22. பிந்துசாரா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

22.பிந்துசாரா:

தன் மனம் கவர்ந்தவனுடன்  குறுஞ்செய்தியில் உரையாடிக் கொண்டு இருந்ததில் நிலவு மெதுவாக சென்று காலை கதிரவனின் காதில் குயிலின் இனிய ஓசையில் கீச்சிட்டு முகம் காண்பித்த கதிரவனின் கடைக்கண் பார்வை சன்னலின் வழியாக நோட்டமிட ....

அதனை சிறிதும் உணராமல் சிறு புன்னகையோடு புரண்டு சற்று விழி மூடினாள் மாதங்கி.

"மணி 8 ஆச்சி இன்னும் என்ன பண்றா? எப்பவும் அவ்வளோ சீக்கிரமே எழுந்திட்டு குட்டி போட்ட பூனை மாதிரி பிரேக் பாஸ்ட்காக கிச்சன சுத்திட்டு இருப்பா. என்னாச்சுனு தெரியலையே?" என்று தனக்கு தானே பேசிட்டு தன் செல்ல மகளின் தூக்கத்தை கலைக்கவும்  மனம் இல்லாமல்... வழக்கம் போல  எல்லா அம்மாவும் பாலோ பன்ற டெக்னிக்கதான் லட்சுமியும் பண்றாங்க.

வேற என்ன, " செல்ல பிள்ளையா  இருந்தா டிவிய ஆன் பண்ணிட்டு சத்தத்த கூட்டுவாங்க" 😉

"நம்மல மாதிரி கும்பகர்ண தூக்கம் தூங்கரவங்களுக்கு😌!!!! ரெண்டு குண்டா, டேக்சாவ தூக்கிப்போட்டு... 😄😄 சிவமணியோட டிரம்ஸ் கச்சேரில தான் அந்த நாளே துவங்கும்😃"

நம்ம மாது குட்டியோட மம்மி சோ சாப்ட். அவங்க முதல் ரகம். சன் மியூசிக் வச்சி வால்யூம கூட்டிட்டு அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரி  கிச்சன் போய்ட்டு சமையல் வேலைய ஆரம்பிக்குறாங்க. லட்சுமி அம்மா சோ சுவீட் மாம்ல😍?

*****

'என்னயும் தான் தினமும் ஒரு தெய்வம் தடபுடலா எழுப்புதே!!!!... பரவால்ல வேலைக்கு சோறு😍, படிக்க வாட்பேட் ஸ்டோரிஸ்னு😄  கோரன்டைன்லயும் வாழ்க்கை நல்லாத்தான்ய போது நம்ம கதைய அப்பறம் பார்க்கலாம் சரி.

"வாங்க, நம்ம  தூங்குமுஞ்சி அழகிய சன் மியூசிக் கூட சேர்ந்து நம்மலும் எழுப்பிவிடுவோம்"

"ஒரு சமுக சேவைதாங்க. டிவின்ஸ பிரிச்சு வச்சி பார்க்க பாவமா இருக்கு. அப்புறம் அந்த விஜய் வேற ஆதூமான்னு ஏங்கி போய் இப்போதான் தெளிஞ்சிருக்கான். மாதூமாவிற்காக ஆதர்ஷ்னிக்காக செய்வீர்களா!!!! "

'மத்த அப்டேட் மாதிரி இதையும் படிக்க செய்வீங்கன்னு நம்பி என்னோட அப்டேட்க்குள்ள காலடி எடுத்து வைக்குறேன்' ...

"ஜெய் பிருந்தா 22nd அப்டேட்டாய நமஹ😀!!!!!

"பில்ட்அப் கொஞ்சம் ஓவரா தான் குடுக்குற.. சரி கண்டினியூவ்-னு" #தர்ஷினிசிம்பா சொல்ற மாதிரியே இருக்கு😊...

ஹஹாா😁😁 இஇஇ 😆!!!

"ஓகே டியர்ஸ் லெட்ஸ் என்டர் த லவ்லி லவ் ஸ்டோரி"...
*******

தூக்கத்துல இருந்து அப்படியே லேசாக கண் விழித்த மாது தன் அறையில் இருந்த வாள்கிளாக்கை பாா்த்ததும் அதிர்ச்சியில்...

"என்னது கனவா எட்டு மணி ஆன மாதிரி வாட்ச் காட்டுது? அது சரி, அந்த சோப்புடப்பா தலையன்கூட வாட்ஸ்ஆப்ல மெசேஜ்ல பண்ணிட்டு நம்ம படுத்தது லேட்டாதான? லேட்டானது தப்பில்ல.." சரின்னு நம் அழகான அழுக்கு தேவதை சோம்பல் முறிச்சிட்டே பெட்ஷீட்ட சுத்தீட்டு வந்து ஹால் ல இருக்க சோபாவில் குடைசாய்ந்தாள்  நம் தேவதை மாதூமா. 

சோபாவில் இருந்த மாதூவின் மிச்ச தூக்கத்தை கலைக்க செய்து கொண்டிருந்தது தொலைக்காட்சியில் ஒலிக்க துவங்கிய அந்த பாடல், பாடலின் சப்தத்தில் சினுங்கியவள் லேசாக பாடலை கவனித்தலானாள்.

"ரெட்டை கதிரே இதோ!!!
நீ! நான்! நாம்! பக்கம் இருந்தும் தூரம் எதற்க்கு...."
 
பாடலின் மெல்லிசையில் சற்றே கண்களை நன்றாக விழித்துக் கொண்டு மீண்டும் பாடலை கவனிக்க தொடங்கினாள்...
 
பாடல் தொடர்ந்து....
 
"...கருவாச்சு உடல் உருவாச்சி
அது தவறாச்சு  இரு உயிராச்சு
இரண்டும் வளர்ந்தாச்சு
எனக்காச்சு அது உனக்காச்சு இனி புவிெயல்லாம் புதுசாச்சி
வருடம் உருண்டாச்சி..... "

".... இவன் ஒரு பக்கம் அவன் மறுபக்கம்
இது எதுவோ?
அட பூவும் தலையும் சேர்ந்த பக்கம் அதுவோ!!! ......  "

மாதூவிற்க்கோ இரவு முழுவதும் தன் மனம்  கவர்ந்தவனின் குறுஞ்செய்தி அளித்த சந்தோஷத்தில் அவளின் டிடக்டிவ் மூளை சற்று உறங்கிதான் போனது, பாடலின் காட்சி சட்டென அவள் நினைவுக்கு வர

"நம்மலும் டிவின்ஸா இருந்தா!!! எப்படி இருக்கும்"னு மாற்றான் படம் பார்த்த மழலையாக நெஞ்சம் ஏங்கியது.

அந்த நேரம் லட்சுமி மாதுவின் பேவரைட் லெமன்டீ கொண்டு வந்து அவள் அருகில் உள்ள மேஜையில்  வைத்துவிட்டு,

"என்னடா, இன்னைக்கு ரொம்ப நேரம் ரூமவிட்டு வெளிய வராம இருந்துட்ட? அதும் புதுசா போர்வையோட சோபால வந்து உட்கார்ந்துட்டு இருக்க?

எப்பவும் பெட்ல இருந்து எழுந்து வெளில வரத்துக்கு முன்ன, அவ்ளோ பெர்பக்டா எல்லா திங்ஸூம் எடுத்து வச்சிட்டு வருவ!!!!என்னாச்சு உனக்கு"?-னு

சொல்லிட்டே மாதங்கியோட கண்ணத்துல லட்சுமி கைய வச்சதும் சில்லென்ற அவள் அன்னையின் கைதீண்டலில் உடல் சிலிர்த்தவள்.

"அம்மமாாா!!!!-"ன்னு சோம்பல்  முறித்தவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே  முருகேசனை அழைத்தார் லட்சுமி.

"என்னங்க! நம்ம வீட்டுக் கன்னுக்குட்டி!! எவ்வளவு அழகா கத்துறத கேட்டிங்களா?" ன்னு சொல்லி ரெண்டு பேரும் சிரிக்க புன்னகையும் வெக்கமும் நிறைந்த மாதூவோ  பெட்ஷீட்டினுள் தன் தாயையும் அரவணைத்து ....

"ம்ம்மமாாா"
"லவ் யூ சோ மச்"- னு

சொல்லிட்டு மீண்டும் அதே மழலை ஏக்கத்துடன் நானும் இந்த மாதிரி டிவின்- னா இருந்தா எவ்வளவு நல்லா இருந்துருக்கும்!!!

"எனக்கு விஜய் சொன்ன ஆதர்ஷ்னியோட நியாபகமாவே இருக்கு
மா!!! -" ன்னு சொன்னதும் லஷ்மியின் முக மாற்றத்தைக் கண்டுகொண்டாள்.

"இல்ல மா, ரெண்டு சூர்யா மாதிரி ரெண்டு மாதங்கி இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்ல?"னு மேலும் தன் தாயின் மௌனத்தை கலைக்க பேசினாள்,

"அம்ம்மமா!! " என்று தன் தாயை உலுக்கியவளைப் பார்த்த லட்சுமி.

" சொல்லுடா!!! என்னாச்சுமா? வை சோ சைலன்ட்?" னு கேக்க ...

"ஒன்னுமில்ல அடுப்புல பால் வச்சிட்டு வந்தன்னு" சட்டுனு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

"ஓகே மா, எனக்கு பிரேக் பாஸ்ட் வேணா நா சுபாவ பாக்க போறன், அங்கேய சாப்டுட்டு அப்டியே கொஞ்சம் வெளில ஸாப்பிங் போய்ட்டு வர்றோம்"னு சொல்லிட்டு ரெடியாக தன் அறைக்குள் நுழைந்தவுடன்,

"அம்மா, ஏன் ஆதர்ஷ்னிய பத்தி பேசும்போதெல்லாம் சைலன்ட் ஆகிடறாங்க?

சம்திங் ராங்! " என்று மீண்டும்

"சரி, நம்ம சுபாகிட்ட இத பத்தி சொல்லலாம் அவ ஏதாச்சும் ஐடியா கொடுப்பா"ன்னு
சுபாவின் வீட்டை நோக்கி விஜயமானாள் விஜய்யின் அழகு மந்தாகினி மாதங்கி.

+++++++++++++++++++++++

அலை அடித்து ஓய்ந்து இருந்த ஆதர்ஷ்னியின் மனதில் இருந்த குழப்பத்திற்க்கு முழுமையான விடை கிடைக்கவில்லை.

"துருவ்வ நம்புறதா? வேண்டாமா? அட ச்சீ!!
அவன நா எதுக்கு இப்போ செல்லமா துருவ்வ் புருவ்னு  உரிமை கொண்டாடிட்டு  இருக்குறன். 

"Uuuaaah!!! " ன்னு வாந்தி வர மாதிரி நடிச்சாலும் உள்ள இருந்து பேசுன பத்து வயது ஆதர்ஷ்னி.

'ரொம்ப பண்ற டி நீ! '

"உனக்கு பப்புனா எவ்வளவு பிடிக்கும் அப்பறம் ஏன் இப்படி டாரச்சர் பண்ற"-னு

இளம்வயது தர்ஷினியின் உரிமை குரல் சத்தமிட,

'நீ வாய மூடு. அவன் என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டான்.'

" பாவம் விஜய்.அவர் என்கிட்ட ரொம்ப ஆனஸ்டா இருந்தாரு! அவர காய படுத்திட்டனே?".

'மொதல்ல அவர்கிட்ட சாரி கேக்கனும். இவன எப்ப வேணுனாலும் பாத்துக்கலாம். '

"மவன இருக்குடா உனக்குப் பூஜை" ன்னு  சொன்ன தர்ஷினியை பார்த்து

" இந்த பில்ட் அப்க்கு ஒன்னும் குறச்சல் இல்லை"

என்றவாறு சிரித்துக் கொண்டு இருந்தாள் அவளுக்குள் இருக்கும் குட்டி ஆதுமா!!

து௫வ் தனது வில்லன் யார் என்பதை சிந்திக்க கஷ்டப்பட்டு டிடக்டிவ்லாம் வச்சு என் ஆதுமாவ கல்யாணம் பண்ணினா எனக்கு வில்லனா யார் இருக்கிறது விஜய்யின் முகம் நினைவுக்கு வர,
  
'அட ச்சி!! 
இவன்தான் நம்மகிட்ட கால்ல விழாத குறைய நம்புடா  நாங்க உனக்கு எதுவும் துரோகம் செய்யல  'அப்பா செஞ்சது தப்புதான்'னு வேற சொன்னான்ல ' என்று தனக்குள் யோசித்தான்.

அப்போது சட்டென்று தன் தாத்தா தன்னுடைய சிறு வயதிலிருந்தே தன் தந்தையின் மீது காண்பித்த வெறுப்பும் தன் தாயின் மனகுமுறல் மிகுந்த பேச்சும் நினைவில் வந்தது.

அம்மா உன்னை ஏமாத்திட்டு அப்பா.. ச்செய் அப்பனா..  அவன் போனாலும்.. நீங்க என்ன சொன்னீங்க? உன் அப்பா சீக்கிரமா வந்துடுவாரு.. அவர் மேல எந்த தப்பும் இருக்காது அவருக்கு நீனா உயிருடான்னு சொல்லிக் கொண்டு இருந்த வாய்.. துருவன் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும்போதும் வராமல் போன தன் கணவனின் சுயநலத்தை எண்ணி மனம் மிகவும் நொந்தது.

அப்போது வந்த கிருஷ்ண பூபதியின் வார்த்தைகளை தட்ட முடியாமல் பம்பாய் சென்றவள் தன் கணவனை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்தார்.

தன் தந்தையின் அலுவலகத்திற்கு மீண்டும் சிறப்பு நிர்வாக அதிகாரியாக பணியாற்றி  கொண்டு இருந்த காலத்தில்  தன்னுடைய மகனையும் தன் அரவணைப்பில் வைத்துக் கொண்டார்.

அச்சமயத்தில் அலுவலகத்தில்  யாரேனும் 

'துருவ் உன் டாடி எங்கே? எப்ப உன்ன பார்க்க வருவார்? -னு கேட்கும் நபர்களின் நிலைமை தான் பாவம். அவ்வாறு கேட்டவர்கள் யாரும் அடுத்த நாள் பணியில் இல்லாமல் பார்த்துக் கொண்ட தன் தாயின் நினைவுகள் கண்களில் கசிய...

"டேய், நீ என் அம்மாவுக்கு, கொஞ்சம் கூட பொருத்தமானவன் இல்ல. அவங்க,  உன் மேல வச்சிருந்த லவ் உண்மையானது. அத  பயன்படுத்தி எங்கம்மாவ நீ ஏமாத்திருக்க."

' நீ மட்டும் எப்படி உன் மகனோட  சந்தோஷமா வாழலாம் வரன்டா! உன்ன தேடி நா வரணும்னு அவசியம் இல்ல.  எனக்கு எப்படி உன்ன இங்க வர வைக்கனும்  தெரியும்னு' சொல்லி ஒரு பக்கா பிளான்  ரெடி பண்ணி வியாபார ரீதியாக வெளியூர் சென்றிருந்த கிருஷ்ண பூபதியின் மேனேஜரை அழைத்தான்.

" நான் சொன்னனு தாத்தாகிட்ட சொல்லுங்க. உடனே கிளம்புங்க.  மத்த எல்லா பிஸினஸ்  வேலைகளையும் அப்புறம் பாத்துக்கலாம். அடுத்த பிலைட்ல கிளம்பி சென்னை வாங்க. நம்ம ஆபிஸ்ல மத்தத பேசிக்லாம் சீக்கிரம்" என்று அவசரகதியானவனின் நினைவு ஆதுமாவை நோக்கி சென்றது.

" செல்லம். என்னோட பழைய கணக்குல கொஞ்சம் பாக்கி  இருக்கு. இருடா இதுக்கு ஒரு முடிவு கட்டிட்டு வரன்டா. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல நரி வேலைய பாத்தது எவன்னு கண்டுபிடிக்ற"ன்னு தன் அலுவலகத்தினை நோக்கி தன்னுடைய காஸ்ட்லியான டுக்காட்டி பைக்கில் விரைந்தோடினான் துருவன்.
++++++++++++++++++++++

     காலை உணவை சுபாவின் வீட்டில் ஒரு கைப்பார்த்த நம் அழகு தேவதையும் அவள் தோழியும் அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆக தங்களின் ரதத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

என்னடி சாப்பிட்டு முடிச்சதும் வெளில போலான்னு வண்டிய எடுக்க சொன்ன

"உனக்கு என் டிரைவிங்னா  அவ்வளோ பிடிக்குமா?" மாதுமான்னு கேட்ட சுபாவை பார்த்த மாதங்கியோ "எஸ் மை டியர்!! அப்ஸல்யூட்லி" என்றாள்.

" உன்னோட கார்ல நீ ஓட்டிட்டு போக நானும்" விஜயும் பின்னாடி உட்கார்ந்துட்டு.. அப்புடியே...

"சரி சரி  சிக்னல் தாண்டியாச்சி. எங்க போனம்னு சொல்லு." என்றாள் சுபா.

" எங்க போறதுன்னு தெரியல. கடைசி  வர இப்படியே போனா நல்லா இருக்கும்"லனு  சொல்லி முடிக்கிறத்துக்குள்ள இருக்கும்டி நமக்காக தான முருகேசனோட பெட்ரோல் பங்க இருக்குன்னு நினைவு  கூர்ந்தவளை
"ம்ம் சரி லெப்ட்ல போ டேங்க் பில் பண்ணிட்டு போய்டலாம் பக்கத்துலதான் விஜய்யோட  வீடு" என்றாள்.

இந்த பக்கம் வந்தா வீட்டுக்கு அவசியம் வரணும்னு விஜய்யின் தாய் கூறியதாக  சுபாவிடம் நினைவு கூர..

சுபாவோ "ஓகே! ஓகே! அப்போ மாமியார பார்க்க போல.ௐ விஜய சைட் அடிக்கதான இந்த விசிட். நல்லா டெவலப் ஆகிட்ட மாதுமா"ன்னு சொல்லிட்டே வண்டியை திருப்பினாள்.

"லெப்ட்டுடி!!!!! ஏன்? ரைட் சைடு போற எரும"ன்னு மாது சொல்லி முடிக்குறதுக்குள்ள

இவர்கள் செய்த தள்ளாட்டத்தில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்த துருவின் பைக்கும் உரசியதில், நிலை குலைந்து தரையில் உருண்ட துருவின் ஏர் கம்பிரஸ்டு சூட்டினால் பெரிய காயம் இன்றி வலது நெற்றியில் லேசான காயத்துடன் ரத்தம் வடிய எழுந்தவன் தனது உடலை சற்று அசைத்து மேலும் ஏதேனும்  காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தபின் தன்னை உரசி தடுமாறி சாலையின் பக்கவாட்டில் உள்ள பிளாட்பாரத்தில் மோதிய நிலையில் நின்ற காரில் மயங்கி கிடந்த மாதங்கியை பார்த்த துருவ், "அய்யோ! என்ன இது ஆதுமா..  ஆதுமா.." என காரின் விண்டோ கிலாசை தட்டி கொண்டிருக்க, பொறுமையை இழந்தவன் தன் கையால் காரின் கண்ணாடியை உடைத்து ஒரு வழியாக கதவை திறந்தவன் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில்  இருவரையும் அட்மிட் செய்தான்.

பின்னர் தான் நினைவுக்கு வந்தது. ஆதுமாவோட இருக்கிறது யாரு அவளோட பெஸ்ட் பிரண்ட் சுதா தான இது யாரு  புதுசான்னு யோசிக்க  அவனின் கைப்பேசி கர்ஜனை செய்தது.

"தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா"...

மொபைலின் திரையில் ஆதுவோட  நம்பர பாத்தவனுக்கு சித்தம் கலங்கிதான் போனது.

கைப்பேசியை எடுப்பதற்குள் கால் கட்டானது  மீண்டும் துருவ் ஆதுவின் எண்ணிற்கு அழைக்க "ஹலோ ஆதுமா." என்றதும் "என்னடா? போன் பண்ணா எடுக்க மாட்டியா?  அவ்வளவு கொழுப்பு ஆகிடுச்சா உனக்கு"னு செல்லமாக சற்றே துருவ் அறியாத வகையில் வழக்கமான தொனியில் மிரட்டினாள்.

" இல்ல! ஆதுமா. உன்ன மாதிரியே... ஒரு ஆக்ஸிடண்டல"-னு பிதற்றியவனின் வார்த்தைகளில் தெரிந்த பதற்றமும் என்னாச்சுனு திடுக்கிட்டவள் எந்த ஹாஸ்பிடல்னு விசாரி்த்தவள் அடுத்த அரை மணிநேரத்தில் மருத்துவமனை அடைந்தாள்.

வழி நெடுகிலும் தன் சிறு வயதில் ஏற்பட்ட சிறு காயத்தினை  தாங்க முடியாமல் தன்னோடு சேர்ந்து தவித்த பப்புதான் நினைவுக்கு வந்தான்.

மருத்துவமனையின் ரிசப்ஷனில் விசாரித்துக் கொண்டு மேல்தளத்திற்கு விரைந்தவளுக்கு  ஐசியூ ரூமிற்க்கு முன் நெற்றியில் சிறிய கட்டுடன்  அங்குமிங்கும் டென்ஷனாக உலாவி கொண்டு இருந்தவனை பார்த்ததும் தன்னுள் இருந்த குட்டி ஆதுமா ஓடிச்சென்று பப்புவை  பற்றிக்கொண்டு அழ,  துருவ் கிறங்கி போனாலும் அந்த நெருக்கம் அப்போது அவனுக்கு சந்தோஷத்தை தரவில்லை. தன் அதுவைப் போல இருக்கும் அந்த பெண் யார்? என்று யோசித்தவாரே நெருக்கம் சற்று தளர்ந்து துருவை  பார்த்த ஆதுவை  ஐசியூ வார்டின் கண்ணாடி வழியாக மயக்கத்தில் இருந்த மாதங்கியை காட்டி "யார் இந்த செட் தோச?"ன்னு கேட்டவனின் கேள்விக்கு பதில் தெரியாமல் அதிர்ச்சியில் மயங்கினாள்..

**************

எழுத்தாளர்: பிந்துசாரா

ஐடி: @bindhusara

***************

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro