இவ்வுலகினில் காரணமின்றி அணுவும் நகர்வதில்லை
ஆனால் நம்வாழ்வில் நமக்கு கிடைக்கும் நட்பு
காரணமில்லாமல் எதிர்பார்ப்பு இல்லாமல் கிடைக்கும்
ஒன்று நட்பு மட்டுமே...
ஆயிரம் உறவுகள் நம்முடன் இருந்தாலும்
நாம் தேடி சென்று உணர்வுகளை வெளிப்படுத்தும்
ஓர் உறவு என்றால் அது நட்பு எனும் உறவே...
இணைந்த கைகள் என்றும் இணைந்தே காணப்படும்
என்றென்றும் நட்பு எனும் பாதையில்...
என்னதான் பிரிவு என்ற ஒன்று நட்பினில் ஏற்பட்டாலும்
காலங்கள் கடந்தாலும் நண்பனுக்கு ஒரு சிக்கல் என்றால்
எந்த உதவியையும் எதிர் பார்க்காமல் நம்முடன்
பயணித்து நமக்கு நன் முடிவுகளை தரும்...
நட்பு எனும் ஓர் உறவை விவரிப்பது என்பது
மிக கடினமான ஒன்று ஏனென்றால்
நட்பை உணரவே முடியும் விவரிக்க முடியாது...
நட்பு எனும் பாதைக்கு முடிவு என்ற ஒன்று இல்லை
பாதைகள் என்றும் ஒன்றை ஒன்று தொடந்து
நமக்கு வழிகளை நமது இலக்கை நோக்கி கொடுக்கும்...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro