பூ - 26

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


என்ன  ஆசுங்க  யாரு அவரு.... என மகா கேட்க

அது ஒன்னும் இல்ல ம்மா அவர் கூட தான் அடுத்த டீல் சைன் பண்றதா இருந்துச்சு... பட் அதை நாங்க கேன்சல் பண்ணிட்டோம் சோ வந்து மிரட்டிட்டு பாக்குறாங்கலாம்.... கூட யாருரோ சந்தர்ன்னு சொல்லிட்டு இருந்தான் அதுகுல்ல பிரணி வந்துட்டா.. இப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல.... நீ ஒன்னும் கவலை படாத... நானும் சுந்தரும் கம்பனி வரைக்கும் போய்ட்டு வந்தர்ரோம்.... கவனமா இருங்க.... என்றார் குணா

ம்ம் என்னவோ தெரியல.... கொஞ்சம் மனசுக்கு ஏதோ மாறி இருக்கு நா கோவிலுக்கு போய்ட்டு அப்படியே ஐயரை பாத்துட்டு வர்றேன் இந்த மோனு வர்றேன்னு சொன்ன இன்னும் வரலை உள்ள இருக்க ரெண்டு பேர கூட்டிட்டு போலாம்ன்னா மாப்பிள்ளை பசங்கள எப்டி கூட்டிட்டு போறது.... நாளைக்கு முகுர்தகால் ஊனனும்

அதுனால என்ன அண்ணி வாங்க கூட்டிட்டு போலாம் என பிரியா கூற

நீ வேற பிரியா கல்யாண  மாப்பிள்ளைன்கிறது  ஒரு காரணம் தான் இல்லைனா இவனுங்க ரெண்டு பேரும் சுகந்தி வீட்டிலேயே போய் செட்டில் ஆகிடுவானுங்க ... இல்ல ஆபிஸ்ல செட்டில் ஆகிடுவாணுங்க..... மோனு தான் சொல்லிட்டு போனா நானே வர்றேன் அவுங்கல கூப்பிடாதிங்கனு..... இரு நா அவளுக்கு கால் பண்ணுறேன்....

அது என்னவோ உண்மை தான் அண்ணி.... இந்த கார்த்தி பையன் அம்மு ஓகே சொல்லுற வரைக்கும் அம்மா அம்மான்னு திரிஞ்சான் இப்போ கண்ணுல பாக்கவே முடியல.... என போய் சலிப்புடன் கூற....

அண்ணா.... அஸ்வின் அண்ணா.... என சிவா கத்தி கொண்டு வர

டேய் ஏன்டா கத்துற..... என காதை தேய்த்தவாரு கேட்க

இந்த மோனு நம்ம ரெண்டு பேருக்கும் எதிரா சதி திட்டம் தீட்டி இருக்கா அண்ணா என்னை சிவாமா சிவாமான்னூ......... ஆசையா கூப்பிட்டுட்டு.... கடைசில நம்ம ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ள லாக் பண்ண ஐடியா குடுத்துட்டு போய் இருக்கா... என மகா பிரியா இருவரும் பேசியதை கூற....

சரி விடுடா ஏதோ காரணமா தான் மோனு சொல்லி இருப்பா... அது உனக்கும் தெரியும்ன்னு எனக்கும் தெரியும்.... அவ என்ன சொன்னாலும் தலையாட்டிடு நீ செய்வேணும் எனக்கும் தெரியும் சோ ஓவர் சீன் வேணாம் உன்னோட இந்த புலம்பலுக்கான காரணம்....

கார்த்தி....... என்றான் ஒரே வார்த்தையாக..... அஸ்வின் அவனை ஒற்றை புருவம் தூக்கி பார்க்க தலையை மட்டும் மேலும் கீழுமாய் ஆட்ட.... யாம் பெற்ற இன்பம் பெறுக கார்த்தி...... என கோரசாக கூறி கார்த்திக்கு போன் செய்ய....
*********************************
அங்கோ....

மோனு: அப்பா ஒருவழியா சம்மாளுச்சுட்டேன் நா கூட அத்தை ரொம்ப கோவ படுவாங்களோன்னு நினைச்சேன்.... அம்மு நல்ல வேலை நீ போன் பண்ணி அத்தை நல்ல மூட்ல இருக்காங்கன்னு

மகி: எது..... கவிமாவ திட்டுறது நல்ல மூட் அப்படி தானே...

மோணு: அப்படி இல்ல செல்லகுட்டி ரெண்டு பேரும் திட்டு வாங்கும் போது அவுங்களும் டயர்ட் ஆகிடுவங்க நமக்கும் நம்ம மட்டும் திட்டு வாங்களைன்னு தோணும் தானே..... ஏன் காலேஜ்ல கூட எப்பவும் என்னோட சேந்து நீங்களும் தானே திட்டு வாங்குவீங்க.... என சிரிக்க....

மகி: அடியே... இவ்வளவு நாளா நம்ம ப்ரெண்ட் பாவமா திட்டு வாங்குரளேன்னு நானும் திட்டு வாங்கினா நீ இப்படி ஒரு பிளான் வச்சு இருக்கியா...

பிரனி: அம்மு உன்னை பாத்தா இந்த மேட்டர் முன்னாடியே தெரியும் போலையே...

அம்மு: காரண காரியம் இன்றி எதுவும் நடப்பதில்லை காஷ்மோரா... சாரி மகி....

கோபி: ஏன் மகி அண்ணி சேதாரம் காலேஜ்ல பலமா இருந்து இருக்கும் போலையே....

மது: நானும் அப்படி தான் நினைக்கிறேன்டா தம்பி....

மகி: நா கோவமா போறேன் மோனு.... என்னை சமாதானம் பண்ண வராதே....

மோனு: சரி மகி நா சமாதானம் பண்ண உன் பின்னாடி வரலை எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு அதுனால நீ கோவமா இரு ஓகே அண்ட் ஒரு ஒன் ஹவர் போன் எதுவும் பண்ணாத.... சீயூ.... டேய் அண்ணா வா போலாம் எனக்கு தெரிஞ்சு உனக்கு இப்போ போன் வந்து இருக்கணுமே.....

கார்த்தி: அதெல்லாம் வந்துருச்சு வா போலாம்.... ஆனா எனக்கு போன் வந்தது உனக்கு எப்டி தெரியும்.... இப்பதான் இங்க பண்ண வேண்டிய அரெங்ச்மெண்ட்
எல்லாத்தையும் முடிச்சேன் இப்போ அங்க போய் ஆரமிக்கனும்....

அபி: கார்த்தி மாமா பரவால்லையே நீ அம்முவ பாக்க தான் வர்றேன்னு நினைச்சேன் பட் நீ வேலையும் பாக்குற.....

கார்த்தி: 🤨😠😡

மோனு: அதெல்லாம் தெரியும் அங்க போனதுக்கு அப்பறம் எதுக்குன்னு உனக்கும் தெரியும் டா அண்ணா.... என ஒரு சிரிப்பை உதிர்தவள் அம்முவிடம் அம்மு நாளைக்கு அங்க வந்துரு.... கண்டிப்பா அவுங்க ரெண்டு பேரும் அண்ணாவ நாளைகெல்லாம் வெளியவே விட மாட்டாங்க.... இப்போவே நா எல்லாத்தையும் ராஜ் மாமாகிட்டையும் அருணாப்பாகிட்டையும்  பேசிட்டேன்.... கோபி அண்ட் யோகி நீங்க தான் பாத்துக்கணும் கவனமா இருங்க.... என கார்த்தி அறியாமல் பேசியவள் அபி, பிரணி நீங்க எங்க கூட வர்றீங்களா இல்ல அப்பறமா வர்றீங்களா....

பிரனி: இல்ல மோனு நாங்க அப்பறமா  கொஞ்ச நேரம் இங்கேயே இருந்துட்டு வர்றோம்

மோனு: ஓகே நா போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வர்றேன் அண்ணா நீ கார் எடுத்துக்கோ என்னோட ஸ்கூட்டில பிரணி அண்ட் அபி வரட்டும் என அனைவரிடமும் கூறி இவர்கள் இருவரும் புறப்பட்டனர்.

**********************************

வைனு: என்ன சந்தர் உன்ன பாக்கவே முடியாது உன்ன அரெஸ்ட் பண்ணவே முடியாதுன்னு என்னென்னமோ பில்டப் குடுத்தாங்க பட் என்கிட்ட மாட்டிகிட்டியே....

சந்தர்: ஏய்.... போலீசு..... ரொம்ப பேசாத என்னைய மாட்டி விட்டவ அவ தானே... அன்னைக்கு என்னோட தம்பிய அடுச்சவ அன்னைக்கே அவளை ஏதாச்சும் பண்ணி இருக்கணும் விட்டது தப்பா போச்சு..... அதுனால என்ன இன்னைக்கு செஞ்சுரலாம்....

வைனு: ஓ.... அவளை நீ செய்ய போறியா அவளை தொடுறதுக்கு முதல்ல நீ உயிரோட இருக்கனுமே.....

சந்தர்: நீ ரொம்ப லேட் பண்ணிட்டா போலீசு.... என்னோட ஆளுங்க கண்டிப்பா இன்னைக்கு அந்த பொண்ண தூக்கிருவானுங்க.... அப்பறம் இருக்கு உனக்கும் அவளுக்கும்.....

வைனு: யாரு யார துக்குறதுண்ணு பாப்போம் இப்போ நீ என்ன பண்ணுற நா கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுற.... சரியா....

என அவனிடம் கேள்விகளை கேட்க பதில் கூறாமல் முரண்டு பிடித்தவனிடம் தனது பாணியில் விசாரிக்க தொடங்கினான்....

**********************************

வைனு வீட்டில் இறக்கி உள்ளே செல்லும் முன்னால் கார்த்தியிடம்
மோனு: டேய் அண்ணா என்ன நடந்தாலும் இந்த தங்கச்சிய மட்டும் தப்பா நினச்சுடாதடா....

கார்த்தி: என்ன மோனு என்ன சொல்லுற எனக்கு ஒன்னும் புரியலை...

மோனு: இல்லடா அண்ணா புரியும் போது சொல்லுறேன்.... அத்த அம்மா வாங்க போலாம் அண்ணா கார் கீ தா நாங்க கோவில் போய்ட்டு வர்றோம்....

கார்த்தி: எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நா இங்க முடிச்சுட்டு அம்முவ பாக்க வேற போணும்.... நீ வேற கார் எடுத்துட்டு போ....

மோனு: அது நீ இங்க இருந்து போகும் போது பாத்துக்கலாம் இப்போ அதை  தா... என அவன் கையில் இருந்து பிடுங்கியவள் இருவரையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றாள்.

சிவா: டேய் மச்சான்.... உன்ன பாத்து எவ்வளவு நாள் ஆச்சு....

கார்த்தி: என்ன இந்த லூசு உலரிட்டு போகுது.... நா போய் தானே ஆகனும் இவன் எதுக்கு இப்போ சம்மந்தமே இல்லமா என்ன பாத்து எவ்வளவு நாள் ஆச்சு கேக்குறான்... ஏதோ சரியில்லையே என மனதிற்குள் புலம்பியவன் கடவுளே என்ன காப்பாத்து.... என வாய்விட்டு புலம்ப

அஸ்வின்: என்னடா தனியா புலம்பிகிட்டு இருக்க???

கார்த்தி: அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மாமா.... இந்த லூசுதான் என்ன பாத்து ரொம்ப நாள் ஆச்சுன்னு புலம்பிகிட்டு இருக்கு என சிவாவை பார்த்து கூற....

அஸ்வின் : அவன விடு உனக்கு வேலையெல்லாம் முடிந்ததா....

கார்த்தி: ஆ... மாமா ஓரளவுக்கு முடிஞ்சுருச்சு மத்ததை வைனுவும் மோனுவும் முடுச்சிருவாங்க..... சரி நா கிளம்புறேன்....

சிவா: என்னது உன்ன அனுப்பவா நாங்க உனக்கு போன் பண்ணி வர சொன்னோம்.... ஹா... ஹா.... நெவர் நீ எங்க கூட தான் இருக்க போர... நாங்க மட்டும் எங்க ஆளுங்களை பாக்காம இருக்கணும் நீ மட்டும் உன்னோட ஆளை பாக்க போவியா.... நெவர்....  என தெலுங்குபட வில்லன் போல் பேச அவன் கூறியதை கேட்டவனுக்கோ அம்மு பார்த்த பார்வை மோனு கூறிய வார்த்தை எல்லாம் புரிய.....

கார்த்தி: நோ... இதெல்லாம் மோசம்.... நா பாவம் இல்லையா....  நானே இப்பதான் அவளை ஒத்துக்க வச்சு இருக்கேன் இப்போ உங்களுக்கு என்ன உங்க ஆளை பாக்கணும் அவ்வுளவு தானே.... வாங்க போலாம் உங்களுக்கான காரணத்தை நா உருவாக்குரேன்....

சிவா: அதெல்லாம் முடியாது எங்களை வீட்டில் இருக்க சொன்னது மோனு சோ கண்டிப்பா நாங்க வர மாட்டோம்.... நீயும் போக கூடாது....

கார்த்தி: டேய் இதெல்லாம் ஓவர் டா உன்னோட பாசத்துக்கும் அவளோட சொல் பேச்சு கேட்டு நடக்கிறதுக்கும் ஒரு அளவே இல்லையாடா....

சிவா: அதை நீ சொல்லுறியா.... அவளோட பேச்ச கேட்டு அவ கிட்ட அடிவாங்கி என்னோட ஏதும் அறியா தங்கச்சியை ஒத்துக்க வச்சவுங்க தானே நீங்க ரெண்டு பேரும்.....

கார்த்தி: என்னது உன் தங்கச்சிக்கு ஒன்னும் தெரியாத.... என்னை கிட்ட தட்ட ரெண்டு வருஷமா லவ்வ சொல்லாம அலைய வச்சு இருக்கா என்னமோ எங்க பிளான் ல நீ இல்லாத மாறியே சொல்லுற... நீ தான் அதுல முதல் ஆளே.... என்னைய அடி வாங்க சொன்னதும் நீ தான்....

சிவா: ஆமா... அதுக்கு இப்போ என்ன....

அஸ்வின் : டேய் நிருத்துங்கடா... ரெண்டு பேரும் சின்ன பசங்க மாறி சண்டை போட்டுகிட்டு....  ஏன்டா கார்த்தி  எனக்கு ஒரு டவுட்டு...

கார்த்தி: சிவாவை முறைத்து கொண்டே சொல்லுங்க மாமா....  என்ன டவுட்....

அஸ்வின்: நெஜமாவே மோனு தான் இந்த பிளான் போட்டு அம்முவ ஓகே சொல்ல வச்சாளா.... நீங்க பிளான் போடும் போது நா ஒரு டீல் விசியமா பிஸியா இருந்தனால அம்மா சொல்லவும் நானும் டீட்டைல்லா கேக்கல இப்ப சொல்லு... மோனுவா இதெல்லாம் பண்ணினது....

கார்த்தி: நீங்க வேற மாமா நா முன்னாடியே அம்முகிட்ட பேசுன்றேன்னு சொன்னேன் பட் அப்பெல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு அவ ஊருக்கு போன அப்பறம் வந்து அண்ணா இதுதான் பிளான் ரெண்டு நாள்ல அம்முவ ஓகே சொல்ல வக்கிரோம் அப்படின்னா... நானும் சரின்னேன்... இந்த நாய் இருக்கே எல்லாம் ஓகே தான் பட் இன்னும் ஸ்ட்ராங்ஹ இருந்த நல்ல இருக்கும்னு சொன்னான் நா நல்லா ஸ்ட்ராங்ஹ வாங்கினது தான் மிச்சம்.... இதுக்கே இப்டிங்குறீங்க.... சிவாவோட திடீர் ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு யாரு காரணம்....

சிவா: டேய் நா உனக்கு என்னடா துரோகம் பண்ணினேன் என்னோட ரிஜிஸ்டர் மேட்டரை இப்ப ஏன்டா ஓபன் பண்ணுன அதுதான் முடிஞ்சுருச்சே...

கார்த்தி: அதை நீ என்னை இங்க வரவைக்க மாமாவோட சேர்ந்து பிளான் பண்ணும் போது யோசிச்சு இருக்கணும்....

அஸ்வின் கார்த்தி மற்றும் சிவாவை முறைத்து பார்க்க சிவா கார்த்தி இருவரும் பாவமாய் பார்த்து கொண்டனர் அப்பார்வையில் இருந்து முதலில் விடுபட்ட கார்த்தி அஸ்வினிடம்  

கார்த்தி: இதெல்லாம் விடுங்க.... மோனுவை விட ஒரு பெரிய பிளனர் நம்ம வீட்டுல இருக்காங்க அது யாரு தெரியுமா நம்மளோட இல்ல உங்களோட அன்பு தம்பி வைணவன்..... அவனோட ஆளை விட்டுக்கே கூட்டி வந்துட்டான் இதுக்கு என்ன சொல்ல போரிங்க.... கமான் டெல் மீ....

சிவா: கடவுளே எப்டியவது அண்ணா கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடனும் என மனதில் நினைத்தவன்  ஆ.... ஆமா... அஸ்வின் அண்ணா வைனு லவ் மேட்டர் இவனுக்கு தெரிஞ்சு இருக்கு அதை முதல என்னான்னு கேளுங்க.....

அஸ்வின் இருவரையும் முறைத்து பார்க்க
இருவரும் இப்போ என்ன பண்ணுறது..... இருக்குற எல்லாத்தையும் இப்படி வாக்குமூலம் கொடுத்துட்டோமே.... என முழிக்க....

அஸ்வின்: எனக்கு தெரியாம என்னவெல்லாம் பண்ணி இருக்கீங்க எல்லாத்தையும் சொல்லுங்க.... அண்ட் கார்த்தி எனக்கு வைனு லவ் பண்ணுறது தெரியும்.... என கூற அவனோ இது எப்போ என சிவாவை பார்த்தான்...

எல்லாருக்கும் மிக பெரிய sorry கதையை யாரும் மறந்து இருக்க மாட்டிங்கன்னு நம்புறேன் மறந்தாலும் மறுபடியும் முதல்ல இருந்து படிச்சுட்டு வாங்க பா.... தாமதத்திற்கு மன்னிக்கவும் ... இனி எப்பவும் ஞாயிரு கிழமை கண்டிப்பா ud வரும் முடிந்தால் இரண்டாக கூட பதிவிடுகிறேன் அதனால் கமெண்ட் பண்ணினா நல்லா இருக்கும் ... அண்ட் vote பண்ண மறந்துடாதீங்க....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro