அனிச்சம் பூ 53

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

செந்து மீண்டும் ஆரம்பித்தான் , நான் ஏன் மா ரஷ்மியை மறக்கனும் ? ... அவ என்மேல வச்ச காதல் உண்மையானதுதான் அதை எந்த நாளும் நான் மறக்கவோ மறுக்கவோ மட்டேன் , ஆனா அவளோட காதலுக்கு நான் தான் தகுதி இல்லாதவன் மா , யாரவது நம்மை மதிச்சு அன்பா இரண்டு வார்த்தை பேசி எதாவது உதவி பண்ணிட்டா , அவங்களுக்கு எப்போ திரும்ப உதவலாம்னு எதிர்பார்த்து ஞாபகம் வச்சிருப்போம் , ஆனா ரஷ்மி அவளுடைய வாழ்கையையே என்னோடு வாழ ஆசைப்பட்டவள் , அவளை எப்படி மா மறக்கமுடிறயும் ? ... என்றவனின் குரல் தவிப்பு இழையோட மேலும் தொடர்நதான்..

ரஷ்மியால கனவுல கூட எப்போதும் யாருக்கும் தீங்கு செய்ய முடியாது மா .. அதேபோலத்தான் அவளுடைய நினைவுகளும் ... என் மனதில் இருக்கும் ரஷ்மியோட நினைவுகளால யாருக்கும் எந்த தீங்கும் வராது மா ... குறிப்பா நான் உயிரா நினைக்கிற ஜீவிக்கு , நான் ஜீவியோடு சேர்நது சந்தோஷமா வாழ்வேன் மா ஆனா அதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் , என்னை தயவு செஞ்சு புரிஞ்சுக்குங்க மா .. எனக் கூற ...

ஜெயந்தியின் அதிர்ச்சி இப்போது நிம்மதியாக மாறி இருந்தது ... மகனின் கரங்களைப் பிடித்தவள் , சாரி செந்து நீ எங்கே ரஷ்மியை நினைச்சுகிட்டு ஜீவியைத் தவிக்க விட்டிருவியோன்னு பயத்தில் தான் அப்படி சொன்னேன் செந்து , மத்தபடி ரஷ்மி மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை ..

நீ ரஷ்மியைப் பற்றி சொன்னது சரிதான் செந்து , நான் ரஷ்மிய பொண்ணு பார்க்கக் கிளம்பும் போது கூட , எனக்கு அதில் பெரிசா உடன்பாடில்லை , ஆனா அவளைப் பார்த்தபிறகு தான் அவளுடைய மனசு எனக்குப் புரிஞ்சது , அம்மா இல்லாம , ஒரு பொண்ணு வளர்வது எவ்வளவு கஷ்டம்ங்கறத நான் அனுபவிச்சிருக்கேன் செந்து , என் நிலமையில் தான் அவளும் இருந்தாள் , இந்த திருமணத்திற்குப் பிறகு அவள் வாழ்கையில் இனி சந்தோஷம் மட்டுமே இருக்கனும் நினைச்சேன் , அவ மனசு நோகவிடாம பார்த்துக்கனும்னு நினைச்சிருந்தேன் ... அவ கல்யாணம் வேணாம்னு சொன்ன பொழுது அவ நிலைமை யாருக்கு புரிஞ்சதோ இல்லையோ எனக்கு நல்லா புரிஞ்சது செந்து , அதே நிலைமைய நானும் அனுபவிச்சிருக்கேன் எனக்கு கல்யாணம் ஆகும் போது பாலா செவன்த் தான் படிச்சிட்டு இருந்தான் , அவனை விட்டுட்டு கல்யாணம் பண்ணிவந்துட்டமே , அவன் சாப்பிட்டானா , படிச்சானா , தூங்கிணானா? , அப்பா பிஸ்னஸையே பார்த்துட்டு உடம்ப கெடுத்துக்குவாரோ , டைம்கு சாப்பிட்டாரா ? இல்லையான்னு , தினம் தினம் வீட்டு ஞாபகமா இருக்கும் , எத்தனை வேலைக்காரர்கள் இருந்தாலும் , நம்ம பக்கத்தில் இருந்து கவனிக்கிற மாதிரி இருக்காதுல்ல ..கிட்டத்தட்ட அந்த நிலைமைலதான் ரஷ்மியும் இருந்தா ,
அந்த ஆக்ஸிடன்ட்ல அவங்க அக்காவுக்கும் மாமாவுக்கும் ஏதாவது ஒன்னுன்னா அவங்களோட , இரண்டு சின்ன குழந்தைகள் , கம்பணி , அவங்க அப்பான்னு அனைத்தையும் விட்டுட்டு வா ன்னு சொன்னா எப்படி முடியும் சொல்லு ? ..
அதனால்தான் நான் ரஷ்மியிடம் உன்னோடு நாங்க எல்லோரும் உனக்கு துணையா இருக்கோம் , நீ வந்து செந்து கையால தாலி மட்டும் கட்டிக்கன்னு , என் மனசிலருந்துதான் சொன்னேன் ஆனா அவ என்னை நம்பல செந்து .... ஆனா அன்றைக்கு கல்யாணத்தை நிறுத்தி , ரஷ்மிக்காக வெயிட் பண்ணாம , ஏதோ தப்பு பண்ணீட்டமோன்னு இப்பவும் என் மனசுல அடிக்கடி ஒரு குற்ற உண்ர்ச்சி வநது எட்டிப் பார்க்கும் , ... என்று பார்வையை எங்கோ பதித்துக் கண்கலங்கிய ஜெயந்தியின் கரம் பிடித்து சரி விடுங்கம்மா , பார்த்துக்கலாம் என்று கூறிய செந்துவின் கண்களும் நீர் தேக்கியே வைத்திருந்தது ....

மெளனம் ஏந்தி சில வினாடிகள் கடந்தபின் ,
மெளனத்தை உடைக்கும் பொருட்டு செந்துவே ஆரம்பித்தான் " அம்மா பாலா மாமாவோட பிறந்தநாளுக்கு நீங்க என்ன கிஃப்ட் தரப்போறிங்க ..

அது நாளைக்கு நான் தரும்போது போது உனக்கே தெரியும் ,

ஏன் நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணனும் மணி 12 ஆகப்போகுது , நம்ம வீட்ல இப்போ மாமா பர்த்டேய செலிப்ரேட் பண்ணப் போறோம் ,
இப்பவே ப்ரசன்ட் பண்ணிருங்க ,

ஹோ .. பாலா பர்த்டே நைட் செலிப்ரேட் பண்ணப் போறீங்களா ? சொல்லவே இல்ல , அதான் அந்த வாலுங்க இரண்டும் (அஸ்வதி , அனினி) தூங்காம இருக்காளுங்களா ?

ஆமாம்மா நீங்க காலையில் இருந்து பிசியா இருந்தீங்க .. அதோடு உங்களுக்கும் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் அஸ்வதி அனன்யா வும் சொல்ல வேண்டாம்னு சொல்லீட்டாங்க , நீங்க இப்போ என்னைக் கூப்பிடலைன்னா இன்நேரம் எல்லாம் ரெடிபண்ணிருப்பேன் ,

அதெல்லாம் இன்நேரம் அஸ்வதியும் , அனனி , இரண்டுபேருமே செஞ்சு முடிச்சிருப்பாங்க செந்து ..

ஆமாமா , சிம்பிலான அலங்காரம் தான் முத்துமாலைத் தோரணமும் ரோஜாப்பூ செண்டும் தான் மா , எடுத்து ஃபிட் பண்ணாப் போதும் ..

" செந்து , பாலா காலையில் இருந்து எவ்வளவு சந்தோஷமா இருந்தான் தெரியுமா ? ஆனா இப்போ ஜீவி அழுததை பார்த்ததில் அவன் முகமே வாடிருச்சு , பாலாவின் மனதில் ஜீவி திருமணத்தில் தவறான முடிவெடுத்து விட்டாமோன்னு வருத்தப்படுகிறானோன்னு , எனக்குக் கவலையா இருக்கு செந்து , பாலா அந்த மாதிரி நினைத்தால் , இத்தனை வருடம் கழித்து எல்லோரும் ஒன்று சேர்ந்ததற்கும் , ஜீவி நம்ம வீட்டு மருமகளா வந்ததற்கும் அர்த்தமே இல்லாமல் ஆகிவிடும் , நான் திரும்பவும் சொல்றேன்னு தப்பா நினைக்காத , ஜீவி மேல கொஞ்சம் கவனமா இரு செந்து , எனக்கூற...

என்ன கொஞ்சம் கவனமாகவா ? , அதுசரி என்னோட கவனத்தில ஜீவி மட்டும்தான் இருக்கா , ஆனா அவ சைடு இருந்துதான் ஒரு சின்ன சிக்னல் கூட இல்ல ... என மனதில் நினைத்தவன் ,
" சரிம்மா நான் பார்த்துக்கிறேன் நீங்க கவலைப்பாடதீங்க , உங்க மருமகளைக் கண்கலங்காம மட்டும் இல்லை , உங்க தம்பியையும் முகம் வாடாம பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு போதுமா ? " என சிறு மென் புன்னகை புரிந்த அதே வேளை ,

மாடியின் முற்றத்தில் பாலாவும் தேவியும் இரவு நேர இளங்காற்றை சுகித்துக் கொண்டிருந்த தருணம் ..

பாலாவிற்கோ ஜீவியின் கண்ணீர் முகம் கண்ணில் நிழலாடிய நினைவில் இருக்க ,

தேவி "மாமா இன்றைக்கு ஜீவியையும் செந்துவையும் ஜோடியா பார்க்கும் போது என் கண்ணே பட்டிருக்கும் மாமா .. செந்து வேட்டி சட்டையிலும் , ஜீவி பட்டுப்புடவையிலும் கொள்ளை அழகு மாமா எனக்கூற ..

பாலாவோ மகளின் சிந்தனை வசம் இருந்தவன் தேவி பேசுவது காதில் விழுந்தாலும் , இலக்கின்றி பார்த்த வண்ணம் ,

..ம்...
எனக் கூற ..

தேவி மாமா இன்றைக்குக் காலையில் கூடப் பார்த்தீங்களா செந்து நம்ம இரண்டு பேர்கூடவும் பேசிக்கொண்டு இருந்தாலும் , அவன் கவனம் முழுதும் ஜிவி மேல்தான் இருந்தது மாமா...

..ம்...

சிறிதா கால் இடருனாக்கூட ஷாக் ஆகிடுறான் , குளத்துக்குள்ள ஜீவி இறங்கும் போது " பார்த்து ஜீவி பார்த்து ஜீவி "ன்னு சொல்லிட்டே இருந்தான் பார்தீங்களா மாமா .

..ம்...

கோவில்ல இருந்து வந்து பக்கத்து வீட்டுக்கு பிரசாதம் கொடுக்கப் போய்விட்டு வந்து பார்ப்பதற்குள் இந்த ஜீவி சாப்பிட்டு தூங்கிட்டா , திருஷ்டி சுத்திக் கூட போட முடியலை மாமா...

..ம்...

மாமா நீங்க சரியான லூசு மாமா...

..ம்... என்றவன் சற்றே ... சுதாரித்து .. அவளை முறைக்க ....

பின்ன என்ன மாமா நான் பாட்டுல பேசிட்டே இருக்கேன் நீங்க என்னவோ , எங்கேயோ பார்த்துட்டு ..ம்.. ..ம்.. னு சொல்லீட்டு இருக்கீங்க ... எனக் கேட்க ..

நீ பேசினதெல்லாம் நான் கேட்டுட்டுதான் இருக்கேன் தேவிமா ..வேறென்ன சொல்லு ..

...ம்.... என்றவள் , வேறென்ன .. என்று யோசனைசெய்வது போல் பாவனை வைத்துவிட்டு , " பிறந்த நாள் சிறந்தநாளாக , வாழ்த்துக்கள் மாமா... " எனக் கூற ,

மணி இரவு 12 ஆனதை உணர்ந்தவன் ,
தேங்ஸ் தேவிமா ... நீ இன்றைக்கு மாமா மாமான்னு அடிக்கடி ராகம் பாடும் போதே நினைச்சேன் , நீ ரொம்ப ஹேப்பியா இருக்கன்னு .... பிறந்தநாள் தான் ரீசனா ?.. ஆமா நாம் எப்பெழுதும் இப்படி நல்லிரவு பிறந்தநாள் கொண்டாடுறதில்லையே .. பிறகு என்ன புதிதாய் ? எனக்கேட்க அதேநேரம் ,

கீழே ... வீட்டின் சலசலப்பில் , அனனியும் , அஸ்வதியும் மாடியில் வந்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறி பாலவை ஆளுக்கொரு புறமாக கைகளை பிடித்து கீழே அழைத்துச்செல்ல அங்கே ஹாலில் அனைவரும் குழுமி இருக்க , பாலாவிற்கான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாக இருக்க ...

அதையெல்லாம் பார்த்த பாலாவோ .. அனனியிடம் " ஏன்டா இப்போ எதுக்கு இதெல்லாம் மிட்நைட்ல , பாவம் எல்லோரும் தூங்காம இருக்காங்க " எனக் கூற ,

கார்த்திக்கோ பரவாயில்ல பாலா ஒருநாள் தானே , நாளைக்கு மானிங் மாமா (அருணாச்சலம்) உன்னை கம்பனிக்கு அழைச்சுட்டு போகனும்னு சொல்லி இருக்கார் , ஈவ்னிங் தேவி உங்க வீட்ல செலிப்ரேட் பண்ண ப்ளான் பணணிஇருக்கா , அட்லீஸ்ட் இப்பவாவது நம்ம வீட்ல செலிப்ரேட் பண்ணலாம் , எனக் கூறிவிட்டு , அஸ்வதியிடம் ஜீவியை எழுப்புமாறு கூற .. அவளோ ஜீவிக்கா வை எழுப்ப செந்து அண்ணா போயிருக்காங்கப்பா என்றாள் ..

அறைக்குச் சென்ற செந்து , துயிலும் ஜீவியைப் பார்க்க அவளோ அறையின் இருளை அவள் இரு விழியில் நிறைத்துவிட்டு , அவள் விழியின் ஒளியை அறைக்கு தந்து விட்டு உறங்குவதாய்த் தோன்றியது , புடவைகூட மாற்றாமல் தூங்கும் அவளின் உடையின் நெகிழ்வில் தெரியும் இடையின் அழகில் எதேச்சையாய் பார்வை பட்டுவிட , சற்றே தவிப்பிலும் தயக்கத்திலும் பட்டும் படாமலும் விழுந்து மீண்டது அவனது விழிகள் , தொட்டும் தொடாமல் தீண்டி அவளை எழுப்பியது அவன் விரல்கள் , ஜீவிமா எழுந்திருடா என கூப்பிட்ட குரலுக்கு சிறிது நேரத்திலேயே , அவள் விழித்துக் கொள்ள அவனுக்கே அது ஆகச்சிறந்த அதிசயமாய் தோன்றியது , ஆனால் அவளோ மயங்கி எழுந்தோர் கேட்பது போல்
" நான் எங்கே இருக்கிறேன் " என்று கேட்காததுதான் குறை ...
தூக்கத்தில் விழித்தவள் ஒன்றும் புரியாதது போல் அவனைப் பார்க்க .. அவனோ சன்னச் சிரிப்பில் கன்னம் தட்டி , ஜீவிமா மணி 12 ஆகிடுச்சு டா , பாலா மாமாவுக்கு பர்த்டேக்கு கேக் கட் பண்ணனும் .. வா போகலாம் எனக் கூற.. சற்றே தெளிந்தவள் " சரி மாமா நான் முகம் கழுவி விட்டு வருகிறேன் " என்று , சென்று வந்தவள் வாங்க மாமா போகலம் எனக் கூற ...

அவளைப் பார்த்த செந்துவுக்கு ,
ஈரப்பதமான இளம்ரோஜ வண்ண முகத்தின் அழுது ஓய்ந்த அவளது விழிகளில் அடிவானமும் ஆழ்கடலும் சந்திப்பதாய்த் தோன்றும் புள்ளியில் நிந்திப்பதாய் சூழந்த அமைதியை உள்வாங்கி இருப்பதாகத் தோன்ற ...

அறையை விட்டு வெளியே செல்ல எத்தனித்தவளை , ஜீவிமா ஒரு நிமிஷம் நில்லு டா எனத் தடுக்க ,

அவள் " என்ன மாமா " எனக் கேள்வியாய் அவனைப் பார்க்க ,

" ஜீவி நீ ஏன் அழுதிருக்க .. ? " இந்தக் கேள்வியை எதிர்பாராதவள் , " இல்ல மாமா தலைவலி அதனால் தூங்கினேன் " என்று சமாளிக்க ,

" ஏன் ஜீவிமா என்னிடம் கூட சொல்லக் கூடாதா ? " என திரும்பவும் அதே கேள்வியிலேயே இருக்க ..

" அப்படிஎல்லாம் ஒன்றும் இல்லை மாமா .. வாங்க போகலாம் .. " என வேகமாக கதவின் அருகே செல்ல எத்தனித்தவளை " நில்லு ஜீவிமா " எனக் கரத்தை பிடித்து இழுக்க ,

அவன் இழுத்த வேகத்தில் திரும்பியவள் தடுமாறி அவன் மீதே சாய ... இதை இருவருமே எதிர்பாராததால் சற்றே அதிர்ந்த செந்து , " சாரி ஜீவி " எனக் கூறி முடிப்பதற்குள் ,

திடீரெனத் தடுமாறிய பதட்டத்தின் கோபத்தில் " என்ன மாமா நீங்க , நமக்காக வெளில எல்லாரும் வெயிட் பண்றாங்க , நம்ம இரண்டுபேரும் ரூம்ல இவ்வளவு நேரம் தனியா இருந்தா வெளில எல்லாரும் தப்பா நினைச்சுக்கப் போறாங்க .." எனக் கூறி நகர எத்தனித்தவளின் கரத்தை மீண்டும் இருகப் பற்றியவன் , அவள் விழிகளை நேராகப் பார்த்துவிட்டு " முதல்ல நீ உன்னோட புடவையைச் சரிபண்ணு என்று கூறி , கண்களால் சுட்டிக்காட்டியவன் , இத சரி பண்ணீட்டு அப்புறம் வெளில போ " என கோபம் தந்த அழுத்தத்தில் கூற ..

சற்றே குனிந்து பார்த்து , சட்டென புடவையைச் சரிசெய்தவள் வெட்கி தன்னைத்தானே நொந்துகொண்டு , மெதுவாகத் திரும்பிப்பார்க்க செந்து அங்கே இல்லை , ஆனாலும் அவன் அவள் கரம் பற்றியதில் இருந்த அழுத்தத்திலும் , அவன் பார்வையிலும் கோபத்தை உணர்நதவளுக்கு தவிப்பு தனாக ஒட்டிக் கொண்டது..

வெளியே சென்ற ஜீவி செந்துவைத்தேட , அவன் பாலாவோடு விளையாட்டாய் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருக்க , சற்றே நிம்மதியடைந்தவள் , சிறிது நேரம் செல்லச் செல்லத் தான் உணர்ந்தாள் , ஜீவிகா என்றொருத்தி அங்கு இல்லை என்பதைப்போல் , மறந்தும் இவள் புறம் திரும்பாதவன் மற்றவர்களிடம் இயல்பாய் இருக்க , ஏனோ மனம் எதையோ இழந்தது போல் இம்சை செய்தது , அந்த நடு இரவிலும் உறங்கும் எண்ணம் சிறிதும் இன்றி அனைவரும் சிரித்துப் பேசி நினைவுகளைப் பகிர்நது கொண்டிருக்க ஜீவியின் மனம் எதிலும் ஒட்டாமல் ஒரு சன்னப் புன்னகையை உதட்டில் ஒட்டியவாறு அமர்ந்திருந்தாள் ,

ஒருவழியாய் அனைவரும் சென்றவுடன் அறைக்குச் செல்ல மனமில்லாத ஜீவி அங்கே நின்று கொண்டிருக்க , செந்து இருக்கைகள் , அலங்காரப் பொருட்கள் என அனைத்தையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தவன் அவளைப் பொருட்படுத்தாது வேலையை முடித்துவிட்டு அறைக்குச் செல்ல எத்தனிக்க ,

ஜீவி " மாமா ஒரு நிமிஷம் " என பின்னிருந்து அவனை அழைக்க ,

அவனோ திரும்பாமலே,
" ஹால்ல நம்ம இரண்டுபேர் மட்டும் இருந்து பேசிக்கொண்டிருந்தால் நம்மை சாரி .. சாரி... உன்னை எல்லாரும் தப்பா நினைப்பாங்க " எனக் கூறிவிட்டு திரும்பிப்பார்க்காமல் அவனறைககுச் சென்று விட ,

ஜீவி அவன் சென்றபின்னும் அந்த திசையைப் பார்த்த வண்ணம் இருந்துவிட்டு , பின் அவளறைக்குச் சென்றவள் , தன்னைத் தானே திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் ,
" ச்ச .. என்ன ஜீவி இப்படி பண்ணீட்ட , மாமாவ சின்னதா அவாய்ட் பண்ணாக்கூட கோபம் வரும்னு , உனக்குத் தெரியுமே பின்ன ஏன் மாமா கூப்பிடும் போது நிராகரித்து ரூமை விட்டு வெளில வந்த , ஏன் அழுதன்னு செந்து மாமா கேட்டா எதாவது சொல்லி சமாளிக்காம இப்படி ரூமை விட்டு வெளில வந்திருக்கக்கூடாது .. அன்றைக்கு செம்பருத்தி பூப் பறிக்கும்போது சட்டென விட்டு விலகிச் சென்றதற்காக மாமாவுக்கு அவ்வளவு கோபம் வந்தது , இன்று மறுபடியும் அதே தவறைச் செய்துவிட்டாயே ! என தன்னைத்தானே வசைபாடியவளின் தவிப்பு தொடர்ந்தது ..

செந்து மாமா கோபமாகத் திட்டினால் கூட , கையில் காலில் விழுந்தாவது சமாதானப்படுத்தலாம் , இப்படி ஒட்டாமல் ஒதுங்கிச் சென்றால் நான் என்ன செய்வது , இதில் இந்த புடவை வேறு சதி செய்து விட்டது , ச்ச... என்னைப் பற்றி மாமா என்ன நினைச்சாங்கன்னு தெரியலையே ! கட்டி இருக்க புடவையில் கூட கவனமில்லைன்னு நினைச்சுருப்பாங்க , இதுக்குத்தான் இந்தப்புடவையெல்லாம் கட்டவே கூடாது , எனறு புலம்பித் தவித்து தூக்கத்தை தொலைத்து விட்டிருந்தாள் ..

அங்கே செந்துவோ அறையில் , குறுக்கும் நெடுக்குமாக நடைபோட .. ஜீவி கூறிய வார்த்தைகளே அவன் மனிதி்ல் ஓடிக் கொண்டிருந்தது , ஒரு தனி அறையில் அவளோடு ஒரு இரண்டு நிமிடம் பேசக்கூட எனக்கு உரிமையில்லையா ? அப்படி நினைப்பவள் என்னதான் கட்டாயமாக இருந்தாலும் இந்தத் திருமணத்திற்கு ஏன் சம்மதித்திருக்க வேண்டும் , யார் என்ன நினைத்தால் என்ன ? இவர்கள் எல்லாரும் சேர்ந்துதானே இந்தத் திருமணத்தை நடத்தியது , இவளுக்கு இதெல்லாம் ஒரு சருக்கு , என்னை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவள் இல்லை ,

ஏன் திருப்பூரில் என்னோடுதானே இருந்தாள் , இங்கே வந்த அன்று என் மடியில்தானே தலைவைத்து உறங்கினாள் , என்னதான் தூக்கத்தில் இருந்தாலும் யார்
மடியில் தலை வைத்திருக்கிறோம் என்பது கூடவா தெரியாது ? ஒரு வேளை பிறர் முன்பாக மட்டும் எனைத் தவிர்க்க நினைக்கிறாளா? இல்லை ஏன் அழுதாய் என்ற கேள்வியில் இருந்து தப்பிப்தற்காக அறையை விட்டு வெளியேறினாளா ? பாலா மாமா வேறு ஜீவி அழுததைப் பார்த்து கவலைப்பாட்டார்னு அம்மா சொன்னாங்க , பாவம் பாலா மாமா , ஆசையாக மகளையும் , மனைவியையும் பார்க்க வந்தார் , இந்த ஜீவி ஏன் இப்படி இருக்கிறாள் , எதையும் மனம் விட்டுச் சொன்னால் என்ன ? .. மேலும் ஜீவி அழுதால் அவர் என்னால்தான் அழுகிறாள் என என்னைத்தானே தவறாக நினைப்பார் ..

இவ்வாறாக ... செந்து மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தான் , பொதுவாக மனித மூளையில் ஒரு செய்தி மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுமாம் ,மூளையின் செயல்பாடு வினாடிக்கு 1 லட்சம் இரசாயன மாற்றங்களை நிகழ்த்துமாம் , ஆனால் இதெல்லாம் அப்பட்டமான பொய்யாக இருக்கக்கூடும் , செந்துவின் மூளை மணிக்கு 418 அல்ல , நாட்பதாயிரம் கிமீ வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது , ஜீவியைப் பற்றிய நினைவு ஒரு வினாடிக்கு ஒரு லட்சம் அல்ல பல லட்சம் இராசயன மாற்றங்களை அவனுக்குள் நிகழ்த்திக் கொண்டிருந்தது .

அவள் அழுக என்ன காரணம் இருக்க முடியும் , ஒருவேளை இந்தத் திருமணத்தை செய்திருக்கக் கூடாது என்று நினைக்கிறாளா ? , இல்லை வேறு யாரையாவது காதலித்து இருப்பாளோ ? இருக்கலாம் வீட்டில் சொல்லத் தயங்கிஇருப்பாள் , என்றாலும் பாலா மாமாவிடம் சொல்வதெற்கென்ன ? அவர் அந்த அளவு கண்டிப்பானவர் இல்லையே , மகளுக்காக எதையும் செய்பவர்தானே!

அப்படியே மாமாவிடம் சொல்லத் தயங்கினாலும் , அவளின் பாசதீபங்கள் கணேஷிடமும் , செந்திலிடமும் சொல்லி இருப்பாளே ! அப்படி அவர்களிடம் சொல்லியிருந்தால் .. அவளின் காதலை இழந்து என்னைத் திருமணம் செய்வதை அவர்கள் இருவரும் ஒருபோதும் சம்மதித்திருக்க மாட்டார்கள் ,

ஒருவேளை அவர்களிடம் கூட சொல்லாமல் இருந்திருந்தால் , அதனால்தான் வினயை திருமணம் செய்துகொள்ள சொல்லும்போது , ஏதோ விருப்பம் இல்லாதது போல் பட்டும் படாமல் பேசினோளா ?

அப்படி அவள் யாரைக் காதலித்திருக்கக் கூடும் , அது எனக்கு எப்படித் தெரியும் ?.. , ஒரு வேளை அன்று மாமாவின் வீட்டுக்கு வந்திருந்தானே , அவன் பெயரககூட .. ச்ச அவன் பெயர் (நித்தின்) நினைவில் இல்லையே , அவனா ? இல்லை ஜீவியின் அறைக்கு மாத்திரை கொண்டு சென்றானே ! அவனை மாமாவும் , கணேஷ் அங்கிளும் ஏதோ ஒர் பெயர் சொல்லி அழைத்தார்களே !... ம்.. இர்ஃபான் , அவனாக இருக்குமோ ?..இருக்கலாம் அவனிடம் ஜீவி உரிமையோடு பழகிக் கொண்டிருந்தாள் , ச்ச.. நான் ஏன் இப்படி யோசிக்கிறேன் ஒரு வேளை அது உரிமையான நட்பாகக் கூட இருக்கலாம் ... ,

சரி வேறு யாரையேனும் காதலித்ததாக வைத்துக் கொண்டலும் அதற்கு நான் என்ன செய்ய ... அவள் விரும்பிய வாழ்கையை அமைத்துக் கொடுப்பதா ? அவ்வாறு நினைக்கையில் அது ஆகச்சிறந்த அநியாயமாகப் பட்டது அவனுக்கு , இல்லை கண்டிப்பாக இல்லை அது என்னால் முடியாது , அவள் எனக்கானவள் , அவளைப் பிரிந்து இருப்பது நடக்காத காரியம் , நானும் ரஷ்மியும் நேசித்துவிட்டு சூழ்நிலையால் ஜீவியோடு திருமணம் நடந்தபின் நான் ஜீவியோடு வாழ ஆசைப்படவில்லையா ? அதேபோல ஜீவியும் அவள் மனதில்
எனக்கு இடம் தரக்கூடாதா ?

செந்துவிற்கோ எப்பொழுதும் எந்த ஒரு நிகழ்வையும் , நன்கு நிதானமாக அனைத்துக் கோனங்களிலும் ஆய்ந்து , அடுத்தவர் நிலைமையில் நின்று சிந்தித்து முடிவெடுக்கும் நற்சிந்தனையெல்லாம் நாலு கால் பாய்ச்சலில் ஒட்டமெடுத்திருந்தது...

ஒரு பள்ளிச் சிறுவனைப் போல் , அவனுக்குச் சாதகமாக அவன் நிலையில் அடுத்தவரை வைத்துப் பார்த்தது அவன் மூளை , ஆம் , ஜீவிகாவின் மீதான செந்துவின் ஆழ்காதலும் , அதேநேரம் ஜீவிக்கும் செந்துவிற்கும் காதலை அஸ்திவாரமாய் கொண்டு நடக்க வேண்டிய திருமணம் ரஷ்மி வராத சூழ்நிலையைக் காரணமாக வைத்து நடந்ததால் , ஜீவியின் மனநிலை இன்றுவரை என்னவென்று தெரியாமல் தவிக்கும் செந்துவிற்கு அவளின் சிறிய விலகலும் , சிறு துளி கண்ணீரும் கூட அவன் மனதில் உள்ள காதலை ஆட்டம் காணச் செய்துவிடுகிறது , அந்த பயமும் குழப்பமுமே அவன் மனதில் புயலென மாறி இனிய எண்ணங்களைத் திசை மாற்றி விட்டிருந்தது ..

முன் பனி பேய்ந்த மென் இரவில் ,
நிலவொளி பாய்ந்த குளக்கரையில்,
பனை ஓலையில் வேய்ந்த குடிலதனில் ,
உறவுகள் சேர்ந்த சிறுபொழுதில் ,

தேவி விரும்பியது போல பாலாவின் பிறந்தநாள் அரங்கேறிக்கொண்டிருந்தது ,
குளத்தைச் சுற்றிலும் காண்ணாடிக் கூண்டில் காற்றில் அனையா அகல் விளக்குகள் , பனை ஓலையில் வேயப்பட்ட சிறு சிறு குடில்கள் அதில் ஒவ்வொன்றிலும் லண்டியன் வடிவிலான மின் விளக்குகள் ,
சுவைக்கு பாரம்ரிய இனிப்பும் , பலகாரங்களும் , செவிக்கு மெல்லிசையும் , என மகிழ்ச்சியும் ,நெகிழ்ச்சியுமாய் , உறவுகளும் , நெருங்கிய நட்பு வட்டங்களும் சேர்ந்திருக்க ,

ஜெயந்தி பாலா , தேவி மூவரும் , ஒரு குடிலில் கணேஷிடமும் , செந்திலிடமும் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்க ,

செந்துவும் ஜீவியும் , மூலிகைத் தோட்டத்தின் அருகில் உள்ள பனை ஓலைக் குடிலில் தனித்திருக்க , குளத்தின் தண்ணீரில் விழுந்த பன்னீர் பூக்களின் மணம் ஏந்திய தென்றல் இருவரையும் வருடிக் குளிர்வீச , அந்த குடிலின் சிறிய மின் விளக்கு ஒளிவீச ,
தன்னிடம் பாராமுகம் காட்டிய செந்துவிடம் தனிமையில் பேசக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட விரும்பாத ஜீவி , சாரி மாமா எனப் பேச்சை ஆரம்பிக்க ,

அவளை நிமிர்ந்து பார்த்தவனை சற்றே நிலைகுழையச் செய்தது , அவள் பேரழகு ...

பால் வீதியில் வண்ணப் பெளர்ணமியாய் அவளின் நெற்றிபொட்டும் , பெல் பூவை ஒத்த அவளது மூக்கும் , பூவின் பக்கவாட்டில் ஒட்டிய நட்சத்திரமாய் அவளின் மூக்குத்தியின் ஒளியும் அவன் கண்களில் எதிரொளிக்க ,
அவள் கண்களின் ஒளியோ புலரும் காலையின் இளம் சூரியனாய் , அதன் கதிர்கள் அவன் இதயத்தைக் குறி வைத்தது ...

அவள் அழகில் விழுந்து எழுந்தவன் , அவள் விழி்களில் தொலைத்து விட்ட தன் கோபத்தைத் தேக்க நினைத்து , அவளை பார்க்காமல் திரும்பிவிட ,
ஜீவி மீண்டும் , மாமா என அழைத்து, திரும்ப எத்தனித்தவனின் கரத்தைப் பற்ற , அவனோ , அவளின் வளைஆடும் கரத்தை எடுத்துவிட்டு அவள் விழிகளை நேராகப் பார்க்க , கண்ணீர் திரையிடக் கெஞ்சும் அவள் விழிகளில் , தஞ்சம் பெற்றுவிட தவிக்கும் தன் மனதை மிஞ்ச முடியாமல் தவித்தவன் , சொல்லு ஜீவிமா .... எதுக்கு சாரியெல்லாம் கேட்குற ... உன் அறையில் உன்னோடு நின்று பேச எனக்கென்ன உரிமை இருக்கிறது ? நீ சொன்னது சரிதான் .

இல்ல மாமா நீஙக தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க ,

இல்ல ஜீவி , இப்போதான் எனக்குச் சரியா புரியுது ,

சற்றே கோபமானவள் , என்ன மாமா புரியுது , எனக் கேட்க ,

உன்னிடம் எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னு ,

மாமா என்ன பேசுறீங்க ? உரிமையில்லாமலா , தாத்தா சொன்னதும் உங்களை நான் கல்யாணம் செய்துகொண்டேன்,

சரி , நீ சொன்ன அதே உரிமையில் நான் கேட்கிறேன் , நேற்று நீ ஏன் அழுத ...?

ஜீவி தயங்கி மெளனம் காக்க ...

மிண்டும் செந்துவே ஆரம்பித்தான் , நீ என்னிடம ஷேர் பண்ணமாட்ட , அந்த அளவுக்கு எனக்கு உரிமையில்லை , என நகர ...

ஜீவி மீணடும் விரைந்து அவன் கரம் பற்றியவள் , இப்போ நான் என்ன மாமா பண்ணனும் ...? எனக்கேட்க

அவளை ஒரு ஆழ் பார்வை பார்த்தவன் , சரி அப்போ நீ இனி என்னோடு என் அறையில் இருப்பியா ஜீவி ? எனக்கேட்க ..

துணுக்குற்றவள் பற்றியிருந்த அவன் கரத்தை எடுத்து விட்டு அவனை புரியாமல் பார்க்க ...

என்ன ஜீவி புரியலயா ? இனி நாம் இரண்டு பேரும் ஒரே அறையிலேயே இருந்துக்கலாம்னு சொல்றேன் .

அதைக்கேட்ட ஜீவி அதிர்ச்சி நீங்காத பார்வையில் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க , அவனோ இதழோரம் இழையோடிய குறுநகையில் சிறு ஏமாற்றமும் , பெரும் வெறுமையும் இருக்க ...

" எனக்குத் தெரியும் ஜீவி , நான் கேட்டதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ,ஆனா இனி நீ உரிமையைப் பற்றியெல்லாம் பேசக் கூடாது ..என்றவன் சென்றுவிட ,

நேற்று அறையில் , செந்து மாமா கூட்பிட கூப்பிட நிராகரித்து , வெளியில் செல்ல முயன்றதற்காக , இனி எப்பொழுதும் என்னோடு அறையில் நீ தங்க வேண்டும் என்ற கர்வத்தில் கேட்பது எந்த வகையில் , நியாயம் ? ஒரு துளியேனும் காதலோடு கேட்டிருந்தால் காலம் முழுவதும் உன் அறையில் அல்ல , உன் அணைப்பில் வாழ காத்திருக்கும் என்னிடம் கர்வம் கொள்வது எந்த வகையில் தகும் ?.... எனத் தவித்துக் கொண்டிருந்த ஜீவிககுத் தெரியவில்லை , ஜீவியின் மீதுள்ள பேரன்பின் பெருங்காதலில் , தனக்கான உரிமையை எதிர்பார்த்துச் சிறு குழந்தையென ஏங்கும் செந்துவின் காதல் மனதின் வெளிப்பாடு அது , என்று ...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro