ஓர் பாடல்.......

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஓர் திரையிசை பாடல் எனும் நோக்கத்தில் நான் எழுதியது........

சாதாரணம்...............ஆண்
கோடிட்டவை.............பெண்

நம் கண்கள் பார்த்து மயங்கிய நொடிகள்
பால்நிலா வானில் கண்டு களிக்க
தேனருவியாய் நாணம்  என்னுள் வழியும்
அந்த நினைவுகள் போதும் வாழ்நாளில்
என் சுவாசம் உன் மூச்சுக்காற்றில் உறைந்திருக்கும்

நம் கண்கள் கண்ட ஒரே கனவுகள்
வானவில்லாய் வண்ணங்கள் குடைபிடிக்க
தேன்மழை நெஞ்சில் சொரிந்து மலரும்
அந்த நினைவுகள் போதும் வாழ்நாளில்
என் சுவாசம் உன் மூச்சுக்காற்றில் உறைந்திருக்கும்

உன் விழியில் வழியும் காதலே உனக்காக
அதில் கலந்தேன் நான் கரைந்தே விட்டேன்
நான் சுவாசிக்கும் காற்றிலே ஈரமாக நீ
தீண்ட தென்றாக வருடினாய் இமைப்பிரிய
உயிர் உடலில் கரைந்த தருணமது மறவேனோ
விழியோரக் குளம் நிறைந்தது சாட்சியாகவே........

நம் கண்கள் பார்த்து மயங்கிய நொடிகள்
பால்நிலா வானில் கண்டு களிக்க
தேனருவியாய் நாணம்  என்னுள் வழியும்

ஈரமான ரோஜாப்பூ வெட்கித் தலைகுனிய
உன் தேன் சொரியும் பிரியா இதழ்களால்
உன் காலடி வரைந்த சித்திரங்களில் முத்தமிட்டு
வந்து சரணடைந்தேன் உன் கால்கொலுசில்
உனதந்த தீண்டலில் மின்சாரம் தாக்குமோ
அந்தநொடி முதல் என்னுயிர் உனதாகவே.........

நம் கண்கள் கண்ட ஒரே கனவுகள்
வானவில்லாய் வண்ணங்கள் குடைபிடிக்க
தேன்மழை நெஞ்சில் சொரிந்து மலரும்

அந்த நினைவுகள் போதும் வாழ்நாளில்
என் சுவாசம் உன் மூச்சுக்காற்றில் உறைந்திருக்கும்.......

திரையுலகில் பாடல் எழுத எனக்கு ஓர் விருப்பம்.......
படித்துவிட்டு தயைகூர்ந்து தங்களது மன எண்ணங்களை பதிவு செய்யவும்....










Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro