நான் பெண்ணானேன்
உந்தன் வருகையை கண்ட நொடியினிலே...
உன்னில் சரிபாதியானேனே
உந்தன் மூன்று முடிச்சுகளினாலே...
பெண்மையால் பெருமைகொண்டேனே
உந்தன் குழந்தையை பெற்றெடுக்கையிலே...
அன்னையராய் மகிழ்ச்சி கொண்டேனே
உந்தன் அறிவுரைகளை போதித்தனாலே...
வீழ்ந்தாலும் வீழ்ந்திடுவேனே
உந்தன் ஒற்றை விழி பார்வையிலே...
என்னுள் பாதியாகி உன்னில் முழுவதுமாகி
நானிருக்கிறேன் உனக்காகவே என்று
வாழ்க்கையில் உறுதுணையாய் நின்றாயே,
மணாளனே உனக்காக நான் என்ன செய்தேன்
நீ எமக்கு மணாளனாக கிடைத்திடவே
மீண்டும் சேர்ந்திட வேண்டுமடா
மறுஜென்மம் ஒன்றிருந்தால்
உந்தன் மனைவியாகவே ஜனித்திடவேண்டும்டா...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro