உறவு 26

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவள் பயந்தவாரே நிற்க " உங்கி்ட்ட கொஞ்சம் பேசனும் கொஞ்சம் வெளிய போலாமா ? " என்று கதிர் அதிகாரமாக கேட்க துளசிக்கு அவன் கூறுவதை நம்ப முடியவில்லை.. தாமதமாக சென்றால் விடுதிக் காப்பாளாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.. அதுவும் கதிருடன் தனியாக செல்ல கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அந்த பயம் அவன்மீது சந்தேகத்தினால் இல்லை. எங்கே அவன் திட்டிவிடுவானோ இல்லை தன்னை மறந்துவிடு என கட்டாயப்படுத்துவானோ என்கிற பயம்தான்..

அவள் பதிலேதும் கூறாமல் அமைதியாகவே இருக்க " அபிக்கிட்ட பர்மிசன் வாங்கிட்டேன்.. என்மேல நம்பிக்கை இருந்தா வா " என உறுதியாக சொல்லிட அவளும் வருவதாக சம்மதித்தாள்.

வண்டியில் செல்லும் வரையில் கனி மாட்டிக் கொண்டுவிட்டாளோ.. எதற்காக தன்னிடம் பேச நினைக்கிறான் என புரியாமல் யோசித்துக் கொண்டே வந்தாள்..
இருவரும் கல்லூரிக்கு ஒரு மைல் தள்ளியுள்ள தேநீர் விடுதிக்கு வந்து சேர்ந்தனர்..

எதையும் சுற்றி வளைக்க விரும்பாமல் பேச்சை ஆரம்பித்தான் கதிர்.
" துளசி படிப்பெல்லாம் எப்படி போகுது? " என்றான்.

அவன் என்ன கேட்பானோ என்று பயந்திருந்தவளுக்கு  இந்தக் கேள்வி சற்று நிம்மதியைத் தர
பதில் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள்..அவளது பதிலில் அவனது கை முஷ்டிகளை இறுக்குவதைப் பார்த்ததும் பயத்தில் எச்சிலை முழுங்கியவள் வாயைத் திறந்து " நல்லா போகுது .. நெக்ஸ்ட் வீக்ல இருந்து செமஸ்டர் ஸ்டார்ட் ஆகப் போகுது " என்றாள்..

" பிரேபேர் பண்ணியாச்சா ? " அதே கோபத்தில் கேட்க,

" ஹூம் பண்ணிட்டேன் " என்று அவள் கூறி முடிக்கும் முன்பே " ஹோ இதான் நீங்க பிரீபேர் பண்ண இலட்சனமா" என தனது அலைபேசிக்கு வந்த துளசியின் மதிப்பெண்களைக் காண்பித்தான்.

" நீ என்ன நினைச்சிட்டுருக்க துளசி.. உன்னோட மார்க் லாஸ்ட்  ரிவிசன்ல அப்டியே டௌனாகிருக்கு.. இதுக்கும் நீ எவ்ளோ பிரிலியன்ட் ஸ்டூடண்ட்.. உனக்கு படிக்குற வயசுல அப்படி என்ன பிரச்சனை.. இதுவே கனியா இருந்தா கண்டிப்பா நான் கேட்டிருக்க மாட்டேன். அவளால அவ்ளோதான் முடியும்..அதுவும் அவளுக்கு லைபோட சீரியஸ்னஸ் சுத்தமா தெரியாது.. ஆனா நீ அப்படி இல்ல.. உங்க அம்மா படற கஷ்டத்த பார்த்து பார்த்து வளர்ந்தவ.. எனக்கு உன் மார்க்ஸ் பார்க்கிறப்ப எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா.. என்னால தான் நீ இப்படி மாறிட்டியோனு குற்ற உணர்ச்சியா இருக்குமா" என்று கோபப்பட்டவன் " சரி என்ன பிராபளம் சொல்லு.. படிக்க முடியலையா.. இல்ல படிக்க பிடிக்கலையா " என்று கேட்கவும் அவள் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது..

ஆம் அவள் கவனம் படிப்பில் சிதறித்தான் கிடந்தது.. அதுவும் ஐசு கதிரின் வீட்டில் தங்கியதிலிருந்து.. அசோக்கின் சுய ரூபம் தெரிந்தபின்பு ஐசுவை அவனோடு வாழவைக்க கந்தனும் தேவியும் நிச்சயமாக சம்மதிக்க மாட்டார்கள்.. கதிரை எப்படியாவது வற்புறுத்தி ஐசுவிற்கு மறுமணம் செய்து விடுவார்கள் என பயந்து கொண்டே இருந்தாள்.. அவளின் பயத்தினை அதிகப்படுத்தவே அதேபோல சொப்பனங்களும் வந்து வந்து தொல்லை செய்து அவளை இம்சித்தன..அவளுக்கு ஆறுதல் சொல்ல கனியும் அருகில் இல்லை..
அந்தக் குழப்பத்திலே நன்றாக படித்த பாடத்தையும் தேர்வில் எழுத முடியாமல் திண்டாடிப் போனாள்.. அதற்காக அவள் தேர்ச்சி பெறாமல் இல்லை. என்ன முன்பு எடுக்கும் 95+ இல்லாமல் 75+ என்றாகியது. இதனை யார் போட்டுக் கொடுத்திருப்பார்கள் என குழம்பிப் போனவளிடம் " சொல்லு " என்று மிரட்டினான்..

பதில் பேசாமல் மௌனமாய் இருந்தவளின்
கண்களைப் பார்க்க அதுவோ ' இவையனைத்தும்  உன்னால்தான்.. உன்மீது நான் கொண்ட காதலினால்தான் என்பது உனக்குப் புரியவில்லையா '
என்று கேட்டது போல இருந்தது கதிருக்கு..

அவள் கண்களைப் பார்க்க முடியாது
தன்னை நிதானப்படுத்திக் கொண்ட கதிர்
" துளசி இங்கப்பாரு நான் உன்னை குத்தம் சொல்லல.. ஏன்னா உன் வயசு அப்படி.. என்மேல இருக்குறது எல்லாம் ஜஸ்ட் ஒரு அட்ரேக்சன்தான்.. இதுவே நீ படிச்சு ஜாப் போறப்பலா நான் யார்னே கூட மறந்துடிவ.. அதுனால இப்ப நீ படிக்கிற வழிய பாரு சரியாமா.. " என அவன் பொறுமையாக பேசிட

அவள் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் " இனிமே ஒழுங்கா படிக்கிறேன் " என்றாள் தலைகுனிந்தபடி..
அவள் விதாண்டாவாதம் செய்யாமல் சரி என்றது அவனுக்கு ஏனோ திருப்தியைத் தரவில்லை.

" துளசி நீ ரொம்ப புத்திசாலிப் பொண்ணு.. இப்படி நடந்துக்கறது எனக்கு வருத்தமா இருக்குமா.. ஏற்கனவே என்னாலதான்... என் முட்டாள்தனமான நம்பிக்கையாலதான்
என் அக்கா குடும்பம் சிதைஞ்சிருச்சுனு துடிச்சிட்டு இருக்கேன்.. இப்போ நீயும் இந்தமாறி நடந்துகிட்டா என்னமா நான் பண்றது " என அவன் குரல் விரக்தியாய் வெளிவந்தது..

இதுவரை பொறுமையாக இருந்தவள் அவனே அவனைக் குறைக் கூறிக் கொள்வதை தாங்கிக் கொள்ளாதவள்
தனது கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்து விட்டு
" உங்களால யாருக்கும் எந்த துரோகமும் பண்ண முடியாது. ஐசு அக்கா வாழ்க்கை அழிய நீங்க ஒருபோதும் காரணமில்லை.. அது அவுங்களே தேடிக்கிட்ட லைப்.. அசோக் எப்ப இருந்தாலும் அவனோட சுயரூபத்தை காமிச்சுதான் இருப்பான்.. அப்ரோ என்னைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க.. இதுவும் நானே தேடிக்கிட்ட வாழ்க்கை தான்.. இதுல வர நல்லதையும் கெட்டதையும் நான் அனுபவிச்சுதான் ஆகனும்.. உங்கள கட்டாயப்படுத்தி என்னால என் காதல ஜெயிக்க நான் விரும்பல.. நீங்க கண்டிப்பா என்னோட காதல ஒருநாள் புரிஞ்சிப்பீங்கனு நம்பிதான் தைரியமா இருக்கமாறி நடிச்சிட்டு இருக்கேன்.. தயவுசெஞ்சு அதை அட்ரேக்சனு அசிங்கப் படுத்தாதீங்க.. எனக்கு கல்யாணம் பண்ற வயசில்லதான்.. அதேசமயம் காதல்னா என்னனு கூட புரிஞ்சிக்காத அளவு குழந்தையுமில்லை.. நானும் உங்கள என்னை உடனே ஏத்துக்க சொல்லல இல்ல. உங்களுக்கும்
ஐசு அக்கா உங்க வாழ்க்கைல ஏற்படுத்துன காயத்தை மறக்க கொஞ்ச நாள் ஆகும்.. அதுவரை நான் வெயிட் பண்றேனுதான சொல்றேன்.. நீங்க நான் உங்களுக்காக காத்துட்டு இருக்கேனு மட்டும் மறக்காம இருந்தா போதும்.. கண்டிப்பா நான் உங்கள எப்பவும் தொல்லை பண்ண மாட்டேன்.. இல்லை உங்களுக்கு வேற யாரையாச்சும் பிடிச்சுதுன்னா அவுங்கள கல்யாணம் பண்ணிக்கோங்க.. எனக்கு நீங்க சந்தோசமா இருந்தாலே போதும்.. நானும் நிம்மதியா இருப்பேன்.. " என உறுதியாக சொல்லி முடித்தவள் கூலாக அவன் ஆர்டர் பண்ணிய காபியைக் குடிக்க ஆரம்பித்தாள்..

அவளது உறுதியைக் கண்டு வியந்த கதிர் அவளை இனி மாற்ற முடியாது என்பதை உணர்ந்து அவளை விட்டுப் பிடிக்க எண்ணி " சரி முடிவா என்ன சொல்ற துளசி " எனக்  கேட்க

அவளோ " உண்மைய மறைக்காம
சொல்லணும்னா
நீங்க என்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்காம எனக்காக வெயிட் பண்ணுவேனு எனக்கு நம்பிக்கைய தந்தீங்கனா போதும்  " என சாதரணமாக சொல்லிட அவனும் " சரி  " என்று சம்மதித்தான்..

அவன் எப்படியும் தன்னை தி்ட்டுவான் என அவள் நினைத்துக் கொண்டிருக்க அவனது பதில் அவளுக்கு புரையேறச் செய்தது.

" நீங்க நிஜமாத்தான் சொல்றீங்களா " என அவள் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் கேட்டிட அவன் அழகாக புன்னகைத்தான்...

நடக்கவே நடக்காது என நினைத்தது நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்ற உற்சாகத்தில் அவள் திளைத்துக் கொண்டிருக்க
" ஆனா ஒரு கன்டிசன் " என்ற அவனது வாக்கியம் அவளை சுயநினைவுக்கு கொண்டுவந்தது..

" இதெல்லாம் நீ யுனிவர்சிட்டி பர்ஸ்ட் வந்து கோல்ட் மெடல் வாங்கிறப்பதான் புரியுதா.. அதேசமயம் ஒருவேளை உன் மனசு மாறுனாலும் நான் உன்னை தப்பா நினைக்க மாட்டேன்.." என்று விவரமாக சொல்லிட அவளோ " அப்ப நான் படிக்கனும்னு தான் எங்கிட்ட பொய் சொல்றீங்களா? " என தனது உற்சாகம் வடிந்து சோகமாக கேட்டாள்..

" துளசி நான் பொய் சொல்றவன் கிடையாதுன்னு உனக்கேத் தெரியும்..
காதலிச்சவங்க கிடைக்கலைனா எப்படி வலிக்கும்னு எனக்கும் தெரியும் மா.. அந்த வலிய நான் உனக்கு கொடுக்க விரும்பல..எல்லோர் மாறி நீயும் காலேஜ் லைப என்ஜாய் பண்ணனும்னு நினைக்கிறேன். இந்த வாக்க நான் நீ படிப்ப முடிக்கிற வரை காப்பாத்துவேன்.. அப்பவும் உன் மனசில நான் இருந்தனா உன் காதலோட உறுதிக்காகவே மனசார நான் உன்னை ஏத்துக்கிறேன்.. ஆனா அதுக்கு முன்னாடி என்னால ஒன்னும் பண்ண முடியாது. புரியுதா " என்றான் கதிர்..

கதிர் வாக்கு தவறமாட்டான் என்ற நம்பிக்கையில் " புரியுது.. இனிமே நானும் உங்கள கண்டிப்பா தொல்லை பண்ண மாட்டேன்..என்னை குறை சொல்ற மாறி நடந்துக்கவும் மாட்டேன் பிராமிஸ் " என்றவள் " ஆறு மணிக்கு கேட்ட க்ளோஸ் பண்ணிடுவாங்க.. போலாமா " என்றாள் சிரித்தபடியே..

" ம்ம்... போலாம் என்றவன் " இந்த விசயம் கனிமொழிக்கு தெரிய வேணாம் " என்றான்..

அவளுக்கு அப்போதுதான் கனி இந்நேரம் கல்லூரிக்கு வந்திருப்பாளோ இல்லையோ என்ற பயம் தோன்றியது..  அவள் முகபாவத்தை வைத்தே அவள் என்ன நினைக்கிறாள் என்பதை கண்டுகொண்டவன்
" கனி வீட்டுக்கு போயிட்டா.. அவள அவள எழில் கொண்டு வந்து விட்டுடான்.. இப்போ உன் டௌட் கிளியராகிடுச்சா.. போலாமா ? " என்றிட அவள் அசையாமல் அதே இடத்தில் நின்றாள்.

அப்போ உங்களுக்கு எல்லாமே தெரியுமா? அவ  எங்க எதுக்காக போனானும் தெரியுமா? " எனத் திக்கி திக்கி கேட்டிட அவன் ஆம் என்று தலையாட்டினான்..

" உங்களுக்கு அதுனால கோபம் இல்லையா? " என புரியாமல் கேட்டிட அவனோ " அவளுக்கு எப்ப தோணுதோ அப்ப சொல்லட்டும்.. ஐசுவோட காதல நான் புரிஞ்சிக்காம தப்பு பண்ண மாறி இப்பவும் பண்ண விரும்பல.. அவளோட சந்தோசம்தான் என் சந்தோசம்.. என்ன அவள நான் குழந்தையாவே பார்த்தனால இதை ஏத்துக்க கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.. அவ பிரச்சனைய கண்டு ஓடாம தன்னோட அக்கா வாழ்க்கைய அவளே சால்வ் பண்ண நினைக்குறா..
அவ முயற்சி ஜெயிச்சா சந்தோசம்தான..
" என்று கூறினான்..

கதிருக்கு இதுவரை தெரிந்திருக்க கனியின் காதலும் தெரிந்திருக்குமோ என சந்தேகம் தோன்றியது..
அவனுக்கு வேறுயாரோ சொல்லி தெரிவதற்கு முன்னாள்  தாமே சொல்லி விடலாமா? இல்லை கனியே சொன்னால் நல்லார்க்குமா?   என மனம் அவளைக் குழப்ப அந்தக் குழப்பத்தையும் போக்கும் வகையில் 

" இப்போலாம் காதல் வந்தா யாரும் யாரையும் யோசிக்கிறது இல்லல.. பெத்தவங்க.. வளர்த்தவுங்க.. அண்ணா அக்கானு எல்லாரும் ரெண்டாம்பட்சம் ஆகிடறாங்கல்ல.. அவள் இல்லையென்று தலையசைக்க ..
அவனோ " உனக்கும் இதெல்லாம் புரியாதுமா.. நீயும் பேரண்டா இருந்து யோசிக்கும்போதுதான் அந்த வலி தெரியும் " என்று கூறும்போது அவன் குரல் நன்றாகவே உடைந்து விட்டது.. அவன் படும்பாடு அவளுக்கும் நன்றாகவே புரிந்தது.. இதே வலியைத் தான் கனியின் காதல் தெரியும்போது அவளும் அனுபவித்தாள்..

வேறெதுவும் பேசாமல் அவளை விடுதியில் சேர்த்து விட்டவன் அவளைத் திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிட்டான்.. நடப்பது எதுவும் அவளுக்கு சந்தோசத்தைத் தரவில்லை.. ஆனால் அவன் இதுவரை தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ததே போதும் என நினைத்துக் கொண்டாள்..

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

அசோக்கை சந்தித்துவிட்டு வந்த கனிக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அவனும் நன்றாக இளைத்து கண்ணில் கருவளையம் தோன்ற பாவமாகத்தான் இருந்தது.. ஆனால் அவன் பேச்சுக்கொன்றும் குறைச்சல் இல்லை.. என்னதான் தன்னிடம் அதே பாசத்தோடு பேசினாலும் அவள் கதிரினைப் பற்றி பேசும்போதோ ஐசுவைப் பற்றி பேச ஆரம்பிக்கும் போதோ அவன் அதைக் கேட்கத் தயாராக இல்லை..

அவனை மனதில் அர்ச்சித்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தவள்
ஐசு கையில் எதையோ யாரும் பார்க்கிறார்களா என பார்த்துவிட்டு திருட்டுத் தனமாக பையில் மறைத்து வைப்பதை கண்டவள் ஐசுவிடம் சென்று என்ன என்று கேட்டாள்..

கனியைப் பார்த்து சற்று மிரண்டாலும் அடுத்த நொடியே அதை மறைக்க முயல கனி அவள் கையிலிருந்ததை சிரமப்பட்டு வாங்கி அதைப் பிரித்துப் பார்க்க ஐசு வாயைப் பொத்திக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்..
💜💜💜💜💜💜💜💜💜💜💜

கனியை  வீட்டிற்கு விட்டு வந்த எழில் சந்தோசமாக தனது காதல் நினைவுகளில் மூழ்கியிருக்க அவனருகே வந்து அமர்ந்தார் செல்வராஜ்.

அப்பா எதும் வேணுமாப்பா என அவன் எழுந்து கொள்ள அவனை அருகில் அமர வைத்தவர், எழில் நான் என்னோட பசங்க மேல கண் மூடித்தனமா நம்பிக்கை வெச்சிருந்தேன்.. அவுங்கள நான் நல்லபடியா வளர்த்திருக்கேனு எல்லோர் கிட்டயும் பெருமையா சொல்வேன்.ஆனா அதை அசோக் தரமட்டமாக்கிட்டான்.. அவன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டேனு சொல்லி கூட்டி வந்தப்ப கூட அவன் மேல இருக்க நம்பிக்கைல எந்த கேள்வியும் கேட்காம ஏத்துக்கிட்டேன்.. அவ்ளோ ஏன் அவன் எங்கிட்ட ஐசுவ பத்தி பொய் சொல்லி ஏமாத்திருக்கான்னு தெரிஞ்சும் சரி காதல் வேகத்துல பண்ணிட்டானு கண்டுக்காம விட்டுட்டேன்.. ஆனா தன்னை நம்பி வந்தவள ..... என அதற்கு மேல் பேச முடியாமல் உணர்ச்சி வசப்பட ,
அப்பா புரியுதுப்பா.. நீங்க எதும் பேசாதீங்க.. எல்லாம் சரியாகிடும் என அவன் ஆறுதல் கூறினாலும் அவர் ஓயவில்லை.

ஏற்கனவே ஐசுவோட வாழ்க்கை பிரச்சனைல இருக்கு.. இதுல அவளோட தங்கை வாழ்க்கைக்கும் ஒன்னுனா அந்தக் குடும்பம் தாங்காதுடா.. உன்மேல வெச்சிருக்கிற நம்பிக்கையும் இழக்க வெச்சிடாதடா என அவர் கெஞ்சவும்தான் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டான்.

அப்பா நான் அவள மனசார காதலிக்குறேன்.. அவள நல்லா பார்த்துப்பேன்பா... என்னை நம்புங்க.. என அவன் கெஞ்சினாலும் வேண்டாம்டா அந்தப் பொண்ணு நல்லா இருக்கட்டும்.. கதிர் அவமேல உசிரையே வெச்சிருக்கான்.. அவளுக்கு ஒன்னுனா உன்னை கொன்னுடுவான்.. அவள மறந்துடுடா. இதை உன்னை பெத்த கடனுக்காக கேட்கிறேன்..ப்ளீஷ் என்று சொன்னவர் எழுந்து செல்ல... அவனோ தனது தந்தையின் மனதை யார் மாற்றியிருப்பார்கள் எனக் குழம்பிப் போனான்.  அவன் மனதில் உங்க அண்ணன் மாறி காதலிச்ச கொஞ்ச நாள்ள வேணானு கழட்டி விட மாட்டிங்கள்ள என அவள் விளையாட்டாக கேட்டது நினைவில் வந்து போனது.. அந்தக் கள்ளமில்லா குழந்தை உள்ளத்தைக் காயப்படுத்த தன்னால் முடியுமோ.. தன்னால் அவளின்றி வாழ முடியுமோ என்ற சிந்தனையில் அப்படியே உறைந்து நிற்க அசோக்கின் அறையில் எதுவோ சத்தம் கேட்க அந்த இடத்திற்கு சென்றான்..

அங்கே அசோக் பைத்தியம் பிடித்தவன் போல கையில் உள்ள பேப்பரைப் பார்த்துக் கொண்டே அனைத்து பொருட்களையும் உடைத்துக் கொண்டிருந்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro