எண்ணத்தில் தெளிவு

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

                                  

சிறுகதை --2   எண்ணத்தில் தெளிவு                   

                                           

                            கிச்சனில் இருந்தாலும் காமாட்சியின் கண்கள் நொடிக்கு ஒரு முறை வீட்டு வாசலிலே ஏறிட்டன.  ஆம் , இருக்காத எப்பொழுதும் கல்லூரி முடிந்து சரியாக நான்கு மணிக்கெல்லாம் வீட்டு  வாசலில் நந்தனி ஸ்கூட்டி சத்தம் கேட்குமே!

     இன்று 4.45 ஆகியும் அவளை காணாது தவித்து கொண்டு இருக்கிறாள்.  அவளது தவிப்பை புரிந்தவராக வரதராஜன்.

          ''ஏன் ? இப்படி  பதறுகிறாய் உலகம் தெரிந்த பெண் நந்தினி என்று ....''  கணவன் முடிக்கும் முன்னரே  காமாட்சி ஆரம்பித்தாள்.

          '' இப்படியே  செல்லம் கொடுப்பதால் தான் அவள் இஷ்டதிற்கு ஆடுறா ... '' அதற்கு பின் வரதராஜன் வாய் திறக்கவில்லை .
 
''  எப்ப பார்த்தாலும் ஒரு மொபைல் கையில் வைத்து கொண்டு பேஸ்புக் ,  டூவிட்டர், வாட்ஸ் அப் - னு  சுத்தறா. ஏன் ஒரு போன் அந்த மொபைலில் இருந்து பண்ணக் கூடாதா ? ''  என ஆரம்பிக்கவும் நந்தினி கையில் அடிப்பட்டு கட்டு கட்டிய ஒரு நாய் குட்டியோடு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

                              மஞ்சள் நிற சுடிதாரில் துப்பட்டா மீது ரத்தக் கறைப்பட்டு இருந்தது. காமாட்சி ஒரு நிமிடத்தில் அடிப்பட்ட நாய்க்குட்டியை எடுத்துகிட்டு வந்து இருக்கா -னு ஊகித்தாள் . நந்தினி நாய் குட்டிக்கு ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றியவாறே பேச  'இல்லை இல்லை ' கத்த ஆரம்பித்தாள். 

       '' ஏன் ? நான்கு மணிக்கே வீட்டிற்கு வந்து அடனன்ஸ் கொடுக்கனுமா ? இது என்ன ஹாஸ்டலா ? இல்லை சுதந்திரமா இருக்க விரும்பும் வீடா  ? ஒரு சின்ன உயிர் கார்ல அடிப்பட்டு ரத்த வழியறச்ச அதை காப்பாற்றுவது முக்கியமா ? இல்லை போன் எடுத்து பெர்மிஷன் கேட்டு வீட்டுக்கு தகவல் சொல்லி முடிச்சு அதுக்கப்பறம்  ஹாஸ்பிடல்  போறது முக்கியமா ? ''  என பொரிந்து தள்ளினாள் .

                     காமாட்சி அதன் பின் வாயை திறக்க வில்லை.
  
ஆம் அவளுக்கு தெரியும்  நந்தினியின் பேச்சிற்கு எதிர் வாதம் புரிந்தால் தோற்பது நிச்சயம் ! அதுவும் இது போன்ற நிகழ்வுகள் தான் பார்த்திராது இல்லையே , போன மாதம்  இப்படி தான் லேட்டாக வந்தால் , நேராக  கிச்சனில் காமாட்சியிடம் ,       

  "அம்மா எனக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் " என கூறி சோபாவில் அமர்ந்தாள்.

ஜூஸ் போட்டு எடுத்து சென்று கொடுக்கும் போது தான் பார்த்தாள். நந்தினி யின் கையில் பிளாஸ்திரி

      '' என்னடி  இது ?  '' என கேட்க

       '' ரத்த தானம் பண்ணிவிட்டு  வரேன் அம்மா '' என்றாள்.

       '' இப்படி உடலை கெடுத்துகிட்டு என்னடி பண்ற ? வயசு பெண்ணுக்கு இது தேவையா ? ''  உடனே நந்தினியோ

       ''  இது நல்ல விஷயம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் கொடுப்பது நல்லது '' என நீட்டி முழக்கி ஒரு கட்டுரையே சொல்லி விட்டாள் . இப்பொழுது நாய் குட்டிக்கும் மனிதாபிமானம் என்று ஒரு விரிவுரை கூட கொடுப்பாள் . எதற்கு வம்பு என்று காமாட்சி பேச்சிற்கு முற்று வைத்தாள் .

                                                     இரவு உணவு உண்ட பின் நந்தினி தன் மொபைலை  எடுத்து செல்ல மீண்டும் காமாட்சியின் மனம் யோசிக்க துவங்கியது .
                                                   
   எப்ப பார்த்தாலும் மொபைலை வைத்து பொழுதை போக்குகிறாள் . இவளுக்கு முதலில் திருமணம் செய்யலாம் என்றாலும் மகளோ ! திருமணமா ? இப்பொழுது வேண்டாம் என்று தவிர்க்கிறாள் . ஒரு வேளை பெண் காதலில் விழுந்து இருப்பாளோ ? ! என தாயின் மனம் நினைக்கையிலே  இல்லை , இல்லை அப்படி இருக்காது , இருப்பினும் திருமண பேச்சை இனியும் தவிர்க்க கூடாது  என  தன் கணவனிடம் நந்தினியை  பற்றி கூறினாள் . வரதராஜும் தெரிந்த தரகர் ஒருவரிடம் ஜாதகம் கொடுத்து வரன் பார்க்க சொன்னார் .

                                                அன்று ஞாயிறு சுட சுட இட்லி , சிக்கன் கிரேவி யும் என சகுந்தலா மணக்க மணக்க செய்து விட்டு வசந்தனை அழைத்தாள். வசந்தன் குடும்பம் நந்தினி வீடு போல அப்பா , அம்மா, மகள் என சிறு குடும்பம் அல்ல . தாத்தா , பாட்டி , அப்பா , அம்மா , அண்ணன் , அண்ணி, அக்கா , மாமா என குடும்ப வட்டம் பெரிது . ஹாலில் சாப்பிட அமர்ந்த பின் நந்தினி என்ற பெண்ணின்  ஜாதகம் பொருந்தி வருகிறது . பெண் பிடித்தால் மறு பேச்சினை ஆரம்பிக்கலாம் என தரகர் கொடுத்த நந்தினி புகைப்படம் மேஜையில் வைக்கப்பட்டது .

                                               யாவரும் மாறி  மாறி புகைப்படம் பார்த்து பெண்

  '' ஒ.கே . சூப்பர் '' என்றனர் . கடைசியாக சகுந்தலா வசந்தனிடம் ,

       ''நேரம் எடுத்து நல்ல பார்த்து முடிவு சொல் வசந்த் '' என்றாள் . நந்தினி புகைப்படம் எடுத்து தன் அறையில் நுழைந்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் நல்ல பதிலாக "பெண் பிடித்திருக்கிறது " என ஒற்றை வரியாக கூறி முடித்தான் .
                                                      காமாட்சிக்கு சுடு தண்ணிரில் காலை விட்டு கொண்டு துடிப்பது போல பதட்டம் , பயம் . இருக்காத பின்னே ! நந்தினியை பெண் பார்க்க வர போகிறார்கள் . விருந்தினரை உபசரிக்க டீ , ஸ்வீட் காரம் என உணவுகள் எல்லாம் தயார் ...என்ன ? இன்னும் பெண்ணிற்கு (நந்தினிக்கு ) விஷயம் கூற படவில்லையே  !?
                                                    
   கல்லூரி முடிந்து வந்து இருந்த நந்தினியிடம் திக்கி திணறி ஒருவாறு காமாட்சி கூறி முடிக்க எவ்வித மாற்றம் இன்றி,

     ''  சரி .! உங்கள் இஷ்டம் . ஆனால் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றால் நோ தான் , பிறகு என்னை குறை கூற கூடாது '' என்றாள் . காமாட்சிக்கு சண்டை போட்டு , கத்தி  ஆர்ப்பாட்டம் போடுவாள் என நினைக்க இது இனிய அதிர்ச்சியாக இருந்தது .
                                                                            
கப்போர்ட் திறந்து தனக்கு பிடித்த சிம்பிள் ஆன சேலை எடுத்து உடுத்தி கொண்டாள் .நந்தினியின் தாயாருக்கோ இது  கனவு  போல் இருந்தது . சற்று நேர அமைதிக்கு பின் வசந்த் குடும்பம் வந்து இறங்கினர் . விருந்தினரை வரவேற்று உபசரித்து ஸ்வீட்  , காரம்  என உண்ட பின் , பெண் பிடித்திருக்கு என சகுந்தலா வீட்டினர் மன நிறைவோடு கூறினார் .
                                                              வசந்த் மட்டும் தன் தந்தையிடம் பெண்ணிடம் பேசனும் என்று கூற முதலில் விழி பிதுங்கினாலும் சற்று சமாளித்து நந்தினி வீட்டார் பேச அனுமதி அளித்தனர் .
                                                                    வசந்த் எப்படி பேச்சை எடுக்க என யோசிக்க முயலுகையில் ,  நாய் குட்டி ஓடி வர , வசந்திற்கு ஏதுவாக மாறியது.                

      '' நாய்குட்டிக்கு காலில் அடிபட்டது சரி யாகி விட்டதா ? '' என கேட்டவாறு  அதனை தூக்கி  தடவி கொடுத்தான் .

       '' ம்ம்ம் ...'' என்றவாறு கூறிய நந்தினிக்கு முதலில் ஏதும் தோன்றவில்லை பிறகு

        '' அது எப்படி ? உங்களுக்கு ....? '' என கேட்க வசந்தனோ

        ''  உன் புகைப்படம் கொடுத்த அன்று உன் (முக நூலில் ) பேஸ் புக் , போய்  பார்த்தேன் . அதில் உனக்கு பிடித்தவை கண்டேன் . நாய்க்குட்டி அடிபட்டது , ரத்த தானம் கொடுத்தது , ரோஜா செடி வளர்ப்பது என உன்  தோழியிடம் கமெண்ட் பேசியது பார்த்தேன் . அதை விட உனக்கு ஜாயென்ட்  பேமலி தான் ரொம்ப பிடிக்கும் ன்னு  கூறி இருந்தாய் ....அப்பொழுதே உன்னை மிகவும் பிடித்து போயிருந்தது . உனக்கும் என்னை பிடிக்கிறதா ?!
'' என புன்னகையோடு பேசி முடித்து கேள்வியோடு அவளது விழியினை அலசினான் .

                                   நந்தினிக்கு இதுவரை வராத வெட்கம் எப்படி உள்ளே புகுந்ததோ ..?! ஓடி சென்று தன் தாயிடம் சிரித்தவாறே தஞ்சம் அடைந்தாள் .இதே போல் வெளியிலும் பெரியவர்கள் நந்தினியின் பெற்றோரிடம் வசந்த் கூறியதை  கூறி முடித்தனர் .
                                                        
தன் மகள் மீது  இதுவரை இருந்த பயம் மாறி பெருமையாக இருப்பதை உணர்ந்தாள் இரு குடும்பமும் தொலைபேசி என்னை பறி மாறி கொண்டார்கள் . நிச்சயதார்த்தத்திற்கு நல்ல நாள் பார்த்து பறி மாறி கொண்டார்கள் .
                                                         வரதராஜன் காமாட்சியிடம் பார்த்தாயா ? நீ தான் போன்  , பேஸ்புக்  ,  டூவிட்டர் , வாட்ஸ் அப் - னு இளைய தலை முறையை பாழ் ஆக்கும் -னு  பயந்து கிட்டே இருந்தே நந்தினிக்கு எப்பொழுதும் தெளிவான எண்ணம் உண்டு .

" தீயினால் விளக்கு ஏற்றவும்  செய்யலாம் , ஒரு குடிசையை எரிய விடவும் செய்யலாம் ஆனால் அத்தகைய தீயை எப்படி பயன் படுத்துவது என அறிந்தாலே போதும் . என் மகள் அத்தகைய தெளிவான அறிவை பெற்றவள் என்றார் .
                                                                        காமாட்சிக்கு இது நாள் வரை இருந்த பயம் துளியும் இல்லாது போயின.

ஆம்  எத்தகைய புது கண்டு பிடிப்புகள் இளைய தலை முறையை சென்று அடைந்தாலும் " எண்ணத்தில் தெளிவு " இருப்பின் பயம் ஏது!!!

                                                                                                     ​---  பிரவீணா  தங்கராஜ் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro