காதல் 33

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

💕தோழிகள் மூவரும் எதிர்ப்பார்த்த,சாதனா தன் வாழ்க்கையில் இதுவரை கற்பனையில் மட்டும் பார்த்திருந்த அவளின் திருமண நாளும் வந்தடைந்தது...

வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன் மணமகன்,மணப்பெண் திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்...

அங்கு வந்ததிலிருந்து சாதனாவை அணுஅணுவாக ரசித்தக் கொண்டிருந்த ஜீவன் அவளை விட்டு சிறிதும் விலகாமல் இருந்த அவள் தோழிகளிடம் கண்களால் எதற்கோ கெஞ்ச...சிரித்தபடி அவர்களும் விலகி நின்றனர்

அதற்காக காத்திருந்தவன் அவளை அழைத்து "பேபிமா அள்ளுதுடி...சத்தியமா கொல்ற ,நான் கற்பனை செய்ததவிட பலமடங்கு அழகான மணப்பெண்ணா இருக்க😋" என்றான்

அதனைக் கேட்டு கன்னங்கள் சிவந்த சாதனா அவற்றை மறைக்க தன் தோழிகளின் புறம் திரும்பி அவர்களை இழுத்து தன் அருகில் வைத்துக் கொண்டாள்...

ஓஹோ!!அவ்வளோ ஆயிடிச்சா😕எல்லா இடத்துக்கும் உன் ப்ரண்ட்ஸ் எப்படி வந்து காப்பாத்துறாங்கனு பார்த்துடலாம் சாது!!😉என்றவனை பார்த்து அவள் முறைக்க அவன் குதூகலமாய் கண்ணடித்து வைத்தான்😘❤️....

கடவுள் வழிப்பாடு முடிந்த மணமக்களை உறவினர்கள் புடைச்சூழ திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்

வாயிற்படியை இருவரும் தாண்டிய நேரம் அங்கு வரிசையாக போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்கள் ஒரு வரிசையில் இருவர் வீதம் ஒரே சமயத்தில் எழுந்தனர்...

சுற்றி இருந்த உறவினர்,விருந்தாளிகள் அவர்களை வியப்புடன் பார்க்க எங்கிருந்தோ பாடல் ஒலி எழுப்ப....நின்றிருந்தவர்கள் அனைவரும் அந்த இசைக்கு ஏற்ப ஆடத் துவங்கினார்...

அவர்களை பார்த்த ஜீவனுக்கு அவர்கள் தன்னிடம் நடனம் கற்றுக் கொள்பவர்கள் என விளங்க....இந்த அளவிற்கு அன்பினை அவர்களிடம் இருந்து எதிர்ப்பார்க்காதவன் உள்ளம் மகிழ்ந்தான்...

அவர்களின் நடனம் அங்கிருந்த சூழலை இன்னும் குதூகலமாக மாற்ற எதிர்ப்பார்க்காத நேரம் ஆடிக் கொண்டிருந்த இளைஞர்களில் இருவர் இரு புறம் இருந்த அனுவையும் மாதவியையும் இழுத்தனர்...

அதற்கு ஏற்ப பாடல் மாற்றப்பட்டு அடுத்த பாடல் "டோல் ரே டோல்" என்ற இந்தி பாடல் ஒலிக்க இருவரும் அதற்கேற்ப ஆடத் துவங்கினர்

இதை சிறுதும் எதிர்பார்க்காத சாதனா சந்தோஷத்திலும் ஆனந்த அதிர்ச்சியிலும் வாயில் கை வைத்தபடி தன் கண்ணீரை கட்டுப்படுத்த முயன்றாள்...

பேபி கண்ட்ரோல் யுவர்செல்ப் என்றவனை பதில் ஏதும் கூறாமல் அவள் பார்க்க அவள் தோள்களில் கைப்போட்டு அவளை சமாதானப்படுத்தினான்....

அந்த பாடல் நிறைவு பெற...சாதனாவின் இடையை பற்றிய ஜீவன் அவளை கையில் ஏந்தி பூக்கள் பற்றும் ஹார்ட்டீன் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையை நெருங்கினான்...

அவனை உற்சாகப்படுத்தும் வண்ணம் இளம் வயதினர் விசில் அடிக்க, உறிவினர்கள் அவர்களின் நெருக்கத்தை பார்த்து மகிழ...சில விருந்தாளிகளின் "இந்த காலத்து பசங்கள😗"என்று முனுமுனுத்தனர்..இவ்வாறு பல்வேறு உணர்வுகளுடன் சாதனா-ஜீவனின்😍❤️ வரவேற்பு நிகழ்ச்சி இனிதே துவங்கியது...

மேடையில் சாதனா தன் முன் இறக்கிய ஜீவன் அவளுக்கு கொடுக்க வேண்டும் என நெடுநாளாக எண்ணியிருந்த முத்ததத்தை அவள் நெற்றியில் பதித்தான்....அதில் அவள் கண்கள் மூட அந்த நொடி அங்கிருந்த கேமராமேன் உட்பட பலபேரின் கைப்பேசியில் படம் எடுக்கப்பட்டது....

அந்த நெற்றி முத்தத்தில் காதல்,நேர்மை,சத்தியம் எனப் பல்வேறு உணர்வுகளை ஒருங்கே உணர்ந்தாள் சாதனா....

உறவினர்கள் மற்றும் விருந்தாளிகள் ஒவ்வொருவராய் மணமக்களை வாழ்த்த துவங்கினார்...

நடனம் ஆடியதில் களைத்திருந்த அனு ஒரு வரிசையில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்... அருகில் இருந்தவன் அவள் கரங்களை பற்றியதில் நிமிர்ந்தவள் அங்கு வருணை கண்டு இனிமையாக அதிர்ந்தாள்....

நெற்றியில் இருந்து அவளது வியர்வை துளி கன்னத்தில் வழிய அதை தன் கைகளில் துடைத்த வருண்" தட் வாஸ் எ ஆசம் பர்ஃபாமன்ஸ் பேபி"என்ற குரலில் மற்றொரு ஆடவன் அவளை தன்னிடம் இழுத்து ஆடியதில் ஏற்பட்ட பொறாமையை மறைக்க முடியவில்லை...

அவன் குறலில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம் உணராதவள் அவனை குழப்பமாக பார்த்தால்...அனுனு!!!! உங்க ப்ரண்ட்ஸலாம் சாப்பிட கூட்டுட்டு போடா என்ற சாதனா அம்மாவின் குரலில் அவனிடம் இருந்து விலகினாள்...

அங்கிருந்து எழுந்தவளுக்கு திடீரென சந்தேகம் எழ அவனை பார்த்து சாதனா இன்வைட் பண்ணலா??என வினவ

ஹா அஃப்கோர்ஸ்!!மிஸ்ஸஸ் வருண்தா என்னை மறந்துட்டாங்களே என அவன் உதட்டை பிதுக்க....அதற்கு சிரித்த அனு அவனை பார்த்தவாறே அங்கிருந்து நகர்ந்தாள்....

💕💕💕💕💕💕💕💕💕

வருவோரை வரவேற்க சில தோழிகளுடன் மாதவி வரவேற்கும் இடத்தில் இருக்க...அப்பொழுது அவள் தோழி ஒருவள் அவளை கைப்பேசியில் அழைத்து வழிக் கேட்க,அதற்கு பதில் அளித்தபடி அவள் பன்னிர் தெளித்துக் கொண்டிருந்தாள்

திடீரென தன் புறம் இருந்த தோழிகள் அவளை தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேற நேரே பார்த்தவளுக்கு தன் கண்களை நம்ப இயலவில்லை...

தன் எதிரில் வெள்ளை நிற சட்டை மற்றும் நீள நிற ஜீன்ஸில் கேஷுவல் லுக்கில் நின்றிருந்தவனை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காததுப் போல் இருந்தது அவளுக்கு...

அங்கிருந்த பெண்கள் ரித்விக்குடன் புகைப்படம் எடுக்க அவனை சூழ்ந்துக் கொள்ள...அவனோ தன் கண் தன் முன் நிற்பவளை மட்டும் பார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டது போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்😋😘💕💕💕💕

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro