பாடலின் வரிகள் ஆயிரம்,
ஆனால் எனக்கு பிடித்ததோ
ஒரு சில வரிகளே...
அவ்வொரு சில வரிகளும்,
உம்மை நினைவுகளில் கொண்டு வந்ததாலே நினைவில் ஊறியது...
நான் நேசிக்கும் வரிகள் கூறும்
உந்தன் மீது நான் கொண்ட
அளவற்ற அன்பை...
என்னை சிதைப்பதும் அவ்வரிகளே,
கணநேரத்தினில் என் உயிர்
துடிக்க வைப்பதும் அவ்வரிகளே...
காற்றிலே உனது மூச்சு காற்று
கலந்து இருப்பதாலே,
நான் இன்றுவரை சுவாசிக்கின்றேன்...
நம் காதல் சேரவில்லை என்றாலும்
நீ விடும் மூச்சு காற்றும்,
நான் விடும் மூச்சு காற்றும்
சேர்ந்துவிடும் இவ்வுலகினில்...
உந்தன் பார்வை வீசிடவே
நான் காத்து கொண்டு இருக்கிறேன்,
தரிசனம் தருவாயா அன்பே...
நாம் பகிர்ந்த பாடல் வரிகள்
எம்மை நினைவு கொள்ளவில்லையா,
நான் உன்னை நினைப்பதால்
நுண்ணுணர்வு அலைகள் உன்னை
அடையவில்லையா...
காதல் கொள்கிறேன்
உன்னை நினைவுகூரும்
அனைத்தின் மீதும்...
This is my 100th part of the என் உணர்வுகளின் நிழல்... Thanks for supporting me friends... Keep supporting me...
Once again thank you so much...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro