அள்ளி முடிந்த
கூந்தளோடு
அல்லலையும்
முடிப்பவள்
விசிறிச் சொருகும்
முந்தானையில்
விதியையும்
விரட்டுபவள்
அசாராமல்
உழைத்துவிட்டு
அலட்டாமல்
வாழ்பவள்
வரமோ
சாபமோ என
சாதிக்கவே
பிறந்தவள்
அதிர்வுகள் தாங்கி
ஆணிவேராய் ஊன்றி
குடும்பம் காத்து
கோபுரமாய் வாழ்பவள்
யாதுமாய் நின்ற
காரிகை ,
இவள் வாழ்கையை
வண்ணமாக்குகின்ற
ஒரு தூரிகை ...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro