21

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நாட்கள் அப்படியே சிறு சிறு ஊடல்களுடனும் சமாதானங்களுடனும் செல்ல அதுல்யா நினைத்தது போல் அத்தனை சிரமங்களை அர்ஜுன் அவளிற்கு கொடுக்கவில்லை. பிடிக்கவில்லை என்றதும் ஒதுங்கிக்கொண்டான் என்றே அவள் நினைத்திருக்க அவன் விரைவிலேயே ஒரு பெரும் புயலோடு வருவான் என்று நினைத்திருக்கவில்லை . தற்சமயம் அவள் இறுதி ஆண்டில் இருக்க சஞ்ஜீவ் வெளிநாட்டு வாசத்தின் இறுதி ஆண்டில் இருக்கிறான் . நடை உடை பாவனை ஏன் உச்சரிப்புகள் கூட மாறிவிட்டன எனில் அவனுள் மாறாதது அவனின் அம்மு மேல் அவன் வைத்த நேசம் தான் .

இடைப்பட்ட காலங்களில் மேகா மற்றும் சஞ்சீவினி உறவு பலப்பட்டிருத்தது . ஆரம்பத்தில் அதுல்யாவிற்கும் அவனிற்குமான பாலமாக இருந்தவள் அதன் பின் அங்கே மூன்றாம் வருடம் பயில்கையில் ஸ்டுடென்ட் exchangeil அவளும் சஞ்ஜீவ் இருக்கும் ஊரில் உள்ள கல்லூரியிலேயே சேர அவளிற்கான மொத்த பொறுப்பும் சஞ்ஜீவுடையதானது . சுபத்ராவிடம் கூட அவன் காட்டிகொள்ளாத அனைத்து குறும்புகளை மேகாவிடம் வெளிப்படுத்தும் அளவிற்கு முன்னேறி இருந்தது அவர்களின் அண்ணன் தங்கை உறவு . இருவரும் சேர்ந்து அதுல்யாவை அலறவைக்கும் சமயத்தில் அவள் தான் திணறிப்போவாள்.

அனைத்தும் நல்லவிதமாக தான் சென்றுகொண்டிருந்தது . அன்றைய நாள் வரும் வரை.சஞ்ஜீவ் அன்று இந்திய திரும்பும் நாள்.அதுல்யா மிகுந்த ஆரவாரத்துடனும் ஆனந்தத்துடனும் புறப்பட்டு விமான நிலையம் வந்து நின்றுகொண்டிருந்தாள் .மேகா ஒரு வருட student exchange முடிந்து 6 மாதம் முன்பே திரும்பி விட்டிருந்தாள் . சக்தி இவர்களுடன் தான் இருந்தான் எனில் அவன் பார்வை என்னவோ மேகாவிடம் தான் இருந்தது .

வருடங்கள் உருண்டோடி விட்டது எத்தனையோ விஷயங்கள் மாறி விட்டது எனில் மாறாததென்னவோ அவனிற்கு மேகாவிற்கும் இடையிலான இந்த மௌனப்போர் தான் . அவள் அவனது இருப்பை கருத்தில் என்ன கடைக்கண்ணால் கூட பார்க்கவில்லை.

அவனும் எத்தனையோ பெண்களை கடந்து வந்து விட்டான் அவை கடந்து செல்லும் மேகங்களாக இருந்ததே ஒழிய இவள் போல் அவரை வேரோடு சாய்க்கும் புயலாய் அவன் மனமெங்கும் மையம் கொண்டதில்லை. அன்று அவன் நடந்துகொண்ட முறைக்காக அவன் வருந்தி மறுகாத நாட்கள் இல்லை எனில் ஒருமுறை தொலைத்த பொக்கிஷம் மறுமுறை கை சேருவதில்லையே . பெருமூச்சொன்று விட்டவன் பாதையை வெறிக்க சஞ்ஜீவ் பயணப்பொதிகளுடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் .

சஞ்ஜீவை கண்டதும் அனைவர் முகமும் பிரகாசிக்க அவனோ கண்களை அலையவிட்டவன் அதுல்யாவை கண்ட நொடி என்ன நினைத்தானோ பயணப்பொதியை அங்கேயே விட்டவன் அவளை நோக்கி ஓட்டமெடுக்க இவளோ அதற்காகவே காத்திருந்தது போல் அந்த பத்தடி தூரத்தை ஐந்தே வினாடியில் கடந்தவள் அவனின் மார்பில் தஞ்சமடைந்து இருந்தாள் . அவனோ அத்தனை வருடங்களாய் அவளின் ஸ்பரிசம் , வாசனை அனைத்தையும் அவளை தனக்குள்ளே புதைத்துக்கொள்பவன் போல இறுக்கி அணைக்க மேகா மற்றும் சக்திக்கோ நெகிழ்வாக இருந்தது .

அவனின் மார்பு அவளின் கண்ணீரால் நனைய அவனோ கீழே விழவிருந்த இரு துளி கண்ணீரை உள் இழுத்துக்கொண்டவன் அவளின் முகத்தை பிரித்து அவள் கண்ணை பார்த்தவன் புன்னகைக்க அவளோ அவனை உதடுதுடிக்க பார்த்திருந்தாள் . அவளின் முகத்தை கன்னம் பற்றி நிமிர்த்தியவன் அவளின் நெற்றியில் முத்தமிட அவளோ அவனின் கன்னத்தில் முத்தமிட்டு பிரிந்தாள்.

சக்தி அவனின் பயணப்பொதியை எடுத்துக்கொண்டு வர சஞ்ஜீவோ அதுல்யாவின் கையை இறுக்கி பற்றியவன் அதன் பின்னே முன்னாள் நோக்க அவனின் முன்னோ அவனின் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியை தேக்கியபடி நின்றுகொண்டிருந்தது .அவனின் அன்னை கையை பிசைந்தபடி நிற்க அவனின் தந்தை கண்ணில் அனலை தேக்கியபடி இருவரையும் முறைத்துக்கொண்டிருக்க சுபத்ராவோ கையில் அவளின் இரண்டரை வயது பெண் குழந்தையுடன் திறந்த வாய் மூடாமல் இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்தாள் .

அதுல்யாவோ அந்த இடத்திலேயே உறைந்துவிட்டாள். சஞ்ஜீவ் இதில் முதலில் அதிர்ந்தவன் அதன் பின் முகத்தை இயல்பாக்கி அவளின் கையை பற்றியபடியே அவனது குடும்பத்தை நோக்கி செல்ல அவளோ சிலையாய் உறைந்து விட்டாள் என்று தான் கூறவேண்டும் . அவன் அருகில் வந்ததும் அவனின் தந்தை திரும்பி நடந்தவர் " கிளம்புங்க... " என்று கூறி முன்னே செல்ல சஞ்ஜீவ் செல்லும் அவரையே வெறிக்க பார்த்தவன் அதுல்யாவை நோக்க அவளோ கைகள் நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தாள் .

சஞ்ஜீவ் அவளின் பயம் உணர்ந்தவன் கையை அழுந்த பற்றி " பயப்படாம போ ... நா வந்து பாக்குறேன் " என்று கூற அவளோ அவனை ஒரு வித கலக்கத்துடன் நோக்க

அவளின் முகத்தில் விழுந்த முகத்தை ஒதுக்கியவன் " போ அம்மு கண்டிப்பா வருவேன் " என்றபடி மேகாவிடம் கண்ணை காட்டியவன் சக்தியிடம் பயணப்பொதியை எடுத்துக்கொண்டு செல்லுமாறு பணித்துவிட்டு வெளியேறி சென்றான் அவன் குடும்பத்தார் தங்கி இருக்கும் விடுதிக்கு .

அங்கே அந்த தங்கும் விடுதி அறையில் சஞ்ஜீவ் ஒரு மூலையில் நிற்க அவனின் அலைபேசிக்கோ அதுல்யாவின் அழைப்பு வந்தது . அதை பார்த்தவன் அழைப்பை துண்டிப்பதற்கு பதில் ஏற்றது விதியின் விளையாட்டோ ?

அவனின் தந்தை " என்ன நெனச்சுட்டு இருக்கான் உன் புள்ள ? வெளிநாடு போய் நாலு காசு பாத்துட்டா அவன் இஷ்டத்துக்கு தான் செய்வானா ? இப்போ எப்படி சொந்தக்காரங்க முன்னாடி முகத்தை காட்டுவேன் . " என்று கத்த

சஞ்ஜீவ் " நான் ஒன்னும் உங்க கௌரவம் கெடுற மாறி வேலைய பாக்கல . அவளை நான் 4 வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கேன் . நல்ல பொண்ணு " என்று கூற

சுபத்ராவோ " அண்ணே இந்த பொண்ணு மாடல் தான ? " என்று அதுல்யா அஜியோ நிறுவனத்திற்காக நடித்த விளம்பரத்தை எடுத்து அவள் தந்தையிடம் காட்ட

அவரோ மேலும் கொதித்தவர் " என்னடா இது? இப்படி அரையும் குறையுமா... இந்த பொண்ண தான் நல்ல பொண்ணுன்னு சொல்றியா ? இது மட்டும் தானா இல்ல வேற எவனோடயும் சேர்ந்து... .. " என்று அவர் கூற

அவனோ குரலை உயர்த்தியவன் "அப்பா பார்த்து பேசுங்க அது அவளோட வேலை ... " என்று கூற

அவரோ " ஓஒ நான் இப்போ அளந்து பேசணுமா ? வெளிநாடு போனதும் எதுவுமே தப்பா தெரியல அப்டி தான ... உனக்காக தான் என் தங்கச்சி பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு நெனச்சேன் ...ஒழுங்கு மரியாதையா இவ சகவாசத்தை முடுச்சுட்டு நா சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணா என் புள்ளைன்னு வீட்டுக்கு வா .. இல்ல எனக்கு புள்ள இல்லனு நெனைச்சுக்குறேன் " என்று கூற

அவனின் அன்னையோ " என்னங்க நீங்க .. அது ரொம்ப நல்ல பொண்ணுங்க " என்று கூற

அவரோ மனைவியின் புறம் திரும்பியவர் " ஓஒ நீயும் இவனும் தான் கூட்டா " என்று அவரிடம் குரல் உயர்த்த அன்னையின் முன் வந்து நின்றவன்

அவனோ "நான் தான் காதலிச்சேன் என் கிட்ட பேசுங்க . என்னால இவளை தவிர்த்து யாரையும் கல்யாணம் பண்ண முடியாது " என்று கூற

சுபத்ராவோ " என்ன அண்ணா அப்பாவை எதிர்த்து எதிர்த்து பேசிக்கிட்டு இருக்க .. சொந்தகாரங்க என்ன பேசுவாங்கனு தெரிஞ்சும் இப்டி " என்று கூற

அவனோ அவளை ஒரு இளக்கார பார்வை பார்த்தவன் " இவ்வளவு நாள் வராத சொந்தமெல்லாம் இப்போ காசு வந்ததுக்கு அப்பறம் தான் கண்ணுக்கு தெரியுதோ ? அவ என் கைல ஒன்னுமே இல்லாதப்போ என்ன விரும்புனவ... யாருக்காகவும் ... யாருக்காகவும் அவளை என்னால விட முடியாது " என்று கூற

சுபத்ரா" என் அண்ணா இப்டி மானத்தை வாங்குற ? சரி அத்தை பொண்ணு வேணாம்னா என்னோட நாத்தனாரை கல்யாணம் பண்ணிக்கோ . இந்த பொண்ணு வேணாம் இந்த fieldla இருக்குற பொண்ணுலாம் ஒரு மாதிரி தான் இருக்கும் " என்று கூற

அவனோ அவளை உறுத்து விழித்தவன் " உன்ன விட... அவ ஒன்னும் பண்ணிடல .... தேவை இல்லாம வார்த்தைய விடாத ... நான் பேச வேணாம்னு பாக்குறேன் " என்று கூற

அவளோ தனது தமையனா இவ்வாறு பேசியது என்று அதிர்ச்சி அடைந்தவள் அப்படியே கட்டிலில் அமர

அவன் தந்தையோ அதில் கொதித்தவர் " என்னடா பேசுற என் பொண்ண பார்த்து " என்று அவனை அறைந்து விட அவனோ அதில் சிறிதும் அசையாமல் நின்றவன் அவரை கை கட்டி அதே பார்வை பார்க்க அவரோ " அவ்வளவு திமிரா ? இருடா அந்த பொண்ணோட அப்பாகிட்ட பேசிக்கிறேன் " என்று சீற

அவனோ பல்லை கடித்தவன் " நீங்களும் ஒரு பொண்ணோட அப்பா தான் ... " என்று கூற இப்படியே இருவருக்கும் வாக்குவாதம் நீண்டுகொண்டே செல்ல

அவரோ இறுதியாக " இப்போவும் சொல்றேன் ... என்னால இந்த வேலை பாக்குற பொண்ண மருமகளா ஏத்துக்க முடியாது . என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ " என்று கூற

அவனோ ஏதும் பேசாமல் அவனின் அன்னையிடம் " ஊருக்கு இன்னைக்கு தான கெளம்புறீங்க போய்ட்டு சொல்லுங்க ... " என்று அங்கிருந்து அகன்றுவிட அப்பொழுது அவனது அலைபேசி அணையும் சத்தம் கேட்க அப்பொழுதே அதை எடுத்து பார்த்தவன் இத்தனை நேரமாக அதுல்யா இணைப்பில் இருந்ததை உணர்ந்தான் . தலையில் கை வைத்தவன் " ஷிட்" என்று மீண்டும் மீண்டும் அழைக்க அவளோ அந்த தொடுதிரையையே கண்ணீருடன் வெறித்தபடி அமர்ந்திருந்தாள் .

சஞ்ஜீவ் மீண்டும் மீண்டும் அழைக்க அவளோ மூன்றாவது அழைப்பில் ஏற்றவள் அமைதியாக இருக்க அவனோ " கூப்பிட்டா எடுக்க மாட்டியா அம்மு?" என்று கத்த

அவளோ விசும்பலுடன் " நான் .. நான் தப்பா.. " என்று கேட்க

அவனோ அவளின் குரலில் உடைந்தவன் " அப்படி எல்லாம் ஏதும் இல்லடா... அவங்க ஊருலயே வளர்ந்தவங்க ... புரிஞ்சுப்பாங்க " என்று கூற

அவளோ " இல்... இல்ல.... நான் எல்லாமே கேட்டேன் ... உங்க அப்பா .." என்று கேவ

அவனோ " அம்மு ப்ளீஸ்... " என்றவனிற்கோ யாரை சமாளிப்பதென்றே புரியவில்லை .

அதுல்யா " நான்... நான் கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன் ப்ளீஸ் .. " என்று கூற

அவனோ " சரி ஆனா .. ஞாபகம் வச்சுக்கோ .. நான் இருக்கேன் " என்று கூற அவளோ ம்ம் என்று அழைப்பை துண்டித்தாள் .

அதை வைத்தவளிற்கோ அடுத்த அழைப்பு வர அது அவள் மாடெல்லிங் செய்து கொண்டிருக்கும் agency . குரலை செறுமியபடி அதை ஏற்றவள் " ஹலோ அதுல்யா here " என்று கூற

அவரோ " அதுல்யா... நீங்க ஆடிஷன் குடுத்துருந்த lakme இந்தியா ad கு செலக்ட் ஆகி இருக்கீங்க .... இன்னைக்கு நீலாங்கரை பீச் ஹவுஸ் வந்தீங்கன்னா sign பண்ணிரலாம் contract " என்று கூற

அவளோ புருவம் சுருக்கியவள் " எப்போவும் ஆபீஸ்ல தான சார் sign பண்ணுவேன் .. இப்போ என்ன ?" என்று கேட்க

அவரோ " ம்... அதுல்யா உங்கள sirkku ரொம்ப புடுச்சு இருக்கு he wants to work more with you.. திஸ் .. this is a great oppurtunity " என்று கூற

அவளோ புருவம் சுருக்கியவள் " என்ன அட்ஜஸ்ட்மெண்டா ?" என்று கேட்க

அப்புறம் இருந்தவரோ "you are sharp .... ஆனா அதுல்யா இது உங்க careerke பெரிய milestone . நம்ம contract renew பண்ணனும் நினைவிருக்கும்னு நெனைக்கிறேன் " என்று கூற அவளோ நொந்தே போனாள் .

நெற்றியை அழுத்தி நீவியவள் அடுத்த பத்து வினாடியில் தீர்க்கமாக முடிவெடுத்தவள் " சாரி சார் .. நான் இனி மோடெல்லிங் பண்ண போறதில்ல ... so i quit . ஆபீஸ்ல வந்து termination contract sign பண்ணி குடுத்துருறேன். " எங்க அவரோ " அதுல்யா யோசிச்சு முடிவெடுங்க. இது வேணாம்னா கூட ஓகே வேற ப்ராஜெக்ட் பண்ணலாம் terminate பண்ணா ... உங்களோட careerey கிளோஸ் ஆயிரும் " என்று கூற

அவளோ " contract ரெடி பண்ணிட்டு சொல்லுங்க சார் " என்று அழைப்பை வைத்துவிட்டாள். மனது ஆயிரம் கிலோ கொண்ட கல்லை மேலே வைத்தது போல் கனத்தது . விவரம் தெரிந்த வயது தொடங்கி இந்த நிலைக்கு அவள் வர எத்தனையோ இடர்களை தாண்டி இருக்கிறாள் . பல நாள் பிடித்ததை உண்ணாமல் , உடல் நோவும் பொழுதும் உடற்பயிற்சியை விடாமல் , அத்தனை அவமானங்களை தாண்டி அவள் அடைந்த இடத்தை விட்டு கொடுத்திருக்கிறாள் .... அவனிற்காக... அவர்களுக்காக . அந்த விடுதி அறை மூச்சு முட்டுவதை போல் இருக்க மேகா தங்கி இருக்கும் வீட்டிற்கு அவளை தேடி சென்றாள் மனபாரம் குறைய .

சஞ்ஜீவ் சிறிது நேரம் தலைவலிப்பது போல் இருக்க அமர்ந்தவன் இனி என்ன செய்யவேண்டும் என்று தீவிரமாக யோசிக்க துவங்கி இருந்தான் . இவனின் தந்தை இதை இத்தோடு விடுபவர் அல்ல . அடுத்து அவர் அதுல்யாவின் பெற்றோர்களின் விபரத்தை சேகரித்து பிரெச்சனை செய்யும் முன் இதை சுமூகமாக முடிக்க எண்ணினான் அவன் . அலைபேசியை பார்க்க மேகாவோ அதுல்யா அவளது வீட்டிற்கு வந்திருப்பதை கூறி இருந்தாள் .

மேகா " என்னாச்சு ?இப்படியே அழுதுட்டே இருந்தா என்ன செய்ய ?"

அதுல்யா " modelling விட்டுட்டேன் .. " என்று கூற

மேகாவோ கண்களை அகல விரித்தவள் " என்னது?? ஏய்ய்ய் பைத்தியமாடி பிடிச்சுருக்கு உனக்கு ? இவ்வளவு தூரம் வந்ததுக்கப்புறோம் ... அத்து ஹவ் யு ... ?"

அதுல்யா " எனக்கு அவர் வேணும் மேகா " என்று கூற

மேகாவோ அவளை கண்களை உருட்டி முறைத்தவள் " அவருக்கு கூட உன்னோட passionah விட சொல்ல ரைட்ஸ் இல்ல .... அத்து ரொம்ப தப்பான முடிவு இது ... ரொம்ப பீல் பண்ணுவ . ஆயிரம் வாட்டி சொல்லிருக்கேன் இப்போவும் சொல்றேன் ரொம்ப அவசரப்படுற நிதானமா யோசிச்சு " என்று கூற

அவளோ " என்ன நிதானமா யோசிச்சு ? அவன் என்ன அட்ஜஸ்ட் பண்ண சொல்றான் ... இந்த careerkaaga என் அம்மா அப்பாகிட்ட போராடி அடுத்து அவர்கிட்ட போராடி அப்பறோம் அவர் அம்மா கிட்ட இப்போ அவர் அப்பா ...என்னால முடியலடி நா .... நான் தப்பான பொண்ணு மாதிரி பேசுறாருடி ... இதே நினைப்போட எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்க ?அவர் தங்கச்சி வேற ... வேண்டாம் டி" என்று கூற

மேகாவோ " அத்து ஆனா நீ நினைவு தெரிஞ்சதுல இருந்து ஆசைப்பட்டது டி இது " என்று கூற

அவளோ " எனக்கு அவர் வேணும்... அதுக்காக எது போனாலும் பிரச்சன இல்ல ... " என்று கூற அறையின் வாசலில் ஏதோ அரவம் கேட்டு திரும்பியவள் கண்டதென்னவோ கண்ணில் என்ன பாவனை என்றே பகுத்தறிய முடியாதபடி கண்கள் சிவக்க நின்றிருந்த சஞ்ஜீவை தான். அதுல்யா அவனை அதிர்ச்சியுடன் பார்க்க மேகாவோ அந்த அறை விட்டு வெளியேறிவிட்டாள் ஒரு மௌனப் பார்வையுடன் .

சஞ்ஜீவ் அவள் அருகில் மெத்தையில் அமர்ந்தவன் அவளை பார்த்து " ஏன் இப்டி பண்ண ?,... நான் பாத்துக்குறேன்னு சொன்னேன்ல அம்மு " என்று கூற

அவளோ " அதெல்லாம் ஒன்னும் இல்ல பா ... த... தப்பா பேசுனாங்க ... எனக்கே விருப்பம் இல்ல... அதான் " என்று கூற

அவனோ அவளின் கன்னத்தை பற்றி நெற்றி முட்டியவன் சிறிது நேரம் கண்மூடி அவள் நேசத்தை உணர்ந்தபடி அமர்ந்து கொண்டான் . என்ன செய்துவிட்டான் இப்படி ஒரு தன்னலமில்லாத அன்பை அவளிடம் பெற ? சிறிது நேரம் கழித்து கண் விழித்தவன் அவளின் முகத்தை பார்க்க அவளோ அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள் .

அவனின் தொடர் பார்வையில் சிலிர்த்தவளோ கன்னத்தில் இருந்த அவனின் கையை விளக்கி " நா... நான் வெளிய போறேன் " என்று கூறி எந்திரிக்க அவனோ அவளின் கையை பற்றி அவளை மடியில் அமர வைத்தவன் அவள் கழுத்தை பற்றி திருப்பிட அவளோ அவனின் திடீர் செய்கையில் கண்கள் தெரித்துவிடும்படி பார்த்தாள்.

அவள் கண்களிலேயே தேங்கி இருந்த அவன் கூர் பார்வையிலும் கன்னத்தில் மோதிய உஷ்ணமூச்சிலும் பதறியவள் ... " ஜி... ஜீவா ... என்ன பண்றீங்க ?" என்று கேட்க

அவனோ மேலும் அவளை தன்னிடம் இழுத்தவன் " ஐ... wanna கிஸ் யூ அம்மு.....எதுவும் கேட்காத ... இப்போ ... ஐ நீட் திஸ் " என்று அருகில் வர அவளோ அவனின் கண்களையே உற்று நோக்கியவள் அதில் தெரிந்த காதலிலும் கிறக்கத்தில் தன்னால் இமைகளை மூடிக்கொள்ள .... இருவர் இதயம் இணைந்திட இமைகள் உரசிட மூச்சுக்காற்றும் இணைந்து இயைந்திட உதடுகள் இருந்தும் இணைந்துகொண்டது இருவர் ஆன்மாவையும் இணைக்கும் முயற்சியில்.

நிமிடங்கள் கரைந்திட நுரையீரல் சுவாசத்திற்கு கெஞ்சிட விலகியவர்கள் நெற்றிமுட்டியபடி அந்த நிமிடத்தை நினைத்து சிரித்துக்கொண்டனர் . அதுல்யாவோ அவனின் தொழில் புதைந்துகொண்டாள் வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைக்க . அவளின் தலையை வருடியபடி முகத்தை நிமிர்த்தியவன் அவள் கண்ணை பார்த்து " are you sure ? நான் பேசி புரியவைக்குறேன் " என்று கூற

அவளோ " எனக்கு வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் எனக்கு வேண்டாம். சீக்கரம் என் வீட்டுல வந்து பேசுங்க இன்னும் 3 மாசத்துல பைனல் இயர் முடிஞ்சுரும் " என்று கூற

அவனும் " சீக்கிரமே பேசுறேன் ... இப்போ கொஞ்சம் எனர்ஜி எடுத்துக்குறேன் " என்று அவனவலிமிருந்து முடிந்த அளவுக்கு சக்திகளை எடுத்துக்கொண்டான் அந்த காதல் கொள்ளைக்காரன் .

அங்கு இருவரும் அழகிய நிமிடங்களில் திளைத்திருக்க இங்கு வேலூரில் அவளின் வீட்டில் அர்ஜுன் அவனது அன்னை தந்தையுடன் அமர்ந்திருந்தான் அதுல்யாவை பெண் கேட்டு . 

meet you guys in marriage episode 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro