருக்கனும்னு சொல்லல. என் லைப்ல மித்ரன் எனக்கு கிடைச்சது கடவுள் எனக்கு கொடுத்த வரம். அதுக்காக...." என்று ஏதோ பேச தொடங்கியவள் மித்ரனை தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உளறிக்கொட்டியதை எண்ணி சங்கடப்பட மித்ரனோ ஷாக்சியின் கையில் அவன் கையை வைத்து அழுத்து

'உனக்கு நான் இருக்கிறேன்' என்பதை உணர்த்தினான். ஷாக்சிக்கு அவனது கை கொடுத்த அழுத்தம் ஆயிரம் அர்த்தங்கள் கூற அவளும் அவன் கையை இறுகப்பற்றிக் கொண்டாள். இதை கவனித்த டாக்டர்

"ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு முன்னாடி இப்படியா பண்ணுவீங்க எனக்கு வெட்கமா இருக்குப்பா" என்று கூற அப்போதுதான் தாங்கள் இருவரும் இருக்கும் நிலை அறிந்து மித்ரன்

"டாக்டர் நாங்க அப்படி ஒன்னும் தப்பா பண்ணலயே , சும்மா அவ கையதானே பிடிச்சிக்கிட்டு இருந்தேன் " என்று கூற டாக்டர் புன்கையுடன் எதுவும் கூறாமல் இருந்தார். அதன் பின் ஷாக்சி பாவிக்கும் டாப்லெட் சம்பதமான பேச்சு வர டாக்டரோ ஷாக்சியிடம்

"இந்த டாப்லட்ட உங்களுக்கு கொடுத்த டாக்டர் டெய்லி இத போட்டுக்க சொன்னாரா இலைன்னா தூக்கமில்லாத நாட்கள்ள போட சொன்னாரா " என்று கேட்க ஷாக்சியோ

"இல்லை டாக்டர் அவரு தூக்கமில்லாத நாட்கள்ளதான் இத போட சொன்னாரு. ஆனா எனக்குதான் டெய்லியும் தூக்கம் வராதா. சோ நான் டெய்லி தூங்க முன்னாடி போட்டுக்குவேன் " என்று கூற டாக்டரோ

"உங்களுக்கு நைட்ல நடக்குறது எல்லாம் காலைல எந்திருக்கும் போது ஞாபகம் இருக்கா. இல்ல நைட்ல நடக்குற எல்லாமே மறந்திடுதா" என்று கேட்க அவளோ

"இல்ல டாக்டர் எனக்கு நைட்ல நடக்குற எதுவுமே காலைல ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது" என்று கூறியவளை

"நீங்க ரொம்ப போல்டா பேசுரதால் சொல்ரேன். இந்த டாப்லட் 40 வயசுக்கு மேல உள்ளவங்கதான் போடுவாங்க. அதுவும் இரவு நேரத்துல தூக்கமின்மை இருக்குறவங்கதான் போடனும். அதுவும் டெய்லி போடவும் கூடாது. அப்படி டெய்லியும் இத பாவிச்சா உங்களுக்கு ஹலூசினேச அதாவது பிரமை பிடிச்ச மாதிரி இருப்பீங்க. உங்கள சுத்தி என்ன நடக்குது என்பது தெரியாது. இன்னைக்கே நம்ம இந்த டாப்லட் பத்தி பேசினது நல்லதா போச்சி. இந்த டாப்லட்ட நீங்க இன்னைல இருந்தே ஸ்டாப் பண்னுங்க. ஒரு வாரத்துக்கு தலை வலி, முதுகு வலி எல்லாம் வரும். கொஞ்சம் மூட்ஸ்விங்க் கூட ஆகும். இருந்தாலும் நீங்க அதெல்லாம் பொறுத்துக்கிட்டீங்கன்னா நீங்க முழுசா குணமாகிடுவீங்க" என்று கூற மித்ரன்

"கண்டிப்பா இன்னைல இருந்து அவ இந்த டாப்லட்ட போட மாட்டா டாக்டர். அதுக்கு நான் கியாரண்டி " என்று கூறினான்.

" நான் ஒரு மாத்திரை எழுதி தரேன். இந்த ஒரு வாரத்துக்கு அத போடுங்க அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சி மறுபடி வாங்க பேசலாம்" என்றார்.

போகும் வழியெங்கும் இருவரும் எதுவுமே பேசவில்லை. வீடு வந்ததும் மித்ரன் ஷாக்சியின் கையை பிடித்து தன் அருகில் இழுக்க என்ன நடக்கின்றது என்று புரியாத ஷாக்சியோ

"என்ன பண்றீங்க மித்ரன், கைய விடுங்க" என்று கூற அவளை தன் அருகில் மேலும் இழுத்து

"இப்போ நான் கேட்குறதுக்கு நீ உண்மைய மட்டும்தான் பதிலா சொல்லனும். பொய் சொல்ரேன்னு எனக்கு தோனிச்சின்னா நான் உன்ன கிஸ் பண்ணுவேன்" என்று கூற ஷாக்சியோ

"என்ன விளையாட்டு இது. நம்ம பெயருக்குத்தான் புருசன் பொண்டாட்டி" என்று கூற அவனோ

"ஹலோ மேடம் ஒரு விசயம் நல்லா தெரிஞ்சிக்கோங்க. பெயருக்கு புருசன் பொண்டாட்டியா இருந்த நம்ம அன்னைக்கு ராத்திரி நடந்த விசயத்துல நிஜ புருசன் பொண்டாட்டி ஆகிட்டோம். சோ இப்போ உங்க திருவாய மூடிகிட்டு நான் கேட்குறதுக்கு மட்டும் பதில சொல்லு" என்று கூற இன்றைய நாள் தனக்கு இலகுவாக இருக்க போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட ஷாக்சி என்ன என்று கேட்டாள்.

"நீ என்ன காதலிக்கிறேன்னு நல்லா தெரியுது ஷாக்சி. எதுக்கு மறைக்குற. சம்பந்தமில்லாம நான் கெட்டுப்போனவ அது இதுன்னு சாக்கு சொல்லாத" என்று கூற ஷாக்சியோ

"மித்ரன் நிஜமாவே உங்கள எனக்கு பிடிக்கும்குறது உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும். எனக்கும் சாதாரண பொண்ணுங்க மாதிரி குடும்ப வாழ்க்கை வாழனும்குற ஆசை இருக்கு. ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க என்றதுக்காக யாரச்சும் உங்கள அவமானப்படுத்தி பேசினா என்னால தாஙக் முடியாது. அதனாலதான் நான் உங்கள் விட்டு விலகி போக டிரை பண்றேன். அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது" என்று கூற மித்ரனோ அவளை இழுத்து அவள் இதழ்களில் முத்தமிட்டான். ஆரம்பத்தில் ஷாக்சி திமிரினாலும் போகப்போக அவனுள் கரைந்து போக எண்ணியவள் திடீரென்று ஏதோ தோன்ற விசும்ப தொடங்கினாள். ஷாக்சி விசும்பலைக்கேட்ட மித்ரன் அவளை விட்டு விலகி

"ஹேய் ஷாக்சி சாரிப்பா, நான் ஏதோ வேகத்துல" என்று பேச தொடங்கியவனை இப்போது ஷாக்சி அனைத்து அவனை முத்தமிட்டு

"மித்ரன் ஐ லவ் யூ. என்னோட சூல்நிலைய எப்படி சொல்லி புரியவைக்கிறதுன்னே தெரியல. உங்க கூட என் வாழ்க்கை மிகவும் அழகா ஆரம்பிக்கனும்னு எனக்கு ஆசைதான் ஆனா..." என்று இழுக்க மித்ரனோ

"எதுவா இருந்தாலும் பரவாயில்லை சொல்லு ஷாக்சி " என்று கூற அவளோ

"எனக்கு நடந்தத நீங்க குத்திக்காட்ட மாட்டீங்க என்று தெரியும். ஆனா ஏதாச்சும் ஒரு சந்தர்ப்பத்துல அத நீங்க சொல்லிட்டீங்கன்னா என்ன உயிரோட எரிச்சதுக்கு சமமாகிடும். உங்க மேல வெச்சிருக்குற நல்ல எண்ணம் எல்லாமே காணாம போயிடும். ஏன்னா நம்ம எல்லோரும் மனிசங்க. இன்னைக்கு நீங்க அந்த விசயத்த சொல்லிக்காட்ட மாட்டேன்னு சொல்லலாம். ஆனா கோவம் வந்தா இப்படி குத்திக்காட்டுறதுதான் மனித இயல்பு. அதான் எனக்கு பயமா இருக்கு " என்று கூற அவனோ புன்னகையுடன்

"இங்க பாரு ஷாக்சி நானும் சாதாரணமா கோவம்லாம் இருக்குற ஒரு மனிசந்தான். நான் அத சொல்லி எல்லாம் குத்திக்காட்ட மாட்டேன்னு சத்தியம் எல்லாம் என்னால பண்ண முடியாது. ஆனா ஒரு வேல அப்படி சொல்லிக்காட்டினாலும் அடுத்த நிமிசமே உன் காலடியில விழுந்து மன்னிப்பு கேட்றுவேன். நீ என்ன காதலிக்கிறேனு சொல்லிட்ட. சோ உன் மித்ரன் அப்படி ஏதும் தப்பு செஞ்சா மன்னிக்க மாட்டியா" என்று கூற நாம் இனி எது பேசினாலும் மித்ரன் தன்னை விட்டு விலக போவதில்லை என்பதை உணர்ந்தவள் வாழ்க்கையில் இனி எது நடந்தாலும் அதை எதிர்கொள்வது என்று தயாரானவள் மித்ரனை அனைத்து

"ஐ லவ் யூ மித்ரன்" என்று கூற அந்த நான்கு வார்த்தைகளும் அவனுக்கு ஆயிரம் அர்த்தங்களை கூறியது.

(இந்த‌‌ எபிசோடில்‌ மித்ரன் ஷாக்சி‌யுடைய பகுதி‌ உண்மையான‌ ஒரு‌ நிகழ்வில் ஏற்பட்ட தாக்கத்தின் பிரதிபலிப்பு- inspired by true events)

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro