7

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"அம்மா அழாதிங்க. போதும் உங்க ரெண்டு பேரோட வனவாசமும். அண்ணா முடிவு பண்ணிட்டாங்க. இனி யார் சொன்னாலும் கேட்க மாட்டார். கவலைப்படாதீங்க... இனி எல்லாமே நல்லதாவே நடக்கட்டும்." என்று அவர் அருகில் அமர்ந்து, "சரி நீங்க தூங்குங்க. இல்லன்னா அண்ணன் அதுக்கும் என்னை தான் திட்டும்." என்று சமாதானப்படுத்தி உறங்க வைத்தாள்.

வெளியே வரவும், "தூங்கிட்டாங்களா?" என்றான் அவள் கணவன்.

"ஹ்ம்ம்... இப்போ தான் தூங்கினாங்க ஆமா நீ ஏன் இன்னும் தூங்காம இங்க என்ன பண்ற?" என்றாள் ஒற்றை புருவம் உயர்த்தி.

"எனக்கு தூக்கம் வரலையே? அங்க வேற ஒரு கொசுவா இருக்கு." என்றதும்.

"எங்க அங்க கொசு இருக்கு? இதை நான் நம்பனும்?" என்றாள் குறும்பாய்.

"சீரியஸா பா. நீ வேணா வந்து பாரு." என்றதும், "நான் அம்மா கூட தான் தூங்க போறேன். ஒழுங்கா வம்பு பண்ணாம போய் தூங்கு." என்றாள் பொய் கோபத்துடன்.

"சரி சரி கோப படாத... நான் போறேன். நீயும் போய் தூங்கு." என்று தங்களின் அறைக்குள் நுழைந்ததும் பின்னால் சத்தம் வராமல் வந்து நிற்கவும், "இப்போ எதுக்கு வந்த? போ." என்று மெத்தையில் கணவன் அமர்ந்து கொண்டதும், "ரொம்ப தான் பண்ணாத டா. அப்புறம் எனக்கு கோபம் வந்துரும்." என்றாள்.

எதுவும் பேசாமல் அவளை பார்த்து கொண்டிருந்தவன் அவள் கரம் பிடித்து அமர வைத்து மடியினில் தலை வைத்து படுத்து கொண்டான்.

மென்மையான தலை கோதலில் பேச்சுக்கு இடமில்லை.

உறக்கம் கலையாமல் கணவனின் தலையை மெத்தையில் நகர்த்தி வைத்து நெற்றியில் அழகான முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு வெளியேறினாள்.

கூடத்தில் வந்து அமர்ந்தவளின் அலைபேசி ஒலியில் முகம் பிரகாசிக்க, "அண்ணா! நீங்க சொன்ன மாதிரி செஞ்சுட்டேன்." என்றாள்.

"...."

"ஹம் ணா... ஒரு மாத்திரை தான் போட்டேன். இப்போ தான் தூங்க ஆரம்பிச்சாங்க." என்றாள்.

"...."

"ணா அம்மாக்கு தெரியாம இதெல்லாம் பன்றோம். தெரிஞ்சா என்ன சொல்வாங்கன்னு பயமா இருக்கு." என்று தயங்கியதும்.

"...."

"இல்ல ணா. நான் எதுவும் சொல்லல. என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம். நீ வாண்ணா. நீ வந்தாலே அம்மாக்கு எல்லாம் சரியாகிடும்." என்றாள் மகிழ்ச்சியாய்.

"....."

"என்னண்ணா இப்படி கேட்டுட்ட?" என்றாள் கோபமாய்.

"...."

"இல்ல அவர் எதுவும் சொல்ல மாட்டார்."

"..."

"சரி இப்போ என்ன உனக்கு? அவரும் சம்மதம் சொல்லணும் அவ்ளோ தானே? நாளைக்கு காலைல உன்கிட்ட பேச சொல்றேன் போதுமா?"

"...."

"நீ என்ன சொன்னாலும் சரிண்ணா. இனி நான் இதை பார்த்துக்கிறேன் அண்ணா." என்றாள்.

"...."

"எல்லாமே முடிச்சுட்டு இருக்கியே... இன்னும் என்ன?" என்றாள்.

"..."

"சரி மீதியை நான் பார்த்துக்குறேன்." என்றாள்.

"...."

"சரிண்ணா என்னையும் அவரையும் தவிர வேற யாருக்கும் விஷயம் வெளிய தெரியாது. அதுக்கு நான் உத்திரவாதம் போதுமா? நீ அங்க இருக்க வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வாண்ணா. உன்னை பார்த்து வருஷங்கள் ஆச்சு. கண்ணுக்குள்ளையே நிக்குற." என்றாள் உரிமையாக.

"...."

"ஹ்ம்ம்... இத்தனை வருஷங்கள் நீங்க எல்லோரும் பட்டதுக்கு திருப்பி மொத்தமா கொடுப்போம்ண்ணா.  உனக்கு முழு சப்போர்ட்டா நான் இருப்பேன். நீ இந்தியா வர நாளை எதிர் பார்த்துட்டு இருக்கேன்." என்றாள்.

"....."

"சரிண்ணா நாளைக்கே நான் போய் பார்த்துட்டு வரேன். நீ நிம்மதியா இரு. அமமாவ நான் பார்த்துக்குறேன்." என்றாள்.

"..."

"ஹ்ம் உன் மாப்பிள்ளைக்கு இன்னைக்கு தலகாணி தான் சப்போர்ட். நா அம்மாகூட தூங்க போறேன்." என்று சிரித்தாள்.

"...."

"

" சரிண்ணா. குட் நைட்." என்றாள் புன்னகையுடன்.

*****

"என்னடா தூக்கம் வரலையா?" என்று தன் நண்பனை பார்த்திருந்தான் ஸ்ரீராம்.

"எப்படி வரும் ஸ்ரீ. என்னை பார்த்தா எனக்கே பரிதாபமா இருக்கு. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாதுடா." என்று எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருந்தவனின் விழிகள் கலங்கியது.

"சரி டா. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் அதுக்கான நேரமும் வந்துருச்சு. நான் உன்கூட உன் நிழல் மாதிரி இருப்பேன் டா. நீ எதை நினைச்சும் கவலை படாதே." என்று நண்பனை கட்டி கொண்டான்.

"என் பிறப்பே ஒரு சாபம் இல்லடா. எல்லா குழந்தைகளும் ஆசையா அவங்க அப்பா அம்மாகூட சந்தோஷமா விளையாடிட்டு இருந்த நேரத்துல நான் மட்டும் அனாதை மாதிரி எங்கோ ஒரு போர்டிங் ஸ்கூல்ல வளர்ந்துகிட்டு இருந்தேன். இன்னைக்கு சரியாகிடும் நாளைக்கு சரியாகிடும்னு கடைசில என்னை பெத்தவரும் போய் சேர்ந்துட்டார். இதுக்கு மேல என் அம்மாவையும் நான் இழந்துடுவேனோன்னு பயமா இருக்குடா. அம்மா மடில தலை வச்சு தூங்கணும்னு எவ்ளோ நாள் ஆசை தெரியுமா? ஆசைன்றதை விட கனவு கனவாவே போய்டுமோன்னு இருக்குடா." என்றான் நண்பனிடம் இருந்து பிரியாமல்.

"எல்லாம் உன்னோட நல்லத்துக்காக தானே டா இவ்ளோ ரிஸ்க் எடுத்துருக்காங்க  உன் பேரண்ட்ஸ்?" என்றான் ஸ்ரீ.

"உண்மை தான் ஸ்ரீ. இவ்ளோ தான்னு சொல்ல முடியாத அளவு அனுபவிச்சிருக்காங்க. இதுக்கெல்லாம் காரணமானவர்களை சும்மா விட மாட்டேன்." என்றான் ஆங்காரமாய்.

"யாரு சும்மா விட சொன்னது? நாம ரெண்டு பேரும் சேர்ந்து உரு தெரியாம அழிச்சுறுவோம் டா. உனக்கு நான் இருக்கேன்டா." என்றான் ஸ்ரீ.

"ஸ்ரீ நீ இல்லைன்னா இந்நேரம் நான் என்னவாகி இருப்பேன் னு நினைச்சாலே மனசு பதறுதுடா." என்றான்.

ஸ்ரீயின் போன் அடிக்கவும், "இது ஒன்னு எப்போ பாரு நொய் நொய்ன்னு" என்று திட்டினாலும் எடுத்து காதில் வைத்தான்.

"ஹ்ம்... சரி... எப்போ?" என்றான் முகம் சிவக்க.

"..."

"நாளைக்கு மார்னிங் அங்க இருப்பேன்.  ஓகே ரெடியா இருங்க. ஏதாவது ஏமர்ஜென்சின்னா உடனே உள்ள போகணும்." என்று கண்கள் சிவக்க கோபமாய் வைத்தான்.

"என்னாச்சு... தங்கச்சி பத்தியா?" என்றான் சரியாய் கணித்து.

"ஹ்ம்... என் விதிலையும் விளையாடுது பாரு. இனி அவ அங்க இருக்க வேணாம். இருக்கிறது சேபும் கிடையாது. நாளைக்கே வீட்டுக்கு கூட்டிட்டு வர போறேன்." என்றான் ஸ்ரீ.

"அதுக்குத்தான் அப்போவே கூட்டிட்டு வந்துரலாம்னு சொன்னேன். நீ தான் கேட்கவே இல்ல." என்றான் வருத்தத்துடன் குறையாக.

"எனக்கும் மட்டும் அவளை ங்க விட்டு வெக்கணும்னு ஆசையா என்ன? இல்ல நான் போய் கூப்பிட்டா உடனே உன் தங்கச்சி ஓடோடி வந்துருப்பா பாரு. நீ வேற ஏன்டா? எல்லாம் என் அக்காவை சொல்லணும். என் பொண்ணை நீ தான் கட்டிகணும்னு சொல்லி சத்தியம் வாங்கிடுச்சி. நானும் அதே ஆசையா மனசுல வளர்ந்துகிட்டு மூணு வருஷம் வெளிநாட்டுல உட்கார்ந்திருந்தேன். வந்து பார்த்தா நான் எதிர்பார்க்காதது எல்லாம் நடந்து போச்சு. எப்படியாவது அவ சந்தோஷமா இருக்காளேன்னு அமைதியா இருந்துட்டேன். ஆனா இப்போ தானே தெரியுது இவ்ளோ வேலை பாரர்த்துருக்கங்கன்னு? இனி அவங்களை உண்டு இல்லேன்னு பண்றேன் பாரு... சரி விடு...இனி முடிஞ்சதை பத்தி பேசி எண்ணாக போது." என்று கூறியபடி விழிமூடி கொண்டான்.

"சரிடா நாளைக்கு மார்னிங் போய்ட்டு வந்துரு. நானும் சீக்கிரம் வந்து தங்கச்சியை பார்க்குறேன்." என்று லேசாக புன்னகைத்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro