பூ - 15

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"அம்மா நா பிறக்கும் போதே இறந்துட்டாங்க..... "

"எனக்கு தெரியும்.... நா கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்....." என்றான் வைணு. ( என்னபா இப்பையவது சொல்லலானு நெனச்சா.... இவனுக்கு எல்லாமே தெரியும் போலையே ..... )

"சரி... ஓகே...  அந்த டைரி என்னோடது தான்... நா  11த் படிக்கும் போது.... உங்க காலேஜுக்கு  தான் நாங்க
என் சி சி  கேம்ப் வந்தோம்..... உன்ன பாத்ததும் நா கண்டு பிடுச்சிட்டென்....  உன்கிட்டவந்து பேசினேன்  ஆனா.... நிதாவா இல்ல... மோணுவா... உன்னால என்னை கண்டு பிடிக்க முடியல... அப்பறம் தான் நம்ம விட்ட அந்த கண்ணாபூச்சி ஆட்டத்தை விளையாட நெனச்சேன்... "

அவன் அவளை கொலை வெறியில் பார்க்க

"கோவப்பட கூடாது.... அப்பறம் என்னைய திட்ட கூடாது.... அப்படினா தான் சொல்லுவேன் நா என்ன பண்ணுறது... உன்னோட பேரு அப்பறம் அந்த மச்சம்.... சோ கண்டு பிசுச்சுட்டேன்..... "

"சரி சொல்லு... அப்பறம்... "

"நீதான் எங்க டீம் இஞ்சர்ஜ் அப்படினு எங்க மேம் சொன்னாங்க... ரொம்ப சந்தோசமா இருந்துச்சு..... உன்கிட்ட நெறைய பேசினேன் உன்ன பத்தி மத்தவுங்க கேட்டு  தெரிஞ்சுகிட்டேன்.... அப்படிதான் உன்னோட ப்ரெண்ட் தீபன் அண்ணா எனக்கு இன்ரடுஸ் ஆனாங்க... "

"அடி பாவி என்னைய தவிர எல்லாறுகிட்டையும்  பேசிருக்க.... அவன் கூட என்கிட்ட சொல்லல பாரு.... இப்போ அவனோட இப்ப நம்பர் எடுக்கல.... வீட்டுக்கு போன அங்கையும் யாரும் இல்ல கேட்டதுக்கு அவுங்க எங்கையோ போய்ட்டாங்கனு சொன்னாங்க...  தேட டிரை பண்ணினேன்... பட் முடியல.... "

"நா அப்பவே சொன்னேன் திட்ட கூடாதுனு.... ஞாபகம் இருக்கட்டும்  தீபன் அண்ணாவோட  அப்பா அம்மா இருவரும் ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டான்க.... அப்ப நீ டிரெய்னிங்ல இருந்த... உனக்கு தெரிய வாய்ப்பில்லை.... ஏன் இங்க இருக்க யாருக்குமே தெரியாது.... அப்போ அண்ணா   ரொம்ப கவலையா இருந்தாங்க...         யாருகிட்டையும் அண்ணா பேசல... பட் இப்போ நல்லா இருக்காங்க... சரி...நீ எங்கை எங்கையோ தேடின... கூகுளேல தெடுடியா...உடனே கெடச்சுறுப்பங்க.... அவரு MK  குரூப் ஆஃப் கொம்பனிஸ் MD ஒட பி எ..... "

" அது சரி.... சார் அவ்வளவு பெரிய ஆள் ஆயிட்டாரா.... நீ சொல்லு டைரி.... "

"விட மாட்ட...  உன்கிட்ட பேசனுமுனு தோனுனதை எல்லாம் அந்த டைரில எழுதினேன்... அப்பா கிட்ட எதையும் சொல்லாம இருக்க தோணல சோ அப்பா கிட்ட மட்டும் சொன்னேன்.... அவரு அந்த டைரி எடுத்துட்டு பொய்ட்டாரு... மூணு வருசமா எழுதிட டைரி.... அதுக்கப்புறம் நா டைரியே எழுதல.... "

"என்னானு சொன்ன.... உங்க அப்பா கிட்ட என்னை பத்தி.... " சிறு புன்னகையுடன் கேட்க....

"ம்ம்ம்.... அதெல்லாம் சொல்ல முடியாது அதுதான் டைரிய படுச்சேல அப்பறம் என்னா... "

"முடியாது நிதா... என் கேள்விக்கு பதில்.... அப்பறம் நா அந்த டைரிய இதுவரை படிக்கவே இல்லை.... "

"ஹலோ ACP நீங்க யாருகிட்ட பேசிக்கிட்டு இருக்கிங்கனு தெரியுமா.... நா நிதா.... ஞாபகம் இருக்கட்டும்.... ஏதோ நம்மலும் கொஞ்சம் ஓவரா இவ்வளவு நாள் பேசாம... பாக்காம... இருக்க வச்சுட்டோமே.... பாவமுனு சொன்ன ரொம்ப கேள்வி கேக்குறீங்க.... "

"அதுதான் என்னடா நம்ம கேட்ட உடனே பதில் வருதேனு நெனச்சேன்.... உன்ன.... " என அவளை துரத்த....

"வேணாம் என்னைய துரத்தாத மறுபடியும் நா காணாம போய்டுவேன்...." என அவள் கூறும் முன் அவனது கை அவளை பிடித்து இருந்தது...

"இனிமே உன்ன எங்கையும் போக விடமாட்டேன்..... " அந்த வார்த்தையில் தன்னை விட்டு அவள் எங்கும் போக கூடாது என்ற எண்ணம்தான் இருந்தது....

"அதையும் பாப்போம் இப்போ எனக்கு டைம் ஆச்சு.... நா காலேஜ் போகணும்.... கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.... "

"அப்படினா ஓகே ஆனா ஒரு கண்டிஷன்..... " என அவன் கூற....

''என்ன... அது சீக்கிரம் சொல்லு..."

"அது பெருசா ஒன்னும் இல்லை.... டைரில எழுதினது எல்லாம் உண்மையா...??? " என அவன் கூற பாதி மட்டும் கேட்டவள்...

" அப்படியே பைக் எடுத்தேனா போய் கிட்டே பேசலாம்... "

"அதுதானே... காரியத்தில் கண்ணா இருப்பியே.... வா...." என அழைத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.....

போகும் வழி எல்லாம் அமைதியே நிலவ காலேஜ் வாசலில் இறங்கியவள்.... உள்ளே செல்ல "பதில் சொல்லு.... உனக்கு டைம் ஆகுது.... டைரில இருக்கிறது உண்மையா...??? "  என அவன் கையை பிடித்து கொண்டு கேட்க....

"ம்ம்... ஆமா.... நீ எப்பவும் என் கிட்ட என்னோட நவா....  மாறியே பேசணும் என்கிட்ட எப்பவும் போல சண்டை போடணும்  அப்பறம் அந்த டைரியில் இருக்க மாறி..." என கண்ணடிக்க.... பின்பு யோசித்தவள்.....
"நீ படிக்களைனு சொன்ன..... "

"அதுவா அப்பயாச்சும் நீ அதுல இருக்கிறத  சொல்லுறியானு பாத்தேன்.... பட் நோ யூஸ்.... "

"ACP சார் உங்க போட்டு வாங்குற யுக்தி எல்லாம் மாத்தவுங்க கிட்ட இருக்கட்டும்... ஓகே பை.... எனக்கு டைம் ஆச்சு.... அப்பறம் டிரிக் யூஸ் ஆயிடுச்சு....  ஐ லவ் யூ டூ...." என அவன் காதருகில் சொல்ல.... அவன் முளிப்பதை பார்த்து....
" இதை தான் அன்னைக்கு ரயில்வே ஸ்டேஷன் ல சொல்லனும்னு நெனச்சேன்.... பட் இப்படி இல்ல.... " என்று கூறி அங்கிருந்து ஓட.... 

"ஏய் என்ன சொன்ன.... ??" என்றான் அப்பொழுதே சுயநினைவு பெற்று.....

"ஏன் சார் டைரி படிக்களையா...??? இல்லை காது கேக்களையா...??"  கத்தி கொண்டே ஓடினாள்.

"மாட்டமலா போவ அப்ப பாத்துக்கிறேன்.... ஐ லவ் யூ...." என மானசீகமாக கூறி கொண்டான்.

இவர்கள் இருவரும் பேசியதையும் அவள் உள்ளே ஒடியதையும் ஒரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டிருந்தது....

அன்று அவர்கள் கல்லூரியின் முதுநிலை கல்வியின் இறுதி மாணவர்களுக்கு இறுதி நாள்.... அனைவரும் அவரவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள... அந்த இடம் தாயின் கருவறையில் ஒன்றாய் வளர்ந்த இரட்டை குழந்தைகள் பிரிவது போல.... இருந்தது....

மகி, அம்மு, மோனு மூவருக்கும்  கல்லூரி முழுவது நண்பர்களே.... 
அனைவரிடமும் விடைபெற அவளது ஆசிரியர்கள் கூட இந்த மூன்று தோழியர் கூட்டத்தை விடாமல் இழுத்து வைத்து பேசி கொண்டிருந்தனர்.....

ஒருவழியாக அனைவரிடமும் பேசி கொண்டு வெளியே வர மோனுவுக்காக காத்து கொண்டிருந்தார் ஒரு நபர்... கிட்ட தட்ட 40 வயது இருக்கும்...

அவரை பார்த்தவுடன் அம்மு ஒரு நிமிடம்.... என அவரிடம் விரைந்தவள்.... சிறிது நேரம் பேசி விட்டு சில ஃபிலேலில் சைன் செய்து இரண்டு ஃபிலை கையில் கொண்டு வந்தாள்...

"யாரு அது... நீ ரொம்ப தெரிஞ்ச மாறி பேசுற... சைன் பண்ணுற... அப்பறம் இது என்ன ஃபில்... ???" என மகி கேட்க...

"இன்னைக்கு என்னைய பாத்த உங்க எல்லாருக்கும் எப்படி தெரியுது... எல்லாரும் கேள்வியா கேக்குறீங்க.... "

"உன்கிட்ட யாரு கேள்வி கேட்டா..." என்றாள் அம்மு.

"அய்யயோ ஒலாரிட்டோமே.... சமாலிப்போம்.... அதுவா.... வந்த உடனேயே சீனு அங்கிள்.... அப்பறம் மகி நீ இந்த காயம் எப்படின்னு.... ஏன்  நேத்து நீ இதை பாக்கல.... கடைசியாக இப்ப வந்த அந்த நபர்...." என கோவாபட்டமாறி சம்மாலிக்க.... மகியும் அம்முவும் அமைதி ஆனார்கள்.....

"சரி விடு உனக்கும் அம்முக்கும் என்ன பிரச்சனை...." என்றாள் மகி.

"பிரச்சனையே உன்னால தான்...  அம்மு...... என் மேல மட்டும் தான் கோவமா இருக்கியா இல்ல எல்லாரும் மேலையும் தானா... "

" ஹலோ.....நாங்களாம் எப்போவோ சமாதானம் பண்ணிட்டோம்... நீயும் உங்க அண்ணனும் தான் பாக்கி...." என்றாள் மகி....

"டேய் அண்ணா செத்தடா...." என நினைத்தவள்..... "அம்மு வேனுமுனு யாராவது சொல்லாம இருப்பாங்களா.... சொல்ல டைம் இல்லடா.... "

"அது எப்படி நவா பத்தி சொல்ல டைம் இருந்துச்சு.... இத பத்தி சொல்ல டைம் இல்லையா...????"

"வைனுவ பத்தி பேச என்ன இருக்கு...." என்றாள் மகி....

"அதெல்லாம் ஒன்னும் இல்லை.... நா போய் மத்தவுங்கள பாக்குறேன்....  மோனு நீ போய் சீனு அங்கள்ள பாரு.... வா மகி போகலாம்" என கிளாஸ்க்கு சென்றாள்.

"செல்வம்.... என்ன ஆச்சு ஏதாச்சும் சொன்னானா..... "

"இல்ல சார்.... வாயவே திறக்க மாட்டெங்குறான்..... எவ்வளவோ அடிச்சு பாத்துட்டேன்.... "

உள்ளே வந்தவன் "என்ன பிளான் பண்ணி இங்க வந்தீங்க... உண்மைய சொன்னா.... உன்ன விட்டுருறேன்.... "

"நீங்க சொல்லுறத நம்ப நா என்ன லூசா சார்.....  என்னைய என்னோட ஆளுங்க கண்டு பிடிப்பாங்க.... நீங்க அந்த பொண்ண பத்திரமா... பாத்துக்க.... எனக்கு ஏதாச்சும் ஆனா அவளுக்கு தான் பிரச்சனை....." என்றான் மிரட்டலாக.....

தண்ணவளை பற்றி மீண்டும் அவன் பேச அவனை மேலும் அடித்தவன் இன்னும் ஒரு பல்லையும் வெளியே எடுத்து விட்டான்.
வெளியே வந்தவனின் யோசனையானது " அவன் கூறிய  வார்த்தை.... நிதா எப்படி இவனுக்கு தெரியும்.....????" சிறிது நேரம் யோசித்தவன்  "சந்தர்.... எப்படி விட்ட நவா...." என தனது பைக்கை எட்டி உதைத்தவன்..... போலீஸ் ஸடேஷனுக்கு விரைந்தான்.

"குட் மார்னிங் சார்.... " என்றார் அங்கிருந்த இன்ஸ்பெக்டர்.

"சார்... அந்த சந்தர்... அப்பறம் அவனோட தம்பி எங்க.... "

"சார்... மேல் இடத்தில் இருந்து பிரசர் அதனால் ரிலீஸ் பண்ணிட்டோம்.... அந்த புட் கண்டாக்டர் மட்டும் உள்ள இருக்கான்.... "

"அவனுங்கள ரிலீஸ் பண்ணுறதுக்கு முன்னாடி எனக்கு இன்பார்ம் பண்ண மாடிங்களா சார்...." என்றான் அவனது வார்த்தையில் கோவம் உச்சத்தில் இருந்தது....

"சாரி சார்... "

"சரி அவனுங்க பத்தி ஏதாச்சும் இன்பர் மேஷன் கேடச்சா சொல்லுங்க.... "

வெளியே வந்து
கமிஸ்னார்க்கு போன் செய்தவன்.... நடந்தவற்றை கூற அவரோ ''அடுத்து என்ன பண்ண போறீங்க..... "

"கண்டிப்பா.... அவன் உயிரோட பிடிக்கணுமா சார்.....???"

"என்ன வைணவண் நீங்க இப்படி கேக்குறீங்க.... அவன கொல்றதா இருந்தா நீங்க ஏன் இங்க வந்திருக்க போரிங்க.... எப்போதும் போல என்கவுண்டரா இந்த கேச முடுச்சுறுக்களாமே.....??? "

"இல்ல சார்... அவனுங்க ஃபேமிலி வச்சு பிளான் பண்ணுற  மாறி எனக்கு தோணுது அதுதான்.... "

"எனக்கு பிராப்ளம் இல்லை.... வைணவண்.... யூவா் சாய்ஸ்.... என்ன பிராப்ளம் வந்தாலும் நீங்க தான் உங்க ஸ்டல்லையே ஹேண்டில் பண்ணிருங்க...."

"Thank you சார்.... "

செல்வத்தை தொலை பேசியில் அலைத்தவன்.... "நம்ம டீம் மெம்பர் எல்லாரையும் கொஞ்சம் கவனமா இருக்க சொல்லுங்க அவுங்க ஃபேமிலியையும்.... ஓகே.... எனக்கு அவன் சொன்னது சரியா தோணல.... கொஞ்சம் கவனம்.... டாக்டர் வந்து அவன பாத்துட்டு போய்ட்டாரா..... ???"

"பாத்துட்டாரு சார் அப்பறம் அந்த பொண்ணா கவனமா இருக்க சொல்லுங்க சார்.... இவன் அடிக்கடி சொன்னது அந்த பொண்ணதான்.... உங்களுக்காக அந்த பொண்ணு இவன அடுச்சதையே சொல்லிகிட்டு இருந்தான்.... "

"ஓகே செல்வம்.... நா பாத்துக்கிறேன்.... அவள இவுங்களாள நெருங்க கூட முடியாது.... " என போனை வைத்தான்.

அங்கு....

"அவள் இவர்களுடனும் வர வில்லை எனில் அவள் எங்கு தான் இருக்கிறாள்.... என்னோட இந்த பிளானும் அவளிடம் ஒன்றும் இல்லாமல் போய் விட்டதே...." என கோவத்தில் கத்தி கொண்டிருந்தான்.... நீலேந்திரன்

"தம்பி அந்த பொண்ணு வெளிய வர இப்ப நம்ம கிட்ட இருக்க ஒரே வழி பிஸ்னஸ்ல பிரச்சனைய உண்டாக்குறது.... இந்த தடவையாவது நா சொல்லுறதை கேளுங்க.... " என கூற அதை ஆமோதித்தவன் அடுத்த பிரச்சனையை உண்டாக திட்டத்தை சற்று பெரியதாக  போட்டு கொண்டிருந்தான்.

கார்த்தி மற்றும் சிவா வைணுக்கு  அழைக்க... அதை எடுத்தவன்

"ஓகே நா வர்றேன்.... அண்ணகிட்ட சொல்லிடுங்க... " என வைத்தவன் MK கல்லூரிக்கு இருவருக்கும் முன்பே வந்து சேர்ந்தான். ஏற்கனவே மோனு, அம்மு, மகி மூவரும் நின்று கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில்  அங்கு இருந்த பானி பூரி கடைக்கு முன்பு ஒரு போட்டியே நடந்து கொண்டிருந்தது....

வேற யாருக்கும் இல்ல மோனுவுக்கும் வைனுவுக்கும் தான்.... ஆல்ரெடி லீடிங் ல இருந்தது மோனுதான்.... ரொம்ப இல்ல சும்மா ரெண்டுதான்....

கல்லூரி முன்பு அவர்கள் இல்லாததை கண்ட சிவா யோசிக்க "அங்க பாரு...!!!" என பானி பூரி கடைக்குள் நுழைந்தான் கார்த்தி....

அடுத்தடுத்து சாப்பிட வைணு முன்னைலைக்கு செல்ல மோனுவால் அதற்கு மேல் உன்ன முடியவில்லை..... தோல்வியை ஒப்பு கொள்ளவும் இயல வில்லை.

அவளது நிலையை கண்ட வைணு தன்னால் இயல வில்லை என்றிட 36 பூரியை உண்டு போட்டியில் வென்றாள் மோனு.

சிவா "டேய் கார்த்தி.... அவன் வேனுமுணு விட்டு கொடுத்துட்டான்டா.... அவன் எப்படி வச்சாலும் 50 பூரி திம்பானடா..... என்னமோ சரியில்லை...." என்று கூற "அதெல்லாம் ஒன்னும் இல்லை அவனால இன்னைக்கு சாப்பிட முடியல போல..." என கூறி அனைவரையும் வெளியே அழைத்து வந்தான்.

வெளியே பைக்கை கண்ட அம்மு

"இப்ப எதுக்கு பைக்கை வந்திங்க... எனக்கு பைக் பிடிக்காது.... நா வர மாட்டேன்...." என்று கூற கார்த்தியை பார்த்து கொண்டே மகி

"பைக்  பிடிக்கலையா... இல்ல ஓட்டுரவுங்க பிடிக்கலையா..." என கேட்க "ரெண்டும் தான்..." என்றாள் அம்மு.

"டேய் அண்ணா நீ வா நா ஓட்டுறேன்.... நீ நவா கூட வா...."
என்றாள் மோனு.

"இவ முதலுக்கே மோசம் செய்வாள் போளையே..." என்றெண்ணிய கார்த்தி வைனுவிடம் "டேய் ஏதாச்சும் பண்ணுடா...." என சைகை காட்ட...

"நிதா.... உனக்கே கைல அடி பட்டுருக்கு இதுல நீ அம்முவ வச்சு... வண்டி ஓட்ட போறியா..??" என தலையில் ஒன்று போட்டு  கேட்க... மகியும் சிவாவும் ஒரு சேர ''நிதாவா...?'' என்றனர்.

கார்த்தி தனது அதித அறிவு திறமையால் கண்டுப்பிடித்த மோனுவின் பெயரை கூற அம்மு "நா கார்த்தி கூடவே வர்றேன் நீ
வைணு கூட வா...." என்று கார்த்தி பைக்கில் அமர மகி சிவா முதலில் கிளம்ப பின்பு அம்முவும் கார்த்தியும் கிளம்பினர்.....

கடைசியாக கிளம்பிய இருவரையும் அதே கண்கள் இன்னும் இரு ஜோடி கண்களுடன் இணைந்து கண்டு கொண்டிருந்தது....

யார் அந்த மூன்று நபர்கள்....

சந்தரின் ஆட்களா....???? இல்லை.....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro