சிலருக்கு, கைக்கு எட்டாத வானம் போலவும்;
சிலருக்கு, கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பழம் போலவும்;
சிலருக்கு, பிரதிநிதிகளின் சட்டை பையில் இருக்கும் தலைமையின் புகைப்படம் போலவும்;
கந்துவட்டிக்கு கடன் வாங்கியோருக்கு, கடன் வாங்கும் போது தெய்வம் போலவும், பின் அவர்களை துரத்தி எரிக்கும் எமன் போலவும்;
ஊழியர்களுக்கு, மாதம் முதலில் சந்தோசம் போலவும் மாதம் இறுதியில்
வேதனை போலவும்;
மாணவர்களுக்கு, புத்தகத்தில் ஒளிந்து இருக்கும் ஒரு அற்புதம் போலவும்;
சில அரசியல்வாதிகளுக்கு, அவர்களின் பேராசைகள் மற்றும் சொத்துகளை சேர்க்க உதவும் எஜமான் போலவும்;
அரசு ஊழியர்களுக்கு, அவ்வப்பொது கிடைக்கும் பரிசு போலவும்;
இப்படி பல பேரின் வாழ்க்கையை தீர்மானிப்பவர்,
அவரின் சர்வதிகாரமே இவ்வுலகம் என மாற்றி இருக்கும்
அவர் பெயர்... பணம்!!
______________________________________
இதை பற்றி எழுத கூறிய salmasasikumar தங்கைக்காக இக்கவிதை!
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro