நீ ஆபத்தானவன்தான்
வஞ்சமில்லா அன்பில்
கொஞ்சம் கொஞ்சமாய்
வீழத்துகிறாய் ....
நீ ஆபத்தானவன் தான்
பஞ்சமில்லா பாசத்தில்
உன்னை தஞ்சம் பெற
வைக்கிறாய்....
நீ ஆபத்தானவன்தான்
நெஞ்சமெல்லாம்
நீக்கமற நிறைந்து விட்டு
நீங்க மறுக்கிறாய் ....
நீ ஆபத்தானவன் தான்
உன் அன்பில்லாமல்
இன்புற வாழ்வில்லை
என்ற எண்ணத்தை
விதைத்து விடுகிறாய்....
நீ ஆபத்தானவன் தான்
அன்பென்ற ஆயுதம்
வைத்து அழகாய்ச்
சிரிக்கின்ற நீ
ஆபத்தானவனேதான்....
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro