அனிச்சம் பூ 33

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஜீவியின் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க , செந்தூரனின் திருமணத்திற்க்கான வேலைகளும் தொடர்ந்து கொண்டிருக்க ,
ஜெயம் இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை விடியல் , பாலாவின் வருகையோடு ஆரம்பித்திருந்தது , தேனுமாவும் உடன் வந்திருந்தார் .

" என்ன டாடி நேத்துக் கால் பண்ணிருந்தப்பக்கூட , வாரேன்னு சொல்லவேயில்ல " , என்றாள் ஜீவி , அவளோடு சேர்த்து , ஜெயந்தியும் அதானே , என்றாள் ...

" இல்லக்கா உங்க எல்லோரையும் பார்கனும்னு தோணுச்சு அதுதான் கிளம்பி வந்துட்டேன் " , என்றான் பாலா ,

"அது சரி உன் மகளையும் , மனைவியையும் பார்க்காம இருக்க முடியல , உடனே கிளம்பி வந்துட்டு , உங்க எல்லாரையும் பார்க்க வந்தேன்னு சாக்கு சொல்ற ... ம்.. " என்று விளையாட்டாய் தம்பியை சீண்டிக் கொண்டிருந்தார் ஜெயந்தி , அதற்க்குத் தகுந்தார் போல தேனுமாவும் " அத ஏன் மா கேக்குறீங்க , வீட்டுக்கு வந்தாலே , ஜீவியில்லாம நல்லாவே இல்லன்னு தம்பி , வீட்டுக்கே லேட்டாதான் வருவாங்க .. எனக்கும் அங்க இவங்க ரெண்டுபேரும் இல்லாம வீடே வெறுமையா இருக்குமா , என்றார் .

அங்கே வந்த ஜெயராம் , " பாலா நல்லவேளை நான் உன்னை வரச்சொல்லலாம்னு இருந்தேன் , நீயே வந்துட்ட " என்றார் ,

" என்ன விசயம் மாமா " என்றான் பாலா ,

" ம்.. இப்பத்தான வந்திருக்க முதல்ல , சாப்பிடு பாலா பிறகு பேசலாம் " என்றார் .

சில நொடிகளில் அங்கே வந்த செந்தூரன் ,
" என்ன மாமா சொல்லவே இல்ல ? சர்ப்ரைஸ் விசிட் , உங்கச் செல்ல மகள் ஞாபகம் வந்திருச்சோ ? என்றான் பாலாவிடம் .

பதிலேதும் சொல்லாமல் மெளனச் சிரிப்பை உதிர்த்துவிட்டு ஆமாம் என்பதாய் தலையசைத்தான்,

அதற்க்குள் ஜெயந்தி , " அது சரி ஜீவிக்கு கல்யாணம் ஆன என்ன பண்ணுவ பாலா ? என்றார் , அதற்கு

" கல்யாணம் பண்ணும் போது பார்த்துக்கலாம் ..க்கா " என்றவனின் கண்கள் மனைவியைத் தேட , ஜெயந்தி தேவியை அழைக்கும் பொருட்டு எழ முற்பட , தேனுமா , " நீங்க இருங்க மா , நான் போய் தேவிமாவ வரச்சொல்றேன் " என்றார் ,

காலை உணவுமுடிந்தவுடன் பாலா , " மாமா எனனவோ பேசனும்னு சொன்னீங்க " என்று நினைவூட்ட ,

ஜெயராம் , " நான் ஒரு விசயம் சொல்வேன் ஏன் எதற்குன்னு கேட்காம அப்படியே ஏத்துக்கனும் , செய்வியா பாலா " என்றார் ,

" என்ன மாமா கேள்வி ? நீங்க என்ன சொன்னாலும் அது எல்லாருடைய நன்மைக்காகத்தான் இருக்கும் இதுல மறுக்க என்ன இருக்கு , நீங்க சொல்லுங்க என்னால முடிஞ்சா கண்டிப்பா அக்சப்ட் பண்ணுவேன் " , என்றான் .

ஜெயராம் , அருகில் இருந்த செந்தூரனிடம் கண்களைக்காட்ட , செந்தூரனும் அங்கிருந்து சென்று சில டாக்குமென்டுகளை கொண்டுவந்து ஜெயராமிடம் தந்தான் , ஜெயராம் அதை ஒரு முறைச்சரிப் பார்த்து விட்டுப் பாலாவிடம் நீட்ட , கேள்வியாய் அதைவாங்கிப் பார்வையிட்டவனுக்குக் கோபம் சிறிது சிறிதாக உச்சம் தொட்டது , போய்விடாவா என்ற பொறுமையை தக்கவைத்து , " என்ன மாமா இதெல்லாம் ?... , என்றான் ,

" இல்ல பாலா " எக்ஸ்போர்ட்ஸ் கார்மன்ஸ் , ஷோரூம் , தவிர்த்து மத்த டெக்ஸ்டைல் யூனிட் எல்லாம் மாமாவுடையது ( அருணாச்சலம் , பாலாவின் அப்பா ) அது முழுமையும் மாமாவோட உழைப்பு , அப்புறம் மாமாக்கு கொஞ்சம் ஹெல்த் இஷ்யூஸ் இருந்ததால நானும் சேர்ந்துப் பார்க்க ஆரம்பிச்சேன் , எக்ஸ்போர்டஸ் நான் தனியா ஆரம்பிச்சேன் ஆனாலும் அதிலும் 25% இன்வெஸ்மென்ட் மாமாவோடதுதான் , சோ இது அத்தனையிலும் மாமாவோட ஷேர் இருக்கு , ஆனா அவர் அத இதுநாள் வாரைக்கும் ஏத்துக்கல , ஆனா இனியும் அப்டி இருக்க முடியாது அதுதான் மாமா பேர்ல இருந்த ஷேர் எல்லாம் உன் பேருக்கு மாத்திருக்கேன் , இப்போ நீ இத சைன்பண்ணனும் ,

" மாமா இது , நீங்க , செந்தூரன், அப்பா மூனுபேரும் கலந்து பேசி அப்பாவும் நீங்களும் பிரிச்சிக்க வேண்டிய ஷேர் , உங்க கம்பனிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல , இந்த கம்பனிக்காக உழைச்சது நீங்க மூன்று பேரும்தான் , இந்த ஷேர்ல எனக்கு எந்த உரிமையும் இல்ல , ப்ளீஸ் இதோட இந்த பிரச்சனைய முடிச்சுக்குங்க நான் இதுல சைன் பண்ணமாட்டேன் சாரி மாமா " என்றான் சற்றே கோபத்துடன் ,

சரி இப்போ நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு பாலா , இப்போ நீ சம்பாதிக்கறது எல்லாம் யாருக்குக்கு ?

" இது என்ன மாமா கேள்வி ஜீவிக்குத்தான் "

" நீ உன்னோட உழைப்பை உன் மகளுக்குத் தரனும்னு நினைக்கும் போது , உன் அப்பாவோட உழைப்பை உனக்குத் தருவதில் என்ன தப்பு ?என்றார் ,

" மாமா அது வேற , இதுவேற , தயவு செஞ்சு புரிஞ்சுக்கங்க மாமா என்னோட உழைப்பு கொஞ்சம் கூட , இல்லாம வெறும் லாபத்த மட்டும் பங்கு போடச்சொல்றீங்களா ? " , என்றான் .

அவன் இவ்வாறெல்லாம் பேசுவான் என்று ஜெயராம் எதிர்பார்த்ததுதான் , எனவே பேசிமுடிக்கும் வரை அமைதிகாத்தார் , " சரி பாலா நீ உன்னோட முடிவச் சொல்லீட்ட , இப்போ நான் என்னோட முடிவையும் சொல்லிவிடுகிறேன் , நீ ஷேர்ல சைன் பண்ணா மட்டும்தான் டெக்ஸ்டைல் யூனிட்ஸ்ல இருந்து வர்ற மெட்டீரியல்ஸ எக்ஸ்போர்டஸ்கு , யூஸ் பண்ணுவோம் , அப்படி நீ சைன் பண்ணலைனா , நான் மாமாவோட கம்பனில இருந்து விலகிவிடுகிறேன் ,
நாங்க மெட்டீரியல்ஸ் எல்லாம் வெளிலையே ஆர்டர் பண்ணிக்குவோம் , மாமாவோட யுனிட்ல இருந்து வர்ற ஒரு துரும்பைக்கூட யூஸ் பன்ன மாட்டோம் , இதுதான் என்னோட முடிவு என்றார் .

பாலா " என்ன மாமா நீங்க ஏன் இப்படிப் பேசுறீங்க , வெளில ஆர்டர் பண்றீங்களா ? உங்களுக்கு ப்ராஃபிட் பாதியா குறைஞ்சிரும் ... " என்றான்.

" அதைப்பத்தி நீ ஏன் பாலா கவலைப்படனும் , அதான் சொல்லீட்டியே , இந்த கம்பனிக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு " என்றார் ..

பாலாவால் மேற்கொண்டு பேச இயலவில்லை , இவர் முடிவெடுத்துவிட்டுச் செயல்படுத்துகிறார் , நமது எண்ணத்திற்க்கு இங்கே மிதிப்பில்லை , பேச்சு பிரிவினையை நோக்கிச் செல்கிறது , இனி இவரிடம் பேசி ஜெயிப்பது முடியாது , என்று தன் ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் பேனாவின் முனையில் செலுத்திக் கையெழுத்திட்டு விட்டு , அருகில் இருந்த தேவியை ரூமுக்கு வருமாறு சைகை செய்துவிட்டு , கோபம் தந்த வேகத்தில் , திரும்பிப் பாராமல் அவன் அறைநோக்கிச் சென்றான் , கோபத்தில் வார்த்தைகள் வேகமெடுத்து கேள்வியாய்மாறி தேவியை அடைந்தது ,

" தெரியாமத்தான் கேட்கிறேன் உங்க அண்ணா என்னப்பத்தி என்ன நினைக்கிறார் , எங்க அப்பா எந்த சொத்தை வைத்து என்னை அவமானப்படுத்தினாரோ , எந்த சொத்து நான் வேணாம்னு வைராக்கியமா இருந்து உழைச்சேனோ , அதே சொத்தை உங்க அண்ணா என் கையில கொடுககிறார் , பத்தாததுக்கு அவரோட கம்பனி ஷேரையும் சேர்த்துத் தாரைவார்க்கிறார் , என்ன ? உன்னைக் கல்யாணம் பண்ணதுக்கு வரதட்சனை தர்றாரா ? அன்றைக்கு உன்னை கல்யாணம் பண்ணிவிட்டு நின்னப்ப எனக்கு ஒரே புள்ள அது ஜெயந்தி மட்டும்னுதான்னு சொன்னாரு உன்னோட மாமனார் , இன்றைக்கு என்னடான்னா ஷேர் கொடுக்குறாங்க .. என்ன இதெல்லாம் ? என வேதனையும் கோபமுமாக கேடக ,

தேவி , " என்ன மாமா கொஞ்சம் மெதுவா பேசுங்க மாமா காதில் விழுந்தா பாவம் மாமா சங்கடப்படப்போறாங்க " என்றாள்

" பழசெல்லாம் பேசி யாரோட மனதையும் கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு பார்த்தேன் , ஆனா பேசரதையும் பேசிட்டு இப்ப கம்பனி ஷேரக் கொடுக்குறாங்க அதுவும் கட்டாயப்படுத்தி ... என்னைப் பார்த்தா அவங்களுக்கு எப்படித் தெரியுது ? சொல்லு தேவிகா , இது முன்னமே உனக்குத் தெரியுமா ? என தேவியை பார்க்க ..

" தெரியாது மாமா நிஜமா எனக்குத்தெரியாது " எனக் கூற ..

" நம்ம நீயூ ப்ராஜக்ட் லோன் விஷயமா ஏதும் ஜெயராம் மாமாட்டசொன்னியா ? என குறிப்பாய் தேவியைப் பார்க்க ..

" இல்ல , மாமா ஜீவி தான் அன்றைக்கு அப்பாட்ட சொல்லீட்டு இருந்தாள் " எனபதில் வர ...

பாலா பின்கோதி , இருவிழி மூடி மூளையிடம் பொறுமை வேண்டியவன் , முடிவில்
நீயே சொல்லுடா நான் இவங்கள்ட ஷேர் கேட்டனா ? சொல்லு தேவிமா என்ற வார்த்தைகளில் ஆதங்கம் இழையோடியது ..

பாலாவின் சத்தம் கீழே ஹால் வரைக்கேட்டது , ஜெயந்தியும் , செந்தூரனும் மாடிப்படியின் கீழ் நின்று சத்தம் வரும் திசைநோக்கி அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருக்க , இவர்களுக்குப் பின் நின்ற ஜெயராம் இருவருக்கு நடுவிலும் விரல்களால் சொடக்கிட்டு , அவர்களின் கவனத்தைத்திருப்ப , திரும்பிப்பார்த்த இருவரிடமும் , போய் உங்க வேலை எதுவோ அதப்பாருங்க .. அவங்களே சண்டைப்போட்டு , சமாதானம் ஆகிடுவாங்க , என்றார் .

அங்கிருந்து நகர்ந்த செந்தூரன் ஜெயந்தியிடம் " அம்மா சண்டைக்குக் காரணமே இவருதான் , நல்லா சந்தோஷமா வந்த மனுசன கிளப்பி விட்டுட்டு இப்ப என்னடான்னா அவங்களே சமாதானாம் ஆகிடுவாங்கன்னு சொல்றார் , பாவம் தேவி , என்றவன்  ஜெயந்தி முறைக்கவும் ,  சாரி தேவி அத்தை , இங்க இருந்ததால் அவங்களோட சம்மதத்தோட இந்த விசயம் நடக்குதுன்னு பாலா மாமா தப்பா புரிஞ்சுக்கிட்டார் .

" ஆமான்டா ஆனா இப்போ விட்டா அப்புறம் ஷேர எப்பக் கொடுக்கறது ? உன்னோட மேரேஜ்கு முன்னாடியே இதெல்லாம் செட்டில் பண்ணனும்னுதான் அப்பா இப்படிப் பண்ணாரு , என்று ஜெயந்தி பேசிக்கொண்டிருக்கும் போதே , வெளியே இருந்து உள்ளே வரஇருந்த ஜீவி " மேல டாடி ஏதோ சத்தம் போடறமாதிரி இருக்கு " என்றாள்.

ஜீவி யைப் பார்த்த செந்தூரன் அவளை வழிமறித்து வெளியே கூட்டிச்செல்ல முயல , மீண்டும் வீட்டுக்கு நுழைய முட்பட ,  ஜீவியைத் தடுத்த செந்தூரன் " அது ஒன்னும் இல்லடா ஏதோ டஸ்பேச் ப்ராப்ளம்னு ஆஃபீஸ்ல யாரிடமோ ஃபோன்ல பேசீட்டுஇருக்காங்க ..

" ஆமா நீ என்ன இரண்டு கைலையும் மெகந்தி போட்ருக்க , யார்போட்டு விட்டாங்க , என்று கேட்டு ஜீவியின் பேச்சை மாற்றி அவளை வெளியே அழைத்துச் சென்று ஸ்டோன் வபெஞ்சில்  அமரவைத்தான் .

அங்கே மனோரஞ்சித மரம் தன் மலர்களை உதிர்க்க , தென்றல் காற்று மலர்களின் மணம் பரப்பிக் கொண்டிருந்ததது ...

வானம் தன் நிறம்மாற்றி வசந்தம் தந்துகொண்டிருந்தது ,

ஜீவிகாவின் கற்றைக்கூந்தலின் ஒற்றை கற்றை அவள் முகத்தில் விழுந்து காற்றோடு அலையாடியது ,

மெஹந்தியின் ஈரம் காயாத கைகளால் கூந்தல் ஒதுக்க முடியாமல் அவள் தவித்தாள் .

அவள் தவிப்பதைப்பார்த்த செந்தூரன் , அவளின் பால் முகத்தில் படர்ந்த கூந்தல் விலக்கினான் .

கூந்தல் விலக்கியதில் ,
முழுமதியை சிறிதாய் மறைத்த முகிலை ஒதுக்கிய அனுபவம் பெற்றான் ,

அவள் முகத்தை அருகில் கண்ட அவன் , அவளின் கால் வட்ட நெற்றியின் ஒற்றைப் புள்ளியென்ற பொட்டில் பாலாற்றில் விழுந்த பெளணர்மியின் பிம்பம் கண்டான் ,

காதோடு ஆடும் காதணிகளில் நதியின் கரைதொட துடிக்கும் கொடிமலர்கள் கண்டான் ,

அவள் விழிகள் மெல்ல மூடித் திறந்ததில் அமைதியாய் எரியும் அகல் விளக்கின் சுடரொளி கண்டான் , அந்த அகல் சுடரொளியில் அவன் தனை மறந்த நிலை பெற்றான் .

முற்றத்தில் உதிர்ந்த
மலர் மணக்காற்றில்

ஒற்றை நிலவென்ற
நெற்றிப் பொட்டில்

காற்றில் கலையும்
கற்றைக் கூந்தலில்

குன்றில் எழுந்த
கதிரொளி விழியில்

கட்டி நெய்யாற்
செய்த பால்மெய்யில்

சுற்றும் காற்றில்
அலையும் துகிலில்

சற்றே சரிந்திடும் என்
சர்க்கரை மனமும் .

இருநொடியில் இதயம் ஏதோ இனிய சொர்க்கத்தின் பிடியில் இருந்ததாய் உணர்நதவன் , சட்டென்று விட்ட கவனம் திருப்பினான் ,

" ஜீவிமா நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா ? என்று இரு நொடி ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பைக் கேள்வியாய் கேட்டான்.

ஜீவியையும்  மீறி ஒரு சிறு புன்னகை அவள் இதழ்களில் மின்னி மறைந்தது , என்ன என்னை கேலிபன்றீங்களா ?என்றாள் .

" இல்ல ஜுவிமா நிஜமாவே நீ ரொம்ப அழகா இருக்க டா ... சரி மெஹந்தியெல்லாம் போட்ருக்க என்ன   விசேஷம் ? என்றவனிடம் ,

" விசேஷமல்லாம் ஒன்னும் இல்ல , அஸ்வதிக்கு டைம் பாஸ் ஆகலன்னு எனக்கு மெஹந்தி போட்டு விட்டா ", என்றாள் .

அங்கே இருவருக்கும் ஃப்ரூட் சாலட் கொண்டுவந்திருந்த ஜெயந்தி , " இரண்டு கையிலும் மெஹந்தி வச்சுருக்க , எப்படி சாப்பிடுவ ஜீவிமா நான் வேனா ஊட்டி விடவா எனறார் " ,
" இல்ல அத்தை எனக்கு வேணாம் , பசிக்கல .. " என்றாள் ,

செந்தூரன் அம்மா நீங்க அத இங்க வச்சிட்டு போங்க , நான் பார்த்துக்கிறேன் என்றான் , " சரி வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டுருங்க " என்று கூறி நகர்ந்தார் .

" ஜீவிமா நீ முதல்முறை திருப்பூருக்கு வந்தப்போ நான் ஒன்னு சொன்னேன் உனக்கு நினைவிருக்கா " என்றான் ,

என்ன என்றவாறு யோசனையாய் அவனைப் பார்த்தாள் .

" என்னை எதாவது உறவுமுறை வச்சு கூப்பிடுன்னு சொன்னேன் , ஆனா நீ இப்ப வரைக்கும் அதை செய்யவே இல்ல , இடையில் ஏதோ ஒரு முறை ஃபோன் பேசும் பொழுது மாமான்னு சொன்னதா ஞாபகம் அட்லீஸ்ட் அப்டியாவது கூப்பிடலாம்ல " என்றான் ,

' அப்படி வாங்க வழிக்கு நன் மாமான்னு கூப்பிடவான்னு கேட்டதுக்கு , வேணாம்னு சொல்லீட்டு அத்தான் கூப்பிட சொல்லீட்டு , இப்ப மாமான்னாவது கூப்படுன்னு சொல்றீங்களா ? ' என்று மனதுக்குள் பேசிக்கொண்டிருந்தாள் ...

" என்ன ஜீவிமா ஏதும் சொல்ல மாட்டேன்ற " என்றவனைப் பார்த்து மெளனமாய் சிரித்து விட்டு , " சரி மாமான்னு கூப்பிடறேன் " என்றாள் .

அவன் ஃப்ரூட்சாலாட்டை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டவாறே , " ஜீவிமா நீ நெக்ஸ்ட் என்ன பன்னறதா ப்ளான் என்றான் ,

" தெரில மாமா ஷெரிடான்ல பிப்ரவரி மந்த் அட்மிசன் ஓப்பன் ஆகுது , அனிமேசன் கோர்ஸ்க்கு அப்ளை பன்னலாம்னு இருக்கேன் " என்றாள் ,

"கனடாலயா ? " என்றான்.

" ஆமா மாமா , உங்க மேரேஜ் முடிஞ்சதும் , அப்பாவோட கம்பனில வொர்க் பண்ணாலாம்னு இருக்கேன் காலேஜ்ல ஜாயின் பண்ற வரைக்கும் , என்றாள் .

" ஹம்..." என்றவன் நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டில ஜீவிமா ? என்றான் ..

" இல்ல மாமா நீங்க கேளுங்க " என்றாள் .

" நீ ஏன் மேரேஜ் பண்ணிக்க
கூடாது "

" ஹம்... நான் ஏன் மாமா மேரேஜ் பண்ணிக்கனும் " பதில் கேள்வி கேட்க ,

" ஹம் .. சொல்றேன் ஜீவிமா , என்னோட க்ளோஸ் ஃப்ரன்ட் வினய்க்கு மேரேஜ் பண்றதுக்காக பொண்ணுபார்த்துட்டு இருக்காங்க , அவங்க நம்ம ஃபேம்லி ஃப்ரன்ட்டும் கூட , நம்ம பாலா மாமாவுக்குக்கூட அவங்களத் தெரியும்டா ,
நீ எப்பனாலும் மேரேஜ் ஆனா எங்க எல்லாரையும் பிரிஞ்சு போயிடுவ , அதே நீ வினய மேரேஜ் பண்ணா நீ எங்க பக்கதிலேயே இருக்கலாம் ,நம்ம வீட்டிலேயும் இருக்கலாம் , வினய்யும் உன்ன நல்லா பார்துப்பான் , எங்களுக்கும் நிம்மதியா இருக்கும் , அதோடு நீ நம்ம வீட்ல இருக்க மாதிரயே அங்கேயும் உன் விருப்பம் போல இருக்கலாம் , மேரேஜ்கு அப்புறம் நீ உன்னோட ஸ்டடீஸ கன்டினியூ பண்ணலாம் , என்றான் .

ஜீவி பதிலேதும் பேசாமல் மெளனமாக இருந்தாள் ,

என்ன ஜீவிமா நான் ஏதும் தப்பா கேட்டுட்டனா ? என சிறுதயக்கத்தோடு ஜீவியைப் பார்க்க ..

அப்டில்லாம் இல்ல மாமா , நான் உங்க ஃப்ரன்ட மேரேஜ் ..... என்ற வார்த்தையை சொல்வதற்க்குள் , உள்ளே தடுமாறானாள் , உங்க ஃப்ரன்ட மேரேஜ் பண்ணாஶ்ரீ உங்களுக்கு ஹேப்பியா மாமா ? " என்றாள் .

ஆமான்டா எனக்கு மட்டுமில்ல , ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் ஹேப்பிடா , என்றான் .

அவன் விழியில் இருந்த சந்தோஷத்தை தன் மனதில் நிறைத்தாள் ,

ஜீவிமா , நீ உடனே பதில் சொல்லனும்னு அவசியம் இல்ல நீ நல்லா யோசிச்சு சொல்லுடா , என்றான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro