தென்றல் 24

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

குழப்பத்தில் இருந்த மித்ரனின் கைகளை பிடித்துக்கொண்டு திவ்யா

"நான் வேணும்னே இப்படி பண்ணலன்னா.ஆரம்பத்துலேயே உனக்கு பொண்ணுங்கண்ணா பிடிக்காது.அதுவும் உனக்கு நம்ம அம்மாவ பத்தி நல்ல அபிப்ராயம் கூட இல்ல.உங்கிட்ட வந்து நாந்தான் உன் தங்கச்சின்னு சொன்னா நீ என்ன என்னான்னு நினைச்சிருப்பா.உங்க கிட்ட இருக்குற காசுக்காகத்தான் நான் உன்கிட்ட பழகுறேன்னு நினைச்சிருக்க மாட்ட"என்று கூற மித்ரன் இப்போதும் எதுவும் பேசாமல் இருக்க மனதில் கொஞ்சம் பயம் இருந்தாலும் திவ்யா

"அண்ணா உனக்கு என்ன பிடிக்கலன்ன கூட பரவாயில்லை.ஆனா ஷாக்சிக்கும் உனக்கும் கல்யாணம் இப்பவே நடக்கனும் ப்ளீஸ்" என்று கூற எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த விஷ்வனாத்

"திவ்யா நீ சொல்ரது தப்பும்மா.இது இல்லைன்னா அதுன்னு சொல்ரதுக்கு ஷாக்சி என்ன ரிசேர்வ் ப்ளேயரா.அதுவுமில்லாம அவ கல்யாணத்த டிசைட் பண்ண நம்ம யாருமா ?அவளோட வாழ்க்கைய அவதான்டா முடிவு செய்யனும்.நம்ம யாரும் போர்ஸ் பண்ண கூடாது"என்று கூற திவ்யாவோ

"இல்லப்பா நான் ஷாக்சிகிட்ட முன்னாடியே பேசிட்டேன் அவளுக்கு இதுல விருப்பம்தான் "என்று கூற இப்போது மித்ரன் ஷாக்சியை பார்த்து

"உன்ன நான் என் ப்ரெண்ட்னு நம்பினேனே ஷாக்சி. ஆனா நீ கூட என்ன ஏமாத்திட்டேல்ல"என்று கவலையுடன் கூடிய கோபத்தில் கேட்க உடனே திவ்யா

"அய்யோ அண்ணா அவளுக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது.ஜானவி மேட்டர் கூட தெரியாது.அன்னைக்கு ஷாக்சி கிட்ட பேசும் போது அவ சொன்னா உங்கண்ணன் என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா நான் பண்ணிகிறேன் அப்படின்னு.ஏன்னா அவ அப்படி ஒரு நிலமை வராதுன்னு நினைச்சா.ஆனா நான் இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சிதான் கேட்டேன்.இப்போ நீதான் சொல்லனும்.  உன் முடிவு என்ன?"என்று கேட்க மித்ரன் தன் தந்தையை பார்த்து

"அப்பா எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம்தான்"என்று கூற ஷாக்சியை பார்த்த விஷ்வனாத்

"நீ என்னம்மா சொல்ரே?"என்று கேட்க அவள் பதில் கூறும் முன் திவ்யா

"ஷாக்சி , அண்ணா எந்த கண்டிசனும் இல்லாம உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாங்க.என்மேல சத்தியம் பண்ணிருக்க.மறந்துடாத"என்றாள் .இதைக்கேட்ட ஷாக்சி அமைதியாக இருக்க அதை சாதமாக்க முயன்ற திவ்யா

"அப்பா இப்பவோ கல்யாணத்த முடிச்சிடலாம் "என்றவளை

"இல்ல திவ்யா எல்லோருமே போயிட்டாங்களே,இப்போ யாருமில்லாம எப்படி பண்றதுன்னு" கேட்க திவ்யாவோ

"அதான் நம்ம இருக்கோமே , லேட் பண்ண வேணாம்பா"என்று கூறிவிட்டு ஷாக்சியின் பக்கம் திரும்பியவள் ஷாக்சியோ மண்டப வாயிலை அதிர்ச்சியுடன் பார்க்க யாரை ஷாக்சி இப்படி பார்க்கின்றால் என்று திவ்யாவும் பார்த்தவள் அதிச்சி ஆனாள்.

மண்டப வாயிலில் என்னவென்று கூற முடியாத குழப்பத்துடன் ரவி நின்று கொண்டிருப்பதை பார்த்தவள் அதிர்ச்சியாகி இருக்க முதலில் சுதாகரித்த ஷாக்சி ரவியை பார்த்து

"எப்படி இருக ரவி?"என்று கேட்டாள்.இதை கேட்டதும் ரவியோ ஷாக்சியின் அருகில் வந்து வந்து அவளை அணைத்து கண்ணீர் விட்டு அழுதான்.

"ஏன் ஷாக்சி நீ என்கிட்ட சொல்லாம போயிட்ட.நான் அவ்வளவு வேண்டாதவனா போயிட்டேனா.உனக்கே தெரியும்ல உன்மேல நான் எவ்வளவு பைத்தியமா இருந்தேன்னு.நீ ஏன்டி என்கிட்ட சொல்லல.உன்ன தப்பா நினைக்கிற அளவுக்கு நான் ஒன்னும் மோசமானவன் இல்லடா"என்று கூற   ரவியிற்கு  ஷாக்சிக்கு நடந்த அநீதி பற்றி தெரிந்துள்ளது என்பது தெளிவாக தெரிந்தது. நிலமை மேலும் இருக்கமாவதை உணர்ந்த திவ்யா விஷ்வனாத்திடம் திரும்பி

"அப்பா இது ரவி. ஷாக்சிய விரும்பினவங்க "என்று கூற ஷாக்சியை பார்த்த அவரின் பார்வையில் கேள்வி இருக்க திவ்யாவே

"அவளும்தான்பா லவ் பண்ணா"என்று கூறினாள். உடனே விஷ்வனாத்

"முதல்ல எல்லோரும் வீட்டுக்கு போகலாம் ,அப்புறமா என்ன பணறதுன்னு பேசிக்கலாம் "என்று கூறி எல்லோரும் வீடு செல்ல ரவி மட்டும் தனக்கு ஒரு வேலை இருப்பதாக கூறி ஷாக்சியின் மொபைல் நம்பரை பெற்று அவ்விடத்தை விட்டு சென்றான்.

வீடு வந்தவர்களில் முதலில் மிகவும் கவலையாக இருந்தது திவ்யாதான்,திடீரென்று ரவி அவ்விடத்துக்கு வருவான் என்று கொஞ்சமும் அவள் எதிர்பார்க்கவில்லை.என்ன செய்வதென்று புரியாமல் நின்றவள் மித்ரன்  அருகில் சென்று அவன் முன் மண்டியிட்டு அமர்ந்து 

"அண்ணா உன் காதல நான் பிரிச்சிட்டேன்னு நினைக்குறியா?"என்று கேட்க அவனோ பதில் கூறாமல் இருப்பதை கண்டவள் கண்களில் கண்ணீர் வருவதை கண்ட மித்ரன்

"ஹேய் திவ்யா லூசு, உன்கிட்ட சும்மா விளையாடத்தான் நான் இப்படி முறைச்சிக்கிட்டு இருந்தேன்.அப்புறம் ஜானவி மேல எனக்கு காதல் இருந்திருந்தாலும் அவ என்னை காதலிக்கல்லயே"என்று கூற திவ்யா அவனை

"அப்போ நீ ஷாக்சிய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது"என்று கேட்க அவனோ

"என் தங்கச்சி முதன் முதலா என்கிட்ட ஒன்னு கேட்டிருக்கா.நீ என் சொந்த தங்கச்சின்னு தெரிஞ்சதும் இருந்த சந்தோசத்துல நீ என்ன செத்துப்போன்னு சொல்லி இருந்தாலும் சந்தோசமா பண்ணிருப்பேன்.என்னடா இவன் சினிமா டயலாக்லாம் பேசுரேன்னு நினைக்காத திவ்யா.நீ எண்டா எனக்கு அவ்வளவு பிடிக்கும்.அதுவும் நம்ம அம்மா தப்பானவங்க இல்லைன்னு நீ சொன்னதும் அவ்வளவு சந்தோசமா இருந்திச்சி.பொண்ணுங்க மட்டும் தன்னோட அம்மா ,அப்பா,அண்ணனுக்காக தன்னோட காதல விட்டு அவங்க கை காட்டுற பையன கல்யாணம் பண்ணுவாங்கன்னு இல்லம்மா.பசங்களும் அப்படி பண்ணுவோம்"என்றவனை திவ்யா பெருமையாக பார்த்தவள்

"அப்போ நான்னா உனக்கு ரொம்ப பிடிக்குமாண்ணா.அப்புறம் ஏண்ணா என்ன அடிச்ச.ரொம்ப வலிக்குது தெரியுமா"என்று கூற அவன்

"அது நீ என்கிட்ட இவ்வள்வு நாளா  இதை எல்லாம் மறைச்சதுக்கு"என்று கூறி

"சாரிடா, நீ இதை முன்னாடியே சொல்லிருந்தா நான் அம்மாவ பத்தி தப்பாநினைச்சிருக்க மாட்ட்டேன்ல"என்று கூற விஷ்வனாத் மிகவும் கவலையாக காணப்பட்டார்.அவரையும் அருகில் அழைத்தவன்

"நீங்கதாம்பா எனக்கு எப்போமே அப்பா.எனக்கு மட்டுமில்ல இவளுக்கும் நீங்கதான் அப்பா.உங்கள மாதிரி ஒரு க்ரேட் அப்பா கிடைக்க நாங்க கொடுத்து வெச்சிருக்கனும்.ஐ லவ் யூ சோ மச் பா"என்று கூற அவரின் கண்களும் கண்ணீர் சிந்தியது.

எல்லோரும் ஒரு வழியாக சமாதானம் அடைந்ததை என்னி ஷாக்சி சந்தோசப்பட அவளோ

"சரி திவ்யா உனக்கு  ஜானவி பத்தி எப்படி தெரிஞ்சது?அவ ஏன் அப்படி பண்ணா?"என்று கேட்டாள்.

"அவ எதுக்கு அப்படி பண்ணான்னு தெரியல ஷாக்சி. அன்னைக்கு ஒரு நாள் அண்ணனோட மெடிக்கல் ரிப்போர்ட்ட செகன்ட் ஒப்பீனியனுக்கு யூ எஸ்ல இருக்குற  என் ப்ரெண்ட் ஒருத்தனுக்கு சென்ட் பண்ணேன்.அவன் அங்க இருக்குற ஒரு ஹாஸ்பிடல்ல விசாரிச்சப்போ மித்ரன் அண்ணாக்கு வந்திருக்குற இந்த ப்ராப்ளம் நார்மலா சரி செஞ்சிடலாம்.அப்புறம் ஜேர்மனில இருக்குற அதே டிரீட்மென்ட் இப்போ யூ எஸ்லயும் இருக்காம்.அங்க போய் நம்ம டிரீட்மன்ட் பண்ணா ஜஸ்ட் 50 லட்சம்தான் செலவாகும்னு சொன்னான்.எனக்கு அப்போ ஏன் நம்ம இங்க கன்சல்ட் பண்ண டாக்டர் இதை சொல்லாம அதிக செலவாகுற  ஹாஸ்ப்பிடல்ல  சொல்லனும்னு யோசிச்சேன்.அண்ணனோட அதே ரிப்போர்ட்ட வேற ஒருத்தர் மூலமா பேரு அட்ரஸ்லாம் மாத்தி அதே டாக்டருக்கு அனுப்பி வெச்சப்போ அவரும் யூ எஸ் ல இருக்குறத சொன்னாரு.அப்போதான் எனக்கு சந்தேகம் கொஞ்சம் வலுவாச்சி.உடனே டாக்டர சந்திச்சி அண்ணனுக்கு வேற எங்கயாச்சும் டிரீட்மன்ட் பண்ணலாமான்னு கேட்டப்போ அவரு வேற எங்கயுமே இந்த டிரீட்மன்ட் இல்லைன்னு சொன்னாரு. நான் போலியா அவருக்கு அனுப்பின ரிப்போர்ட்ட காட்டினப்போ எதுவுமே பேசல.நான் அவரு இப்போ உண்மைய சொல்லலைன்னா மீடியாகிட்ட போய் உங்க ஹாஸ்பிடல் பேர நாரடிப்பேன்னு சொன்னதும் அவர் இப்படி பேச சொன்னது ஜானவிதான்னு சொன்னாரு.எனக்கு அப்போ என்ன பண்றதுன்னே புரியல.ஜானவி ஏன் அப்படி பண்ணான்னே தெரியல.அன்னைக்கு கேம்பிங்க் போயிருந்தப்போ என்னோட சேப்டி டூல்ஸ டெமேஜ் பண்ணி வெச்சதும் அவதான்.அது அவ அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தப்போ போன்ல யாருகிட்டயோ கோவமா பேசிகிட்டு இருந்தா. நான் எதேர்ச்சையா அத கேட்டேன். ஆனா அது அவளுக்கு தெரியாது.அதான் அவ ஸ்டைல்லயே அவளுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்னு இப்படி கல்யாணத்த நிறுத்தினேன்"என்று கூறி முடித்தால்.


இவை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த விஷவனாத்

"தெரிஞ்சோ தெரியாமலோ ஜானவி நமக்கு ஒரு நல்ல காரியம்தான் பண்ணிருக்கா.என்னன்னு யோசிக்கிறீங்களா.முதல்ல திவ்யாவ பத்தின உண்மை மித்ரனுக்கு தெரிய வந்தது.இரண்டாவது நம்ம 2 கோடி செலவாகும்னு நினைச்சிருந்தப்போ 50 லட்சத்த அவ கொடுத்திருக்கா.ஆனா அதுக்கு நம்ம் கொடுத்தது என்னமோ 2 கோடி பெறுமதியான செயார்ஸ் தான்.ஆனாலும் நமக்கு இப்போ செலவாக போறது அவ கொடுத்த 50 லட்சம்தான்.சோ அவ நம்மள ஏமாத்தினதாவே இருந்தாலும் நம்ம முன்னாடி கணக்கு பண்ண மாதிரி 2 கோடி செயார்ஸ வித்து மித்ரனுக்கு டிரீட்மன்ட் பண்ண போறோம்.இன்னொரு முக்கியமான விசயம் அன்மைலதான் கம்பனிய டெவலப் பண்றோம்னு கொஞ்ச செயார்ஸ வித்தோம்.அப்படி டெவலப்மன்ட் பீரியட்ல இருக்குற கம்பனி செயார்ஸ இலகுவா விற்க முடியாது.நம்ம சாதாரனமா வித்திருந்தா கூட இவ்வளவு வேகமா நமக்கு காசு கிடைச்சிருக்காது.ஆனா இப்போ நம்ம கைல மித்ரனோட டிரீட்மன்ட்கு தேவையான காசு இருக்கு.முதல்ல அத முடிக்கலாம்.அப்புறமா மத்தத பார்க்கலாம்.ஆனா இதுல எனக்கு வருத்தம் என்னன்னா சும்மா தேவையில்லாம ஷாக்சி இதுல மாட்டிக்கிட்டா"என்று கூற அவளோ

"என்ன சார் ,உங்கள அப்பான்னு கூப்பிட சொல்லிட்டு கடைசில என்ன மூணாவது மனுசி ஆக்கிட்டீங்க"என்று கூற அவரெதுவும் பதில் பேசவில்லை.

எல்லோர் மனதிலும் ஜானவி செய்த காரியத்தை எண்ணி ஒரு கவலை இருந்தாலும் எல்லோருக்கும் உண்மைகள் தெரிந்து இனி எதிர்வரும் நாட்களில் என்ன செய்வது என்ற எண்ணங்கள் தெளிவாக இருந்ததினால் கவலைக்கு பின் வரும் மன நிம்மதியுடன்உறங்க செல்ல ஷாக்சியோ எப்படி ரவியை எதிர்கொள்வது என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.கடந்த ஐந்து மாதங்களாக என்ன ஆனான் என்றே தெரியாதவன் திடீரென்று வந்து அவளை அணைத்த போது அவளுக்கு என்னவென்று விபரிக்க முடியாத மனப்போராட்டத்தை கொடுத்தது.ஆனால் அவன் ஆறுதலாக அவளை அணைத்த போது அந்த அணைப்பின் மூலம் அவளுக்கு மகிழ்ச்சி மட்டும் கிடைக்கவில்லை என்பது அப்படமான உண்மை என்பதை புரிந்து கொண்டால்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro