யாரென்றே அறியாத உம் மனதினில், யாம் அறியா உரிமை கொண்டேன்....
உம்மிடத்தில் சம்பாஷணை கொள்ளாமல் ஏனோ இரவுகள் குளிர்வதில்லையடி....
உணர்வுகள் நீர் கூறுவது போலவே பலவற்றை எம்மிடத்தில் கூறி எனது இரவுகள் விழிகளை மூடாமல் செய்ததேனோ....
யாரென்றறியா நீயும் நானும் நாம் அறியா உணர்வுகளோடு பின்னப்பட்டியிருப்பதன் காரணம் என்னவோ....
இமைதூங்கா விழிகளால் ஒருவரை ஒருவர் எண்ணி செல்ல கோபமும் செல்ல அன்பும் பகிர்ந்தோம் யாமறியாமலே....
காலம் கூறுமோ நமது விடையறியா வினாவிற்கான விளக்கத்தை....
பெயர் அறியாமல் நாம் செய்த சம்பாஷணை நம்மை துன்புறுத்தும் என்றறிந்து இருந்தால் அன்றே உரைத்திருப்பேன் எனது நாமத்தை....
காலம் ஒன்றே விடைகூறுமடி நமது கலக்கத்தில் தேடலை கண்டு....
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro