பாரெங்கும் புகழும் பாரதமே!
பரம்பொருளால் கிடைத்த பேரருளே!
ஊரெ(ல்)லாம் செழிக்கும் பெருவளமே!
விண்ணைப் பிளக்கும் மலை சிகரமே!
மண்ணில் வாழும் பெரு உரமே!
மனதில் மலரும் பெருவீரமே!
இவைகள் யாவும் உன் அடையாளமே.
சொல்லால் கோர்த்து பாடுவோமே!
உன் பிள்ளை பெருமை கொள்வோமே!
பல அரசன் ஆண்ட பெருமையே!
பேருக்கு இன்றொரு பாதகமா?
பல ஆண்டுகள் கூறும் சரித்திரமா?
பல பெரியோர் உறங்கும் பெருமடியா?
அதற்காகவே அழியா பெரும்புகழே...!
நீ கொள்வாய் இது என்றும் இறையருளே.
பாரெங்கும் போற்றும் பாரதமே!
ஒரு விலையே இல்லா சுதந்திரமே!
அதை முறையாய் ரசித்து வாழ்ந்தாலே...
மனதில் என்றும் முழுமகிழ்வே...😁😁😁
Happy independence day sagos
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro