உறவு 27

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அசோக் அடுத்து விலையுயர்ந்த கண்ணாடி ஜாடியை உடைக்கப் போகும்போது அதைத் தடுத்த எழில் அதை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு வலுக்கட்டாயமாக அவன் கையிலுள்ள காகிதத்தை வாங்கியவன் அதனை படித்ததும் அவனை ஓங்கி பளாரென்று அறைந்து விட்டான்.

இதுவரை தன்னிடம் அதிர்ந்துகூட பேசாதவன் தன்னை அடித்ததில் கோபம் கொண்டு அவனும் எழிலை அடிக்க கையோங்க அதைத் தாங்கிப் பிடித்தவன் " நீங்க எல்லை மீறி போயிட்டிங்க.. அண்ணி மாறி வொய்ப் கிடைக்க நீங்க கொடுத்து வெச்சிருக்கனும்.. ஆனா நீங்க கைல கிடைச்ச பொக்கிசத்த தூக்கி எறிய பார்க்கிறீங்க..அண்ணி அப்படி என்ன தப்பு செஞ்சாங்க.. பெத்தவுங்க கூட வேணாம்னு கூட சொல்லிட்டு உங்கள நம்பி வந்தாங்களே அதுவா.. இல்ல பெத்த மகன் மாறி நினைச்சு என்கூட பழகுனாங்களே..அதுவா
ச்சே.. நீங்க தான் என் அண்ணானே என்னால நம்ப முடியல.. உங்க கிட்ட பேசக்கூட பிடிக்கல.. " என்றவன் அவன் கையிலுள்ள விவாகரத்து பத்திரத்தை கிழித்து எறிந்தான்.

அவன் போனதும் குளியலறைக்குள் சென்றவன் குளிர்ந்த நீரினால் தன்னை சாந்தப்படுத்த நினைத்தாலும் அவனின் கோபம் மட்டுப்படவில்லை..

கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க அவனுக்கோ அதில் தன் டிரைவர் நீட்டிய விவாகரத்து பத்திரத்தில் மறுக்காமல் கையெழுத்திட்ட ஐசு கண்முன் வந்து போனாள்.. " ஐசு... ஐசு...ஐசு " எனக் கத்தியவன் சோர்ந்து போய் தரையில் அமர்ந்தான்..

" ஐசு ஏன்டி என்ன புரிஞ்சிக்க மாட்ற.. என்கிட்ட வந்திருடி.. இது எல்லாமே நீ என்ன தேடி வரனும்னு தாண்டி பண்ற. என்னை விட்டு போயிடாத.. நீ எனக்கு வேணும்டி.. எனக்கு மட்டும்தான் வேணும். நீ எங்கிட்ட வந்தால் போதும்.. இந்த ஊரு தேவை இல்ல.. இந்த பணம்.. கார்..பங்களா எதும் தேவல்ல.. நீயும் நானும் இவுங்க யாருமே இல்லாத ஊருக்கு போய் சந்தோசமா இருக்கலாம்.. இவுங்க என்னை வில்லனா காமிக்கிறாங்க.. நான் ஹூரோடி.. உன்னோட ஹீரோ..உன்னை உள்ளங்கைல வெச்சு பார்த்துப்பேன்டி.. வாடி. " என அழுதவன் அடுத்த நொடியே " நீ வேணா.. என்னை விட்டு போனல நீ வேணா.. நான் உன்னை விட்டு இருந்தா கஸ்டப்படுவேனு தெரிஞ்சும் போனல்ல.. நீ வேணா.. அந்தக் கதிர் வீட்டில போய் ஓசி சோறு திங்கறல்ல.. போ.. நீ வேணா.. " என்று புலம்ப ஆரம்பித்தான். அவனும் ஐசுவேத் தன்னை தேடி வரவைக்க எவ்வளவோ செய்து பார்த்துவிட்டான். கதிர் கண்டிப்பாக தன்னை ஐசுவிடம் கெட்டவனாக காண்பித்திருப்பான்.. அதனால் அவன்மேல் உள்ள பாசத்திற்காக வழக்கம் போல தன்னிடம் நேரடியாக சண்டையிட முயல்வாள் என நினைத்து அவன் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததால் அடுத்த போட்டதுதான் இந்த விவாகரத்து பத்திரம்.. அவள் அப்போதும் எதிர்ப்பு காட்டாமல் இருந்தது அவனுக்கு இன்னும் ஏமாற்றத்தை தந்தது.. 
அவனது காதல் அவனது ஜீவன் அவனது சுவாசம் அவனது சந்தோசம் என யாதுமாகி நின்றவள் தன்னை பிரிந்து சந்தோசமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறாள் என நினைக்கும்போது மட்டும் அவனை அறியாமலே தன்சுயத்தை இழந்து பைத்தியம் பிடித்தவன் போல என்ன செய்கிறான் ஏது செய்கிறான் என்பதை அறியாமல் நடந்து கொள்கிறான்.. அவன் செய்வது சரியா தவறா என்று அவனுக்கு பாகுபாடு தெரியவில்லை.. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.. அதில் பாசம் மட்டும் என்ன விதிவிலக்கா?

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

என்னம்மா தேவையான எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டியா.. அங்க போய் கடைய தேடிகிட்டு இருக்காதா.. என்றவாறே ஊருக்குச் செல்ல தேவையான பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் சோன்பப்டியின் தந்தை

அவள் செய்யும் எதையும் குறை கூறும் இவர் அவள் வெளியூருக்குச் சென்றால் மட்டும் என்னவோ எதுவும் சொல்வதில்லை.. மகள் என்னவோ திருமணமாகி செல்வது போல அத்தனை உபசரிப்பும் கவனிப்பும் என மற்ற நேரத்தில் முள் கட்டிய முகமாய் இருப்பவர் இந்த நேரத்தில் புன்னகைப் பூவாய் மலர்ந்திருப்பார்.. பிரியாவோ இந்த நாளுக்காகவே அலுவலகத்தில் ஏற்பாடு செய்யும் இன்பச் சுற்றுலாவில் தவறாமல் கலந்து கொள்வாள்.
இதில் என்ன சந்தோசத்தைக் காண்கிறார் என்பது புரியாமல் கிளம்பிக் கொண்டிருக்க அவளது அலைபேசி சிணுங்கியது.. அது மூட்டைப் பூச்சி எனக் காட்ட தனது தந்தையை சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தவள் அவர் சமையல் கட்டில் இருப்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சுடன்

" ஹான் சொல்லுங்க சார்.. என்ன லேட் நைட்ல கால் பண்ணிருக்கிங்க.. " என அவள் அமைதியாக கேட்டிட,
அவனோ " ஹேய் சூனியக்காரி.. ஒன்னுமே தெரியாத மாறி நடிக்காத.. நான் எதுக்கு கால் பண்ணேனு உனக்குத் தெரியாதா. அதென்ன நம்ம டீம்ல என் பேர் மட்டுமில்ல. மரியாதையா சொல்லு. அது உன் வேலைதான?

என்னை தனியா விட்டு போறதுல்ல உனக்கு அவ்ளோ சந்தோசம் ...இல்ல.. " என பொரிந்து தள்ளினான்..

" ஹோ சார் நீங்க எப்படி தனியா இருப்பிங்க.. அதான் உங்க வெள்ள பெருச்சாளி பிரித்தீ டார்லிங் உங்களுக்கு கம்பெனி கொடுக்க இருப்பாங்கல்ல.. உங்கள டிஷ்டர்ப் பண்ண நாங்களும் இருக்க மாட்டோம்.
ஜாலியா என்ஜாய் பண்ண வேண்டியதுதான.. எதுக்கு டென்சன் ஆகறீங்க.. " என்ற அவளது கேலிப் பேச்சு அவனை இன்னும் எரிச்சல் படுத்தியது.. தன் காதலைப் புரிந்து கொள்ளாமல் வேறொருத்தியுடன் தன்னை இணைத்து வைத்து பேசுகிறாளே என்ற கோபத்தில் இருந்தவன் அவளது மனநிலையை கணக்கிட மறந்துவிட்டான்.

" இப்போ என்னையும் கூட்டிட்டு போக முடியுமா.. முடியாதா.." என்று அவன் உச்ச கோபத்தில் கேட்டிட,

" சாரி மிஸ்டர் அபிமன்யூ.. நீங்க என்னோட ஸ்கூல்மேட் என்கிற காரணத்துக்காக என்னால உங்கள  ஸ்பெசலா ட்ரீட் பண்ண முடியாது..  உங்கள நெக்ஸ்ட் டைம் வேணும்னா ரெக்கமென்ட் பண்றேன் " என்றதும் எதிர்முனையில் அணைப்பு  துண்டிக்கப்பட்டது.

அனைவரிடமும் சகஜமாய் பழகும் அபி பெண்களிடம் கொஞ்சமல்ல அதிகமாகவே உரிமை எடுத்துக் கொள்வான். அந்தவகையில் வந்ததுதான் அவளுக்கு பிரீத்தா என்கிற தலைவலி.. அவன் வேலையில் சேர்ந்த இரண்டு நாளிலே  தன் மேலதிகாரியிடம் பேசி அவர்களது டீமில் சேர்ந்துக் கொண்டாள்.. அபியும் அவளிடம் எந்த மறுப்பும் சொல்லாமல் இழித்துக் கொண்டு பழகுவது அவளுக்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்தியது.. அதுவும் உடன் வேலை புரிபவர்கள் அவர்கள் ஜோடிப் பொருத்தம் அருமையாக உள்ளது என்று அடிக்கடி அவளை சீண்டிக் கொண்டே இருந்தனர்.. 
அவனோ இது அனைத்தையும் கண்டும் காணாதவாறு இருப்பதே அவனது விருப்பத்தை உணர்த்த, அவர்கள் நெருக்கத்தை விரும்பாதவள்  மதிய  உணவு வேலையிலும் அவனை தவிர்க்க ஆரம்பித்தாள்..

அவனுக்குப் பின்பு வேறு யாரிடமும் மனமொன்றாதவள் அனைவரிடமும் சற்று தள்ளியே இருக்க இவளுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாருமில்லை.. அவனை இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்த்ததும் தான் இழந்த சந்தோசத்தை அடைய போவதாக  உற்சாக வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்தவளை அவனது ஒதுக்கம் அவளை இன்னும் தனிமையாக்கியது..  இதற்கு பேசாமல் அவனை பார்க்காமலே இருந்திருந்தால் கூட அவன் மேல் நன்மதிப்பை வைத்திருப்பாள் போல.. நாளுக்கு நாள் அவனது செயல் அவளுக்கு பிபியை அதிகப் படுத்திக் கொண்டே போனது.
ஆனால் அவளது கோபத்திற்கான காரணத்தை மட்டும் உணர மறுத்துவிட்டாள். அவளது கோபத்திற்கு கொஞ்சம் விடுப்பு எடுக்கத்தான் வேண்டுமென்றே அவனது பெயரை சுற்றுலா செல்வதில் நீக்கியிருந்தாள்.

போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை " என்னம்மா பஸ் ஸ்டேன்ட்க்கு கிளம்பலாமா " என்ற தனது தந்தையின் அழைப்பு நிஜ உலகத்திற்கு கொண்டுவர கண்களின் ஓரம் கசிந்த கண்ணீரைத் துடைத்தவள் சிரித்தமுகமாய் கிளம்பினாள்..

" நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாம்மா.. எதாச்சும்னா கால் பண்ணு.. " என்று தந்தை சொல்லிவிட்டு கிளம்பிட தனக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தவள் வேடிக்கைப் பார்க்கத் துவங்க.  அங்கே அவசர அவசரமாய் அபி கையில் பையுடன் அவளிருந்த வண்டியினை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான்..

அவனைப் பார்த்ததும் புன்னகையில் விரிந்த உதடு அடுத்த நொடியே அவனைச் சுற்றி சூழ்ந்த பெண்கள் பட்டாளத்தைப் பார்த்ததும் சுருங்கியது.. அவன் எப்படியிருந்தும் தன்னிடம் வரபோவதில்லை என்பதை அறிந்தவள் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு  தனது கவனத்தை இசையில் செலுத்த முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தாள்..

அவளின் செய்கைகளை ஓரக் கண்ணில் கண்காணித்தவாறே இருந்தவன் அவள்முகம் விட்டால் அழுதுவிடுமோ என்கிற நிலையில் இருந்ததைப் பார்த்தவன் அவளை வெறுப்பேற்றும் பணியை சற்று ஓரங்கட்டி வைத்து அவளருகே வந்தமர்ந்தான்..

அவனை வாய்நிறைய திட்ட வேண்டும் என்று நினைத்தவளும் அவளை சமாதனப்படுத்த பக்கம் பக்கமாய் வசனம் பேச வேண்டுமென்று நினைத்தவனும் நீண்ட நாட்களுக்குப் பின்பு கிடைத்த அவர்களின் அருகாமையை இழக்க மனதின்றி எதுவும் பேசாமல் தாங்களாகவே மௌனமாகினர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவன் வயிறு பசியில் கத்தத் துவங்க அவளுக்கோ அது கேட்கவில்லை.. அவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளது கைப்பையில் இருந்த உணவுப் பொட்டலத்தை தானாக பிரித்து உண்ண ஆரம்பித்தான்.. தனது தந்தையின் புளிசாதம் வாசனை மூக்கைத் துளைக்க அவன்புறம் திரும்ப " சும்மா சொல்லக்கூடாது உங்க வீட்டு பருப்பு சாதம் டேஸ்ட் மாறி வேற எங்கையும் கிடைக்காது தர்ஷு.. சூப்பர் " என்று கைகாமித்தவாறே சாப்பிட ஆரம்பிக்க  அதனை பிடுங்கி வைத்தவள் " அது புளி சாதம் " என்று கோபமாக சொல்லிட, " அட எந்த சாதமா இருந்தா என்னம்மா வயித்துக்குள்ள தான போகுது.. அதைக் கொண்டா.  " என்று பிடுங்கி  சாப்பிட ஆரம்பித்தவன்
" பேசாம உங்கப்பாவ குக்கிங் கிளாஸ்க்கு அனுப்ப வேண்டியது தானடி. மனுசன் இன்னுமா சமைக்க கத்துக்கல" என என்றும் போல அவளது தந்தையை கேலி செய்திட
தனது தந்தை நினைவுகளில் மூழ்கியவளை அவனது பெரிய ஏப்பமே சுயநினைவுக்கு கொண்டு வந்தது.

அவள் திரும்பி அவனைப் பார்க்க, அவனோ தனது நண்பர்கள் பட்டாளத்திடம் வர முடியாது என சைகையில் செய்து காண்பித்துக் கொண்டிருந்தான்..

" இப்போ மட்டும் நீ என் பக்கத்துல இருக்க.. அவுங்க கிட்டவே போ.. தனிமை ஒன்னும் எனக்கு புதுசில்ல..
எனக்காக யாரும் அவுங்களோட சந்தோசத்த இழக்க வேணாம். " என சன்னல்புறம் திரும்பிக் கொள்ள,

" தர்ஷு ஏன் இப்படி அடெமென்டா நடந்துக்குற.. இந்தமாறி யார்கிட்டையும் பேசாம..எதையும் சேர் பண்ணாம இவ்ளோ பிடிவாதமா இருக்கறதால என்னை சாதிச்ச.. சுத்தி இருக்கவுங்களோட பழகி அவுங்களோட மனசு விட்டு சிரிச்சா எவ்ளோ பெரிய பிரச்சனையும் சின்னதா தெரியும்.. ஆனா நீதான் எந்தக் காரணமும் இல்லாம தனியா இருக்க.. " என அவளை குற்றம் சாட்டவும் அவள் அவன் பேசியதைக் கேட்க பிடிக்காமல் " இம்ச்" என சப்புக்  கொட்ட, இந்தத் தடவை அவனுக்கு உண்மையாகவே கோபம் வந்து எழுந்து தனியாக கடைசி இருக்கையில் சென்று அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.. அவளுடன் நேரத்தை செலவிட மேனேஜரிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி வந்தும் வீணாகப் போனது..
அவள் என்ன எதிர்பார்க்கிறாள் எனத் தெரிந்தும் அதைக் கொடுக்க மறுப்பவனுக்கு அவள் மட்டும் வேறு என்ன செய்ய முடியும்?
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடிக்குச் சென்றவள் " உங்களுக்காக மட்டும்தான் நான் பொறுமையா இருக்கேன்.. எனக்கு வரக் கோபத்துக்கு உங்க அண்ணாவ அம்மிக் கல்லுல நல்லா காஞ்ச மிளகாயோட சேர்த்து வெச்சு நைனுநைனு அரைக்கனும் போல இருக்கு.. பார்க்கும் போது நல்லா பேசுனா போதுமா?
யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ண வேண்டியது.. அப்ரோ சந்தேகப்பட்டு வீட்ட விட்டு துரத்த வேண்டியது.. ஹும்...எல்லா உங்க அம்மாவ சொல்லணும்.. சின்ன வயசுலயே என்னைய எங்கம்மா அடிக்கற மாறி நல்லா அடிச்சு துவைச்சிருந்தா இப்போ சொன்ன பேச்ச கேட்பாரு. இல்லைனா இப்படித்தான் சொந்த புத்தியும் இல்லாம.. சுயபுத்தியும் இல்லாம கிறுக்குத்தனமா இப்படி எதாச்சும் செஞ்சு வைப்பாங்க " என்று எதிர்புறம் இருந்த எழிலிடம் அலைபேசியில் கத்த  ஆரம்பிக்க அவனோ தனது தந்தையின் சொல்லினால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்..

" ஏன் எதுமே பேச மாட்டிங்கிறீங்க.. ஹலோ.. நான் பேசறது கேட்குதா.. ஹலோ... " என  பக்கத்து வீட்டுக் காரர்களின் தூக்கம் தெளியுமளவிற்கு
உரக்கக் கத்திக் கொண்டிருந்தாள் தான் வீட்டில் மாட்டிக் கொள்ளப்போவதையும் மறந்து..

அவன்
" நான் மார்னிங் பேசறேன் திம்ஷு " என்றதும் " ஏன் வாய்ஸ் இவ்ளோ டல்லா இருக்கு.. உடம்பு சரியில்லையா.. ஈவ்னிங் நல்லாத்தான இருந்தீங்க.  உங்க அண்ணா உங்களையும் அழ வெச்சிட்டாரா.. நான் நாளைக்கு வந்து அவர என்னனு கேட்டுக்கறேன்.. நீங்க நிம்மதியா தூங்குங்க..டாடா " என்று அவளே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்
கொண்டாள்.

" உங்க மாமா நான் உன்னை உங்க வீட்ல டிராப் பண்ணதுக்கு ஒன்னும் சொல்லலியா?"

" எம்மாமா இன்னும் வீட்டுக்கே வரல..வந்தாலும் என்னை திட்டாதே. நான் அவரோட செல்லமாச்சே.. சரி குட் நைட்.. லேட்டாச்சு...பாய்ங்க" என்று
போனை அணைத்தவள்

யாரும் பார்க்காவண்ணம் உள்ளே சென்று விடலாம் என நினைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயல
" கனிமொழி நான் உங்கிட்ட பேசனும். கொஞ்சம் நில்லு " என்ற கதிரின் குரலால் ஆணி அடித்தார் போல நின்ற இடத்திலே அப்படியே நின்றாள் இனி என்ன ஆகுமோ என்று பயந்து

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro