வேண்டிய விடியல் வீழ்கையிலே...
வானொலி செய்தி வீட்டினிலே...
வெள்ளம் வந்தது (ஊ)வூரினிலே...
அடடா!!!
வெயிலில் வற்றிய ஏரியிலே
வான்வீடு கட்டி வாழ்ந்தனரே!
வீட்டை திருடன் திருடியதால்
வான்-நீர் மறியல் செய்திடுதோ?
வீட்டின் உண்மை குடிமகனை
வேண்டா வெறுப்பாய் விரட்டியதால்!
வெந்து போகின நன்னீரும்
வெய்யோன் மடியில் முறையிட!
வந்தான் வெயிலில் வெய்யோனும்!!!
வெறித்தான் - வறண்டது முழுநாடும்
அறியா திருடா, அறிவிலியே!!!
நன்னீர் வீட்டை வளர்த்துவிடு...
நன்றாய் நீயும் வாழ்ந்துவிடு...!
- *சகோ* ச.பை முகமது சல்மான்
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro