Hi அனு, நா அருண்.
ஆஹ் சொல்லு அருண்.
Freeயா தானே இருக்க, Evening வெளிய போலாமா?
இல்லடா, நா வரல. Sorry
ஹேய், விக்கியும் வரான். நாங்க Plan பண்ணிட்டோம். 4 O'clock readyயா இரு நா வந்து கூட்டிட்டுப் போறேன்.
சொன்னது போலவே 4 மணிக்கு வீட்டுக்கு வந்தான். அங்கு எல்லோருக்கும் அவனை ஏற்கனவே தெரியும். ஆகவேஅனு அருணுடன் போக யாரும் மறுப்பு சொல்லவில்லை.
சிறிது நேரப் பயணத்தின் பின்னர் அந்த Parkஐ அடைந்தார்கள். ஏற்கனவே அங்கே அவர்களுக்காக காத்திருந்தான் விக்னேஷ்.
பழைய கதைகளை பேசிக்கொண்டு அங்கே சிறிது நேரம் சுற்றித்திரிந்தார்கள் மூவரும்.இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் அவள் அவள் முகத்தில் வேதனையின் சாயல் தெரிந்தது .
லேசாக இருட்டத் தொடங்கியதும் விக்னேஷ் தன் பைக்கில் கிளம்ப அடுத்த இருவரும் புறப்பட்டார்கள்.
இன்னும் தாத்தாக்கு நீ வந்தது தெரியாது. நாளக்கி வீட்டுக்கு வர்ரியா, Surprise குடுக்கலாம்.?
ம்ம் சரி
அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.
இங்க எதாச்சும் Job Try பண்லாமே, ஒனக்கும் ஒரு Change ஆ இருக்கும் .
ம்ம் பாக்கலாம்.
அதற்கு மேலே அவன் எதுவும் பேசவில்லை. அவளை கொஞ்சம் கொஞ்சமாகத் தான் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
Ok அனு, நாளைக்கு ஒரு 9.30 மாதிரி Readyஆ இரு . Bye!
Bye .
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro