உன்னை தேடி அலைந்த நான்
இன்று மரணத்தை தேடி
அலைகிறேன் உன் நினைவுகளுடன்
ஒரு தலை காதலுடன்...!
காத்திருப்பு என்பது இணைந்த
காதலுக்கு எவ்வாறோ தெரியவில்லையே
ஆனால் உன்னை உனக்கு தெரியாமலே நேசித்து
உந்தன் வருகைக்காக காலம் கடந்து
காத்திருப்பது அவ்வளவு சுகமல்லவா...!
எத்திசையில் எத்தொலைவினில் நீ
நின்றாலும் உந்தன் ஒற்றை விழி பார்வை
போதும் அரைநொடியினில் உன்னை
காண போதுமே என் விழிகளால்....!
நீ வர மாட்டாய் புரிந்துகொள்ள மாட்டாய்
என்னை ஏற்றுக்கொள்ள மாற்றத்தை
என நான் அறிந்தும் உன்னையே
மனம் சுற்றித்திரிவதேனோ...!
காதல் சுகமானதே என்றென்றெல்லாம்
உன்னை நினைத்து பார்க்கின்றேனோ...!
இப்படிக்கு
என் காதலே
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro