வெந்நீர்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வேண்டிய விடியல் வீழ்கையிலே...

வானொலி செய்தி வீட்டினிலே...

வெள்ளம் வந்தது (ஊ)வூரினிலே...

அடடா!!!

வெயிலில் வற்றிய ஏரியிலே
வான்வீடு கட்டி வாழ்ந்தனரே!

வீட்டை திருடன் திருடியதால்
வான்-நீர் மறியல் செய்திடுதோ?

வீட்டின் உண்மை குடிமகனை
வேண்டா வெறுப்பாய் விரட்டியதால்!

வெந்து போகின நன்னீரும்
வெய்யோன் மடியில் முறையிட!

வந்தான் வெயிலில் வெய்யோனும்!!!

வெறித்தான் - வறண்டது முழுநாடும்
அறியா திருடா, அறிவிலியே!!!

நன்னீர் வீட்டை வளர்த்துவிடு...
நன்றாய் நீயும் வாழ்ந்துவிடு...!

- *சகோ* ச.பை முகமது சல்மான்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro