💑 உயிரோடு உயிராக 🚣

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சித்தம் முழுவதும் நீயே
உந்தன் நினைவுகளினாலே
அந்தம் முழுவதும் நீயே
உந்தன் நிகழ்வுகளினாலே...

போதையில் நான் பிதற்றிட
ஆசையினில் நான் தவித்திட
எனது கண்களோ கலங்கிடவே
நினைத்தேனே உன்னை இதயத்தினில்...

வானமே எல்லை உம்மை நினைக்கையில்
நாட்களே எல்லை எந்தன் உயிரிற்கு
நித்திரமும் இல்லை உன்னை காணாமலே
கண்கள் தேடுதே என்விடியலில் உன்னையே...

ஊமை ஆகிப்போனேன் உனது நாமத்தில்
குருடன் ஆகிப்போனேன் உன்விழி பார்வையினில்
செவியற்றவன் ஆகிப்போனேன் உனது குரலினால்
செயலற்று போனேனே உனது தீண்டலிலே
நீ மட்டுமே என்னுள் இருந்தாய் அதன்பிறகு...

சுவாச காற்றாக வந்தாயே எனதுயிர் காக்கவே
காற்றாக சென்றாயே எனது துன்பத்தை நீக்கியே
குருதியாய் செயல்பாட்டையே எனது வாழ்க்கை கடந்திடவே
இதய துடிப்பாய் இருந்தயே எப்பொழுதும் நினைவுகளாலே...

உனதருகினில் வாழ்ந்திடவே மனதினில் வாழ்கிறேன் உந்தன் நினைவுகளால்... 😍😍😍😘😘😊😊

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro