பதில்கள்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நான் தான் நேத்ரா பேசுரேன்,
என்கிட்ட எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி எதனால நான் அஜய்ய நிராகரிச்சிட்டு கிஷோர கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.பதில் ரொம்ப சிம்பிள்,,
உங்களுக்கு ஒரு ப்ரெண்ட் இருந்து,சாதாரண ப்ரெண்ட் இல்லைங்க அவளுக்காக நீங்க உங்க மானமே போனாலும் பரவாயில்லைன்னு இருக்குற ப்ரெண்ட்..அவ சாவுக்கு உங்கள இன்னொரு பையன் காதலிச்சதுன்னு தெரியும் போது நீங்க அதே பையன கல்யாணம் பண்ணுவீங்களா? இல்லை நான் அஜய்ய நிராகரிச்ச மாதிரி பண்ணுவீங்களா? எங்கயுமே நான் அஜய்ய காதலிக்கிறேன்னு சொல்லவே இல்லை.எல்லா காலேஜ்லயும் அஜய் மாதிரி ஒரு ஹீரோ இருப்பான்.அவன் மேல எல்லா பொண்ணுங்களுக்கும் ஒரு க்ரஷ் இருக்கும்.அது காதலான்னு கேட்டா கண்டிப்பா இல்லை.அப்படித்தான் எனக்கும் அஜய் மேல ஒரு ஈர்ப்பு இல்லைன்னு சொல்லல.ஆனா அது கண்டிப்பா காதல் இல்லை.ஒரு வேலை அது உங்களுக்கு காதல்னு தோனிச்சின்ன சுரேஷ் ரைனாவ பார்த்தா கூடத்தான் ஒரு ஈர்ப்பு அதுக்குன்னு அவர போய லவ் பண்ணலாமா?

அடுத்து நான் எதுனால கிஷோர கல்யாணம் பண்ணேன்னு கேட்டிருந்தீங்க.கிஷோர் மேல எனக்கு காதல் எதுவும் இல்லை.ஆனா அவரு வாழ்ந்துகிட்டு இருந்த மோசமான வாழ்க்கைய விட்டு வெளில வர ஆகாஷனா மேல வெச்ச காதல் ஒரு காரணமா இருந்திச்சி.அப்புறம் எனக்கும் வீட்ல கல்யாணம் பார்க்க ஆரம்பிச்சாங்க.அப்போதான் கிஷோர் ஆகாஷனாவ காதலிச்சதி தெரிய வந்திச்சி.கிஷோர் வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி ஒரு வேல அந்த பொண்ணு கிஷோர புரிஞ்சிக்கலைன்னா....என்ன விட ஆகாஷனாவ வேறு யாரு புரிஞ்சிக்க போற.சோ நான் கிஷோர கல்யாணம் பண்ணிக்கிட்டு கிஷோர் மனசுல இருந்து ஆகாஷனாவ அழிக்காம அவளோட நினைவுகளோடயே நாங்க வாழ பழகிக்கிட்டோம்.அப்புறம் இப்போ கிஷோர் என்மேல உயிராவே இருக்காறு அது உங்க எல்லோருக்குமே தெரியும்...

நான் தான் கிஷோர்..
என்கிட்ட கேட்ட ஒரே கேள்வி ஆகாஷனாவா காதலிச்சிட்டு எப்படி நேத்ராவ கல்யாணம் பண்ணேன்னு.ஒரு பொண்ண காதலிச்ச யாரும் வேறொரு பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாதுன்னா இந்த உலகத்துல எந்த ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கவே முடியாதுப்பா.அப்புறம் நேத்ரா மாதிரி ஒருத்தி எனக்கு மனைவியா கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கனும்.

நான் தான் அஜய்,

நேத்ரா என்ன வேணாம்னு சொன்னதும் நான் எப்படி அவள விட்டுட்டு போகலாம்னு சில பேரு கேட்டீங்க.அதான் நான் ரொம்ப தெளிவா சொன்னேனே.எனக்கு அப்ரோட்ல படிக்க போக இருந்திச்சி.அப்புறம் நேத்ரா வேற தெளிவா சொல்லிட்டா அவ வேற யார கல்யாணம் பண்ணாலும் என்ன பண்ணிக்க மாட்டேன்னு.அவ ஆகாஷனா மேல வெச்சிருந்த அன்பை அவ இப்படித்தான் வெளிப்படுத்தனும்னு முடிவு பண்ணிட்டா.எனக்கும் லைப் இருக்கு , நேத்ராவோட காதலுக்காக மட்டுமே என் லைப்ப நான் சுருக்கிக்க முடியாது.அதனாலதான் நான் மூவ் ஆன் ஆகிட்டேப்.என்ன அவ கிஷோருக்கு பதிலா வேற யாரையும் கல்யாணம் பண்ணிருக்கலாம்.
எனக்கு இப்போ மினிஸ்டர் பொண்ண பேசிருக்கு.என்னோட எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு அது மிகவும் உதவியா இருக்கும்.அரசியல்ல இறங்கியாச்சு சோ இனிமே குள்ள நரிங்க கூட நரியாட்டம்தான் ஆட வேண்டும்.

ஹாய் நான் தான் கதிர்,

எதனால சேட் என்டிங்க் அப்படின்னு சிலர் கேட்டிருந்தீங்க.காரணம் ஒன்னுதான் இது என்னோட கடைசி கதை.சோ எனக்கு பிடிச்ச மாதிரி எழுதினேன் யாரோட வற்புறுத்தலும் இல்லாம.என் மனசுக்கு இப்போ நிம்மதியா இருக்கு.சோகமான முடிவ கொடுத்தாலும் வாசகர்கள் அதை ஏத்துக்க தயாரா இருக்காங்கன்னு நினைக்கும் போது ரொம்ப ஹாப்பியா இருக்கு..

பைனலா நான் ஆஷிக்.....

ஏன் நீங்க யாரும் நந்தினி,சந்தியா கிட்ட எந்த கேள்வியும் கேட்கல.சோ இதுலயே தெரியுது உங்களுக்கு அவங்களோட பார்ட் எதுவும் பிடிக்கலன்னு. இன்னொரு முக்கியமான விசயம் கதிர் எழுதின கதையில என்னோட சாயல் எதுவுமே இருக்க கூடாதுன்னு நினைச்சி ஓரளவுக்கு அதுல வெற்றியும் பெற்றிருக்கேன், எப்படின்னு கேட்குறீங்களா? படிச்சவங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

கதைக்குள் ஒரு கதை சாதாரண ஒரு விடயம் என்று நினைத்துதான் ஆரம்பித்தேன்.எழுதும் போது சத்தியாம முடியவில்லை அவ்வளவு கஷ்டம்.இரண்டு கதைக்குமே சந்தோசமான முடிவு கொடுப்பதென்றால் மிகவும் இலகுவாக இருந்திருக்குமோ என்னமோ.சோகமான முடிவு கொடுக்கும் போது அதை வாசகர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் கொடுக்க முனைவது மிகவும் கஷ்டமானது.

என்னுடைய மற்ற கதைகளை விட வாசகர்கள் மிகவும் குறைவாக இருப்பது இந்த கதைக்குத்தான்.ஆனால் சந்தோசம் காரணம் என்னுடைய கதையை படிக்கவும் ஒரு 100 பேர் இருக்கின்றார்கள் என்று.

நான் எப்பொழுடும் என்னுடய கதைக்க்கு கான்சப்ட் சொல்லமாட்டேன்.ஆனால் இந்த முழுகதையோட கான்சப்ட் என்னவென்றால் சமூக வலைத்தளம், முகம் தெரியாத நபர்கள் மீது அதீத பாசம் வைக்காதீர்கள்.உங்கள் தாய் ,தந்தை,கணவன் ,மனைவி,அண்ணா,தம்பி,அக்கா,தங்கை என்று உங்களுடன் கூட இருப்பவர்கள்தான் என்றும் துணையாக இருப்பார்கள்.சின்ன சின்ன சன்டைகள் மனக்கசப்புகள் அவர்களுடன் வரும்.அப்படி வந்தால்தான் நீங்கள் அவர்களுக்கு உண்மையாக இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.எப்போதும் அன்பை மட்டுமே பொழிந்து கொண்டு இருந்தால் உங்களின் மறுபக்கத்தை அவர்கள் அறியவில்லை என்று அர்த்தம்.

என்னடா இவன் கதை முடிய முதலே இப்படி கான்சப்ட் சொல்லிட்டானே என்று யோசிக்க வேண்டாம்.சொல்லனும்னு தோனிச்சி சொன்னேன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro